Thursday, December 31, 2015

2015 - Reverentially Yours !!

So, We are bidding adieu to another wonderful year in approx 22 hours from now.

When we look back such years -as they pass by - unfortunately the latest memories alone pop up in our minds clouding up the previous ones which might me relatively more significant. 
This year - at least for City of Chennai - it  had been the torrential rains that lashed us all just few days back - is the thought of the hour going by this logic.

As I browsed thru my post on the same day last year, I have a triumphant smile on my lips when I look at a particular sentence that I had written "I should admit that I am looking forward for a new year that will really excite me - rather - entice me after this U turn year of 2014."

2015 had been an important year for me beyond doubt. There are lot of personal and official aspects to cherish about. To speak some thing specific and also unique compared to previous year ends, I have invested quite a huge amount of time on self learning thru' this year; In the process, I am happy that I identified a new subject for my mental enrichment which is too interesting too.


There is flip side of coin too...; 

I came out of FB quite abruptly during mid year realizing that it cannot be my path , even a casual one that I can stroll about. I discovered that I am not a person as social as I had imagined to be.
With a huge identity crisis looming upon my head, there was an impact at  AGANDAM too. The total number of my posts have been abysmally low during 2015 - ranking second lowest in the past 7 full years but then, the positive thing about this is that I got rejuvenated again during the last two months of the year.

I wish and pray 2016 improvises me further and life becomes more balanced and interesting. 
Thamasoma Jyothirgamaya.


Love // Suren

எங்கெங்கு காணினும் சக்தியடா - 6

நமது பாரத தேசத்தின் ஆன்மிக வாழ்கையின் அஸ்திவாரமாக கருதப்படும் ஆதிசங்கரர் அவர்களது உருவப்படத்தை எப்போதாவது தரிசித்து இருக்கிறீர்களா ? (எனக்கு தெரிந்து ஒரே படம் தான் தான் பொதுவாக காணப்படுகிறது) 
ஒரு மரத்தடியிலோ அல்லது நதிக்கரையிலோ தரையில் சம்மணமிட்டு அமர்ந்து இருக்கும் ஒரு அழகிய இளம் துறவியின் தோற்றம். அவருக்கு முன்னாள் நான்கு சீடர்கள் - பரம சிவனின்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் அவரது சனகாதி சிஷ்யர்களை  நினைவுறுத்தும் வகையில்.... 

இந்த இளம் துறவி - ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் அத்வைத தத்துவத்தை -  "எல்லாம் ஒன்றே"  என்ற பேருண்மையை - ஸ்தாபித்தவர். அவர் எந்த மரத்தடியில் உட்கார்ந்து தன சிஷ்யர்களுக்கு போதித்தாரோ நமக்கு தெரியவில்லை - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி  பற்றி முக்கியமாக அவர் உட்கார்ந்து இருந்த கல் மர நிழல் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் சில மாதங்களுக்கு முன்னால் தெரிய வந்தது.

எவ்வளவோ வகையான ஆல  மரங்கள் இருந்தாலும் - இந்த "கல் ஆல" மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பதாக இந்த திரு உருவம் இருப்பத்து ஒரு குறிப்பிட்ட காரணத்தால். இந்த குறிப்பிட்ட ஆல  மரத்தின்  பழங்கள் மிகவும் கசப்பதாக இருப்பதால் பறவைகள் அந்த மரத்தை அண்டாதாம். புரிகிறதா விஷயம் ? 
சிஷ்யர்களுக்கு நல்ல முறையில் உபதேசம் செய்வதற்காக - பறவைகளின் சத்தம் (அசுத்தம் கூட ?) போன்ற  தொந்தரவு இல்லாமல் வகுப்பு நடக்க இந்த தேர்வு.  
"தட்சிணா " என்பதற்கு தெற்கு என்பது மட்டும் பொருள் அல்ல ; "சாமர்த்தியம்" பொருந்தியவர் என்றும் பொருள் உண்டு - நினைவில் கொள்க.

ஆதி குருவாக கருதப்படும் ஒரு கடவுள் மிகவும் தேர்ந்த ரிஷிகள் சிஷ்யர்களை கொண்டு  (அதுவும் நால்வர் மட்டும் தான். ஒரு சில இடங்களில் சப்த ரிஷிகள் இருப்பதாக உருவச்சிலை இருக்கிறதாம்)  ஆன்மிக வகுப்பு எடுக்க இவ்வளவு பிரயத்தினங்கள் தேவைப்படுகிறது.
துறவும், கல் ஆல மரமும்  - எங்கெங்கும் இருக்கும் சக்தியை தரிசிக்க...; இது ஒரு புறம். 
"ஆத்ம ஞானம் அதி சுலபம்" என்ற சமஸ்க்ருத சொல்லாடல் / ஸ்லோகம் மற்றொரு புறம் இருக்கிறது. 
.ஏதோ நெருடல்  இருப்பதாக உங்களுக்கு படவில்லையா ?

குழப்பம் தெளிய நம் காலத்திற்கு வருவோம். நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்...
உங்கள் இல்லத்தில் - நீங்கள் அடிக்கடி பார்த்து, மீண்டும் உங்களை பார்க்க தூண்டும் VCD திரைப்படங்கள், ஓரிரு முறை மட்டுமே பார்த்து இருக்கும் VCD - இன்னமும் "வேளை வராத" அந்த புத்தம் புது VCD -க்கள் எவ்வளவு உண்டு  - வகைப்படுத்தி பார்த்து கணக்கு சொல்லுங்கள்...
சொல்ல மறந்து விட்டேன். - pen drive , external hard disc -ல் இருக்கும் திரைப்படங்களையும் இந்த கணக்கில் சேர்த்து கொள்ளலாம். 
இந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தால் audio CD க்களையும் வகைப்படுத்தி அழகு பார்க்கலாம். (அநேகமாக நம் ஒவ்வொருவர் வீட்டிலும் - எந்த அர்த்தமும் இல்லாமல் - செங்கல் செங்கலாய்  Audio casette கள் வேறு...ஹ்ம்ம் ).

கல் ஆல மர- வாசத்திற்கு பதிலாக நம் மனத்தில் கல் எறியும் வண்ணம் ..எத்தனை எத்தனை புகைப்படங்கள், பாடல்கள் புத்தகங்கள், நண்பர்கள், முகநூட்கள்....!! இவற்றின் எந்த ஒன்றும்  நமக்கு முழு நிறைவு தராததை நாம் உணர்ந்ததால் தானோ என்னவோ நம்மில் பலர் பல்வேறு விஷயங்களில் சிக்கி தவிக்கிறோம்; ஒன்றிலிருந்து  மற்றொன்றுக்கு மாறுகிறோம். பழசை வெகு விரைவில் மறந்து போகிறோம். (கல் ஆல மரத்தின் தத்துவத்தை மறந்தது  போலவே !!)

இந்த தொடர் உங்களை குறை கூற அல்ல - வேதனைப்படுத்தவும் அல்ல. நம்புங்கள். மாறாக நாம் நன்றாக சிக்கி கொண்ட இந்த வாழ்க்கை முறையில்   முழுவதும் மூழ்கி போகாமலும், வெறுத்து ஒதுக்காமலும் - கல் ஆல  மரமாக ஏற்றுக்கொண்டு எப்படி சக்தியை தரிசிக்கலாம் என்பது பற்றி என் பார்வை.... சிற்சில வருடங்களாக நான் கடந்து வந்த பாதையும் கூட....!!

நவநாகரிகம் தலைவிரித்தாடும், சகல வசதிகளும் பெருகி ஓடும்  தற்காலத்தில் - இந்த கட்டுரைக்கும், நான் சொல்ல வந்த சேதிக்கும் ரொம்பவே சோதிட பொருத்தம் இருக்கிறது - நம்புங்கள்.

அடுத்த வருட ஜூன் மாசம் என் பிறந்த நாள் வருமுன் இந்த தொடரை நிறைவு செய்ய முடியுமா பார்ப்போம்.

வளரும் 


















Wednesday, December 16, 2015

எங்கெங்கு காணினும் சக்தியடா - 5

மிகவும் பெரியதாக இருக்கும் ஒரு தின்பண்டத்தை - ஏதோ ஒரு அசட்டு ஆர்வத்தில் வாயில் திணித்துக்கொண்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவஸ்தை பட்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா ?

இல்லாவிட்டாலும் பரவாயில்லை - என் தற்போதைய மன ஓட்டம்  கிட்டத்தட்ட அதுதான்."Baba Magic " பற்றி என் குறைந்தபட்ச சொல்லாற்றல் துணைகொண்டு அவ்வப்போது கணினியின் முன் வந்தமரும் நான் - இதை சொல்ல முயற்சி தான் செய்யப்போகிறேன்.
ஆனால் ஒரு விஷயம் - ஒரு காரியத்தை சொல்ல புகுமுன் சத்தியமாய் தோல்வியில் தான் முடியப்போகிறது என்ற ஒரு defeatist மனநிலை எனக்கு சத்தியமாக இல்லை.  மாறாக ஒரு குழந்தையின் ஊக்கத்தோடு மிகவும் உற்சாகமாகவும் வருங்காலத்தைப் பற்றி கிஞ்சித்தும் வருத்தப்படாத ஒரு அற்புதமான கலவையில் என் உள்ளம் விம்முகிறது.

அடடா....ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்....நான்கு பதிவுகளில் எந்த  பீடிகையும் தராமல் *** இப்போது "சக்தி" என்று நான் இதுகாறும் சொன்னது "பாபா "    என்கிற மகானைப் பற்றித்தான்....மேலே படியுங்கள்...உய்யுங்கள் ***
என்று  மேலும் ஒரு பக்திக் கட்டுரையாக இது மாறிவிடாது - நம்புங்கள்.....!!

எனக்கு - தினசரி வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காகவும் , சிற்சில எழுச்சி மிகுந்த தருணங்களில் ஆன்மிக வழிகாட்டியாகவும் அருள் பாலிக்கும் கடவுளர் மிகப் பலர் உண்டு -  பாபாவையும் சேர்த்து.... 

என் பக்தியை பற்றிய புலம்பலாக இந்த கட்டுரை தொடர் மாறுவது எனக்கு உடன்பாடன்று - படிக்கும் ஒவ்வொவோருவருக்கும் ஒரு ரிஷி மூலம் இருப்பதை நான் உணர்வதாலும் மதிப்பதாலும். நம் ஒவ்வொருவரின் காலமும் மிக மதிப்பானதாக இருப்பதால் தான் எழுதுவதில் தாமதங்கள்... எழுத ஆரம்பித்தாலும் இவ்வளவு பீடிகைகள்....  !! என்ன செய்வது - எங்கெங்கும் பறந்து விரிந்து இருக்கும் சக்தி அவ்வளவு சூட்சமமாக சாமர்த்தியமாக இருக்கிறது. 

எந்த விதமான பக்தி உங்களுக்கு இருந்தாலும் - God , God Man, Deity - உங்கள் தேர்வு எதுவாக இருந்தாலும் சரி..ஏன், பகுத்தறிவு வாதியாக இருந்தாலும் சரி  - என் இந்த "Baba Majic " என்ற சொற்றொடர் உங்களுக்கு பொருந்தும். ஒரு வகையில் இதை ஒரு "வாழும் கலையாக" வே நான் கருதுகிறேன். 

எங்கெங்கும் சக்தியை தரிசனம் செய்யும் அருள் பெற்றவர்க்கு வாழ்க்கை என்பது எப்போது நீங்கள் போய் கேட்டாலும் .... ஒரு நெடிய பயணம் அல்ல.....
ஒரே நாள்....ஆம் - ஒரு நாள் மட்டுமே....!! தினம் தினம்......அப்படித்தான். 

"Baba Magic " பற்றி சொல்ல விழைந்த நான் எங்கெங்கோ போய்விட்டேன். ... ம்ம்ம்.. 
மீண்டும் ஒரு நாள் முயற்சி செய்வோம்.

வளரும்.....











Friday, December 11, 2015

எங்கெங்கு காணினும் சக்தியடா - 4

கடந்த 15 நாட்கள் தருமமிகு சென்னை பட்ட பாடு கண்ட பிறகு தலைப்பை  - இந்த பதிவிற்கு  மட்டுமாவது ... "எங்கெங்கு காணினும் "தண்ணீர்"-தான்டா   என்று தலைப்பிட தோன்றுகிறது.

ஆத்மிக விஷயத்தை பேச விழைந்த நான் மானுடம் (மட்டுமா ?) பட்ட அல்லல்களையும் இன்னல்களையும் எழுதுவது எவ்வகையிலும் இந்த தலைப்பிற்கு வேறுபாடாக இருக்காது. நமது அற்புதமான கலாசாரம் தண்ணீரையும் பஞ்ச பூதத்தில் ஒன்றாக வரித்தது தற்செயலா என்ன ? இன்று உமக்கு விதித்தது இதுதான்...
 மேலே படியுங்கள்....

இந்த கால  தமிழகம் அடிவாங்கிய சமீபத்திய  "காற்றழுத்த தாழ்வு மண்டலம்"  என்று அலங்காரமாக அழைக்கப்பட்ட - ஆனால் - "பெருமழை சேதமாக" பரிணமித்த அந்த சோகத்தை சற்றே புறத்தே ஒதுக்கி வைப்போம்.  
சில நூற்றாண்டுகள் முன் நமது மாமன்னர்கள்  தங்கள் இடுப்பில் கை கொடுத்து ஒய்யாரமாய் நின்று மிடுக்காக " மந்திரியாரே... மாதம் மும்மாரி பொழிகிறதா ?"  என்று வினவுவதை நமது இயல் இசை நாடகத்தில் கண்டோம் - ஞாபகம் இருக்கிறதா ?
 "பொழிகிறது தானே ? பொய்த்துவிடவில்லையே ?" என்ற ஆதுரமாகவே அதை அர்த்தப்படுத்திவிட்டோம். "மும்மாரி மட்டும் தானே பொழிகிறது...? விளாசி தள்ளிவிடவில்லையே ? " என்ற பதைபதைப்பை நாம் உணரத் தவறியதில் தான் நம் தப்பாட்டம் ஆரம்பிக்கிறது. (மன்னர் தானே தன் அரண்மனை ஜன்னல் வழியாக பார்த்து தெரிந்து கொள்ளலாமே ? என்று குதர்க்கம் இங்கே தேவையில்லை. எமது  "சக்தி" விரயமாவதில் நமக்குஅவ்வளவாக ஒப்பில்லை.)

பிரபஞ்ச சக்தியாக பஞ்ச பூதங்கள் வரிக்கப்பட்டு வழிப்பட்ட செயல் அவற்றின் வீரியத்தை உணர்ந்ததால்... அவற்றை வழிபடுவத்தை தவிர நமக்கு வேறு வழி இல்லாததால். இந்த வார ஆனந்த விகடன்-ல்  சில அற்புதமான கட்டுரைகள் - "இயற்கை சீற்றத்தைப்பற்றியது - தவற விடாதீர்கள். அதில் ஒன்று பிற நாடுகளில் வெள்ள அபாயத்தை தடுக்க அவர்கள் செய்த சாதுர்யம் பற்றியது. இது விஷயமான  என்  மன ஓட்டத்தை பின்னர் சொல்கிறேன்....
ஒரு அதிசயம் போல் என் இந்த தொடரின் முக்கிய வார்த்தையான "சக்தி" யானது அதே ஆனந்த விகடனின் (16 Dec 2015) தலையங்கத்தில் பல முறை உச்சரிக்கப்படுகிறது. - இந்த பெருமழை மூலம் பல சக்திகளை நாம் தெரிந்து கொண்டோமாம்... இளைஞர் சக்தி, இணைய சக்தி சமூக ஊடகத்தின் சக்தி......!! அடடா... அடடா.... இதைத் தான் நானும்  விம்மி வெடித்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன்..."எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று. நான் தனியன் இல்லை என்று கண்டு கொண்டதில் மீண்டும் ஒரு முறை ஆசுவாசம்.
(இந்த பத்திரிகை குழுமத்திற்கு  "சக்தி விகடன்" என்றொரு பத்திரிகையும் இருக்கிறது. என்னவோ அது பற்றி ஞாபம் வருகிறது....ஒரு வேலை விளம்பர யுக்தியோ ?) 

இது முக்கியமான ரகசியம்.- பிரபஞ்ச ரகசியங்கள் அல்லது சக்தி விளையாட்டுகள் எல்லாமே எப்போதும் தரிசிக்க ஆவலாக, பரிதவித்து இருக்கிறவர்களுக்கு மட்டும்தான். வெறும் ஆராய்ச்சி மனநிலை ஒரு பிம்பத்தை எப்போதாவது தரலாம் - அடிக்கடி நிகழக்கூடிய பாக்கியம் எனக்கும் என்னைப் போல மெய்யன்பர்களுக்கும் தான்.

இப்போது, இந்த தமிழக "காற்றழுத்த தாழ்வு மண்டலம்" பற்றியும் "பெருமழை" பற்றியும் "வெள்ளச்சேதம்" பற்றியும் கொஞ்சம் கதைப்போம். முதல் இரண்டையும் நம்மால் தவிர்க்க முடியுமா தெரியவில்லை. இன்னமும் கொஞ்சம் மனித எத்தனத்தால் "வெள்ளச்சேதம்" குறைக்கப்பட்டு இருக்க முடியும். பெருஞ்செலவு செய்து உருவாக்கப்பட்ட அந்த மற்ற தேசங்களின் தடுப்பு சக்திகளுக்கு ஏதோ ஒரு அளவில் ஒரு வரையறை இருக்கத்தான் செய்யும்.

 அரசாங்கத்தை தூக்கி நிறுத்த வெள்ளத்தில் இறந்த அந்த அரசாங்க ஊழியர் , அவர் போல பெயர் தெரியாத வேறு பலர் - குறைந்த அளவில் இருந்தாலும், அரசின் கையாலாகாத தன்மையை தூற்றி காரி உமிழும் அந்த பெரிய கூட்டத்தின் கூச்சல் மிக பலத்து இருந்தாலும் - நான் இவர்கள் நடுவின் ஊடே சக்தியையே தரிசிக்கிறேன்.

ஆம்...என் அகத்தில் தண்ணீர் இல்லை. என் குடும்பம் சிற்சில ச்ரமங்கள் (உதாரணம், மின்சாரம், கைபேசி செயலிழக்கம் , ஆவின் பால் தட்டுப்பாடு) மட்டுமே இந்த ஊழிக்கூத்தில் கண்டோம். இந்த நிமிஷம்கூட , வீடுகள் தண்ணீரிலும் சாக்கடையிலும் நிரம்பி இருக்க, சொந்த நாட்டிலேயே அகதிகளாக பலர் தமிழகத்தில் இருக்கையில், மிக சௌகரியமாக இருக்கையில் அமர்ந்து, மின்சார விசிறியின் அடியில் குஷாலாக நான் இருப்பது எனக்கு கொஞ்சமும் நெருடல் இல்லை.

சக்தியின் விளையாட்டுகளில் நாம் அறுதியிட்ட நீதிகளும் நேர்மைகளும் உள்ளங்கையில் நெல்லிக்கனி போல் எல்லா நேரமும் புலப்படுவது இல்லை. ஆனால் - கொஞ்சம் போரடிக்கும் -  நமது நியாயங்களை விட சக்தியின் தாண்டவத்தில் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் சற்றே  அதிகம்.

வருணபகவானை அவன் வீர்யத்தை மேலும் ஒரு முறை துதிப்போம். பஞ்ச பூதங்களில் மற்றவற்றையும் மனத்தில் இருத்தி தியானித்து , சக்தியின் விஸ்வரூபத்தின் அங்கங்களை நம்மால் முடிந்த அளவு தொழுவோம். 
வேறென்ன செய்ய....?

Baba Magic என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?

 அடுத்த பதிவில் அது என் வாழ்கையை தொட்ட விதத்தை நான் முடிந்த வரை தொட்டு காட்டுகிறேன்.

......... வளரும் 














Wednesday, November 25, 2015

"எங்கெங்கு காணினும் சக்தியடா " - 3

எழுத தொடங்கி சில நாட்கள் கழிந்து விட்டாலும் , இது இந்த தொடரின் மூன்றாவது பதிவாக இருந்தாலும் , இன்னமும் நான் மனத்தில் எந்த வித கல்மிஷமும் - ஏன் எழுத வேண்டியதை பற்றிய கணக்கு, திட்டங்கள் (விழைவுகள், விளைவுகள்  கூட....)  எதுவுமில்லாமல், வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து முன்னுரையின் இந்த பகுதியை வெகு  தீவிரமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். 
எழுத்தாளர்களுக்கும் சிந்தனைவாதிகளுக்கும் இருக்க வேண்டிய "சமூக பொறுப்பு ...அக்கறை...." எதுவும் என்னிடம் துளியும் இருப்பதாக தோன்றவில்லை.
ஒரு வகையில், இந்த பதிவின் மூலம் ஏற்படும் எந்த ஒரு விளைவுக்கும் பொறுப்பெடுக்கும் மனநிலை கூட எனக்கு இல்லை.  
ஐயா....நான்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே...இது என் தன்னந்தனி ஆவர்த்தனம் (சகிக்க முடியாமல் இருந்தால் கண்களை பொத்திக்கொள்வது அவரவர் பொறுப்பு...உரிமை....)

நிஜத்தை சொல்வதானால் இந்த குறிப்பிட்ட பதிவு பற்றி ஒரு one line மனத்தில்  .உற்பத்தியாகி , மேலும் வளர்ந்து, திடப்பட்டப்பின்,  நேரமும் சந்தர்ப்பமும் வாய்த்தவுடன்  அமர்ந்து விட்டேன்.
இந்த அளவு  பரம்பொருள் உதவி செய்தால் போதும்.....
நான் பாட்டுக்கு தொடர்ந்து எழுதித் தள்ளிவிட முடியும்.

என்னை நெறிப்படுத்த நான் எடுத்திருக்கும் ஆயுதம் தான் இந்த தலைப்பு. கட்டுத்தறி இருக்கும் ஒவ்வொவொரு வீட்டிலும் ஒரு கம்பன் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மை தான். (பல மகா கவிகள் இருப்பது அவ்வளவு ஒப்பாக இருக்காது என்பதால் அந்த பரம்பொருள், கம்பன் போல் ஒரு சிலர் மேல்  அருள் பாலித்தான் என்று தான் தோன்றுகிறது.)

என் மனமும் தறி போன்ற ஒரு கருவியே; இந்த தலைப்பு என் எழுதும் செயலை  கட்டுக்குள் வைக்க ஒரு ஏற்பாடு. இதை தெளிவாக உணர்வதால்,  கிஞ்சித்தும் எந்த வித ஊசலாட்டமும் இல்லாமல் என் மனம் போன வழியில் விரல் பதவிசாக செல்கிறது. 

சக்தியின் தரிசனம் சில சமயங்களில் பெரும் நிகழ்ச்சியில் ஏற்படக்கூடும். பற்பல சமயங்களில் -சிறிய விஷயத்தில், ஏன்  அற்பமான  நிகழ்வு ஒன்றில் கூட ஏற்படலாம். எனக்கு ஏற்பட்ட அந்த அற்புதமான கணங்களை கை வலிக்க, வார்த்தைகள் சலிக்க எழுதிக்கொண்டே போவதில் எனக்கு நிச்சயமாக இசைவு இல்லை.

ஒரு கோட்டோவியமாக புகை மண்டலம் போல் ஒரு தோற்றமாக -  என் அனுபவங்கள் சிலவற்றை நான்  சொல்ல வேண்டியிருக்கலாம். 
அவற்றை சொல்வதன் நோக்கம் -  படிப்பவர்களின் மனத்தில் அவரவர் வாழ்க்கை நிகழ்வுகளின் ஞாபகப் படுத்தத்தான் என்பதற்குத்தான் இவ்வளவு பீடிகை.
எவ்வகையிலும் என் கடந்த வாழ்க்கை சம்பவங்கள் இப்போதும் பெரும் ஆசுவாசமாக, நான் தரிசித்த பெருஞ்சக்தியின் மறுக்க முடியாத சாட்சிகளாக இருப்பதில் எனக்கு இசைவு இல்லை.
அது இறந்து போய்விட்ட காலம்....

எப்போதும் பழையதை  நினைத்து மருகுவோருக்கும், வருங்காலம் நினைத்து உருகுவோருக்கும்  அந்த பெரும்சக்தியின்  தரிசனம் நிகழ்வதில்லை. 
ஆம்...அது எப்போதும் நிகழ் காலத்தில் தான்......!

குறைந்த பட்சம் என்வரையில் அப்படித்தான்......!! 

வளரும் 






   

Sunday, November 8, 2015

"எங்கெங்கு காணினும் சக்தியடா " - 2

பாருங்கள்.....!!
பகிர அவ்வளவு ஆவலாக இருந்தாலும் - எனக்கு மீண்டும் தொடங்க எனக்கு ஐந்து நாள் தேவைப்பட்டு விட்டது. வன்மையான வாழ்கைச் சக்கரம் ஒருபுறம்.... "அவ்வப்போது" மட்டுமே பளிச்சிடும் "சக்தி" ஒருபுறம்... 
இதற்கு இடையில் இந்த மனுஷ ஜென்மம் அல்லாட வேண்டி இருக்கிறது.

ஒரே ஆசுவாசம்....இந்த கால தாமதங்களால் யாருக்கும் ஒன்றும் கேடு இல்லை ....நான் சொல்வது சரிதானே ? 

பந்தியில் பசியோடு உட்கார்ந்து கொண்டிருப்பவர் போல - எல்லா நேரமும் சக்தியை தரிசிக்க, அல்லது தரிசித்தவர்களை காண எவரும் ஏங்கி கிடைப்பதில்லை. 
அவரவருக்கு அவர்களின்  வாழ்க்கை சக்கரம். தன போக்கில் சிறிதும் பெரிதுமாக வெவ்வேறு சுழற்சி.
ஒரு வகையில் பார்த்தால், நான் அவ்வப்போது எழுதுவது .... சக்தியின் விளையாட்டு தன்  போக்கில் வெளிப்படுவதே சரியாக இருக்கும்.

நான் இந்த தொடர் எழுத வேண்டிய காரணத்தை சொல்ல விழைந்தேன்....
நினைவு இருக்கிறதா ??

விஷய பரிமாற்றம் (communication ) ஏற்பட குறைந்த பட்சம் இருவர் இருக்க வேண்டும் என்ற விதி பாடுவதற்கும் எழுதுபவர்க்கும் கிடையாது (பேசுவதற்கு வேண்டுமானால் இருக்கலாம்)
கண்களை மூடி தன்னுள் லயித்து பாடும் ஒரு பாடகருக்கு தன முன் தன் பாட்டை இரசிக்க மக்கள் எவரும் தேவையே இல்லை. இருந்தால் நல்லது....இல்லாவிட்டால் ரொம்ப நல்லது. பெரும்பாலான பாடுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் காலப்போக்கில் இது புரட்டி போகிறது ஒரு சோகமான விஷயம் 
இதுவும் சக்தியின் ஒரு லீலை என்று புல்லரித்து போக வேண்டியது தான்....வேறு வழி இல்லை !!
எழுத்தை ஒரு மிகச்சிறப்பான  வடிகாலாக நான் உணர்ந்து இருக்கிறேன். 
குயிலும் மயிலும் கழுதையும் எப்படி தனக்கு அளிக்கப்பட வாழ்கையை வாழ்வாங்கு வாழ்கின்றனவோ, அதுபோல நான் இயற்கையாக எழுதுகிறேன். இதுவே நான் இதுவரை எழுதி வந்ததற்கும் இந்த புதிய தொடருக்கும், இந்த குறிப்பிட்ட பதிவிற்கும் மூல காரணம். 

வயலோடு போகும் தண்ணீர் வரப்பில் ஓடி இஞ்சி, எலுமிச்சை தாகம் தீர்ப்பது இயற்கை....
நல்லது,  கூடாதது என்ற சட்ட திட்டங்களுக்குள் வராது. சரிதானே ? அதுபோல இந்த தொடரை யாரவது சுகித்தால் அதுவும் இயற்கையே...!

மேலும் ஒரு ஆன்மிகச் செய்தி - இது சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்லக்கேட்டது. நாயன்மார்களில் பலரும்  தன்னுள் கண்ட அற்புதத்தை பிறருக்கு சொல்ல வாய்ப்பு கிடைக்காமல் , தக்க மாணாக்கர்கள் கிடைக்கததால், வேறு வழியில்லாமல் தங்களின் அனுபவங்களை கயிலாய மலையில் பதித்து இருக்கிறார்களாம் (ஒரு விதமான தொழில் நுட்பம் என்று வைத்து கொள்ளுங்களேன்.. "Whats UP ? " என்பது நல்ல பெயராக தோன்றவில்லை ??. 
கைலாயம் என்ற அந்த புண்ணிய தலத்தைப்பற்றிய ஒரு  சொற்பொழிவில் சொன்னது இது.

எனக்கு ஒரு கயிலாய மலையாக இந்த அகண்டம். மேலும் காரணங்கள் அடுக்க வேண்டுமா என்ன ?

சுரேன் 

Tuesday, November 3, 2015

"எங்கெங்கு காணினும் சக்தியடா "

இந்த தலைப்பை..... "ஒரு புதிய தொடர்" என்று  அடைமொழி சேர்த்துதான் அறிவிக்க எண்ணினேன். ..ம்ம்ஹம் .... 

சில நாட்களாவது தொடர்ச்சியாக எழுத எண்ணக் குவியல் உள்ளே பொதிந்து கிடந்தாலும் இடையறாது எழுதுவது என் பிறவி குணத்திற்கு ஒத்து வருமா என்ற சந்தேகம் இருப்பதாலும் ("இடையறாது" என்றால் என்ன - சாப்பாடு, தூக்கம் கூட இல்லாமலா ? ம்ம்ம் .....?), எவ்வளவு நாள் தொடரப்போகிறது என்ற தெளிவு இல்லாத காரணத்தாலும்  "தொடர்" என்ற குறியீடு சரியாக இருக்குமா என்ற சந்தேகம் தோன்றிவிட்டது.  ... 
எனவே அந்த கடைசி வார்த்தையை கைவிட வேண்டியதாகி விட்டது !

"புதிய" என்ற வார்த்தையின்  கதையும் கிட்டத்தட்ட அதேதான்....!! 
நான் 7 - 8 வருடங்களுக்கு முன் எழுதிய சில "பழைய" வைரங்கள் இன்னமும் "பளிச்"சென்று இன்று கூட (எனக்கு) தோன்றுவதாலும் , இதற்கு முன் எழுதிய என் எண்ணற்ற மிழற்றல்கள் இப்போது கூட சில நிகழ்ச்சிகளின் போது - என் நினைவில் வந்து மோதி போவதாலும் எதுவுமே  பழையதாகப் போய் விடுவது இல்லை என்ற விவேகம் எனக்கு சில வருடங்களுக்கு முன்னரே  வந்து விட்டது     
இந்த தலைப்பை ஒட்டி என் சிந்தனைகளை முடிந்த வரை சிந்தாமல் சிதறாமல் பதித்து வைக்க ஒரு "புதிய" முயற்சி அவ்வளவு தான். 
புதிதாய் எண்ணங்கள் தோன்றி விடுமா என்ன.....? அதுவும் எனக்கு மட்டும்.....?? 

அத்வைத விசாரம் இப்போதெலாம் கொஞ்சம் அதிகமாகி விட்டதால்,"ஒரு" என்று சொல்லக்கூட கொஞ்சம் "ஒரு" மாதிரியாக இருக்கிறது....Why to state the  obvious ?

தலைப்பு பற்றிய வியாக்கியானம்  முடிந்து விட்டது....சரி தானே....?

தலைப்பில் எழுத மறுத்த வார்த்தைகளுக்கு இவ்வளவு வாழ்வா ? என்று குமுறுபவர்களுக்கும் , இந்த தலைப்பு மட்டும் ("எங்கெங்கு காணினும் சக்தியடா"​) ரொம்ப அவசியமா...? ஏன் இப்போது இவ்வளவு வார்த்தைகளை இறைப்பது மற்றும் எதில் சேர்த்தி ? என்பவர்களுக்கும்   தலைப்பிலேயே பதில் வைத்து இருக்கிறேன்.

இருந்தாலும் என்னால் முடிந்த அளவு விளக்குகிறேன். இனிதான் நீங்கள் கவனித்து படிக்க வேண்டி இருக்கிறது.....

எங்கெங்கிலும் எப்போதும் சக்தியை, பரப்ரம்மத்தை தரிசித்துவிட்டவர்கள் பேச விழைவதில்லை. 
"கண்டவர் விண்டிலர்" என்பது தானே மனித குலத்தின் ஒப்புயர்வற்ற தனித் தன்மை ? 

இது போன்ற அரிதான மனிதர்களை  ஒருபுறம் தள்ளுவோம் - சரி ..நம் தலைக்கு  வைத்து விடுவோம் ...அப்போது தானே நம் கண்கள் சந்திக்க முடியும் ? 

மிச்ச மனிதகுலத்தில் - மிக்க வறுமையிலும் அடிப்படை போராட்டம் மிகுந்த வாழும் அந்த பெரும்பான்மை மக்களை நம் இதயத்துக்குள் பொத்தி வைப்போம்....(ஆம்..இவர்கள் புறம் தள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல. ஒரு வகையில் நாம் சுகிக்கும் பல விஷயங்கள் இவர்கள் பங்கும் அடங்கி இருக்கிறது - என்பதால்.....)

குத்துமதிப்பாக பத்து சதவிகித மக்கள் - தங்கள் அறிவு மூலமாகவோ, ஆற்றல் துணை கொண்டோ, அனுபவங்களால் செரிவூட்டப்பட்டோ...ஏதோ ஒரு வகையில் சக்தியை தரிசித்தவர்கள்தான் என்பது என் திடமான எண்ணம். 
("எப்போதும்" தரிசித்துக்கொண்டே இருக்க வாய்க்க பெற்றவர்கள் இல்லை என்பது தான் சோகம்.)

அவர்கள் அனைவரும்  இல்லாவிட்டாலும் - ஒரு சிலராவது தனக்கு தெரிந்த வகையில் பிறருடன் பகிர விழைகிறார்கள். 
வெகு பலர் ஆய கலைகள் 64 ன் துணை கொண்டு; சிற்சிலர் என்போல வாய் விட்டு அலற தயங்காதவர்கள் (."எங்கெங்கு காணினும் சக்தியடா " ).
விண்டுரைக்க சில வாய்களாவது வேண்டாமா என்ற ஆதங்கத்துடன்  பரம்பொருள் பெருங்கருணையோடு மின்மினி பூச்சியாக இவர்களுக்கு தரிசனம் தர திருவுள்ளம் கொண்டது போலும்....

எப்படி இருந்தால் என்ன ? 

இதை எழுதும் நான் அந்த பத்து சதவிகித்தில் சட்டமாக அமர்ந்து இருப்பவன். 

ஒன்றுக்கு மேற்பட்ட தரிசனங்கள் அருளப்பட்டு , கனகுதூகலமாக கூத்தாடும் மனம் சற்று திடப்பட்டு, மென்மேலும் கூர்மையாய் அறிவு விசாலப்பட்டு... இப்போது உங்கள் முன்னால் மாறாத உவகையோடும்  இன்னமும் தீர்ந்தும் (நீர்த்தும்) போகாத வார்த்தைகளோடும் .... இதை படிக்கும் உங்கள் மேல் பெருங்கருணையோடும் .......!!  

காரணம் இல்லாமல் காரியம் உண்டோ ? காரணங்கள் இன்னும் ஒரு பதிவாக வளரும்....என்னால் தடுக்க இயலாது....மன்னித்து அருள்க.....

மேலும் வளரும்....

பின் குறிப்பு....இந்த தொடரின் ஒவ்வொவொரு பதிவை ஆரம்பிப்பது மட்டுமே என் பொறுப்பு. நடத்துவதும் முடிப்பதும் ஈசன்.  









Saturday, May 30, 2015

*** The Height of Practical Life ***

Hi

I am reading a treatise of Adi Sankara (known as "Viveka Choodamani") for the past few months. 

Of course - not just reading -  but following a Audio CD while reading the commentaries of the verses. As most of the vedanta scriptures, he goes on talking about Athma Anaathma (self , Non self) Vivekam (or intellectual understanding).....; The speciality of the books is of course the Great Master's lucid writing & the way he handles the scholars' language (Sanksrit).

As I continue to enjoy the book, I also clearly realize that this dimension is not relevant for most of our practical life (which is of course stated very clearly in the book itself - making it more interesting). I was wondering what could be the height of "practical" Vivekam...and I think I stumbled upon it yesterday !!

There were some issues / challenges on a particular project that I was handling which was tormenting me for the past 2 - 3 weeks. Believe me, as on Tuesday that went past, I was totally blank and had no clue on how the revival is going to happen...!! In sheer desperation, I took few initiatives this week, and yesterday, all the issues got settled one by one as if some one swayed their magic wand on them....

I had bragged quite often about "Free Will Versus Destiny" in this blog and the latter had been a pet topic for me on which I have penned a poem too few years back......; The beauty is that I keep coming rounds and rounds on this subject while I have veered past many topics of my musings.

Can I claim if my initiatives were the reason for the solutions that I got yesterday ? In that case why did my earlier initiatives did not fructify ? OR is it that they were foundation laid earlier to get these lasting solutions......and last but not least - was it just destiny that was playing its pranks while I keep testing myself -as though I am a doer ??

Never ending questions.....indeed....!!

As I visited Baba Temple today morning getting up unusually quite early - I was looking into His eyes muttering only this...."If only I learnt this mystery before I drop dead, I will consider my life worth lived". 
Yes, I feel - this moment - with all conviction that there is nothing more to get from this human life.

Who doesn't want to taste the height of practical life having got into it by ..... sheer Fate..... or is it Free Will ???......

Lets go thru' all over once again...; Its worth it....

Pranams

Suchoo





Saturday, May 2, 2015

****பிறந்த நாள் - ஒரு சிறுகதை *****

முன்குறிப்பு : - எனக்கு இன்று விடியற்காலை 3.30 மணிக்கு முழிப்பு வந்து - கிட்டத்தட்ட 1 மணி நேரம் செலவழித்து இந்த "கதை"யை தட்டச்சு செய்துவிட்டு மீண்டும் சமர்த்தாக போய் படுத்துக்கொண்டு பத்து மணிக்குத் தான் எழுந்திருந்தேன்.....!! சுமாராக இருந்தால் தெரியப்படுத்தவும்....ஏனென்றால் எனக்கு இது சிறுகதை தானா என்ற சந்தேகம் இன்னமும் தீரவில்லை.  


அவனுக்கு அன்று பிறந்த நாள். விடியற்காலை முழிப்பு வந்து விட்டது. என்னென்னவோ குருட்டு யோசனைகள்..... மனைவியும் மகனும் தூங்குகிறார்கள் என்ற ஆதுரத்துடன் ஆடாமல் அசங்காமல் படுத்து கிடந்தான். அவன் சிறுவனாக இருந்த பொழுது "பிறந்த நாள்" என்று பெரிய மவுசு எதுவும் இருந்ததில்லை. தன் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் சாக்லேட், மற்றும் அம்மாவின் இரகசியமான அன்பளிப்பு (கசங்கிப்போன ஒரு ரூபாய் தாள்- தான் பெரும்பாலும்..... "எதையாவது தின்ன வாங்கிக்க..." என்று அப்பாவுக்கு தெரியாமல் ஒரு கிசுகிசுப்பு) தரும் சுகம்..... இது தான் பிறந்த நாள். பெரும்பாலும் முதல் நாள் அவன் அப்பாவோ அம்மாவோ நினைவு படுத்தினால் மட்டுமே அவனுக்கு தன்  பிறந்த நாள் என்று ஞாபகம் வரும். 

அவன் படித்த பள்ளியில் ஒரு தவற விடாத சம்பிரதாயம் - "கடவுள் வாழ்த்து" வகையறா முடித்த பிறகு - பிறந்த நாள் பிள்ளைகளை மேடையில் ஏற்றி - தமிழ் ஐயா "நாக நாதம்பிள்ளை" தன கணீர் குரலில் அறிவிக்க . மற்ற பிள்ளைகளின் ஆரவார குரலில் ஒரு வாழ்த்து.  அவன் மிகவும் தர்மசங்கடப்படுவது இந்த பாட்டின் போதுதான். மேடையில் கொஞ்சம் மந்தகாசப் புன்னகையோடு "எப்போது முடியும் ?" என்ற காத்திருற்றலைத் தான்.
பிற மாணவர்களின் பிறந்த நாட்களின் பொழுது - கூட்டத்தின் ஒருவனாக கோரஸ் குரலில் உச்ச குரலில் கிட்டத்தட்ட இயந்தர கதியில் தானும் கத்துவது ரொம்ப இயல்பாக இருந்தாலும் - வருடத்தில் ஒரு நாள் தான் மேடையில்  இருக்கையில், கொஞ்சம் அசந்தர்ப்பமாய் உணர்வான். 

பள்ளி நாட்களுக்கு பிறகு இந்த குறைந்த பட்ச கொண்டாட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போய்விட, பின்னர் பல பிறந்த நாட்கள் - மே  மாதம் முடிந்ததும் திடுக்கிடலோடு நினைவில் மோதி, தனக்கு எத்தனை வயது என்று வேக வேகமாக கணக்கிட்டு கொள்வான்.

இப்போதெல்லாம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் - முக்கியமாக நகரங்களில்  - வேறு பரிமாணம் பெற்று விட்டது. அவன் மகன் ஒரு மாதமாக தன்னுடைய வரப்போகும் பிறந்த நாள் பற்றி ஜபிப்பதும், அவன் உற்ற நண்பர்கள் புடைசூழ கேக் வெட்டுவது ஒரு விதத்தில் சாங்கியமாகவே கருதி விட்டான். என்ன செய்வது - பட்டணத்தில் சகவாச தோஷத்தில் இதெல்லாம் இல்லா விட்டால் வருடம் முழுதும் அவன் தன்  நண்பர்கள் வீட்டுக்கு பிறந்த நாள் விழாவுக்கு போய் கலந்து கொள்வது முடியாமல் போய் விடுமே ?
\
தன மகன் மறந்து போய் கூட "உங்களுக்கு  பிறந்த நாள் எப்பப்பா ?" என்று தன்னிடம் ஒருமுறை கூட கேட்காததை அவன் இயல்பாகவே ஏற்றுக் கொண்டு விட்டான். ஒரு வேளை - தனது பிறந்த நாள் கொண்டாட பொருட்செலவு செய்யவே தன் தந்தை அனாதியாக அவதரித்து -செலவு பற்றி சிறிதும் கருதாமல் வருடா வருடம் தன் வாரிசு வளர்வத்தை எண்ணி பூரிப்பது தான் அவர்  கடமை என்று எண்ணி விட்டானோ தெரியவில்லை.

சற்று வியர்வை கசகசப்பாக இருக்க, திரும்பி ஒரு பக்கவாட்டில் படுத்தான். ஏற்படுத்திய சிற்சில சலனங்களில்  அவன் மனைவிக்கு விழிப்பு கண்டு விட்டது. "முழிச்சீட்ட்ங்களா...என்ன பண்றீங்க ?" என்று ஒரு சன்னமான கேள்வி...
"ஒண்ணுமில்லை - நீ தூங்கு ....." என்று இவனும் மகன் தூக்கம் கெடாமல் அவன் தலையை வருடியவாறு மெதுவாக பதில் சொன்னான். 
"இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்" என்று ஒரு பட்டியக்காரன் போல - உணர்ச்சியற்ற குரலில் சொன்னான் - பொய்யான ஒரு பெருமிதத்தை வரவழித்துக் கொண்டு. அவன் மனைவி - அந்த செய்தியை கிரகித்ததும் ஒரு உடனடி குதூகலத்துடன் "அட" அனிச்சையாய் சொன்னாள். பிறகு ஒரு சிறிய மவுனம்...."வாழ்த்து" எல்லாம் சொல்லி அவளுக்கும் வழக்கம் இல்லை - இவனுக்கும் கேட்டு பழக்கம் இல்லை. அவள் பிறந்த நாட்களும் அப்படித்தானே போகிறது என்று அவனுக்கு திடீரென்று தோன்றியது. 

சட்டென்று ஒரு தருவித்துக்கொண்ட உற்சாகத்துடன் "இன்னிக்கு ஞாயித்து கிழமைதானே...மச்சான் வீட்டுக்கு போய் வருவோமா ? கடைசியா திருவிழாவுக்கு போனது தானே.....?" என்று கேட்டு இருட்டில் அவள் கண்களை தேடி சந்தித்தான்.....அவளுக்கும் அவன் குதூகலம் தொற்றிக்கொண்டது....."நல்ல ஐடியா தான்.... போய்  வருவோம்...." . அவள் அண்ணன் நகர்புறத்தைத் தாண்டி ஒரு 25 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கிறார். தாய் தந்தை காலத்திற்கு பிறகு அவர் ஒருவர் தான் அவள் வழியில் அவர்களுக்கு ஒரே உறவு. 

காலை பத்து மணி வாக்கில் புறப்பட்டார்கள். மோட்டார் பைக் குதித்து குதித்து திமிறி மெதுவாக ஓட, கடைசி 2 கிலோமீட்டர் ரொம்ப மோசம். தன முன்னால்  உட்கார்ந்திருந்த மகனை எச்சரித்து விட்டு அவன் மிகவும் கவனமாக ஒட்டி - ஈவு இர க்கம் இல்லாமல் ஊர் முழுவத்தையும் நோண்டி போட்டிருந்த நகராட்சியை சபித்தவாறு மச்சான் வீட்டை உச்சி வெயிலில் சென்று அடைந்தார்கள். 

வாசலில் யார் என்று சற்று குழப்பமாக வீட்டுக்குள் இருந்து பார்த்த அவர் - மலர்ச்சியாக வெளியே வந்து...."வாங்க மாப்ள...இதென்ன அதிசயமா இல்ல இருக்கு; வாம்மா ராசாத்தி !!...." என்று சொல்லியவாறு மகனை கொத்திக்கொண்டார். அவன் கூச்சத்துடன் உடல் நெளிய  வேறு வழியே இல்லாமல் மகன் அவர் மேல் சாய்ந்தான். 

பைக்-ஐ வீட்டினுள் ஒரு வெப்ப மரத்தடியில் சாய்த்தவாறு நிறுத்தி அவன் தன் ஹெல்மெட்டை கழற்றி வியர்வவை  வழியும் சட்டைக்குள் ஊதியவாறு வர, வாசல் சத்தம் கேட்டு மதனியும் வாய் நிறைய சிரிப்போடு அவர்களை நோக்கி  வந்தார்கள். "இதேது ? அதிசயம்...." என்று வார்த்தைகள் தன வசம் இல்லாமல் வர - இவன் மனைவி "உங்க மாப்பிள்ளைக்கு இன்னிக்கு பிறந்த நாளு .... திடீர்னு வெளிய போகலாம்-னு நம்ம வீட்டுக்கு கெளம்பிட்டோம்-ல " என்று பூரிப்புடன் சொல்ல, "சரிதான்.....ரெம்ப சந்தோஷம்....கோழி அடிச்சிட வேண்டியது தான்...இன்னிக்கு பெஷல் விருந்து" என்று சந்தோஷக்குரலில் - பொடிப்பயலை தலை மேல் உட்கார்த்தி  வைத்தவாறு மச்சான்  சொல்லியவாறு வாசல் நோக்கி ஏதோ காரியமாக விரைந்தார். 
அவன் மனையும் மதனியும் கல கலவென்று விட்டுப்போன கதைகளை அலசிக்கொண்டு இருக்க, அவன் இருந்த களைப்பைப்  பார்த்து, மச்சான் அவனை இளைப்பாரச்சொல்லிவிட்டு, பையனை தன்னுடன் தோட்டத்துக்கு கூட்டிச் சென்று விட்டார். ஒரு மணி நேரம் கண் அசந்த அவன் விழிப்பு கண்டு பின் தானும் அவருடன் சேர்ந்து கொண்டு சாயங்காலம் வரை தோட்டத்தில் கழித்தான்.
பொழுது சாய விட்டுக்குள் திரும்ப, அவன் மதனி "சீக்கிரமா சாப்பாட்டு கடையை முடிப்போம்; அவங்க அவ்வளவு தூரம் போயாகனும் " என்று துரிதப் படுத்த ..... சுமார் ஏழு மணி அளவில் சாப்பிடத்தொடங்கி விட்டார்கள். "ஊரு ரோடுதான் மகா மோசமாய் இருக்கு - வீட்டுக்கு போய் எலும்பையெல்லாம் எண்ணிப்பார்க்கணும் போல...." என்று அவன் இயல்பாக சொல்ல, ஒரு கவளத்தை வாயருகே கொண்டு போய்க் கொண்டு இருந்த அவன் மச்சான் "ஜங்ஷன் வந்தா வந்தீங்க ?" என்று ஒரு ஆச்சர்யக்குறியுடன் கேட்டார்.
அவன் கொஞ்சம் தயக்கமாக "ஆமாம் - வேறெப்படி வர்றது ?" என்று பதில் சொல்ல - அவர்...."சரியா போச்சு. - வடக்கே 4 கிலோ மீட்டர் போனா மில்லு வந்துடுமே.....இடது பக்கம் திரும்பினா state highways  வந்துடும். தூரமும் கொஞ்சம் குறையும்.....வேகமா பறந்துடலாம், இருங்க ஒன்னு செய்வோம்....நானும் என் வண்டியை எடுத்துக்கிட்டு மில்லு வரைக்கும் வாரேன். இருட்டு வேற சாஸ்தியா இருக்கும் - வழி தவறிட்டீங்கன்னா பிரச்னை" என்று விரைசாக சாப்பிட்டு தன் வண்டியின் நிலைமை ஆராய போய்விட்டார்.
அவர்கள் மகன்களும், மகளும் வெவ்வேறு இடங்களில் இருக்க, அவருக்கு தங்கள் செக்கு மாடு வாழ்க்கையில் பயணத்துக்கு அவசியம் இல்லாததால் அவர் மொபெட் கொஞ்சம் சிதிலமாகத் தான் இருந்தது. இது போன்ற திடீர் உபயோகத்திற்கு - சிற்சில முன் தயாரிப்புகள் தேவைப்படும் ஒரு பழைய வண்டி.
ஒரு வழியாக அவர்கள் கிளம்ப எட்டு மணியைத்தாண்டி விட்டது. மதனி வாய் முழுவதும் சிரிப்போடு விடை கொடுக்க, மச்சான் "மாப்பிள்ளை..பின்னாடியே வாங்க... தெரு வெளக்கு எல்லாம் ரிப்பேரா கிடக்குது" என்று சொல்லியவாறு தன் வாகனத்தை ஒரு முக்கலோடு துவக்கினார். அவர் முன்னால் பையன் உற்சாகத்துடன் தொற்றிக்கொள்ள,...இவன் தன் மனைவியுடன், வந்த திசைக்கு சரியாக எதிர்புறம் பயணிக்கலானான் .
இந்த ரோடு கொஞ்சம் தேவலையாகதான் இருந்தது. ஆனால் கும்மிருட்டில் - சுற்றிலும் சுவர்க்கோழி ரீங்காரத்தில் - அத்துவானமாக ரோடு இருக்க,  மிகவும் கவனமாக ஓட்ட வேண்டி இருந்தது. ஒரு அரை கிலோ மீட்டர் தாண்டியதும் மச்சான் கொஞ்சம் இரைச்சலாக "மாப்ளை....கொஞ்சம் ரோடு இனிமே மோசமா இருக்கும். கவனமா  வாங்க" என்று குரல் கொடுக்க....இவனும் தலையாட்டினான். ஒரு கட்டத்தில், அந்த ரோடு குறுகி, மிகவும் குறுகி கிட்டத்தட்ட ஒத்தையடிப்பாதையாய்   மாறிப்போக, திகிலடைந்தான். "இதென்னடா இது....வந்த வழியிலே போயிருக்கலாமோ ?" என்ற எண்ணம் தோன்ற, தன மச்சான் திடீரென்று "அம்மா" என்று அலறியவாறு ஒரு குழியில் வண்டியைச் சாய்த்தது ஒரு மெல்லிய வெளிச்சத்தில் இவனுக்கு தெரிந்தது.

சுதாரிக்க இயலாமல் - இவனும் அவர் வண்டிக்கு மிக அருகில் வண்டியை மோசமான ஒரு கோணத்தில் சாய்க்க.....வண்டி என்ஜின் உறுமியவாறு ரோடு ஓரமாக ஒரு பெருங்குழியில் முன் சக்கரம் சாய்ந்து, இவனை வண்டியை விட்டு உதிர்ந்து விழுந்தான். "மச்சான்....மச்சான்.....எங்க இருக்கீங்க.? லதா.....ராஜேசு....." என்று பதட்டத்துடன் இருட்டில் பரிதவிக்க - ஒரு பதில் குரலும்  வராமல் போக.....பீதியுடன் "லதா......எங்கம்மா இருக்க.....? ராஜேசு......கண்ணா...." என்று தானாகவே வந்த குரல் தழதழப்போடு துடிக்க......சட்டென்று விடிவிளக்கு எரிந்தது.....

"ஏன்னா.....என்னன்னா ஆச்சு உங்களுக்கு.....? தூங்கற நேரத்துல கண்ட நாவல் எல்லாம் படிக்காதிங்கோன்னு  சொன்ன கேக்கறது இல்ல...." என்று அலுத்தவாறு அவன் நெஞ்சை  அவன் மனைவி லதா தடவ அவன் சுவிட்ச் போட்டது போல் எழுந்து கொண்டு "ஒன்னும் இல்லை" என்றவாறு எழுந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் தூங்கிப் போனான்.

  

**** "Unstoppable - 2010 :: ஒரு திரைக்காவியம் *****

அன்புடையீர்....

வெளிநாட்டு படங்களுள் அமெரிக்க படங்களுக்கு ஒரு பிரசித்தியான இடம் எப்போதும் உண்டு.......!! பிரும்மாண்டமாக மிகப்பெருமளவு பொருட்செலவு செய்து அவர்கள் படைத்திடும் திரைப்படங்களை மற்ற நாடுகளின் திரைப்படங்களுடன் (முக்கியாக சில ஏழை நாடுகளின் எளிமையான படைப்புகளுடன்) சீர்தூக்கி... ஆராய்ந்து.......அலசும் காரியம் செய்வது என்னால் ஆகாது. 
ஏன் என்றால் முதற்கண் நான் இது வரை பார்த்த வெளிநாட்டு  படங்கள் ஒரு 25 இருந்தால் அதுவே அதிகம். (அவற்றுள் ஓரிரு ஈரானிய திரைப்படங்களும் உண்டு என்று அவையடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன்). 
மற்றொரு காரணம்... பேரிளம் இளைஞன் ஆகிவிட்ட நான் என் வாழ்நாளில் எதையும் இனிமேல் சாதிக்க முடியாவிட்டாலும். அர்த்தமில்லாத செயல்களில் ஈடு படுவதில்லை என்று ஒரு சங்கல்பம் செய்து இருக்கிறேன்.
கடைசி காரணம்....இரகசியமாக உங்களுடன் இருக்கட்டும் - ஓரிரு பத்திரிகைகளில் - சில அறிவு ஜீவிகளின் உலக சினிமா  விமர்சனங்களை ரொம்ப வினயத்தோடு  படித்துப் பார்த்தும்..... பீதி அடைந்து...மற்றும் சில தடவை முயற்சி செய்தும் ஒன்றும் புரியாமல் போன அனுபவம் எனக்கு இருக்கிறது. 
என் சினிமா ஞானம் மிகவும் எளிதானது. ரொம்ப விஸ்தீரணமாக நான் பார்க்கும் படங்களை ஆராயும் பக்குவமும்  அறிவும்  எனக்கு கிடையாது என்பதை நான் அறிவேன்.

சரி....நான் கடந்த மாதம் கண்டு களித்த ஒரு ஆங்கில (அமெரிக்க)  படத்தைப் பற்றி இந்த பதிவு.





இந்த படத்தின் பிரதம நாயகனான Denzel Wahsington நடித்த "Crimson Tide" (1995) என்ற மற்றொரு அற்புதமான படத்தை நான் கண்டு களித்து இருக்கிறேன். இந்த படத்தில் முற்றிலும் வேறான மற்றொரு பரிமாணம். மனிதர் பின்னி எடுத்து இருக்கிறார்.

ஒரு மனிதன் ஒரே ஒரு நாள் முதல்வரானால் என்ன ஆகும்  ? ஒரு வயதான தாத்தா  தார்மீக கோபத்தால்  உந்தப்பட்டு, தன் துக்கத்தால் தீவிரமடைந்து இலஞ்சத்தை ஒழிக்கும் ஒரு பெரிய காரியத்தை தன் கையில் எடுத்தால்  என்ன ஆகும் ? என்று நம் பாசத்திற்குரிய ஷங்கர் பல படங்களை தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு வழங்கியுள்ளார் - அதுவும் பிரும்மாண்டமான பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு நன்கு வியாபாரமான படங்கள்.....
இந்த படமும் அந்த வகையைச் சார்ந்தது தான்....கிட்டத்தட்ட அரை மைல் நீளமுள்ள ஒரு சரக்கு இரயில் ஏதேச்சையாக ஒரு சின்னஞ்சிறிய அசம்பாவிதத்தினால் ஓட்டுனர் இல்லாமல் சீறிப் பாய்ந்தால் என்னவெல்லாம்  ஆகக் கூடும்  ? ...என்பது கதையின் ஒற்றை வரி (one line) - 90 நிமிட நேரத்திற்கு நம்மை இருக்கையில் கட்டிபோடும் ஒரு திரைப்படம். 
முடவன் ஒருவன் தன தோளில் உட்கார்த்தி  குருடன் ஒருவன், முடவன் வழி சொல்லச்சொல்ல தங்கள் சேருமிடம் சேர்ந்த ஒரு கர்ண பரம்பரை கதை உங்களுக்கு தெரியுந்தானே ? 
அப்படி, 28 வருட அனுபவம் வாய்ந்த ஒரு வயதான  ஓட்டுனரும்  (இரண்டு அழகான குமரிகள் 18 மற்றும் 19 வயதுகளில்....குறித்து கொள்க...), அவரிடம் அன்று ஜோடி சேர்ந்த - இரயில் பற்றி அனுபவம் இல்லாத - ஒரு இளைஞனும் (conductor)  அசகாய சூரத்தனங்கள் செய்து, மதம் பிடித்து சீறிப்பாயும் அந்த சரக்கு இரயிலை  நிறுத்த பிரம்மபிரயத்னப் படுகிறார்கள். 
தன வழியே வேறொரு திசை நோக்கி போய்க்கொண்டு இருந்த அந்த இருவர் விதிவசத்தால் இந்த இரயிலைக் கட்டுப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். எப்படி என்றால், தங்கள் இரயில் வண்டியின் பின்னால் இருந்த பெட்டிகளை கழற்றி விட்டு விட்டு, பின் பக்கமாகவே வெகு விரைவாகச் சென்று, அந்த ஆளில்லா இரயில் வண்டியில் பிணைத்துக்கொண்டு மெது மெதுவாக அந்த வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தி .... நிறுத்திவிடலாம் என்ற ஒரு திட்டம்.
அவர்கள் முயற்சிகள் ஒவ்வொன்றாக தோல்வியுற.....அவர்களில் சுய ஊக்கத்தால் தானும் உந்தப்பட்டு அவர்களுக்கு தகவல் தொடர்பு விஷங்களில் தொலைபேசி மூலம் துணை நிற்கும் அந்த இரயில் நிறுவன அதிகாரியாக ஒரு பெண்மணி - ஒரு முக்கியமான பாத்திரமாக மிளிர்கிறார்.
கடைசியில், அவர்கள் (நமது தமிழ் படங்களில் வருவது போல) தாங்களே  சாதிக்கிறார்கள் இல்லை என்பது தான் நமக்கு பாடம்... (அல்லது ஞானம்....!!). அவர்களின் பல்வேறு முயற்சிகள் தோல்வியைத் தழுவி விட, திடீரென்று உதயமாகும் அந்த இரயில் நிறுவனத்தின் ஒரு அனுபவம் மிகுந்த மனிதர் துணைக்கு தன் பெரிய காரில் இரயில் அருகே பரபரப்பான சூழ்நிலையில் ஒட்டி வந்து அந்த இளைஞனை தன் வண்டியில்  குதிக்கச்செய்து அவனை ஒட்டுனரில்லாத அந்த இரயில் என்ஜின் அருகே கொண்டு பொய் சேர்த்து....அவன் தாவி ஏறி.....வண்டியை நிறுத்த....அந்த உதவி செய்த அதிகாரி - அங்கே குழுமி இருக்கும் ஊடகங்களின் முன் தானே அந்த தீரமுடைய செயலை சாதித்ததாக தம்பட்டம் அடித்து கொள்கிறார். 
படம் முழுதும் நம்மை பிரமிக்க வைத்த குருடனும், முடவனும் அதை  தங்களுக்குள் சிரித்துக் கொண்டு இயல்பாக ஏற்றுக் கொள்வது கொஞ்சம் நமக்கெல்லாம்...புதுசு....!! 
கதாநாயகனை வாழ்த்தி திரைப்பாடல் ஆசிரியர்கள் a/c அறைகளிலும் மொட்டை மாடியிலும் நின்று பாடல்களை எழுதும் கட்டாயத்தில் இருக்கும் நமது சினிமா உலகத்தில் இது போன்ற யதார்த்தமான கதாநாயகர்கள் "பிழைக்கத் தெரியாதவர்கள் தாம்". (ஆனால் ஒரு விஷயம் - நமது வயது முதிர்ந்த ஓட்டுனர்- நாயகருக்கு முழு பலன்களுடன் பென்ஷன் கிடைத்து விடுகிறது; அந்த இளைஞனுக்கு தன இல்வாழ்க்கை குழப்பங்கள் தீர்ந்து இரண்டாம் குழந்தையும் பிறந்துவிடுகிறது.....என்பத்தை படத்தின் பிற்சேர்க்கையில் அறிகிறோம். அதாவது. அவர்களின் தேவைகள் மட்டுமே தீர்க்கப்படுகிறது..மாலை மரியாதை எல்லாம் அந்த இரயில் நிறுவனத்திற்கே.....)

அந்த இரயில் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்மணி (கதையின் முக்கிய கதாபாத்திரம் தான் இவளும் ...) கடைசியில் "ஸ்தலத்திற்கு" வந்து சேர்ந்ததும்,...."உங்களில் யாருக்கு நான் முதலில் முத்தமிட வேண்டும்"? என்று பூரிப்பில் கேட்க,. நமது வயதான ஓட்டுனர் சிங்கம்...."எனக்குத்தான்" என்று அவள் முத்தத்தை ஏற்றுக் கொள்வதும், அந்த பெண்மணி அவரை அணுகி முத்தமிட்ட பின் "கொஞ்சமே கொஞ்சம்" வெட்கப்பட்டு சிரிக்கவும், அவரின் teen age மகள் இருவரும் அவரை சற்றே தள்ளியிருந்தவாறு அவரை நையாண்டி செய்வதும்....அந்த பெண்மணி மிகவும் இயல்பாக "உங்கள் பெண்களா?" என்று யூகித்து அறிவதோடு ...படம் முடிந்து விடுகிறது. 
படத்தை மிகவும் ஒன்றிப் பார்த்த எனக்கோ பெரும் சிரிப்பு ......! 
"இரண்டு ஆண்டுகளுக்கு பின்" என்று ஒரு slide போட்டு - அவர்கள் இருவருக்கும் ஒரு திருமணம் செய்வித்து....அவர்கள் ஒரு குழந்தை பெற்று...அதை அந்த இரண்டு மூத்த பெண்களும் கொஞ்சுவதாகவும் , background- ல் ஒரு லல்லல்லா பாட்டு பாடியவாறும் முடிக்காததில் எனக்கு ஒரு ஆசுவாசம்....!! 
என்னதான் இருந்தாலும் இந்த வெள்ளைக்கார இயக்குனர்களுக்கு கற்பனை சக்தி கொஞ்சம் நம்மை விட குறைவு தான்....வேடிக்கைக்காகச் சொன்னேன்.

ஆனால் ஒன்று.....!! இந்தப் படத்தை hollywood இன் பத்தோடு பதினொன்றாக. மற்றுமொரு action படம் என்று நீங்கள் முடிவுக்கு வருவீர்களே ஆனால் பெரும் தப்பிதம் செய்தவர்கள் ஆகிவிடுவீர்கள். நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும், மனிதர்களின் மன ஓட்டத்தையும். மனித நேயத்தையும்....நாம் அள்ள அள்ள -  நிற்காமல் - நமக்கு அள்ளித்தந்து கொண்டே இருப்பது "unstoppable ". 
காலம் தப்பினாலும் பரவாயில்லை....இதுவரை பார்க்க வாய்க்காவிடின் பார்த்து விடுங்கள். 

அன்புடன்

சுரேந்திரன் 

Tuesday, April 14, 2015

********* Navaratna *********

I had published two books on my two prior birthdays - both were not technically books rather compilation of few of posts at this blog.

When I forced myself into "இனியவை நாற்பது "  (when I turned 40) which was my first compilation book , I was even visualizing that I will be publishing 40 such books in the following birthdays - without any break !
Being a blogger - if not a regular blogger - getting materials could have become just pulling out few of my posts during the full year before the birthday !!  That had been my original (lazy ?) idea. 
In sync to this idea, my second one "சாதாரணத்துவம்" came easy last year but then, it was slightly improvised because though it was again a compilation, it came under an umbrella of theme that I was writing at  various points of time during past 2 - 3 years.

But then, some time during the beginning of this year, I thought - for this year, I would make out a book compiling my FIRSTs in various forms of expressions - each one with a prelude which require some amount of time to be invested. (The title was supposed to be "கன்னி முயற்சிகள்"). I had almost decided upon it.....

Then what happened ? 

The typical gloom that I undergo once a while happened during last month and I started seeing the foolishness to feel proud about my FIRST initiatives earlier than it ought  to be.....!! 

For some one, whose most of the first attempts did not take any shape further the first attempt - it might have even retard my future initiatives...... 
Also, I - do some times imagine that I write with crystal clarity, it is quite glaring to see that my expressions are still in the process of gaining maturity & perhaps a grand memoir like this (trying to compile all my "firsts")  could be attempted after couple of decades - not now !!
(by any chance were you grinning ? huh....)

So, I shelved the idea - I mean even the idea to publish books henceforth & wanted to give myself some time to settle down myself before thinking about such pranks.  

By sweet coincidence, on Apr 12th (which was two days back - on the sunday) I stumbled upon a nice possibility ***** "நவ இரத்தினங்கள் "******* for my June 12th book (I mean my birthday this year). It happened quite unexpectedly and as I keep musing the idea, it evolved on its own into a nice little booklet (if not a book) bearing the above title.

This will be in pure Tamil unlike my earlier attempts & the beneficiary (if any) will be only tamil speaking / thinking humans to help them to raise their bars - I mean, the bars up to which I can lend my hands gracefully.

Another speciality of "நவ இரத்தினங்கள் " would be that it will be created in this span of approx 60 days only and not a piece of it was / will be published at AGANDAM.

I might be writing out the prelude part alone perhaps during the first week of June 2015 mainly to serve the purpose of curtain raiser and planning to loop few of my erstwhile FB friends who might be liking it. (Yeah, NOT all)

So, why am I forcing myself into this DOM DOM now.....!! 

It is only to keep myself hooked on this initiative offering every single minute possibly I can shave out of my 24 hours on each day for this initiative. 

May Almighty Prevail & bring out my best ....and let it help a handful if not plenty. I am not in a hurry at all

"இன்னமும் போக வேண்டும் ... பல காத தூரம்" !!

Love // Suren




Wednesday, April 8, 2015

மாமத யானைகள்

முன் குறிப்புகள் (வழக்கம் போல் !!)

(1) யானைகள் கூட்டங்கூட்டமாக வாழும் தன்மை கொண்டதாயினும் தன் அந்திம காலத்தில் கூட்டத்திலிருந்து பிரிந்து அமைதியாக தனித்து வாழுமாம். மற்ற யானைகளும் அந்த முடிவை மதிக்குமாம். ( எங்கேயோ படித்து நினைவில் பதிந்து போன ஒரு தகவல். படியுங்கள்..இந்த முன் குறிப்பும் அதன் தொடர்பும் புரிந்து போகும் ...)

(2) இந்த பதிவு சுமார் இரண்டு மணி நேரத்துக்கு முன் சந்தித்து விட்டு வந்த என் ராமு மாமா எனக்குள் ஏற்படுத்திய எழுச்சி பற்றி.....!! அவரைப் பற்றிய என் பிரமிப்பை ஏற்கனவே ஒரு பதிவில் - ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறேன். அதையும் சேர்த்து படிப்பது - இந்த பதிவை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்... (தேடுக - Sep 2011)

அன்புடையீர் 

எங்கள் அன்பிற்கு உரிய ராமு மாமாவை நானும் அனுவும் போய் பார்த்து விட்டு வந்தோம். எண்பது வயது கிழவர்....ஒரு வித வசீகரத்துடன் தான் இன்னமும் இருக்கிறார்....!!
அவருக்கு தொண்டையில் ஒரு அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதம் முடிந்து விட்டது. தற்போது ஓய்வில் இருந்து புண் ஆற வைத்து மீண்டும் பரிசோதனை நடத்தி சிகிச்சையை முடிப்பார்களாம். விசேஷம் என்னவென்றால் அவர் இந்த விஷயத்தை - தன வீட்டுக்கு மிக அருகில் (சுமார் 500 மீட்டர் தூரத்தில் வசிக்கும்) 85 வயதுக்கு மேல் இருக்கும் தன் சொந்த சகோதரிக்கே- அதாவது என் பெரியம்மா) விஷயத்தை தெரியப்படுத்தியது 2 / 3 நாள் முன்னர் தான்.
 எனக்கு நேற்று இரவு இந்த விஷயம் தெரிந்து இன்றே போய் பார்க்க முடிந்தது. (சொன்னால் வெட்க கேடு.....என் வீடு அவர் வீட்டிலிருந்து 1 கிமீ ).
கொஞ்சம் ரகசிய குரலில் மெதுவாக பேசினாலும் எங்கள் வருகை தந்த மகிழ்ச்சியில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேசினார். ஒரு கட்டத்தில் அவர் இருமல் தொடர்வது கண்டு நாங்கள் அவரை கிட்டத்தட்ட படுக்கையில் சாய்த்து விட்டு தான் வர முடிந்தது.
அவர் உடல் நிலை பற்றியோ பார்த்து விட்டு வந்த என் அல்ப திருப்தி பற்றியோ இல்லை இந்த பதிவு....!!
அவர் மனத்தளவில் அடைந்து விட்ட ஒரு ஆன்மீக  நிலை என்னை பிரமிக்க வைத்தது."65 வயது வரை நான் வாழ்வாங்கு வாழ்ந்து விட்டேன்....அதுவே எவ்வளவோ பேருக்கு வாய்ப்பது இல்லை. அதனால் என் நிலைமை பற்றி யாருக்கும் தெரியப் படுத்தவில்லை" என்று  ஒரு 80 வயது கிழவர் தெளிவாக - குரலில் எந்த வருத்தமும் ஆதங்கமும் இல்லாமல்  பேசுவது  கொஞ்சம் அபூர்வம்...!! (கிட்ட தட்ட 40 நாட்கள் தினமும் radiation treatment க்கு மவுண்ட் ரோடு இருக்கும் அப்போலோ -வுக்கு தினமும் போயிருக்கிறார் - தன் குழந்தைகளின் உதவியுடன்.) 
கடந்த ஒரு மாதமாகத்தான் voice rest  ..... வீட்டிலேயே....!!
அவர் இன்று பேசிய பல விஷயங்கள் சத்குருவின் ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு நிகராக இருந்தது. வாழ்க்கை  எப்படிப்பட்ட ஒரு கருவி என்பது பற்றி எனக்கு மீண்டும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு....
.எண்பது வயதுக்கு மேல் நம் ஆயுள் இருந்து விட்டால் எப்படி பட்ட மன நிலை கொண்ட மனிதனாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு அற்புதமான illustration. பல முறை என் கண்களில் அவர் பேசப் பேச நீர் வழிந்து. துடைத்துகொள்ள கூட ஒரு கட்டத்தில் அலுத்து போய்விட,அப்படியே விட்டு விட்டேன்....
என் மாமா போன்ற வயது முதிர்ந்த எத்தனை பேர் இந்த உலகத்தில் இந்த க்ஷணம் வாழ்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆவல் எனக்கு சுத்தமாக இல்லை. ஆனால் ஒன்று பற்றி நிச்சயம் புரிகிறது....இது போன்ற யானைகளுக்கு மரணம் என்பதே இல்லை..
.ஒரு .யானையால் அசம்பாவிதமாக கொல்லப்பட்ட என் ஆசான் பாரதி மட்டும் சிரஞ்சீவி இல்லை....!!சாதுவான பிராணியாக பொதுவில் கருதப்படும் இம்மாமத கூட்டத்திற்கு என் நமஸ்காரங்கள் ....!!
இன்னமும் இந்த வாழ்க்கை -வீர்யமான என்  அடுத்த நாற்பது ஆண்டுகளில்-  என்னவெல்லாம் எனக்கு அன்பளிப்பாக தரப்போகிறதோ...... !!!
கை விரல்களுக்கிடையில் வழிந்து ஒழுகும் தேன் போல, நான் தவற விடாமல் இருந்தால் - நானும் ஒரு புத்தன் ஆவேன் என்று தான் தோன்றுகிறது.
சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்..... என் கடன் இந்த பதிவுடன் முடிந்தது. தத்சது ..

சுச்சு

Tuesday, April 7, 2015

3Gs of spiritual life - A God, God Man & The Guru

Dear All

Had been to PARIKKAL yesterday with Anoo along with sister's family. This was my third visit to this temple in past 4 - 5 months but unique in its own way. First time, driving the car myself with couple of others, second time - on my own in a public bus....and now, this time, sitting merrily in the nice a/c car of my Attimber who was speeding at 110 KMPH in NH40.

Well, It might sound like a paradox that I had written about my latest discovery of the 3 G's first as I was blessed to stumble upon my Guru 18 years back. Though I am not too rigorous on the practices Sadhguru taught me during the Yoga Class these days (at the same time - not out of it completely too !!) , he still spills himself out of me as I picked up his verbatim, spontaneity and also almost hear his deep sounding laughter even now though...  its more than two years I have reached out for a direct Sathsangh / Class held by him.

The God Man arrived bit later - but still quite long back when I see from today - during 2004. 
Shirdi Baba entered my life without offering me any choice and continues to entice me with his pranks of making his presence felt.....and reminding me that he is still available to me - just in case.....!!

I have used the article "a" for God mainly because there is abundant choice available in our culture and seemingly we have a lot of choice making. 
But then, as I had written earlier too in this blog, ISHTA DHEYVAM happens only by unexplainable choice making of the deities themselves and we - humble souls- are always at receiving end.

Now let me come to an important question....Does one need a rep in each of the above category ? 
My answer is a BIG YES and a much LOUDER NO.

YES, because - it is unreasonable for us to seek stupid practical things from a Guru - who is meant to be some thing else !! 
A God Man is more a friend and helps us in bit more practical matters. In a way, he does not force us for a complete surrender but I have seen it personally that he gives a hint on how to handle things; The GOD is some one we learn to surrender meekly without any craving or questions on practical matters. 
I in fact feel GOD is pole apart from the Guru who helps the seekers to evolve into God themselves - I mean, if they are enough qualified and sincere enough.....!!

NO....because, I do realize that there is a vast number of people who will ridicule the previous para and call me an idiot because ... it is possible that one of the 3 Gs is capable of offering every thing for them. 
To compartmentalize spiritual aspect of life might be seen as childish.....

Yeah....@ AGANDAM, there are always unlimited opportunities......; 

This is just to vent out my feelings not to show my case or challenge any body.... (Some one recently made a quirk comment during a general chat that "perhaps I want to show people that I am different".....!! )
What do I do if I am essentially different from them - Hide in a corner.....Huh ?)

Love // Suchoo 

Saturday, March 21, 2015

The Why's of Life !!

Why did I start off this blog with lot of intensity and never let it off the hook in spite of the lows during six year period ?
Given the nature of my U Turns , I can - without a doubt - say this is the only thing that I did for so long with lot of sincerity and passion. It is delight even now to think of those golden moments which enthralled me & few others too in this process.

The Why Question doesn't end there - rather it was only a prelude.

To be honest, I was toying the idea of getting out of FB for more than two months and when it was essentially facilitated, I had no tinge of sorrow or disappointment. So, I took it in stride as I realized very clearly the "friends" of  FB don't belong to my creed - rather I don't belong to them and it is most natural to bow out and move away gracefully.

I am quite aware that I have still not reached towards the title justification.

Am really not able to verbalize why I decided to restrict public view of AGANDAM which is a totally different kind of venting out space - created for myself and enjoyed myself immensely quite a number of times. But then, I felt I needed that BREAK ...
A Break from Gazing Others Eyes into My Private Space !!

I do not when I will open up the blog once again, but then -  when I do it, I will be doubly convinced that why I should never think of shutting it again. Until then, let this be my once a while companion - who accepts me with full of warmth in spite of me being myself and never get curious about challenging me on my misgiving.

Today, sitting at Kalyani's home, as I type this out with a certain amount of struggle with the worn out key board, I am happy my fingers are still firm dangling all over it...and my mind is razor sharp still..and most importantly the gift of life is still with me.

Delightful & (Slightly - at least seemingly - balanced)

Suchoo  

Friday, February 6, 2015

Being @ 40s.....!!

Dear All

There were few ripples of thought during the past fortnight that has paved way for this post. In different circumstances & varying contexts, I found similarity in the way I was addressing it (yeah....as in the title !!!). So......here I go

The past 2 weeks had been bit hectic at official front and I was calculating every single minute that I spending (Commerce students can recall "time study" and "motion study" was it Fredrick Taylor ? or Henry Fayol ? I forgot). But at the same time, I have been bit ruthless about my personal priorities and had not compromised on things that I wanted to do... (of course, could not write any thing in my blog...but that's just ONE blot).
I was realizing that Time Management is most crucial only for this phase of life - I mean -  after we turn 40.

There was also a situation when I had to see a (not recent one, relatively recent) tamil film during a out of station - trip with my close relatives. The film was sort of action kind - acted (?) by Sivaaji's grandson (Arima Nambi). Though I was bit thrilled initially at the sparking intelligence in the story line, I found myself bit alienated by the repeated demonstration of brain again and again in the story. Think I should have avoided telling it explicitly in the Van where people were watching the film with lot more focus than me... (and the beauty is that many were seeing it for the second time). 
There was a possibility of spitting some venom during the discussion, but then, I subdued a little bit....yeah I am 40 already !!! Time to get mellowed down, right ?? It is better to carefully choose the film instead of getting into unpleasant situations......!

Last but not least, there is a grand re-unionizing of my mates during school days and its lot of giggles and laughter in Whatsup and FB. Fortunately, since I am not in Whatsup....(you know, with me never satiated hunger to respond back with quickies !!), but I am looking at FB almost daily these days and grand old memories are getting revived up. 
It is really good to have this line of Time Management thinking - is intruding in these interactions too.

So, for those who are younger than me, pull your sleeves up for the inevitable choices that you will be making about how each day need to be "well"-spent.....!! 
For those who want to retort back "why are you are thinking so much...why don't  you just have fun & enjoy life ?" 
My simple and straight response is ...
" Fun and enjoyment are too subjective. One needs to define it for himself ".

AGANDAM is too vast to accommodate YOU as well as ME at the same time with motherly grace.



Love // Suren

ps :- Lavanya, So I brought AGANDAM into the post once again.... Yeaaaah......!!!!


Monday, January 26, 2015

இஷ்டமும் தெய்வமும்

Prelude : After some hesitation, I decided upon ENGLISH for this post. The reason could be best known by itself - else, you will any way find it towards the end of the post.

This could be a short post but the most important one I have done so far.... (incidentally, I casually saw the number of the posts at AGANDAM so far - it was 222. So this fancy post is after a fancy number)

Dear All

Yesterday (I mean 24th Jan) I had been to PARIKKAL (close to Viluppuram) to visit a small temple of Lakshmi Narasimhar.

I had been craving to go here for past 2 - 3 months - particularly more so since Jan 1st -  but you know, many a things in life happen only when it falls due & not when we feel like. 
Of course I went there all alone.

In fact this is the second time I am visiting this temple - the first one during the sunday after Diwali which was along with my mother and a family friend (who is extremely devout and knows the route of the 3 famous LN temples around this area) - very comfortably in a car. 
For me that one had been an exploratory trip, me trying to find out who my MAN is...sorry GOD is.....!! I feel too exhausted today to write any thing about the personal incidents that lead me towards this deity form and specifically to this temple (It could be irrelevant to you too !). 
During the earlier trip, when we reached this temple as the last of the temples (it always happens like this !!) I told myself .....YEAH...He is THE guy....!!

Now, yesterday, I was there standing all alone with just a purse in my pocket with modest money to bring me back to chennai - profusely weeping for more than half hour before the Deity. 
The young boy-priest some how realized that I am bit of strange customer and was gracious to allow me to stand there without disturbing me; he also played VISHNU SAHASRANAMAM in his mobile singing along with the phone - either it is his hobby or he decided to give me a backdrop. 

Well Pals, having subscribed to few religious (in particular TAMBRAS) sites at FB, I keep reading a lot about the importance of KULA THEYVAM or family deity. It is always understood (or misunderstood ?) that Ishta Dheyvam is of YOUR choice.

Take it from the Wise... ! (Yes, I meant me)
Ishta Dheyvam essentially means those noble Gods and Goddesses picking up lesser mortals like us - of THEIR CHOICE. 
I can say this with authenticity as only couple of years back I had learnt that the SINGA PERUMAL KOIL close to Chennai actually represents LN !! That was the level of my ignorance. 
If yesterday,  I had travelling 200 kilometers to reach this temple, its not because I have realized God. I am beginning to understand that it is the beginning of a long search. 

For some one who is 42 years old, it is too late to have a beginning, right ? Perhaps I need that ferocity and intensity of my Lord Lakshmi Narasimhar to travel where I am destined to....!! I just don't care a damn even if it is just a round about journey not leading me to any where closer to him - its just important to raise above the cool comforts that life has been offering.

Well, before I close this one, I felt I can be bit un-emotional if I don't write this in Tamil .....Just to to explain the contrast of language between the title and body of this post. That's all for you.

   

Love you......

Suchoo.


Sunday, January 25, 2015

"சுஜாதா" - ஒரு தரிசனம்

 அன்புடையீர்




பொங்கல் சமயத்தில் - சுஜாதாவின் சிறுகதை தொகுதியில் முதல் இரண்டு புத்தகங்கள் - மொத்தம் சரியாக 110 கதைகள் - பரிசாக கிடைத்தது.
மன்னிக்கவும், இரவல் தான்...
இரவலும் ஒரு வகையில் உவந்து அளிக்கும் பரிசு தானே ? அதுவும் சொந்த அக்காவிடமிருந்து...
நான் சீர் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பண்டிகை சமயத்தில்  ??

ஒரு வாரம் தவம் போல் -  இந்த 110 கதைகளையும் முழு  மூச்சாக படித்து தீர்த்தேன்... (சிறு கதைகளில் இது ஒரு வசதி....) மேலும், சுஜாதா போன்ற ஒரு அனாயாசமான கதை-சொல்லியிடம் நீங்கள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு கூட உங்களை ஒப்படைக்க முடியும்.
அநேகமாக பாதி கதைகள் நான் வெவ்வேறு கால கட்டத்தில் படித்தவை தான். மீண்டும் நீண்ட நாள் கழித்து படிப்பது ஒரு சுகம்.
மேலும் நான் பிறந்த அந்த காலகட்டத்து கதைகளை (70-80)  ஒரு வித புல்லரிப்புடன் படித்து மகிழ்ந்தேன். அப்போது சுஜாதாவின் பரிணாம வளர்ச்சி முடிவடையாத காலமாக இருக்க கூடும்.
இருந்தும் அவர் பின்னால் எழுதிய அற்புதமான சில படைப்புகளின் சாத்தியம் வெகு நிச்சயம் திடீரென்று அடையப்பட்டது இல்லை என்று தெளிவாக புரிந்தது. 

எனக்கு தோன்றிய சில எண்ணங்களை பகிரலாம் என்று சித்தம். நம்புங்கள்.... நான் எழுத நினைத்ததில் கால் பகுதியை தான் எழுத இருக்கிறேன். அதுவே நீளமாக இருப்பதாக நீங்கள் கருதினால் ... என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.... (வேண்டாம்... மேலும் நீளமாகி விடும்)

1. அந்த அசாத்திய எழுத்து நடையை பரிசோதனையாக பல்வேறு பழைய கதைகளில் பயன் படுத்தியிருக்கார். அவரே ஒரு தொகுதியின் முன்னுரையில் சொல்லி இருப்பது போல் அவருக்கு காலக்கெடு மட்டுமே ஒரு நிர்ப்பந்தம் ஆகிவிட்ட சூழ்நிலையில் (எப்படியும் அவர் எழுத்துக்களை பதிப்பிக்க முன்னணி பத்திரிகைகள் காத்திருந்த காலம்) - கொஞ்சம் துணிச்சலாக - ஒரு புதிய எழுத்தாளன் நினைத்து கூட பார்க்க முடியாத சில பரிசோதனைகள்....

ஒரு கதையில் - ஏதோ ஒரு தினசரியில் (newspaper)  வெவ்வேறு இடங்களில் வெளிவந்த மூன்று சாலை விபத்துகளை - விஸ்தரித்து  மூன்று குறுங்கதைகளாக்கி கடைசியில் அவற்றைப் தினசரியில் பின்னி .......!!  சிறப்பான சிறுகதை இல்லாவிட்டாலும் ஒரு சிறுகதையின் சாத்தியத்தை தொட்டுக்காட்டும் ஒரு முயற்சி.... Nothing More ... Nothing Less 

2. பல கதைகளில் - பொதுவாகவே பெரிதும் விமரிசிக்கப்பட்ட அவர் ஸ்டீரியோ type  அப்பாவி, நேர்மை குணச் சித்திரங்கள்..... ; மொத்தமாக படித்தப்போது முகத்தில் அறைந்தது. But I also sensed another  glaring contradiction  - கொஞ்சம் sex கலந்த இளமையான அவர் நடை நிச்சயம் "ஜன ரஞ்சகதுக்காக " என்று தெளிவாக தெரிகிறது. These two just don't gel with each other.
இது அந்த தனிப்பட்ட கதைகளைப் பற்றிய என் விமர்சனம் இல்லை.
அந்த மாமனிதன் சராசரி சஞ்சலத்திற்கு (புகழோ பணமோ, ஒரு "இடத்தை" அடைய பிரயத்தனமோ ஏதோ ஒன்று .....) ஆட்பட்டு இருந்தது - ஒரு வகையில் எனக்கு ஆசுவாசத்தை தருகிறது. 
நம் சமூகமே கடவுள்களிடம் நம்மை ஒப்படைக்க தயாராக இருக்கும் ஒன்று.....ஒரு சக மனிதர் தான் இவர் என்பது என் ஆசுவாசம்.
அவரிடம் என்னை ஒரு வாரம் எந்த தயக்கமும் இன்றி என்னை ஒப்படைக்க எனக்கு முடிந்தது என்று மேலும் ஒரு சுய திருப்தி.....!!
(புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள் !!)

ஒரு குறிப்பிட்ட கதையில் (1982 ல் எழுதப்பட்டது ) கதாநாயகி  தன்  ஐரோப்பிய  விஜயத்தின் பொழுது தன அண்ணனின் நண்பனிடம் (முதல் அறிமுகமே அப்போது தான்) இந்தியாவுக்கு டிக்கெட் வாங்கித் தர மன்றாடுகையில் ரொம்ப இயல்பாக - டிக்கெட் ஏற்பாடு செய்தால் , முத்தம் தருவதாக "இயல்பாக" சொல்கிறாளாம்.....; ஒரு வைஷ்ணவ அந்தணரான  தன்னை முடிந்த போதெல்லாம் அடையாளம் காட்டும் ஒரு புத்திசாலி எழுத்தாளர் இந்த வித எழுத்து ஒரு விதத்தில் படிப்பவர்களுக்கு கிக் ஏற்படுத்த தான் என்பது என் சம்சயம். அதுவும் சத்தியமாக அந்த கால கட்டத்தில் அவ்வளவு radical ஆக  நமது சமூகம் கண்டிப்பாக இல்லை.  (உண்மை வேறு விதமாக இருப்பது - அதாவது - சுஜாதா விருப்பபட்டு தான் எழுதினார் என்றால்..... கொஞ்சம் விரசமாகிப் போய் விடும்....ஆகையால் என்னோடு வாதிட வேண்டாம்.)

3. வெகு நிச்சயமாக நம் மெல்லிய உணர்வுகளை தூண்டுகிறார். ஒரு அற்புதமான சிறுகதையில் (நான் முதலில் இப்போது தான் படிக்கிறேன் - "நெருப்பு") வருங்காலத்தை - positivity யோடு அணுக வேண்டும் என்பதை பிரமிக்க வைக்கும் ஒரு சாதாரண மதிய வர்க்க கதாநயகி கதாபாத்திரம் மூலம் உணர்த்துகிறார் (நல்ல வேளை - அந்த கதாநாயகி சுஜாதாவின் பொதுவாக வர்ணிக்கும் அழகாக ஒயிலாக இல்லை. இது இதற்கு முன் எழுதிய பத்திக்கு மேலும் ஒரு சாட்சி....அவசியம் ஏற்பட்டால் அவர் compromise பண்ணிக்கொள்ளாமல் தீவிரமாக எழுதக்கூடியவர் என்பதற்கு). 

இந்த 100 + கதைகளில் - கருத்து வேறுபாடில்லாமல் - நம் எல்லாருக்கும் நெகிழ்ச்சியை உண்டு பண்ணக்கூடிய விதத்தில் ஒரு 25 கதைகளை என்னால் தேர்ந்து தர முடியும். 

4. சுஜாதாவின் கதைகளில் அற்புதமே நடை தான். பாதியில் ஆரம்பித்து பாதியில் முடித்து - "முடிவு" (அப்படி ஒன்று இருக்கிறது என்று நீங்கள் நம்பினால் ) நம் கையில் விட்டு விடும் வகையில் எண்ணற்ற கதைகள்.  
ஒரு வகையில் நம் முழு வாழ்க்கையே ஒரு சிறுகதை தான் என்று தெளிவாக புரிந்து போனவர்கள் சுஜாதாவை இரசிக்கவே செய்வார்கள்....

பொழுது விடியும் முன் மிகவும் சந்தோஷமாக எழுந்திருக்கும் ஒரு மனைவி (அவளுக்கு அன்று பிறந்த நாள் வேறு )...திகட்ட திகட்ட ஆனந்தத்துடன் நாளைக் கடத்தி, வெளியூருக்கு விமானத்தில் வேலை விஷயமாக செல்லும் தன கணவனை வழியனுப்பிய பின் , நெகிழ்ச்சியாக, பழைய போட்டோ (கல்யாண album - குறிப்பாக ) எடுத்து பார்த்து - இளமையான உறவினர்களை படத்தில் பார்த்து வியக்கும் பொழுது ..... மேலும் ஒரு வரியோடு கதை முடிந்து விடுகிறது.... ("அப்போது டெலிபோன் ஒலித்தது "). 

5. MORAL VALUES பரப்ப சிறுகதை ஒரு பெரும் சாதனமாக இருக்க முடியும் என்பதற்கு பற்பல சாட்சியங்கள். மிக எளிதான நடையில், நமக்கு சிறு வயதில் "நெய் போட்டு பருப்பு சாதம் " உவந்து அளித்த நம் தாய் போல் - நமக்கு பிடித்தவாறு கதை சொல்லும் ஒரு தாயுமானவராக....
.......Hats Off !!!

(உதாரணங்களை அடுக்க விரும்பவில்லை. தேடுங்கள்...கிடைக்கும் )

6. Last but not least , கதை கேட்டு அவ்வப்போது நச்சரிக்கும் என் பாச மகளுக்கு ஒரு 10 கதைகளை தேர்வு செய்து வைத்து இருக்கிறேன். அவள் நன்றாக புரிந்து கொண்டு நெகிழ்ந்து போகும் வகையில் .எழுதப்பட்ட கதைகள்.
அதைத்தவிர typical சுஜாதாவின் ("ஜனரஞ்சக" நடையால்- என்று குறித்துக் கொள்க)  ....சில தர்ம சங்கடங்கள் நிரம்பிய மேலும் ஒரு 10 சிறந்த கதைகளும் அகப்பட்டன.

நானோ கதைகளை சொல்லத்தான் போகிறேன்...(என் மகளுக்கு படிக்க அவ்வளவு பொறுமை இல்லாததால் இந்த வழக்கம்.) அதனால் இந்த இரண்டாவது 10 கதைகளையும், ஒரு மாதிரி abridge செய்து சொல்லிவிடுவேன்....
எனக்கும் (சுஜாதா அளவு இல்லாவிட்டாலும் ) கற்பனா சக்தி உண்டு தானே ?)

இதோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன். உங்கள் பொறுமைக்கு நன்றி.....!! 

இந்த இரண்டு புத்தகங்களையும் எனக்கு இரவலாக கொடுத்த என் பெருமைக்குரிய சகோதரிக்கு எதாவது செய்யத்தான் வேண்டும். மூன்றாவது தொகுதி வாங்க இந்த முறை book exhibition போக முடியவில்லை என்று வருத்தப்பட்டாள் .... பாவம். !! 

அதை வாங்கி கொடுத்து அவளுக்கு ஒரு இன்ப "அதிர்ச்சி" அளித்து விட வேண்டியது...... 
கொடுத்த கையோடு அதே புதிய புத்தகத்தை இரவலாக பெற்றுக்கொண்டு வந்து விட வேண்டியது....

என்ன சொல்கிறீர்கள் ?

ப்ரியமுடன் 

சுச்சு / சுரேந்திரன் 

Thursday, January 1, 2015

Drawing Lines ??? No PAPA !!!!

Prelude : This is going to be bit of philosophy (at least I consider it so).
Please stay away if you are not tuned for it !

Hi All

In my earlier post, I had mentioned about my Kerala Trip. It was along with another family-friends who have two kids (& a SUV to accommodate all of us :-) !!). 

During our chats, in a particular context, the man of that family with all sincerity told me that he considers three things as his priorities which he ensures to do with due diligence. Visiting the family deity yearly once, taking care of parents and ensuring to do the annual rites when they pass away. (Incidentally he is fatherless). With a tinge of apology he told that he is not able to do "sandhyavanthanam" regularly and wants to restart it. In the same breath, he consoled himself that it was not "practically" possible for him to do this daily duty.
Though I was just listening, I was in fact hearing another familiar voice in my mind (my Father's) who was telling me a few days back that "Nithya Karma" is a MUST and one should ensure it before every thing else.
I am also aware that there could be few much more orthodox brahmins (more than my father) who has much higher yardstick for brahminhood. 

Where do we draw the line ?

Let's come to some thing very basic and most important - Our food habits. 
There are communities like Jainism & Brahmins where they claim that they are vegetarians. In fact, Jainism shuns away eating vegetables grown from root of any plant, right ? But then, egg some how has found space in few of the individuals of these communities & has in fact become a new group called Egg-atarian. So called Non vegetarians belonging to India will feel aghast if they chose to go for a trip to China or Korea.

Do we have a clear line between these two ?

I am consciously leaving out the borderline between Rich and Poor, Atheist and Theist....and most importantly Good and Bad. Things get too subjective as we ponder about these things;
Objectivity will only pacify us - nothing more and nothing less.

I don't seem to get satisfied that I am expressing it sufficiently....!!

Let me put this way.

We seem to think / talk / feel  a lot about things which are too subjective while leaving behind a big unbounded objective ideas either by volition or by ignorance - both seems to be happening to most of us.
Volition - as we don't get sufficient space/ suitable space to vent out ourselves; Ignorance because we shun away from it as it is not a comfort zone.

That's why I discovered AGANDAM !!
A space for myself and chosen those who are always allowed to entered. (rather those who gets chosen themselves).
Believe me, its quite comfortable here !! No lines drawn, whatsoever between me and my AGANDAM; No inhibitions, no pretense....and absolutely no sense of self consciousness.

I get "relieved" whenever I dish out my posts and start re-living this grand life all over - once again. Its a positive chain that I am entangled to - nevertheless, a liberating one indeed.

Love // Suren

ps: - I do not have the guts to link this one to Face Book :-) though I will keep tracking the counts in the site meter of the blog.