முன்குறிப்பு : - எனக்கு இன்று விடியற்காலை 3.30 மணிக்கு முழிப்பு வந்து - கிட்டத்தட்ட 1 மணி நேரம் செலவழித்து இந்த "கதை"யை தட்டச்சு செய்துவிட்டு மீண்டும் சமர்த்தாக போய் படுத்துக்கொண்டு பத்து மணிக்குத் தான் எழுந்திருந்தேன்.....!! சுமாராக இருந்தால் தெரியப்படுத்தவும்....ஏனென்றால் எனக்கு இது சிறுகதை தானா என்ற சந்தேகம் இன்னமும் தீரவில்லை.
சட்டென்று ஒரு தருவித்துக்கொண்ட உற்சாகத்துடன் "இன்னிக்கு ஞாயித்து கிழமைதானே...மச்சான் வீட்டுக்கு போய் வருவோமா ? கடைசியா திருவிழாவுக்கு போனது தானே.....?" என்று கேட்டு இருட்டில் அவள் கண்களை தேடி சந்தித்தான்.....அவளுக்கும் அவன் குதூகலம் தொற்றிக்கொண்டது....."நல்ல ஐடியா தான்.... போய் வருவோம்...." . அவள் அண்ணன் நகர்புறத்தைத் தாண்டி ஒரு 25 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கிறார். தாய் தந்தை காலத்திற்கு பிறகு அவர் ஒருவர் தான் அவள் வழியில் அவர்களுக்கு ஒரே உறவு.
காலை பத்து மணி வாக்கில் புறப்பட்டார்கள். மோட்டார் பைக் குதித்து குதித்து திமிறி மெதுவாக ஓட, கடைசி 2 கிலோமீட்டர் ரொம்ப மோசம். தன முன்னால் உட்கார்ந்திருந்த மகனை எச்சரித்து விட்டு அவன் மிகவும் கவனமாக ஒட்டி - ஈவு இர க்கம் இல்லாமல் ஊர் முழுவத்தையும் நோண்டி போட்டிருந்த நகராட்சியை சபித்தவாறு மச்சான் வீட்டை உச்சி வெயிலில் சென்று அடைந்தார்கள்.
வாசலில் யார் என்று சற்று குழப்பமாக வீட்டுக்குள் இருந்து பார்த்த அவர் - மலர்ச்சியாக வெளியே வந்து...."வாங்க மாப்ள...இதென்ன அதிசயமா இல்ல இருக்கு; வாம்மா ராசாத்தி !!...." என்று சொல்லியவாறு மகனை கொத்திக்கொண்டார். அவன் கூச்சத்துடன் உடல் நெளிய வேறு வழியே இல்லாமல் மகன் அவர் மேல் சாய்ந்தான்.
பைக்-ஐ வீட்டினுள் ஒரு வெப்ப மரத்தடியில் சாய்த்தவாறு நிறுத்தி அவன் தன் ஹெல்மெட்டை கழற்றி வியர்வவை வழியும் சட்டைக்குள் ஊதியவாறு வர, வாசல் சத்தம் கேட்டு மதனியும் வாய் நிறைய சிரிப்போடு அவர்களை நோக்கி வந்தார்கள். "இதேது ? அதிசயம்...." என்று வார்த்தைகள் தன வசம் இல்லாமல் வர - இவன் மனைவி "உங்க மாப்பிள்ளைக்கு இன்னிக்கு பிறந்த நாளு .... திடீர்னு வெளிய போகலாம்-னு நம்ம வீட்டுக்கு கெளம்பிட்டோம்-ல " என்று பூரிப்புடன் சொல்ல, "சரிதான்.....ரெம்ப சந்தோஷம்....கோழி அடிச்சிட வேண்டியது தான்...இன்னிக்கு பெஷல் விருந்து" என்று சந்தோஷக்குரலில் - பொடிப்பயலை தலை மேல் உட்கார்த்தி வைத்தவாறு மச்சான் சொல்லியவாறு வாசல் நோக்கி ஏதோ காரியமாக விரைந்தார்.
அவனுக்கு அன்று பிறந்த நாள். விடியற்காலை முழிப்பு வந்து விட்டது. என்னென்னவோ குருட்டு யோசனைகள்..... மனைவியும் மகனும் தூங்குகிறார்கள் என்ற ஆதுரத்துடன் ஆடாமல் அசங்காமல் படுத்து கிடந்தான். அவன் சிறுவனாக இருந்த பொழுது "பிறந்த நாள்" என்று பெரிய மவுசு எதுவும் இருந்ததில்லை. தன் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் சாக்லேட், மற்றும் அம்மாவின் இரகசியமான அன்பளிப்பு (கசங்கிப்போன ஒரு ரூபாய் தாள்- தான் பெரும்பாலும்..... "எதையாவது தின்ன வாங்கிக்க..." என்று அப்பாவுக்கு தெரியாமல் ஒரு கிசுகிசுப்பு) தரும் சுகம்..... இது தான் பிறந்த நாள். பெரும்பாலும் முதல் நாள் அவன் அப்பாவோ அம்மாவோ நினைவு படுத்தினால் மட்டுமே அவனுக்கு தன் பிறந்த நாள் என்று ஞாபகம் வரும்.
அவன் படித்த பள்ளியில் ஒரு தவற விடாத சம்பிரதாயம் - "கடவுள் வாழ்த்து" வகையறா முடித்த பிறகு - பிறந்த நாள் பிள்ளைகளை மேடையில் ஏற்றி - தமிழ் ஐயா "நாக நாதம்பிள்ளை" தன கணீர் குரலில் அறிவிக்க . மற்ற பிள்ளைகளின் ஆரவார குரலில் ஒரு வாழ்த்து. அவன் மிகவும் தர்மசங்கடப்படுவது இந்த பாட்டின் போதுதான். மேடையில் கொஞ்சம் மந்தகாசப் புன்னகையோடு "எப்போது முடியும் ?" என்ற காத்திருற்றலைத் தான்.
பிற மாணவர்களின் பிறந்த நாட்களின் பொழுது - கூட்டத்தின் ஒருவனாக கோரஸ் குரலில் உச்ச குரலில் கிட்டத்தட்ட இயந்தர கதியில் தானும் கத்துவது ரொம்ப இயல்பாக இருந்தாலும் - வருடத்தில் ஒரு நாள் தான் மேடையில் இருக்கையில், கொஞ்சம் அசந்தர்ப்பமாய் உணர்வான்.
பிற மாணவர்களின் பிறந்த நாட்களின் பொழுது - கூட்டத்தின் ஒருவனாக கோரஸ் குரலில் உச்ச குரலில் கிட்டத்தட்ட இயந்தர கதியில் தானும் கத்துவது ரொம்ப இயல்பாக இருந்தாலும் - வருடத்தில் ஒரு நாள் தான் மேடையில் இருக்கையில், கொஞ்சம் அசந்தர்ப்பமாய் உணர்வான்.
பள்ளி நாட்களுக்கு பிறகு இந்த குறைந்த பட்ச கொண்டாட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போய்விட, பின்னர் பல பிறந்த நாட்கள் - மே மாதம் முடிந்ததும் திடுக்கிடலோடு நினைவில் மோதி, தனக்கு எத்தனை வயது என்று வேக வேகமாக கணக்கிட்டு கொள்வான்.
இப்போதெல்லாம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் - முக்கியமாக நகரங்களில் - வேறு பரிமாணம் பெற்று விட்டது. அவன் மகன் ஒரு மாதமாக தன்னுடைய வரப்போகும் பிறந்த நாள் பற்றி ஜபிப்பதும், அவன் உற்ற நண்பர்கள் புடைசூழ கேக் வெட்டுவது ஒரு விதத்தில் சாங்கியமாகவே கருதி விட்டான். என்ன செய்வது - பட்டணத்தில் சகவாச தோஷத்தில் இதெல்லாம் இல்லா விட்டால் வருடம் முழுதும் அவன் தன் நண்பர்கள் வீட்டுக்கு பிறந்த நாள் விழாவுக்கு போய் கலந்து கொள்வது முடியாமல் போய் விடுமே ?
\
\
தன மகன் மறந்து போய் கூட "உங்களுக்கு பிறந்த நாள் எப்பப்பா ?" என்று தன்னிடம் ஒருமுறை கூட கேட்காததை அவன் இயல்பாகவே ஏற்றுக் கொண்டு விட்டான். ஒரு வேளை - தனது பிறந்த நாள் கொண்டாட பொருட்செலவு செய்யவே தன் தந்தை அனாதியாக அவதரித்து -செலவு பற்றி சிறிதும் கருதாமல் வருடா வருடம் தன் வாரிசு வளர்வத்தை எண்ணி பூரிப்பது தான் அவர் கடமை என்று எண்ணி விட்டானோ தெரியவில்லை.
சற்று வியர்வை கசகசப்பாக இருக்க, திரும்பி ஒரு பக்கவாட்டில் படுத்தான். ஏற்படுத்திய சிற்சில சலனங்களில் அவன் மனைவிக்கு விழிப்பு கண்டு விட்டது. "முழிச்சீட்ட்ங்களா...என்ன பண்றீங்க ?" என்று ஒரு சன்னமான கேள்வி...
"ஒண்ணுமில்லை - நீ தூங்கு ....." என்று இவனும் மகன் தூக்கம் கெடாமல் அவன் தலையை வருடியவாறு மெதுவாக பதில் சொன்னான்.
"இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்" என்று ஒரு பட்டியக்காரன் போல - உணர்ச்சியற்ற குரலில் சொன்னான் - பொய்யான ஒரு பெருமிதத்தை வரவழித்துக் கொண்டு. அவன் மனைவி - அந்த செய்தியை கிரகித்ததும் ஒரு உடனடி குதூகலத்துடன் "அட" அனிச்சையாய் சொன்னாள். பிறகு ஒரு சிறிய மவுனம்...."வாழ்த்து" எல்லாம் சொல்லி அவளுக்கும் வழக்கம் இல்லை - இவனுக்கும் கேட்டு பழக்கம் இல்லை. அவள் பிறந்த நாட்களும் அப்படித்தானே போகிறது என்று அவனுக்கு திடீரென்று தோன்றியது.
சட்டென்று ஒரு தருவித்துக்கொண்ட உற்சாகத்துடன் "இன்னிக்கு ஞாயித்து கிழமைதானே...மச்சான் வீட்டுக்கு போய் வருவோமா ? கடைசியா திருவிழாவுக்கு போனது தானே.....?" என்று கேட்டு இருட்டில் அவள் கண்களை தேடி சந்தித்தான்.....அவளுக்கும் அவன் குதூகலம் தொற்றிக்கொண்டது....."நல்ல ஐடியா தான்.... போய் வருவோம்...." . அவள் அண்ணன் நகர்புறத்தைத் தாண்டி ஒரு 25 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கிறார். தாய் தந்தை காலத்திற்கு பிறகு அவர் ஒருவர் தான் அவள் வழியில் அவர்களுக்கு ஒரே உறவு.
காலை பத்து மணி வாக்கில் புறப்பட்டார்கள். மோட்டார் பைக் குதித்து குதித்து திமிறி மெதுவாக ஓட, கடைசி 2 கிலோமீட்டர் ரொம்ப மோசம். தன முன்னால் உட்கார்ந்திருந்த மகனை எச்சரித்து விட்டு அவன் மிகவும் கவனமாக ஒட்டி - ஈவு இர க்கம் இல்லாமல் ஊர் முழுவத்தையும் நோண்டி போட்டிருந்த நகராட்சியை சபித்தவாறு மச்சான் வீட்டை உச்சி வெயிலில் சென்று அடைந்தார்கள்.
வாசலில் யார் என்று சற்று குழப்பமாக வீட்டுக்குள் இருந்து பார்த்த அவர் - மலர்ச்சியாக வெளியே வந்து...."வாங்க மாப்ள...இதென்ன அதிசயமா இல்ல இருக்கு; வாம்மா ராசாத்தி !!...." என்று சொல்லியவாறு மகனை கொத்திக்கொண்டார். அவன் கூச்சத்துடன் உடல் நெளிய வேறு வழியே இல்லாமல் மகன் அவர் மேல் சாய்ந்தான்.
பைக்-ஐ வீட்டினுள் ஒரு வெப்ப மரத்தடியில் சாய்த்தவாறு நிறுத்தி அவன் தன் ஹெல்மெட்டை கழற்றி வியர்வவை வழியும் சட்டைக்குள் ஊதியவாறு வர, வாசல் சத்தம் கேட்டு மதனியும் வாய் நிறைய சிரிப்போடு அவர்களை நோக்கி வந்தார்கள். "இதேது ? அதிசயம்...." என்று வார்த்தைகள் தன வசம் இல்லாமல் வர - இவன் மனைவி "உங்க மாப்பிள்ளைக்கு இன்னிக்கு பிறந்த நாளு .... திடீர்னு வெளிய போகலாம்-னு நம்ம வீட்டுக்கு கெளம்பிட்டோம்-ல " என்று பூரிப்புடன் சொல்ல, "சரிதான்.....ரெம்ப சந்தோஷம்....கோழி அடிச்சிட வேண்டியது தான்...இன்னிக்கு பெஷல் விருந்து" என்று சந்தோஷக்குரலில் - பொடிப்பயலை தலை மேல் உட்கார்த்தி வைத்தவாறு மச்சான் சொல்லியவாறு வாசல் நோக்கி ஏதோ காரியமாக விரைந்தார்.
அவன் மனையும் மதனியும் கல கலவென்று விட்டுப்போன கதைகளை அலசிக்கொண்டு இருக்க, அவன் இருந்த களைப்பைப் பார்த்து, மச்சான் அவனை இளைப்பாரச்சொல்லிவிட்டு, பையனை தன்னுடன் தோட்டத்துக்கு கூட்டிச் சென்று விட்டார். ஒரு மணி நேரம் கண் அசந்த அவன் விழிப்பு கண்டு பின் தானும் அவருடன் சேர்ந்து கொண்டு சாயங்காலம் வரை தோட்டத்தில் கழித்தான்.
பொழுது சாய விட்டுக்குள் திரும்ப, அவன் மதனி "சீக்கிரமா சாப்பாட்டு கடையை முடிப்போம்; அவங்க அவ்வளவு தூரம் போயாகனும் " என்று துரிதப் படுத்த ..... சுமார் ஏழு மணி அளவில் சாப்பிடத்தொடங்கி விட்டார்கள். "ஊரு ரோடுதான் மகா மோசமாய் இருக்கு - வீட்டுக்கு போய் எலும்பையெல்லாம் எண்ணிப்பார்க்கணும் போல...." என்று அவன் இயல்பாக சொல்ல, ஒரு கவளத்தை வாயருகே கொண்டு போய்க் கொண்டு இருந்த அவன் மச்சான் "ஜங்ஷன் வந்தா வந்தீங்க ?" என்று ஒரு ஆச்சர்யக்குறியுடன் கேட்டார்.
அவன் கொஞ்சம் தயக்கமாக "ஆமாம் - வேறெப்படி வர்றது ?" என்று பதில் சொல்ல - அவர்...."சரியா போச்சு. - வடக்கே 4 கிலோ மீட்டர் போனா மில்லு வந்துடுமே.....இடது பக்கம் திரும்பினா state highways வந்துடும். தூரமும் கொஞ்சம் குறையும்.....வேகமா பறந்துடலாம், இருங்க ஒன்னு செய்வோம்....நானும் என் வண்டியை எடுத்துக்கிட்டு மில்லு வரைக்கும் வாரேன். இருட்டு வேற சாஸ்தியா இருக்கும் - வழி தவறிட்டீங்கன்னா பிரச்னை" என்று விரைசாக சாப்பிட்டு தன் வண்டியின் நிலைமை ஆராய போய்விட்டார்.
அவர்கள் மகன்களும், மகளும் வெவ்வேறு இடங்களில் இருக்க, அவருக்கு தங்கள் செக்கு மாடு வாழ்க்கையில் பயணத்துக்கு அவசியம் இல்லாததால் அவர் மொபெட் கொஞ்சம் சிதிலமாகத் தான் இருந்தது. இது போன்ற திடீர் உபயோகத்திற்கு - சிற்சில முன் தயாரிப்புகள் தேவைப்படும் ஒரு பழைய வண்டி.
அவன் கொஞ்சம் தயக்கமாக "ஆமாம் - வேறெப்படி வர்றது ?" என்று பதில் சொல்ல - அவர்...."சரியா போச்சு. - வடக்கே 4 கிலோ மீட்டர் போனா மில்லு வந்துடுமே.....இடது பக்கம் திரும்பினா state highways வந்துடும். தூரமும் கொஞ்சம் குறையும்.....வேகமா பறந்துடலாம், இருங்க ஒன்னு செய்வோம்....நானும் என் வண்டியை எடுத்துக்கிட்டு மில்லு வரைக்கும் வாரேன். இருட்டு வேற சாஸ்தியா இருக்கும் - வழி தவறிட்டீங்கன்னா பிரச்னை" என்று விரைசாக சாப்பிட்டு தன் வண்டியின் நிலைமை ஆராய போய்விட்டார்.
அவர்கள் மகன்களும், மகளும் வெவ்வேறு இடங்களில் இருக்க, அவருக்கு தங்கள் செக்கு மாடு வாழ்க்கையில் பயணத்துக்கு அவசியம் இல்லாததால் அவர் மொபெட் கொஞ்சம் சிதிலமாகத் தான் இருந்தது. இது போன்ற திடீர் உபயோகத்திற்கு - சிற்சில முன் தயாரிப்புகள் தேவைப்படும் ஒரு பழைய வண்டி.
ஒரு வழியாக அவர்கள் கிளம்ப எட்டு மணியைத்தாண்டி விட்டது. மதனி வாய் முழுவதும் சிரிப்போடு விடை கொடுக்க, மச்சான் "மாப்பிள்ளை..பின்னாடியே வாங்க... தெரு வெளக்கு எல்லாம் ரிப்பேரா கிடக்குது" என்று சொல்லியவாறு தன் வாகனத்தை ஒரு முக்கலோடு துவக்கினார். அவர் முன்னால் பையன் உற்சாகத்துடன் தொற்றிக்கொள்ள,...இவன் தன் மனைவியுடன், வந்த திசைக்கு சரியாக எதிர்புறம் பயணிக்கலானான் .
இந்த ரோடு கொஞ்சம் தேவலையாகதான் இருந்தது. ஆனால் கும்மிருட்டில் - சுற்றிலும் சுவர்க்கோழி ரீங்காரத்தில் - அத்துவானமாக ரோடு இருக்க, மிகவும் கவனமாக ஓட்ட வேண்டி இருந்தது. ஒரு அரை கிலோ மீட்டர் தாண்டியதும் மச்சான் கொஞ்சம் இரைச்சலாக "மாப்ளை....கொஞ்சம் ரோடு இனிமே மோசமா இருக்கும். கவனமா வாங்க" என்று குரல் கொடுக்க....இவனும் தலையாட்டினான். ஒரு கட்டத்தில், அந்த ரோடு குறுகி, மிகவும் குறுகி கிட்டத்தட்ட ஒத்தையடிப்பாதையாய் மாறிப்போக, திகிலடைந்தான். "இதென்னடா இது....வந்த வழியிலே போயிருக்கலாமோ ?" என்ற எண்ணம் தோன்ற, தன மச்சான் திடீரென்று "அம்மா" என்று அலறியவாறு ஒரு குழியில் வண்டியைச் சாய்த்தது ஒரு மெல்லிய வெளிச்சத்தில் இவனுக்கு தெரிந்தது.
சுதாரிக்க இயலாமல் - இவனும் அவர் வண்டிக்கு மிக அருகில் வண்டியை மோசமான ஒரு கோணத்தில் சாய்க்க.....வண்டி என்ஜின் உறுமியவாறு ரோடு ஓரமாக ஒரு பெருங்குழியில் முன் சக்கரம் சாய்ந்து, இவனை வண்டியை விட்டு உதிர்ந்து விழுந்தான். "மச்சான்....மச்சான்.....எங்க இருக்கீங்க.? லதா.....ராஜேசு....." என்று பதட்டத்துடன் இருட்டில் பரிதவிக்க - ஒரு பதில் குரலும் வராமல் போக.....பீதியுடன் "லதா......எங்கம்மா இருக்க.....? ராஜேசு......கண்ணா...." என்று தானாகவே வந்த குரல் தழதழப்போடு துடிக்க......சட்டென்று விடிவிளக்கு எரிந்தது.....
சுதாரிக்க இயலாமல் - இவனும் அவர் வண்டிக்கு மிக அருகில் வண்டியை மோசமான ஒரு கோணத்தில் சாய்க்க.....வண்டி என்ஜின் உறுமியவாறு ரோடு ஓரமாக ஒரு பெருங்குழியில் முன் சக்கரம் சாய்ந்து, இவனை வண்டியை விட்டு உதிர்ந்து விழுந்தான். "மச்சான்....மச்சான்.....எங்க இருக்கீங்க.? லதா.....ராஜேசு....." என்று பதட்டத்துடன் இருட்டில் பரிதவிக்க - ஒரு பதில் குரலும் வராமல் போக.....பீதியுடன் "லதா......எங்கம்மா இருக்க.....? ராஜேசு......கண்ணா...." என்று தானாகவே வந்த குரல் தழதழப்போடு துடிக்க......சட்டென்று விடிவிளக்கு எரிந்தது.....
"ஏன்னா.....என்னன்னா ஆச்சு உங்களுக்கு.....? தூங்கற நேரத்துல கண்ட நாவல் எல்லாம் படிக்காதிங்கோன்னு சொன்ன கேக்கறது இல்ல...." என்று அலுத்தவாறு அவன் நெஞ்சை அவன் மனைவி லதா தடவ அவன் சுவிட்ச் போட்டது போல் எழுந்து கொண்டு "ஒன்னும் இல்லை" என்றவாறு எழுந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் தூங்கிப் போனான்.
No comments:
Post a Comment