மிகவும் பெரியதாக இருக்கும் ஒரு தின்பண்டத்தை - ஏதோ ஒரு அசட்டு ஆர்வத்தில் வாயில் திணித்துக்கொண்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவஸ்தை பட்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா ?
இல்லாவிட்டாலும் பரவாயில்லை - என் தற்போதைய மன ஓட்டம் கிட்டத்தட்ட அதுதான்."Baba Magic " பற்றி என் குறைந்தபட்ச சொல்லாற்றல் துணைகொண்டு அவ்வப்போது கணினியின் முன் வந்தமரும் நான் - இதை சொல்ல முயற்சி தான் செய்யப்போகிறேன்.
ஆனால் ஒரு விஷயம் - ஒரு காரியத்தை சொல்ல புகுமுன் சத்தியமாய் தோல்வியில் தான் முடியப்போகிறது என்ற ஒரு defeatist மனநிலை எனக்கு சத்தியமாக இல்லை. மாறாக ஒரு குழந்தையின் ஊக்கத்தோடு மிகவும் உற்சாகமாகவும் வருங்காலத்தைப் பற்றி கிஞ்சித்தும் வருத்தப்படாத ஒரு அற்புதமான கலவையில் என் உள்ளம் விம்முகிறது.
அடடா....ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்....நான்கு பதிவுகளில் எந்த பீடிகையும் தராமல் *** இப்போது "சக்தி" என்று நான் இதுகாறும் சொன்னது "பாபா " என்கிற மகானைப் பற்றித்தான்....மேலே படியுங்கள்...உய்யுங்கள் ***
என்று மேலும் ஒரு பக்திக் கட்டுரையாக இது மாறிவிடாது - நம்புங்கள்.....!!
எனக்கு - தினசரி வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காகவும் , சிற்சில எழுச்சி மிகுந்த தருணங்களில் ஆன்மிக வழிகாட்டியாகவும் அருள் பாலிக்கும் கடவுளர் மிகப் பலர் உண்டு - பாபாவையும் சேர்த்து....
எனக்கு - தினசரி வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காகவும் , சிற்சில எழுச்சி மிகுந்த தருணங்களில் ஆன்மிக வழிகாட்டியாகவும் அருள் பாலிக்கும் கடவுளர் மிகப் பலர் உண்டு - பாபாவையும் சேர்த்து....
என் பக்தியை பற்றிய புலம்பலாக இந்த கட்டுரை தொடர் மாறுவது எனக்கு உடன்பாடன்று - படிக்கும் ஒவ்வொவோருவருக்கும் ஒரு ரிஷி மூலம் இருப்பதை நான் உணர்வதாலும் மதிப்பதாலும். நம் ஒவ்வொருவரின் காலமும் மிக மதிப்பானதாக இருப்பதால் தான் எழுதுவதில் தாமதங்கள்... எழுத ஆரம்பித்தாலும் இவ்வளவு பீடிகைகள்.... !! என்ன செய்வது - எங்கெங்கும் பறந்து விரிந்து இருக்கும் சக்தி அவ்வளவு சூட்சமமாக சாமர்த்தியமாக இருக்கிறது.
எந்த விதமான பக்தி உங்களுக்கு இருந்தாலும் - God , God Man, Deity - உங்கள் தேர்வு எதுவாக இருந்தாலும் சரி..ஏன், பகுத்தறிவு வாதியாக இருந்தாலும் சரி - என் இந்த "Baba Majic " என்ற சொற்றொடர் உங்களுக்கு பொருந்தும். ஒரு வகையில் இதை ஒரு "வாழும் கலையாக" வே நான் கருதுகிறேன்.
எங்கெங்கும் சக்தியை தரிசனம் செய்யும் அருள் பெற்றவர்க்கு வாழ்க்கை என்பது எப்போது நீங்கள் போய் கேட்டாலும் .... ஒரு நெடிய பயணம் அல்ல.....
ஒரே நாள்....ஆம் - ஒரு நாள் மட்டுமே....!! தினம் தினம்......அப்படித்தான்.
"Baba Magic " பற்றி சொல்ல விழைந்த நான் எங்கெங்கோ போய்விட்டேன். ... ம்ம்ம்..
மீண்டும் ஒரு நாள் முயற்சி செய்வோம்.
மீண்டும் ஒரு நாள் முயற்சி செய்வோம்.
வளரும்.....
No comments:
Post a Comment