Sunday, November 8, 2015

"எங்கெங்கு காணினும் சக்தியடா " - 2

பாருங்கள்.....!!
பகிர அவ்வளவு ஆவலாக இருந்தாலும் - எனக்கு மீண்டும் தொடங்க எனக்கு ஐந்து நாள் தேவைப்பட்டு விட்டது. வன்மையான வாழ்கைச் சக்கரம் ஒருபுறம்.... "அவ்வப்போது" மட்டுமே பளிச்சிடும் "சக்தி" ஒருபுறம்... 
இதற்கு இடையில் இந்த மனுஷ ஜென்மம் அல்லாட வேண்டி இருக்கிறது.

ஒரே ஆசுவாசம்....இந்த கால தாமதங்களால் யாருக்கும் ஒன்றும் கேடு இல்லை ....நான் சொல்வது சரிதானே ? 

பந்தியில் பசியோடு உட்கார்ந்து கொண்டிருப்பவர் போல - எல்லா நேரமும் சக்தியை தரிசிக்க, அல்லது தரிசித்தவர்களை காண எவரும் ஏங்கி கிடைப்பதில்லை. 
அவரவருக்கு அவர்களின்  வாழ்க்கை சக்கரம். தன போக்கில் சிறிதும் பெரிதுமாக வெவ்வேறு சுழற்சி.
ஒரு வகையில் பார்த்தால், நான் அவ்வப்போது எழுதுவது .... சக்தியின் விளையாட்டு தன்  போக்கில் வெளிப்படுவதே சரியாக இருக்கும்.

நான் இந்த தொடர் எழுத வேண்டிய காரணத்தை சொல்ல விழைந்தேன்....
நினைவு இருக்கிறதா ??

விஷய பரிமாற்றம் (communication ) ஏற்பட குறைந்த பட்சம் இருவர் இருக்க வேண்டும் என்ற விதி பாடுவதற்கும் எழுதுபவர்க்கும் கிடையாது (பேசுவதற்கு வேண்டுமானால் இருக்கலாம்)
கண்களை மூடி தன்னுள் லயித்து பாடும் ஒரு பாடகருக்கு தன முன் தன் பாட்டை இரசிக்க மக்கள் எவரும் தேவையே இல்லை. இருந்தால் நல்லது....இல்லாவிட்டால் ரொம்ப நல்லது. பெரும்பாலான பாடுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் காலப்போக்கில் இது புரட்டி போகிறது ஒரு சோகமான விஷயம் 
இதுவும் சக்தியின் ஒரு லீலை என்று புல்லரித்து போக வேண்டியது தான்....வேறு வழி இல்லை !!
எழுத்தை ஒரு மிகச்சிறப்பான  வடிகாலாக நான் உணர்ந்து இருக்கிறேன். 
குயிலும் மயிலும் கழுதையும் எப்படி தனக்கு அளிக்கப்பட வாழ்கையை வாழ்வாங்கு வாழ்கின்றனவோ, அதுபோல நான் இயற்கையாக எழுதுகிறேன். இதுவே நான் இதுவரை எழுதி வந்ததற்கும் இந்த புதிய தொடருக்கும், இந்த குறிப்பிட்ட பதிவிற்கும் மூல காரணம். 

வயலோடு போகும் தண்ணீர் வரப்பில் ஓடி இஞ்சி, எலுமிச்சை தாகம் தீர்ப்பது இயற்கை....
நல்லது,  கூடாதது என்ற சட்ட திட்டங்களுக்குள் வராது. சரிதானே ? அதுபோல இந்த தொடரை யாரவது சுகித்தால் அதுவும் இயற்கையே...!

மேலும் ஒரு ஆன்மிகச் செய்தி - இது சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்லக்கேட்டது. நாயன்மார்களில் பலரும்  தன்னுள் கண்ட அற்புதத்தை பிறருக்கு சொல்ல வாய்ப்பு கிடைக்காமல் , தக்க மாணாக்கர்கள் கிடைக்கததால், வேறு வழியில்லாமல் தங்களின் அனுபவங்களை கயிலாய மலையில் பதித்து இருக்கிறார்களாம் (ஒரு விதமான தொழில் நுட்பம் என்று வைத்து கொள்ளுங்களேன்.. "Whats UP ? " என்பது நல்ல பெயராக தோன்றவில்லை ??. 
கைலாயம் என்ற அந்த புண்ணிய தலத்தைப்பற்றிய ஒரு  சொற்பொழிவில் சொன்னது இது.

எனக்கு ஒரு கயிலாய மலையாக இந்த அகண்டம். மேலும் காரணங்கள் அடுக்க வேண்டுமா என்ன ?

சுரேன் 

No comments:

Post a Comment