Thursday, October 19, 2017

****Turning over a New Leaf*****


I have always been amused about the turning points in one's life.

Many a times there could be some firm decision which human beings take upon themselves - it could be habit formation, throwing away a vice / negative habit or starting up a new initiative with all vigour.  Most of such decisions might get drained out in few days (I read some where recently - human beings can sustain their goals only for 11 - 12 continuous days "normally") but then there is a certain beauty about the small percentage of goals pursued upon and sustained on. 

In this post, I am not referring about such turning points based on human volition but those changes that happen on its own without our pursuit. Lets call them as DTP (Acronym for "Destined Turning Points")  - Howzzzzzthat ??

If we take LIFE in totality, I guess DTPs are more potent and numerically more than the decisions & goals we take upon ourselves. In fact many times we take some decisions / goals only when we find destiny spells a doom on us.
There are inspirational stories where people achieve rare feats in their lives only after they meet up with an accident or contract some major ailment. Without taking away the  importance of  the sweat , energy and mental focus involved on such "forced" turning points,  there is a certain aura about changes that happen on its own - by some cosmic re arrangement (if you belief in astrology) or with some stroke of a magic wand (if you like fantasy stories).

YES, the most important aspect of such DTP is about becoming aware about them even if we don't believe in astrology or fantasies and - at the barest minimum - be grateful to it. Every life undergoes ups and lows and it is not some thing out to get too emotional or entangled or boastful about such DTP-s.

It requires lot of maturity and attention to ensure that we live the moment fully on such DTP and also to take care not to waste upon the mileage that we got without sweat or fuming......

Today is an important day for me for some thing that landed upon my lap and I am enough wise and alert to build upon this development to cement many of the loose ends of my life.

As I tried to glance thru' the possible usages of this title, I see that it also means "change of of one's behaviour in positive way" which brings smile to me since my earlier intention to use it was about "starting a new life all over again". 

Perhaps my personality and behaviour might also get refined in the process of adapting myself to this DTP.

God Bless.... Krishnaarpanam as always.

Regards // Suren


Friday, September 15, 2017

A Special Pledge.......

Hi All

I have been all along experimenting with taking up goals / pledges - never getting abated by failures & improvising on the science of taking goals in different spheres of life - some times in the nature of habit formation, most times in the nature of one time / specific goals...

With my bountiful energy, the success percentage is always little more in one time goals - most of them stemming from craving the heart - no wonder there is not much sweat in doing them.

Today I put on record an important goal that I am taking up - its specific but sort of long term. This goal got shaped up over the period of past 15 days -  like a thunderbolt today.

I went to a Jeeva Samadhi near Tambaram home (Sachidhaanantha Sabai) which had been one of my regular spots decades back...but as I went in today, I solidified the high level goal in his Shrine and the details got added up as I stepped out when I had a glimpse of the Notice Board near the entrance.

Yes, I took a vow that I will visit at least 100 Samadhis of Sages in next 10 years.
How did the notice board at the outside of Samadhi help me...it had pin code as 73 (which is my birth year), the phone number started with STD code 44 (which is my current age) and the last two digits of the phone number was 54..... ; That was enough for me to wrap it up....

(I ruminated for a while about adding "Jeeva" in front of the samadhis - which you must be familiar as a special type of samadhi... But then quickly realized it will only complicate things and create needless divisions in my own mind.
After all I am not matured enough to know the difference between the two & I don't want to make their moment of leaving more important than their entire life.....)

So I will systematically record all the samadhis which I visit - either locally or travel over week ends....and I am sure this is another achievable goal from my side....

Krishnaarpanam as always..

Suchoo

Thursday, August 31, 2017

த்ரிஷ்யங்கள்

அன்புடையீர்

வெகு நாட்களுக்கு பிறகு அந்த - எனக்கு வெகு பரிச்சயமான - எழுதும் வெறி..... (பகரும் வெறி என்பதும் சரியாகத்தான் இருக்கிறது.... பகிரும் வெறி என்பது கூட மேலும் பொருத்தமே .).
அட அடா.......கச்சேரியின் ஆரம்பத்திலேயே  சுருதி நன்றாக சேர்ந்துவிட்டது பாருங்கள்...!! இதெல்லாம் பகவத் சங்கல்பம்.

நிற்க... (உங்களை அல்ல...நீங்கள் வசதியாக உட்கார்ந்து கொண்டே படிக்கலாம்....நான் topic க்கு  வருவதற்காக.... ஒரு சம்பிரதாயமாகத்தான்  சொன்னேன்).

சமீபத்தில் த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி versionஐ  hotstar-ல்   பார்த்தேன்.
ஒரே மூச்சாக அல்ல...முதல் பாதி பார்த்து விட்டு ஒரு வித அஜீரணம் போன்ற ஒரு உணர்வுடன் வேறு ஏதோ ஒரு அவசர வேலையில் மூழ்கி விட நேர்ந்தபோது ஒரு வித விடுதலை உணர்ச்சி ஏற்பட்டது வாஸ்தவம்.

கிட்டத்தட்ட 15 நாட்கள் பிறகு - அரைகுறையாக பார்த்த படங்கள் என்ற வரிசையில் இது மட்டும் இருக்க ..... இன்னும் 1 மணி நேரம் தானே.... என்று சமாதானம் படுத்திக்கொண்டு பார்க்க ஆரம்பிக்க... ஈஸ்வரா...... second half  நான் பார்த்த மலையாளம் மற்றும் தமிழ் இரண்டையும் தூக்கி சாப்பிடுவதாக இருந்தது. 

அந்த இரண்டை விட இந்த ஹிந்தி version கொஞ்சம் பெரிய படம்.... 15 - 20 நிமிடங்கள் அதிகம். ஆனால் படத்தின் மூலமான அந்த மையப்  புதிரை மிக கவனமாக விளக்கி இருக்கிறார்கள் - ஒரு ATM சீன் கொஞ்சம் நெத்தி அடியாக சேர்க்கப்பட்டு  ஒரு வித fulfilment கூடி வந்து இருக்கிறது. ( நானும் என் பங்கிற்கு கவனமாக "புதிரு"க்கு முன்னாள் ஒரு space சேர்த்தேன் ... இல்லையென்றால் உங்களுக்கு ஒரு கெட்ட வார்த்தை போல தோன்றி இருக்கும் ) 

அஜய் தேவ்கன்  முசுடான முகம் படத்தின் பின் பாதிக்கு வெகுவாக பொருந்துகிறது. ஒரு வகையில் மோகன் லாலை காட்டிலும் அஜய்  character பொருந்துகிறது. முதல் பகுதியில் கணவன் மனைவி ஊடல் வசனங்களை புறந்தள்ளி அனேகமான இடங்களில் வசனங்களை குறைத்து இந்த ஹிந்தி version "to the point " ஆக இருக்கிறது என்று எனக்கு பட்டது. (இந்த படத்திற்கு  அஜய் மனைவியாக  - அழகு மயிலாக - ஷ்ரேயா  சரண்  வீணாக்கப்பட்டு இருக்கிறார். அவரை கொடையாக தமிழ் version க்கு அளித்து இருந்தால் - சுயம்புலிங்கம் மேலும் களி கொண்டு  - கதையை வேறு பாதையில் செலுத்தி இருக்கக்கூடும். )
தபு அறிமுக காட்சியில் கொஞ்சம் செயற்கையாக பட்டாலும்..... பிற்பகுதியில், ஆஷா சரத் அளவுக்கு நடித்து கொடுத்திருக்கிறார். மற்றும் அனைத்து மைய கதாபாத்திரங்களும் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். கதாநாயகியின் பெற்றோருக்கு சொற்ப அளவே வேலை...அனாவசிய வசனங்கள் இல்லாததால்....மற்றும் அவர்கள் வீட்டில் நடக்கும் சம்பாஷணைகள் வெகுவாக கத்திரிக்கப்படுகிறது. 

இந்த படம் பார்க்கும் போது  ... ஒரே கதையை வெவ்வேறாக மூவர் கையாண்ட விதம் பற்றி  என் மனசுக்குள் அலசும்போது , என் மனத்தில் தோன்றிய த்ரிஷ்யங்கள் எண்ணற்றவை.... முடிந்த வரை பகிருவோம்....

(1) ஒரே புத்தகத்தை, ஒரே  படத்தை மீண்டும் மீண்டும் படிக்கும் வழக்கம் உடையவரா நீங்கள் ? இங்கே என்கிட்டயே வந்து நில்லுங்கள்..... நாமெல்லாம் ஒரு ஜாதி தான்....!! 
பல முறை "ஆழ உழுதலின் நற்பயனை நாமெல்லாம் அனுபவித்தாலும்  - ஒரு வகையில் - பல சமயங்களில் -  இந்த பழக்கம் நம்மை இயந்திர கதியில் ஆக்கி விடுகிறதோ என்று எனக்கு ஐயம் ஏற்படுகிறது. 
ஒரே படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதைக் காட்டிலும் இது போன்ற அனுபவங்கள் நம்மை வேறொரு தளத்திற்கு கொண்டு  சேர்க்கிறது .
ஒரே படத்தின் 3 வித make - மூன்று மொழிகளில், மூன்று  இயக்குனர்களின் பார்வையில், ஒரு சில கலாச்சார வேறுபாடுகளோடு,  வெவ்வேறு நடிகர்கள் - அவர்களின் நடிப்பு திறமை, அவர்கள் உருவாக்கும் மாறுபாடுகளோடு இருப்பதால்  நம்மை மேலும் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. நாம் அலட்சியமாக இருக்க வாய்ப்பு  மிகவும் குறைந்து போகிறது. 
என்ன சொல்கிறீர்கள் ?

(2)  ஒரு வகையில் இந்த ஹிந்தி படத்தின் இயக்குனருக்கு அந்த ATM காட்சி எப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு.....? யோசித்து பாருங்கள்......!!
மற்ற இருவரும் அது இல்லாமலேயே விறுவிறுப்பான திரைக்கதைகளை ஏற்கனவே தந்து இருக்க, இந்த மனிதர் ஒரு புது  idea வர... அது படத்தை மேலும் மெருகேற்றுகிறது. அதையே சமயம் படத்தை பார்ப்பவர்கள்.- கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருப்பதால் - சறுக்கி விடவும் வாய்ப்பு அதிகம். "வந்தால் மலை...போனால் ம ***-" என்று  அலட்சியமாக ஒரு புது பட இயக்குனரின் கண்ணோட்டம் சரி வராது. 

(3) "சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர் " என்ற அறைகூவல் எல்லா துறைகளுக்கும் எல்லா சமூகத்திலும் உண்டு. இது போன்ற "remake "  ஒரு வித customization என்பதால் இதன் வீச்சு அளப்பரியது.

(4) கொஞ்சம் தத்துவார்த்தமாக யோசிப்போம்.... மனத்தை தொட்டு சொல்லுங்கள்... வாழ்க்கையில் தினந்தோறும் புதுசு புதுசாக ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறதா என்ன....? இது போன்ற படங்கள், நமக்கு - பார்ப்பவர்களுக்கு கூட...நம் அன்றாட வாழ்வின் வெகு சாதாரண செயல்களை நாம் மேலும் மெருகேற்ற மேலும் பொலிவாக்க என்ன செய்யலாம் என்று நினைக்க தூண்டுகிறது.  இது இயந்திரகதியில் செல்லும் வாழ்க்கைக்கும் புத்தம் புது அனுபவங்களை வாரித்தரும் சுற்றுலா போன்ற சந்தர்ப்பங்களும் பாலம் போல ஒரு உன்னதமான சமன். (nice compromise )

(5) வெகு முக்கியமான என் பாவ மன்னிப்பு இங்கே... 
மலையாளம் version முதலில் பார்த்து புளகித்து போய், தமிழில் கமல் வள வளவென்று  நாகர்கோயில் தமிழில் பொழிந்து தள்ளும் தமிழ் படம் பார்த்து நான் வெறுத்து போய் இருந்தேன் . ஒரு interview ல் கமல் இந்த விஷயம் பற்றி  - சுயம்பு லிங்கத்தை வெகு ஜாக்கிரதையாக ஒரு ஜாலி அப்பாவி மனிதராக சித்தரித்து இருந்தார்கள் என்ற  விளக்கம் அறிந்து, கொஞ்சம் வியந்து போனேன். 
ஆம்.... remake படம் பார்க்க ஒரு வித பக்குவம் தேவை படுகிறது. 
தமிழை பொறுத்த வரை என் ஆஸ்தான நடிகர் - இந்த interview பார்த்த பிறகு - மேலும்  என் மனத்தில் நிமிர்ந்து நின்றார்.
நான்  கொஞ்சமும் அறிந்து இராத காஜோல் - லின் கணவர் அஜய் - ஹிந்தி version ல் - முதல் பகுதியில் ஒரு வித வெறுப்பை தந்து,...இரண்டாம் பகுதியில் என் வாஞ்சையை அள்ளிக்கொண்டு போய் விட்டார்.
முதிர்ச்சி என்பது இது தானோ ? 

பதிவை படிக்கும் நீங்கள் புருவம் தூக்கி ஏளனம் செய்வது தெரிகிறது. இன்னமும் நான் ரொம்ப தூரம் போக வேண்டுமா ?? 

அதுவும் சரி தான்.......!!

எப்போதும் போல ..... அர்ப்பணம்  - கிருஷ்ணருக்கு !!

சுரேன் 






























Friday, March 31, 2017

***** அபிஷேகம் ? அலங்காரம் ? நைவேத்தியம் !! *****

அன்புடையீர் 

நேற்று குருவாரம் - மயிலை சாயி சமாஜம் வரை சென்று அப்படியே நான் ரொம்ப நாளாக குறிவைத்து இருந்த சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் "இராயர் கபே " என்ற அந்த புராதானமான உணவகத்திற்கு சென்று வந்தேன்.

ஒரு உணவு விடுதிக்கு "குறி" வைத்து செல்வாருண்டா ? என்ற கேள்வி கொஞ்சம் personal ஆக மாறுவதால், எதற்கு நான்  "குறி" வைத்து செல்ல வேண்டும் என்பதை சுருக்கமாக சொல்கிறேனே .... சாப்பிட்டது என்னவோ சிற்றுண்டி தான்.... :-) அதனால் விளக்கமும் சிறிசாக இருப்பது தான் சரி !

20  வருடங்களுக்கு முன் இந்த hotel பற்றி ஏதோ வார இதழில் படித்த ஞாபகம். இந்த காலத்தில் தன் பாரம்பர்யத்தையம், தரத்தையும் மூச்சு போல் பாவிக்கும் வியாபாரிகள் (ஆம்... hotel என்பது service என்று சொல்லப்பட்டாலும் அடிப்படையில் இது வியாபாரம் தானே ?) இருப்பது கொஞ்சம் மதிக்கப்படவேண்டிய விஷயமாக எனக்கு பட்டது. முக்கியமாக இந்த ஹோட்டல் துறையில் - தரத்தை அதிக விலை வைக்காமல் தொடர்ச்சியாக ஒரு உறுதியுடன் தர விழைவது என்னை பொறுத்த வரையில் கொஞ்சம் நெகிழ வைக்கும் விஷயம். 

கிட்டத்த 2 வருடம் முன்னர், அப்புறம் சமீப காலத்தில் ஒரு முறை என்று இரண்டு தடவை - ரொம்ப சரியாக  சாயங்காலம் 7 மணி அளவில் போய் - அந்த "சின்னஞ்சிறு" பெயர் பலகை கூட இல்லாத (இவர்களுக்கு தேவையா என்ன ?) அந்த ஹோட்டலை அடைந்து -  அவர்கள் மூடி விட்டதால் ,  திரும்பி வர வேண்டியது ஆகி விட்டது.
விதி வலியது......அதை என் மதியால் இம்முறை காலை நேரத்தில் சென்று வென்ற கதை இந்த பதிவு....

புதன் கிழமை என் office வேலையில் கொஞ்சம் அதிகம் சிக்கிப்போய், அதிகாலை 4 மணி அளவில் படுக்க போக (night shift பாருங்கள் ! ) , படுத்த பிறகு தூக்கம் கொஞ்சம் கூட வராமல் ..சட்டென்று இந்த முடிவு எடுத்தேன்.
சுமார் 5 30 க்கு எழுந்து, என் கண் எரிச்சலையும் அயர்வையும்  ஒரு நல்ல ஸ்நானத்தின் துணை கொண்டு துறந்து... மயிலை சாயி சமாஜம் பாபா முன்னர் சரியாக 7 மணிக்கு நின்றிருந்தேன்  - விழாயக்கிழமை ஆதாதால் -  queue வில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள். அதனால் என்ன  ? பரவாயில்லை. என் திட்டம் 8 மணிக்கு இராயர் ஹோட்டல் செல்வது....என் மனோரதம் ஈடேற்றப்படுவது...என்று என் சங்கல்பம்.
கோயிலில் தரப்பட்ட சூடான அற்புதமான வெண்பொங்கலை நன்றியுடன் தின்று முடித்து (என்ன யோசிக்கிறீர்கள்...? இது பிரசாதம். cinema வெளிப்படும் முன் trailer போன்று வயிற்றுக்கு ஒரு சின்ன ஆசுவாசம்) அங்கிருந்து 5 நிமிட தூரத்தில் இராயர் கபே. திறந்த ஹோட்டல் அமைப்பை (அல்லது அந்த சிறிய வீட்டை)  இப்போது தான் பார்க்கிறேன்.

என்னையும் சேர்த்து வாசலில் கிட்டத்தட்ட 10 பேர் . ஒரு வட இந்தியர் குடும்பத்தோடு வந்தது பெரிய விசேஷஷமில்லை. ஒரு ஜப்பான் பெண் தனியாக இந்த ஹோட்டல் - க்கு அந்த அதி காலை வந்திருந்தாள் . regular வாடிக்கையாளர்கள் சிலர் அந்த பெண்ணை கிட்டத்தட்ட தன்  வீட்டுக்கு வந்த விருந்தாளி போல பாவித்து விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். என்னை போல் புது முகங்களையும் புன்னகையால் பெரும்பாலானவர்கள் வருடியது - hotel உள்ளே போவதற்கு முன்னரே  ரொம்ப நெருக்கமாக  உணர்ந்தேன் . 20 நிமிட காத்திருப்புக்கு பின் - மேனேஜர் போல் ஒருவர் - எங்களை உள்ளே hall க்கு   (அது ஒரு சின்ன  ரூம் தான் ) எங்களை ... வரவேற்று உட்கார வைக்க பரபர வென்று இலை போடப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்பட்டு ... நாங்கள் வேட்டையாட தயாரானோம். 

எங்கள் இலையில் விழ வேண்டிய இட்டிலிகள் இன்னும் வெந்து கொண்டு இருக்க (அதுவும் எங்கள் கண் பார்வையில்...ஒரு இராட்சச பித்தளை அண்டாவில் பழைய முறைப்படி) அந்த மேனேஜர் மீண்டும் எங்களிடம் மென்மையான குரலில் " இன்னும் 10 நிமிஷம் " என்று அறிவித்தார். என் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் (regular customer) கூட அறிமுக உரையாடலில் நான் இருக்க - சில நிமிடங்களிலேயே...ஆவி பொங்கும் இட்லிக்கள் வந்து விட்டது.
அவரவர் தேவைக்கு ஏற்ப 3 / 4 / 5 என்று பரிமாறி கொண்டே  வந்த சிறுவன் எனக்கும் - நான் கேட்ட 3 இட்லிக்களை வைத்து விட்டு......சற்று அவசரமாக நகர்ந்தான் போல...... இருக்கிறது. என் தண்ணீர் டம்ளர் அவன் முழங்கையில் பட்டுவிட்டது போல் இருக்கிறது - நீர் என் இலையில் மொத்தமாக என் இலையில் கொட்ட-  நான் உண்டு கழிக்க வேண்டிய என் 3 இட்லிகள் மேல் . ஆறு போல் தேங்கி நின்றது. வெகு சில நொடிகளில் நான் இடுப்பில் கட்டி இருந்த வேட்டியும் நனைந்து இருக்கும் அபாயத்திலிருந்து - பாய்ந்து விலகி தப்பித்தேன் .

பந்தி கவனித்த அந்த மேனேஜர் பதறி போய் "சாரி : என்று என்னிடம்  சொல்லி -  வேறு இலை ஒன்றை எனக்கு வைக்க, மீண்டும் பரிமாற,  உத்தரவிட்டார். பிழை புரிந்த பையனும் முகம் வெளிறி என்னிடம் மன்னிப்பு கேட்க, பாபா வின் அருள் இன்னமும் என்மேல் சுரந்து ஓடிக்கொண்டு இருக்க நான் - "பரவாயில்ல தம்பி'" என்று ஆசுவாசம் செய்வதையும் அந்த மேனேஜர் மனிதர் கவனித்தார் . 

அடுத்த இலை என் முன் இடப்பட, நான் அதில் தண்ணீர் தெளிப்பதற்குள் 3 இட்டிலிகள் மீண்டும் போடப்பட்டன. நான் திகைத்து பார்க்க,  அந்த மேனேஜர் மனிதர் மீண்டும் பதட்டமாகி இந்த முறை நரசிம்மர் போல கர்ஜனை புரிந்தார். "என்ன அவசரம் உனக்கு...." எடுறா அந்த இலை யை - sir தண்ணீர் தெளிக்கறதுக்குள்ள ஏண்டா போட்ட ? ". இது வேறு பையன் பாவம் !

இவனும் வெலவெலத்து போய் என் இலை , புதிய இட்டிலிகளையும் பாய்ந்து எடுத்து உள்ளே போக - என்னை தவிர்த்த 15 பேர் சாப்பிட ஆரம்பிக்க, நான் நிராயுத பாணியாக அர்ஜுனன் போல செயலற்று "சும்மா" இருக்க நேரிட்டது. எனக்கான என் இலை இட்டிலிக்கள் 2 நிமிடங்களில் வந்து சேர்ந்தது. கெட்டி சட்டினி துணை சேர்க்க 4 இட்டிலிகளை பேரின்பமாய் உண்டு வெளியே வந்தேன். 
காபிக்கு வெளியே வந்து காத்து நிற்க வேண்டும் இந்த புண்ணிய ஸ்தலத்தில் (உள்ளே  அடுத்த பந்தி ஆரம்பிப்பதை வசதிப்படுத்த...)

அந்த மேனேஜர் மனிதர் ரொம்ப இயற்கையாக வருவது போல் என் அருகே வந்து..."எல்லாம் நல்லா இருந்துதா சார்  ? நீங்க கன்னடிகளா ?" என்று என் (கோபி சந்தன) திருச்சின்னத்தை பார்த்து கேட்க...நான் "தமிழ் தான் சார்..ரொம்ப பிரமாதமாய் இருந்துது சார்...நான் இனிமே உங்க ரெகுலர் customer " என்று சொல்லி ... "ஆனா ஒரு விஷயம் " என்று சொல்லி நிறுத்தினேன்.

கேள்வியோடு என்னை அவர் பார்க்க, அவருடன் சேர்ந்து ஒரு சில ரெகுலர் வாடிக்கையாளர்களும் இந்த புதியவனை புதிராகப்பார்க்க....நான் தெளிவாக புன்னகையோடு மேலும் சொன்னேன்....

"நான் நெக்ஸ்ட் தடவை வரப்ப எனக்கு நைவேத்தியம் மட்டும் போறும் சார்... அபிஷேகம், அலங்காரம் எல்லாம் அவசியம் இல்லை " என்று  புன்னகையோடு முடிக்க - அவர் முகம் சிரிப்பால் நிறைந்தது. என் தோளை வாஞ்சையாய் ஒரு கணம் தொட்டுவிட்டு அடுத்த பந்தியை விசாரிக்க என்னிடமிருந்து விலகினார்.

 புதிய அறிமுகங்கள் - நீண்ட நாள் தொடர்பாக மாற / மாற்ற  இது போன்ற தற்செயல் நிகழ்ச்சிகள்  நல்ல சகுனங்கள் தானே ? 
அந்த 6 இட்லிகள் தான் பாவம்......தங்கள் ஜென்ம பலம் ஈடேறாமல் குப்பைக்கு நேரடியாக போய் விட்டது.  விதியின் வலிமை தான் என்னே.......!!

சுரேந்திரன் 










Thursday, March 30, 2017

Special Days

Hi All

I am sure that every one has observed that there are very few special days in his / her life. By special days I am magnanimous enough to mean both good and bad - to essentially denote those few days that are not normal. 
(Now you are hell bent to argue with me about my adjective "special' in the title AND  why not substitute with "abnormal" or "one off" - I will go to the extend of changing it to "extra ordinary" ! howz' that !!....Lets not digress please)

Coming back to the point, I prefer that you get the title of this post straight and clear - both good and bad - before we move any further. After all we are here - in this world -  only to transcend  dualism isn't it .. ? 

Now, once again getting back to the first line of the post, we can easily observe that such special days actually represent the extreme sides of a normal curve ("bell curve"). I am making too many assumptions here -  One lives in this world for a normal duration and encounters life and its entire cycle sufficiently to understand what I mean exactly. 
The "bad" days of our life are quite minimal in the left side of the curve which perhaps - more or less - matches with the "good" / "great" days in the right side - leaving a huge mass of "normal" and "average" days in between these two extremes. 


Watch out, though the total number of such special days are sort of balanced in the long run, the problem is in the unpredictability / lack of a clear patttern...huh...? Stay there with me...

Now, Are we not aware that there are some special "good" / "bad" days due to our own volition ?
I am going to request you TO COMPLETELY IGNORE the count of these two sub categories - which might lead to more subjectivity. After all I have enough gun powder to write a separate post on how our volitions are essentially destined & we have very little discretion about this grand design that we call life.

We are only going to look at those special days - I mean both "good" and "bad" the destined ones...and look at ourselves and how our mind responds to them.

I get a feeling that most of us - unfortunately -  have the intrinsic quality to absorb the "bad" days - particularly in our culture - since we are too much hooked to destiny factor. After a short spell, the average minds stares at reality, absorbs and get adjusted to the tragedies of our lives....Life Goes On....!!

On the contrary - the so called "good" days are our real danger since we might go of board letting ourselves too loose.

It appears to me that life is like getting forced into a "joy" (?) ride in a Giant Wheel with a bit of secrecy element on the location of the Centre and the wheel blessed with varying radius.

If only we sincerely start learning to handle a " good " day with enormous care and special attention and willing to learn from our own "gaps"  (Yep our "gaps" / "misses" that we consciously / unconsciously do even on such "good days" - then) perhaps, our bad days might not turning worse - whenever they are destined.
We get to a progressive mindset  and not blame too much on destiny and start taking "bad days" upon ourselves. Won't it be a significant shift in our attitudes ?

Sorry for lot of words....my bad !! - Remaining helplessly as  a verbose for more than two decades but just want to add one more sentence before I close.

I had a "good" day yesterday.....Krishnaarpanam...As always

Surendran














Thursday, March 16, 2017

Part 2 : மணிரத்னம்......மணிமகுடம்......மனிதம் !!??


எச்சரிக்கை :  இந்த தலைப்பில் எழுதப்பட இருந்த என்  சிந்தனை கொஞ்சம் தடம் புரண்டு விட்டது. (மேலும் மெருகு ஏறி விட்டது என்று நீங்கள் கருதினால் நான் புளங்காகிதமே கொள்வேன்...என்பது வேறு விஷயம் )

முன் குறிப்பு : Part 1 எழுதி அதற்குள் - கிட்டத்தட்ட ஒரு மண்டலம் முடிந்து விட்டது.....காலம் வெகு வேகமாக சுழலுவது - நமது ஆரோக்கியமான வாழ்க்கையின் அறிகுறி தானே....? 
ஒரு மாமாங்கம் முடிவதற்குள் Part 2 எழுதுவதற்கு சாத்தியப்படத்திற்கு   எனக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.... (பார்த்திபன் கனவு படத்தில் விவேக் சொல்லுவது போல "எனக்கு வேற யாரு இருக்கா ?? ")

அன்புடையீர்.....

முதலிலேயே உண்மையை - முழு பூசணிக்காய் போல - போட்டு உடைத்து விடுகிறேன் . சுமார் 1 வாரம் முன்னாள் நான் கண்டு களித்த ஒரு திரைப்படம்...மணிரத்னம் இயக்கிய "குரு".
படமாக்கப்பட்டு சரியாக 10 வருடங்கள் கழித்து நான் முதல் முறை இப்போது தான் பார்க்க நேர்ந்தது. ஹிந்தி படமாக இருந்தாலும் என் குறைந்தபட்ச பாஷை அறிவு subtitle - உடன் சம்பாஷித்து மிகவும் நிறைவான அனுபவமாகத் தான் இருந்தது. இந்த பதிவில் மணியின் பல மணியான படங்களை ஒன்றாக கோர்த்து.... முத்தாய்ப்பாக -  "இரத்தினமாக" குரு படத்தை வைத்தது அழகு பார்க்கத் தான் நான்  சங்கல்பம் செய்து கொண்டேன். 
ஆனால்  பாருங்கள் - "காற்று வாங்க போனேன்....கவிதை வாங்கி வந்தேன் " என்ற பழமொழியின் கதையாக இந்த பதிவு தடம் மாறிப் போய்விட்டது.
("பிள்ளையார் பிடிக்க...குரங்காய்.... பழமொழியை நீங்கள் இந்த தருணத்தில் நினைத்து பார்க்க வேண்டியதில்லை..)

குரு படத்தின் நாயகன் அபிஷேக்-கின்  "சுமார்-திறமை" பற்றி ஓரளவு கேள்விப்பட்டு இருந்தாலும், (நான் அவர் நடித்து இராவண் தவிர வேறெந்த படமும் பார்க்க நேர்ந்ததில்லை) இந்த படத்தில் மிகவும் நிறைவாகவே நடித்து இருந்தார் என்று எனக்குப் பட்டது. எனக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாத "திருபாய் அம்பானி"யின் சாயலை, அந்த மனிதரின் விசேஷ குணங்களை ....வெகு அழகாக அபிஷேக் கையாண்டார்... (பெரியவர்களை இயல்பாக தொழும் செயல் - அநேகமாக படம் முழுவதும்).
நான் பல காட்சிகளில் ஒன்றிப்போய் இரசித்துத்தான்  பார்த்தேன். படம் பார்க்கும்பொழுதே மணிரத்தினத்தின் மற்றோரு படமான "இருவர்" எனக்கு நிழலாடியது...."நாயகன்" கூட....

சரி இந்த பதிவின் மூல பகுதியை ஆரம்பித்து வைப்போம் .... 
குறிப்பிட்ட இந்த மூன்று படங்களின் ஒற்றுமை என்ன என்பது உங்களுக்கு சட்டென்று விளங்கியிருக்கும். நிஜத்தில் வாழ்ந்த / வாழ்ந்து கொண்டிருக்கிற பெரிய மனிதர்களை பற்றி, அவர்களின் வாழ்வின் சில முக்கியமான தருணங்கள் மற்றும் சராசரி தருணங்கள் பற்றி..., அவற்றை அவர்கள் கையாண்ட விதம் பற்றி....சார்பு இல்லாமல், ஒரு பொதுவான பார்வையாக திரைக்கதைகள்.
சரி தானே... ? 
(இந்த மூன்று படங்களில் ஒன்று கூட மூல நாயகர்களின் கதை என்று இயக்குனரால் நேரடியாக அறிவிக்க படவில்லை . biography genre என்பது commercial திரைப்படங்களில் ஒத்துப்போகாத ஒன்று...; அதை விட்டுத் தள்ளுவோம் ).

நிற்க...இப்போது இதே  இயக்குனரின் மற்ற சில படங்களை பார்ப்போம்... 
ஒரு சாதாரணன் அசாதாரண சூழலில் தள்ளப்பட்டு அலைக்கழிக்கப்படும் சில படங்கள்... முக்கியமாக, ரோஜா, பம்பாய், உயிரே. அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டாள்..கடைசி இரண்டு படங்களில் கதாநாயகியாக ஒரு சிறுமியின் வித்தியாசமான நடிப்பு, சுற்றியிருப்பவர்களின் மனப்போராட்டம்... 
இந்த படங்கள் எல்லாமே ஒரு மாதிரியாக - இப்படி ஆனால் ? - hypothetical situation - முன்னிறுத்தப்படும் கதைகள். 

எழுபதுகளில் மகேந்திரன் என்ற மாபெரும் இயக்குனர் நமக்களித்த நவீன படங்களை விட  எண்பதுகளின் பிற்பகுதியில் வந்த மணிரத்னம் அதிகமாக தமிழ் மனங்களை தன்னுடைய திறமையால், நவீன சிந்தனைகளால் நம்மை பாதித்தார் என்பது நிஜம். ஆனால் சொல்லப்பட்ட எடுத்துக்காட்டுகள் போல, பெரும்பாலும் .... பெரிய மனிதர்களின் சாதாரண தருணங்கள் ...அல்லது சாமானியர்களின் முக்கியமான தருணங்கள் - நான் தொகுத்தது சரிதானே....?

வித்தியாசமான களங்களில் திரைப்படங்கள், அற்புதமான ஒளியமைப்பு மற்றும் உன்னதமான இசை இவற்றிற்காக நாம் மணிரத்தினத்தை பல விஷயங்களில் சகித்துக்கொண்டோம் - செயற்கை சொட்டும் பல காட்சிகள் மற்றும் மாந்தர்கள் - உதாரணமாக. ரோஜா படத்தில் இருப்பது போல மனிதர்களை கொண்ட ஒரு கிராமம் எங்கேயாவது கண்டு இருக்கிறீர்களா ? அல்லது மௌன ராகத்தில் கார்த்திக் -ன் அதீத நடிப்பு ("சந்திரமௌலி ....!! mr சந்திரமௌலி" நகைச்சுவை ?)  இப்போது பார்த்தால் நம்மால் சகிக்க முடிகிறதா ? அஞ்சலி படத்தில் படம் முழுக்க இருக்கும் ஒரு வித மேட்டுக்குடியின் செயற்கைத்தனம், அந்த அதீத விபரீத குழந்தைகள்.....
முத்தாய்ப்பாக கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் பலரால் பெரிதும் விமரிசிக்கப்பட்ட மணியின் "ரத்தினச்சுருக்க வசனங்கள்"!!
ஒரு திரைப்படம் "classical " அந்தஸ்தை பெறுவதற்கு முக்கிய அளவுகோல் அந்த படம் எல்லா காலத்திலும் இரசிக்கப்படக்கூடியதாக காலத்தை வென்றதாக இருக்கவேண்டும் ?அல்லவா
இயக்குனர் சிகரமான கே.பாலசந்தர் ரோஜா படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சி (மதுபாலா தமிழில் கெஞ்சுவது புரிபட்டு அந்த மத்திய மந்திரி அவருக்கு ஆறுதல் சொல்லும் கட்டம்) தன்னால் அவ்வளவு அழகாக எடுத்திருக்க முடியாது என்று புளகாங்கிதப்பட்டாராம். நிதி நெருக்கடியில் இருந்த அவர் இந்த படம் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தயாரிப்பில் தான் மீண்டார் என்பது எல்லாருக்கும் தெரிந்த கதை ! 
வேறு என்ன சொல்வார் பாவம்...

மணிரத்னம் - தமிழ் நவீன சினிமாவின் மணி மகுடமாக அங்கீரிக்க பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் இந்த பதிவு... என் அங்கலாய்ப்பு அவசியமா என்று தோன்றுகிறதா ? 

நான் சமீபத்தில் கண்டு களித்த "குரு " பற்றி சிலாக்கியமாக எழுத தோன்றிய என் எண்ணம், சட்டென்று  இந்த மேதகு இயக்குனர் மனிதனை - வெறும் சாதாரணானாக இருக்கையிலே தெய்வமாகும் சாத்தியக்கூறு பற்றி  ஏதாவது ஒரு படத்திலாவது நமக்கு புலப்படுத்தி இருக்கிறாரா? என்று யோசித்து பார்க்க...சட்டென்று ஒரு உதாரணம் போலும்.... மின்னல் போன்று ஒரு classic ஆங்கிலப்படம் ஞாபகத்திற்கு  வந்தது... 12 Angry Men .... கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன் வந்த கருப்பு வெள்ளைப் படம்....!!
நான் பார்த்தும் கிட்டத்தட்ட 3 - 4 வருடங்கள் ஆகிவிட்டது. நம்பினால் நம்புங்கள்...இந்த பதிவிற்காக -  மணிரத்தினம் படங்களின் வகைமை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள - அந்த படத்தை தேடி எடுத்து நேற்று மீண்டும் பார்த்தேன். சுமார் 100 நிமிடம் ஓடும் அந்த படம் முடியும் போது - என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது.
 "இல்லை ...இல்லவே இல்லை"
கண்களின் நீர் வழிய - பார்வை வெறிக்க இந்த பதிவை  - அந்த அற்புதமான ஆங்கிலப்படத்திற்காக  - மனதுக்குள் எழுத ஆரம்பித்து விட்டேன்..

நமது திரைப்படங்கள் செயற்கையாக வெறும் பொழுது போக்காகவே பெரும்பாலும் இருக்க காரணம்...மனிதத்தை (humane ness ?) சரிவர கையாளாததால் தான் என்று .படுகிறது.
முதலில் சொன்னது போல், மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள் கூட நம்பி தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் - அசாதாரண மனிதர்களையோ, அசாதாரண சம்பவங்களையே மையமாக  கொண்டவை. எனவே நம் திரைப்படங்கள் மாயைகளாகத்தானே  இருக்கும்.... ? அதற்காக சில வருடங்கள் முன் பிரபலமான கலைப் படங்கள்  (art film ) சரியாக பாதையா  என்று .கேட்டால்...அதுவும் எனக்கு முழுக்க சம்மதம்  இல்லை. அதுவும் எங்கேயோ இடிக்கிறது.
மனிதத்தின் இயற்கையான தன்மையாக உறைந்திருக்கும் தெய்வத்தை நமக்கு தரிசனம் தரச்செய்து -  நம்மை சிறிது அளவாவது கொஞ்ச நேரமாவது உயர்த்தி - குறைந்தபட்சம் படம் முடியும் வரையாவது நம்மை நெக்குருகி -   ஆனால் நம் உணர்வுகள் எதுவும் அந்த திரை மனிதர்களை  எவ்வகையிலும் பாதிக்காமல் அவர்களை இயல்பாகவே இருத்திவைப்பது.... இது ஒரு சாதனை திரைப்படத்தின் அடிப்படை குணாம்சமோ  .... என்று தோன்றுகிறது.

12 Angry Men - முழுக்கதையும் எழுதப்போவது இல்லை.
வெகு எளிமையான படம் - தெளிவானதும் கூட.  
தூக்கு கயிற்றின் பிடியிலிருந்து ஒரு சாதாரணனை தன் வைராக்கியமாக சுயத்தால் (strong personality ?)மற்றோரு  சாதாரண மனிதர் விடுவிக்கிறார். 
இரண்டு மணிக்கு குறைவாக ஓடும் அந்தப்படத்தின் கடைசி நிமிடம் பற்றி மட்டும் ஒரு சில வார்த்தைகள் !
நான் தேடியதை எனக்கு பொட்டில் அடித்தால்போல் புரிய வைத்த அந்த சாதாரண காட்சி படமாக்கப்பட்ட விதம்....அடடா !!

செயற்கரிய ஒரு செயல்புரிந்து விட்டு அந்த ஒல்லியான நெடிய மனிதர் - வானத்தை பார்வையிட்டு, மழையின் பாதிப்பை விழியால் அளந்தவாறு - தன் வழி நோக்கி அமைதியாக நடக்கையில்  <<நம் ஒவ்வொருவர் போலவே!!>>  நாமும் அமைதியில் உறைந்து போகிறோம். 
Human Possibility demonstrated without any pomp - isn't it ?

 இது போன்ற- வாழ்க்கை மீதும் நம்மீதும் நம்பிக்கை தர வல்ல படங்களை மாதத்திற்கு ஒன்று பார்க்க நேர்ந்தால், இரசிக்க முடிந்தால் அதை நம் நல்லூழாகவே கொள்ள முடியும்.

ஆம்.... தீதும் நன்றும் பிறர் தர வாரா !!

கிருஷ்ணார்ப்பணம் !!!

அன்புடன் சுரேந்திரன்










Saturday, February 18, 2017

******** "பாதாஞ்சலி" ********

எச்சரிக்கை : தலைப்பில் நீங்கள் கண்டது "பா" . 
சோப்பு விற்க துவங்கியிருக்கும் காவியுடை தரித்த ஒரு நவீன துறவி (?) ஒருவர் பற்றியல்ல எம் பதிவு.சறுக்கி விடாதீர்.....
spelling பற்றித்தான்  சொன்னேன் !!

அன்புடையீர்

நமது பாரம்பரியமும் சரித்திரமும் கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு மனிதனின் உடல் அங்கங்களில்  "பாதம்" பற்றிய முக்கியத்துவம் நன்றாக தெரிந்து இருக்கும். பல சரித்திர கதைகளில், ஞானிகள் மற்றும் குரு பரம்பரையினர் ஏதாவது காரணத்திற்காக அரசவை வர நேர்ந்தால் மன்னன் அவர்களை எதிர்கொண்டு அழைத்து தக்க ஆசனத்தில் இருத்தி , பெருமை பொருந்திய தனது மணி மகுடத்தையே கழற்றி அவர் பாதங்களில் சமர்ப்பிப்பது ஒரு மரபாக இருந்ததிருக்கிறது என்று நிச்சயம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆன்மிகத்தில் இருப்பவர்களின் பாதங்களுக்கு அவ்வளவு கீர்த்தி உண்டு....!!

(அப்படியென்றால் "எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் " என்ற பழமொழி எப்படி வந்தது ? என்று நக்கல் அடிக்க வேண்டாம். இந்த பதிவு பாதங்களுக்கான என் சமர்ப்பணம். 
"தலை" வணக்கம் என்று பெயரிட்டு பிறிதொரு நாளில் முகத்தை பற்றி கதைப்போம்.....)

நமது பாதங்களில் சில குறிப்பிட்ட பொட்டுகளில் நிபுணர்கள்  அழுத்தினால் அது மருத்துவ ரீதியாக பல தீர்வுகளையும் வல்லது என்று தற்காலத்தில் கூட கேள்விப்படுகிறோம். தலையை எந்த அளவு நம்பிக்கையோடு நம் saloon - ல் ஒப்படைக்கிறோமோ அதையே போல் பாதத்தை ஒரு Refloxology கிளினிக் வசம் ஒப்படைத்தால் நம் ஆரோக்கியம் எளிய முறையில் பாதுகாக்க படுகிறது - இந்த காலத்தில். மருத்துவ உலகம் பண்டைய ஞானங்களின் துணை கொண்டு விஸ்தரித்துக்கொண்டே  போகிறது. 

இந்த அற்புதமான மனித உடலில் .....
ஐந்து முக்கிய  உறுப்புகள் (vital organs )
எண்ணற்ற பிற உறுப்புகள் - உள்ளேயும் வெளியேயும்.... 
எல்லாவற்றையும் விட நம் அகத்தின் விலாசம் காட்டும் ஒரு முகம் ("Face is the Index of Mind"), 
அதில் ஒளி தெறிக்கும் கரு விழிகள்.... 
(கண்ணோடு கண் நாம் பிறரை நோக்கும்போது ஒரு  வித மின்சார தெறிப்பு ஏற்படுவத்தை உணர்ந்து இருக்கிறீர்களா ? அதிலும் ஒரு வசீகரமான எதிர் பாலரை (opposite sex ) சந்திக்கும் போது வேறு பல இராசயன மாற்றங்கள் estrogen துணை கொண்டு ஏற்படுவது .... வேறு ஒரு பெரிய பதிவுக்கான விஷயம்...) .

எல்லாவற்றையும் விட்டுவிட்டு உனக்கு பாதம் பற்றி தான் இந்த வார இறுதி நாளில் எழுத தோன்றியதா என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு புன்னகை தான் என் பதில். .
ஆம்...மனித உடலில் "இறுதியாக" பிற அவயங்கள் எல்லாவற்றுக்கும் கீழே .... அமைந்து இருக்கும் இந்த பாதம் என்னை ரொம்பவே  பரசவப்படுத்துகிறது .
பல வருடங்களுக்கு முன்....ஒரு கோயில் வாசலில் ஒரு போர்டு "பாத அணிகளை இங்கே விடவும்." என்று எழுதியிருந்தது கண்டு ... இரசித்து இப்போது ஞாபகம் வருகிறது. ("காலணி " என்பது தவறு தானே ?? இப்படித்தான் பாஷை சில சமயம் அழுகிப் போகிறது).

வெகு ஆஜானுபாகுவாக 100 கிலோ எடை கொண்டவர்களை பார்க்கிறோம். அவர்கள் எடையை தாங்க அவர்கள் தொடை பருத்து இருந்தாலும், சற்று கீழாய் அவர்கள் பாதங்கள் நம்முடையது போலத்தான் இருப்பதாக தெரிகிறது என்ன அதிசயம் இது .... அடடா.....!!
கொஞ்சம் ஆடி ஆடி...யானை அசைவுகளோடு சற்று மெல்ல அவர்கள் நடந்து போனாலும்,  அந்த பாதங்கள் அவருக்கு தேவையான சம நிலை (balance ) அளிக்க வல்லதாய் இருக்கிறது....
என்ன அற்புதம்...!!
இந்த பதிவு வெறும் theory இல்லை....நம்புங்கள்...!!

ரொம்ப நாளாக நான் தள்ளிப்போட்டு கொண்டு இருந்த ஒரு வேலை ... ஒரு modern  saloon போய் ஒரு pedicure செய்து கொள்ள வேண்டும் என்பது. 

நாற்பதுகளின் மத்யமத்தில் வயசு ... பித்த வெடிப்பின் ஆரம்பம்... கொஞ்சம் பாதங்களை பராமரிக்க வேண்டிய தேவையை பற்றி என் இல்லாள் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறாள். 

என் வழக்கமான saloon நண்பர் அந்த காலத்து மனுஷன்.... கடையும் சிறிசு.... அவருக்கு இது போன்ற அம்சங்கள் இன்னும் கைவரப் பெறாததால் , எனக்கு Green Trends போன்ற இடங்களுக்கு போக இருந்த மனத்தடையை  இந்நாள் வரை காப்பாற்றி வந்திருக்கிறேன் ... அது போன்ற குளுகுளு கடைகளுக்கு உள்ளே  போகும் வாய்ப்பு கூட நான் ஏற்படுத்திக்கொண்டது இல்லை.... 
(ஒரே ஓரு முறை "துணை"க்காக போயிருக்கிறேன் - ஓரிரு வருடம் முன்பு)

போன ஞாயிறு -  சுபதினத்தில் - மிகவும் தயக்கமாக எங்கள் அருகாமையில் இருக்கும் ஒரு branch - க்கு உள்ளே சென்று விசாரிக்க - வெடவெட என்று ஒரு இளைஞன் ரொம்ப சந்தேகமாக என் பாதங்களை சோதித்துப் பார்த்தான். 
கொஞ்சம் களேபரமாக இருந்த என் பாதங்கள் அவனை கலவரப்படுத்தி இருக்கக் கூடும். அவனிடம் நான் சமாதானமாக இந்த அழுக்கும் பிசுக்கும் அருள்மிகு சாய் நாதர் அருளில் திளைக்கும் சீரடியில் புழுதி என்றும் நான் அன்று காலைதான் சென்னைக்கு வந்தேன் என்று சொல்லவும், அரை (half)  மனத்தோடு அவன் வேலையை ஆரம்பித்தான்....
அவன் என் கால் இரண்டையும்  பத்திரமாக ஏந்தி வெதுவெதுப்பான நீரில் அமர்த்திய அந்த கணம்...நான் கூசிப்போனேன். இது மிகவும்  புதிய உணர்வு...எவரும் இது வரை என் பாதத்தை இதுபோல் ஆதுரமாக பிடிக்க நேர்ந்ததில்லை. பெரும்பாலானவர்களுக்கும் அப்படிதான் என்று தோன்றுகிறது .  அந்த ஒரே கணத்தில் அந்த பையன் என் நெருங்கிய  சிநேகிதன்  ஆகிப்போனான். ( உடன் பிறவா  சகோதரன் ?? )

ஆறு / ஏழு கட்டமாக அவன் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் தன் "திறமை"யை காட்ட - அச்சுபிச்சாக இது வரை காட்சியளித்த சின்னம்மா எப்படி ஒயிலான அரசியல் தலைவராக மாறிப்போனாரோ அதுபோல் என் பாதங்கள் ஒளிரத் துவங்கியது. மிகவும் ஆதுரத்துடன் - நான்  அவன் பெயர் கேட்க, அந்த பையன் அடக்கமாக "ஏழுமலை" என்று சொன்னதும் எனக்கு அட.....என்று தோன்றியது.

கடந்த 5 நாட்களாக திடீர் திடீர் என்று இந்த பேரானந்த 45 நிமிட அனுபவம் ஞாபகம் வரும் போதெல்லாம் நான் மனம் இளகி என் பாதங்களை நோக்குகிறேன். 
பரவாயில்லை...ஓரளவு நன்றாக சுத்தமாகத்தான் நான் வைத்துக் கொண்டு இருக்கிறேன். 
அடுத்த மாதம் வந்ததும் இந்த அதி அவசிய "திருப்பணி"யை எனக்கு நான் செய்து கொள்வது என்று உறுதி பூண்டு விட்டேன். இதை சுகத்தையும், சுத்தத்தையும் ஸ்திரமான விஷயமாக ஆக்கிக் கொள்வது ஒரு வகையில் எனக்கு கடமை ஆகி விட்டது.

நிற்க, எனக்கு திடீரென்று தோன்றுகிறது. 
ஆன்மீக உலகத்தில் குருக்களும் சதகுருக்களும் "பாத பூஜை"யை ஒரு முக்கிய அம்சமாக இன்னமும் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் ஒரு முறை feet massage முறையாக அனுபவித்து விட்டால்... கண்கள் கிறங்கிப்போய், துறவறம் துறந்து ... இந்த சுகத்திற்காகவே பொருள் உலகத்திற்குள் மீண்டும் நுழைய ஆசைப்படலாம்....
"கதவை திற .. காற்று வரட்டும்" என்ற ஒரு கட்டுரை தொடர் எழுதிய ஒரு ஆன்மிக குருவும்.... அவருக்கு பின்னர் ஏற்பட்ட கதியும்   ஏனோ நினைவுக்கு வருகிறது.....
அன்புடன்....
சுரேந்திரன்







    


















Thursday, February 16, 2017

*** The Middle Path ******

Dear All

I am sure you know that the subject line IS the most famous contribution of Gauthama, The Buddha. At least I feel so - seeing the way the Budhism is being practised today which is very much different from what he intended it to be...

Well, before I proceed to muse further, I recommend -  rather request , er er even plead you to go thru' a 5 minute clip of TTR which I saw few years back. Yes, you get volumes and volumes of his lectures in youtube and lot of his video clips are shared over whatsapp these days but then, this one is special as he talks about an important aspect of life (Dhinacharya)

Please go on
https://www.youtube.com/watch?v=e3heEGt9NrE

Well, Not long ago I had posted about New Year Goals which is just one of my posts in the blog on this favourite topic of mine. I had spent quite a lot time thinking about which one is most effective as a goal - Is it a specific action, or getting into a routine / habit OR getting out of a routine / habit.
<< Have you observed this ? For most of the mankind, the last one becomes a very effective goal for them....with their first live experience on Goal setting process. That's the design of life>>

Now, This concept of having a daily routine which TTR talks about had made me think so much for so long and got deeply internalised.  It might be that some of my depression spells (even the high energy bouts -  that I get into quite frequently) are due to too much thinking about my Dhinacharya (or daily routine, simply put)

Here comes "Gauthama Buddha" another ancient super Guru of our culture who envisages middle path.
(ah...i never realized today is Thursday....I am moving from one Guru (TTR) to another one now .....) 
Bhagavat Gita also states "Wisdom does not dawn upon one who eats too much as much as it goes no where near the one who starves".

Moderation is the KEY which I - sort of implemented - today at my daily routine (Dhinacharya).....

I won't give details not because they are confidential but just that it is not going to be relevant any way.

See..I had 9 specific tasks at my daily routine which constitute 4 to 4 1/2 hours (Don't laugh...Its about me & I am quite delighted with these Nav rathnasof my every day. I love each one of them as much as I love my first circle pals of life - what to do.....?
Needless to say, on some days I miss one / couple of them.... and on extreme days miss out every one of them wondering whats all this about....& If I am really serious about my favourite daily routine....
Can you empathize with me ?
Now hold your breath - I achieved a major transformation yesterday all of a sudden with a sudden stroke of a thought process leading to a crystal clear enlightment towards the end of it.

so....what's that exactly ..... huh...??

Yesterday I ended up identifying 3 - yes just 3 - out of my "Nav rathnas" as a MUST category putting all the rest as delights. Mind you...it wasn't a easy decision at all....but I kept meditating for most of the day to arrive at it to mull over the purpose / significance of it, the duration it takes & above all the impact that had on me until now....

Whats the fate of the rest 6 ?.....Its some thing on these lines - Good if I can cover them every day & no problem if I don't find time.

This way mind is much lighter and peaceful. I am going to closely observe if this is going to have a positive impact on my periodic mood swings....
You never know until you really know....!! Isn't it ??

As TTR (these days calling himself as "Mahatria") has popularized the 11.11 AM as a spiritually important moment of every day... I started off the first of my MUST DO 3 tasks slowly with lot of sincerity, commitment and optimism today at 11.11 AM....

Thamasoma Jyothirgamaya {Lets travel from Darkness to Light}

Love // Suren




Sunday, January 29, 2017

New Series : Part 1 **** மகேந்திரன் என்றொரு மகேஸ்வரன் ***

அன்புடையீர்.....

சொல்ல கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கிறது.
1978 ல் - நான் ஐந்து வயது பாலகனாக குரோம்பேட்டை வீதிகளில் துரு துரு - வென்று - அப்படி தான் கேள்வி ... -  திரிந்து கொண்டிருந்த போது வெளிவந்த ஒரு படம்.. ... 
மகேந்திரன் என்று தமிழ் திரையுலகின் பீஷ்மர்களில் ஒருவர் நமக்கு அளித்த ஒரு பெருங்கொடை .."முள்ளும்  மலரும்"  - போன வாரம் என் வீட்டில் - தன்னந்தனியாக கண் கலங்க பார்த்து கொண்டு இருந்தேன் (மதலையாய்  நம்   தாயாரின்  மடியில் படுத்துக்கொண்டு நாம் பார்த்த படங்கள் எல்லாம் கணக்கில் சேராது அல்லவா...?)

என் தலையும் (மீசையும் கூட) கொஞ்சம் நரைக்க ஆரம்பித்து விட்டது.... என் மகளுக்கு இன்று 15 வயது ஆகிவிட்டது என்பதெல்லாம் கூட பெரிய விஷயமில்லை.இந்த படத்தின் cd ஐ நான் இரவல் வாங்கி கிட்டத்தட்ட 100 நாட்கள் ஆகி விட்டது என்பது தான் எனக்கு துக்கம் துக்கமாய் பொங்குகிறது.

இந்த பதிவு இந்த படத்தின் அருமை பெருமைகள் பற்றி அல்ல. எப்படியெல்லாம், அல்ப காரணங்களுக்கெல்லாம் (சில சமயங்களில் காரணமே இல்லாமல் கூட !) நமக்கு வந்து  ஆகவேண்டிய பட்டறிவு  - ஞானம் என்பது படாத அறிவு என்பது புரிய ஆரம்பித்து விட்டதால் ரொம்ப conscious ஆக  தேர்ந்தெடுக்கிறேன் பாருங்கள் -   வார்த்தைகள் அம்புக்கு நிகரானவை என்பது என் இன்னொரு சமீப பட்டறிவு) எப்படி தள்ளிப்போய் விடுகிறது பாருங்கள் ...

படத்தை பற்றி வெகு சில வார்த்தைகள்.... 
வெகு கவித்துவமான பெயர். ரஜினியும் ஷோபாவையும் குறித்தோ என்று தோன்ற ஆரம்பிப்பதற்குள் ரஜினியின் அகமே.....ஏன் நம் எல்லோரின் அகமே அது தானே என்று மீண்டும் ஒரு.....ஆம்.... பட்டறிவு :-)
முக்கியமான 4 கதா பாத்திரங்களும் நிறைவாய் செய்து இருக்கிறார்கள். 
கிட்டத்தட்ட ஒவ்வொரு சீன்-ம் வசனமும் வெகுவாய் யோசிக்கப்பட்டு பின் நடக்கப்போவதற்கு பின்புலமாக (backdrop / background ?) , ஒவ்வொரு வசனமும் செறிவாய் ... ஒவ்வொரு பாட்டும் இரத்தின கம்பளமாய்... ரஜினியின் கை அகற்றப்பட்டு அவர் ஊருக்கு வரும் சீன் - ல் இளையராஜாவின் அந்த 2 நிமிட recording ".... அடடா !!!
பல  கவித்துமான காட்சிகள். - எப்பிடி எப்பிடி ?" என்று ஷோபா தன அண்ணனிடம் கொஞ்சலாக அவன் கோபம் தணிக்க சொல்லும் அந்தத் தருணம் அந்த தேவதையை நமஸ்கரிக்க தோன்றுகிறது. (எங்கோ வானத்தில் நிச்சயம் நட்சத்திரமாய் தான் இப்போது இருப்பார் என்று தான் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்) 
திரைக்கதையில் எனக்கு ஏற்பட்ட சில அற்ப சந்தேகங்கள்  எல்லாம் "பகலவனை கண்ட பனி போல" அடுத்தடுத்த scene வந்ததும் விலகியது ஒரு வகையில் எனக்கு படிப்பினையாக இருந்தது.... (அவசரப்படாதேடா.... படத்தை பார் "கம்"முணு !!)
ஒரு உதாரணம் - எதற்கு ரஜினியின் மனைவி பாத்திரம் முதல் scene -ல் வெளியூரிலிருந்து பஞ்சம் பிழைக்க அவள் அம்மாவோடு வருவதாக காட்ட வேண்டும். ரஜினியின் அடுத்த வீடாக இருந்து விட்டால் என்ன குறைந்து போய் விடும்...?? என்ற ஒரு கேள்வி என் மூளையை அவ்வவப்போது உறுத்த .... climax க்கு கொஞ்சம் முன்னர் அவள் வாயாலேயே தெளிவு படுத்தப்பட்டது. (புரிஞ்சுதா.... climax - ஆவது கம்முனு பார்.....!!)

உன்னதமான படம். 
மகேந்திரனை இன்று கொண்டாடும் கூட்டத்தில் சேர்ந்துகொள்ள எனக்கும் கொஞ்சம் பாத்தியதை ஏற்பட்டு விட்டது. 

சரி பதிவின் இறுதி பகுதிக்கு  வந்து விட்டோம்....

இந்த பதிவின் நோக்கம் - (ஏற்கனவே சொல்லப்பட்டு விட்ட) என் துக்கம் பற்றியோ - படம் பார்த்த பரவசத்தை பகிர்வதில் எனக்கு எப்போதும் இருக்கும் ஆர்வத்தை பற்றி அல்ல...அதையும் தாண்டிய ஒரு மனித நேயம் என்று வைத்து கொள்ளுங்களேன்....
"இதனை இதனால் " என்று மிகவும் தீர்மானமாக ஒலிக்கும் ஒரு திருக்குறள் உங்களுக்கு தெரியும் தானே. ? இந்த அற்புதமான குறள்  வள்ளுவர் பெருந்தகை கால தேவனுக்கு இட்ட ஒரு கட்டளையாகவே (குரல் ?) எனக்கு ஒலிக்கிறது.
ஆம்...  நாம் தேர்வு செய்யும் விஷயங்கள் மட்டும் அல்ல... நம் மீது வந்து படரும் விஷயங்கள் கூட ....அவை நடக்கும் நேரம், காலம், சூழ்நிலை எல்லாம் ... ஆம்... எல்லாமே..... ஏதோ ஒரு அவ்யக்தமான சக்தி (unmanifested) தன்னை சிந்தும் தன்மையாக எனக்கு படுகிறது. (பட்டறிவு ? ஞானம் ? ஏதோ ஒன்று...புரிந்தால் சரி...வார்த்தைகளில் என்ன இருக்கிறது சொல்லுங்கள் ?)
ஏதோ ஒரு கணத்தில், அந்த அவ்யக்தமான சங்கதியிலிருந்து மிகச்சிறிய துணுக்கு பேரருளோடு நம் மீது தெளிக்கப்படும் பொழுது நாம் நெகிழ்கிறோம்.... நன்றி கூறுகிறோம்...மீண்டும் கிடைக்க ஏங்குகிறோம். 
ஒருவருக்கு மீண்டும் மீண்டு-மீண்டும் நமக்கு இந்த நெகிழ்வு ஏற்படுவது ,  பலருக்கு அவ்வப்போது ஏற்படுவது, சிலருக்கு அவர் வாழ்நாளில் ஓரிரு முறை மட்டுமே ஏற்படுவது (அவர்களில் சிலருக்கு அதுவே வாழ்வை நிறைவு செய்து கொள்ள போதுமானதாக இருப்பது கூட), தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களை விடுங்கள்...  சொற்பமான இவர்களை தாண்டி  - கோடி கோடியாய்... பெருந்திரளாய் வெகுஜனங்கள் !!!! இவர்களுக்கு மகிழ்வுக்கும் நெகிழ்வுக்கும் வித்தியாசம் கூட புரியாமல் மொத்த வாழ்க்கையும் கழிவது....ஆம் எல்லாமே... அவ்யக்தம் தான்....!!

அன்புடன்.....

சுரேந்திரன்










Thursday, January 26, 2017

**** Shuba (maru?)Jananam *****

After many periods of lull @ my Blogging spree & observing my pattern of "come backs" -  I can distinctly see that this blog is going to get into another round of regular posts.

While I am keen not to get lost in any particular thing at this point of time...trying my level best to wear the "Jack" hat proudly (ignorantly.....er er blissfully) , I am also seeing the need for this series of posts -at this point of time - which gets nicely fitted into my overall scheme of vision on keeping myself "busier".

Is it bit confusing...? I am not...!! You will catch my point if you follow me for a while.

On the title justification - in particular to the prefix "re", it was not just to mean literally about this resurrection of some activity @ blog but then figuratively understanding the importance of this birth and this life and this world around us.

By labelling THIS wonderful birth as "one more", there is a real danger that we may get casual too but then, when we realize that this particular reminder has the capability to demolish all our past misses and compensate all the sundry indulgence in previous births, then, this prefix gains the clarity that it deserves.....

Who knows,...this could be the last one in our kitty too..!! Sounds fascinating, isn't it ?

Love // Suren






Sunday, January 8, 2017

**** On Resolutions & Goals ******

Dear All

Writing this exactly after 1 week of another Grand New year - not because I forgot / missed it out.

On the contrary it is quite a meager time that I took to ponder over / pool all my thoughts in this post. Just to voice out on my credentials about this topic, I was - quite sincerely - ruminating about writing a book (rather "booklet") on goal setting process & self help tools until two years back.
(Then what happened ? Just that I realized that a book is not really warranted for those deserving it)

In the context of a New Year Resolutions, i should sheepishly admit that I have hands on experiences on Birth Day resolutions and New Moon Day goals too - not just taking, but seeing thru' them, floundering at various stages and tasted an array of emotions in these games.

Now, this process of taking help of such tools -  goals, affirmations and resolutions definitely help one who is all earnest about it - I have no second thoughts about it. 
But then, since Darwin is omnipresent and ever-living, one reaches an impasse rather a stagnation after a while. 
This "inert" stage eventually pushes us towards the ability of "internalizing" and living what we want to be with a "shortest possible lead time" if not immediately. (considering destiny factor - to elobrate - "desa kaala parichinnangaL"). 
But then let me confess that I did not get into this next stage of evolution quite naturally. There was period of close to a year where I felt stagnated, suffocated and confused after I painfully realized that I got immune to goals.
Since I sincerely believe I am yet to get enlightened even now, I am convinced that I can't be a loner..and hence this post.
Any one who is earnest is pursuing  - any thing for that matter whatsoever - manages to find a way to transcend his way !
The beauty is that this transcendence works out more as an art and not rigid like a rocket science (er.... er.... Rocket experts may want to object to this statement but then, lets not digress from the topic)

When I read a nice article in last week's SPEAKING TREE news paper with an interesting title "Instead of New Year Resoultions", I keenly read thru the 12 points listed out and smiled within myself. My Favourite Writer of current times - Jayamohan had written a wonderful article in his blog about this transformation that he had underwent - http://www.jeyamohan.in/94112#.WHHM0noi7rQ

Just pasting the post script that he had written after his quite a long (usual size for him) essay to know what he means & I mean....

எழுதி முடித்ததும் எனக்கே சந்தோஷமாக ஆகி  என்னை நானே பாராட்டிக்கொள்ளும்பொருட்டு கீழே போய்  பாசிப்பருப்புப் பாயசம் செய்து மொத்தத்தையும் நானே குடித்துமுடித்தேன். வீட்டில் யாருமில்லை

Yes.... When we reach a point the gap -  between what we aspire & we are - starts diminishing, When we stop doing things that we suffocate about and When we find no time for taking newer goals, that is exactly the stage what I mean by "transcending" goals.

Connecting now to the first line of this musings...and on why I needed 1 full week to write this post is simply because of two equally important reasons -
(1) I have too much to think about the wondeful year that went by and the exciting things that happened, is happening and few ripples of thoughts on future too.....;
(2) I just had no time until today

If some one is wondering how the composite sentence in the (1) above can be equal or equivalent to (2) - YES, my friends, that's how it is.... that's all it takes..... that's how it feels ("பாயசம்") when the goal settling process internalizes with one's self.
Its actually a simple aspect but definitely not an easy one - at least in my case.

With Love // Suren