அன்புடையீர்.....
சொல்ல கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கிறது.
1978 ல் - நான் ஐந்து வயது பாலகனாக குரோம்பேட்டை வீதிகளில் துரு துரு - வென்று - அப்படி தான் கேள்வி ... - திரிந்து கொண்டிருந்த போது வெளிவந்த ஒரு படம்.. ...
மகேந்திரன் என்று தமிழ் திரையுலகின் பீஷ்மர்களில் ஒருவர் நமக்கு அளித்த ஒரு பெருங்கொடை .."முள்ளும் மலரும்" - போன வாரம் என் வீட்டில் - தன்னந்தனியாக கண் கலங்க பார்த்து கொண்டு இருந்தேன் (மதலையாய் நம் தாயாரின் மடியில் படுத்துக்கொண்டு நாம் பார்த்த படங்கள் எல்லாம் கணக்கில் சேராது அல்லவா...?)
அன்புடன்.....
சுரேந்திரன்
சொல்ல கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கிறது.
1978 ல் - நான் ஐந்து வயது பாலகனாக குரோம்பேட்டை வீதிகளில் துரு துரு - வென்று - அப்படி தான் கேள்வி ... - திரிந்து கொண்டிருந்த போது வெளிவந்த ஒரு படம்.. ...
மகேந்திரன் என்று தமிழ் திரையுலகின் பீஷ்மர்களில் ஒருவர் நமக்கு அளித்த ஒரு பெருங்கொடை .."முள்ளும் மலரும்" - போன வாரம் என் வீட்டில் - தன்னந்தனியாக கண் கலங்க பார்த்து கொண்டு இருந்தேன் (மதலையாய் நம் தாயாரின் மடியில் படுத்துக்கொண்டு நாம் பார்த்த படங்கள் எல்லாம் கணக்கில் சேராது அல்லவா...?)
என் தலையும் (மீசையும் கூட) கொஞ்சம் நரைக்க ஆரம்பித்து விட்டது.... என் மகளுக்கு இன்று 15 வயது ஆகிவிட்டது என்பதெல்லாம் கூட பெரிய விஷயமில்லை.இந்த படத்தின் cd ஐ நான் இரவல் வாங்கி கிட்டத்தட்ட 100 நாட்கள் ஆகி விட்டது என்பது தான் எனக்கு துக்கம் துக்கமாய் பொங்குகிறது.
இந்த பதிவு இந்த படத்தின் அருமை பெருமைகள் பற்றி அல்ல. எப்படியெல்லாம், அல்ப காரணங்களுக்கெல்லாம் (சில சமயங்களில் காரணமே இல்லாமல் கூட !) நமக்கு வந்து ஆகவேண்டிய பட்டறிவு - ஞானம் என்பது படாத அறிவு என்பது புரிய ஆரம்பித்து விட்டதால் ரொம்ப conscious ஆக தேர்ந்தெடுக்கிறேன் பாருங்கள் - வார்த்தைகள் அம்புக்கு நிகரானவை என்பது என் இன்னொரு சமீப பட்டறிவு) எப்படி தள்ளிப்போய் விடுகிறது பாருங்கள் ...
படத்தை பற்றி வெகு சில வார்த்தைகள்....
வெகு கவித்துவமான பெயர். ரஜினியும் ஷோபாவையும் குறித்தோ என்று தோன்ற ஆரம்பிப்பதற்குள் ரஜினியின் அகமே.....ஏன் நம் எல்லோரின் அகமே அது தானே என்று மீண்டும் ஒரு.....ஆம்.... பட்டறிவு :-)
முக்கியமான 4 கதா பாத்திரங்களும் நிறைவாய் செய்து இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு சீன்-ம் வசனமும் வெகுவாய் யோசிக்கப்பட்டு பின் நடக்கப்போவதற்கு பின்புலமாக (backdrop / background ?) , ஒவ்வொரு வசனமும் செறிவாய் ... ஒவ்வொரு பாட்டும் இரத்தின கம்பளமாய்... ரஜினியின் கை அகற்றப்பட்டு அவர் ஊருக்கு வரும் சீன் - ல் இளையராஜாவின் அந்த 2 நிமிட recording ".... அடடா !!!
பல கவித்துமான காட்சிகள். - எப்பிடி எப்பிடி ?" என்று ஷோபா தன அண்ணனிடம் கொஞ்சலாக அவன் கோபம் தணிக்க சொல்லும் அந்தத் தருணம் அந்த தேவதையை நமஸ்கரிக்க தோன்றுகிறது. (எங்கோ வானத்தில் நிச்சயம் நட்சத்திரமாய் தான் இப்போது இருப்பார் என்று தான் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்)
திரைக்கதையில் எனக்கு ஏற்பட்ட சில அற்ப சந்தேகங்கள் எல்லாம் "பகலவனை கண்ட பனி போல" அடுத்தடுத்த scene வந்ததும் விலகியது ஒரு வகையில் எனக்கு படிப்பினையாக இருந்தது.... (அவசரப்படாதேடா.... படத்தை பார் "கம்"முணு !!).
ஒரு உதாரணம் - எதற்கு ரஜினியின் மனைவி பாத்திரம் முதல் scene -ல் வெளியூரிலிருந்து பஞ்சம் பிழைக்க அவள் அம்மாவோடு வருவதாக காட்ட வேண்டும். ரஜினியின் அடுத்த வீடாக இருந்து விட்டால் என்ன குறைந்து போய் விடும்...?? என்ற ஒரு கேள்வி என் மூளையை அவ்வவப்போது உறுத்த .... climax க்கு கொஞ்சம் முன்னர் அவள் வாயாலேயே தெளிவு படுத்தப்பட்டது. (புரிஞ்சுதா.... climax - ஆவது கம்முனு பார்.....!!)
உன்னதமான படம்.
மகேந்திரனை இன்று கொண்டாடும் கூட்டத்தில் சேர்ந்துகொள்ள எனக்கும் கொஞ்சம் பாத்தியதை ஏற்பட்டு விட்டது.
சரி பதிவின் இறுதி பகுதிக்கு வந்து விட்டோம்....
இந்த பதிவின் நோக்கம் - (ஏற்கனவே சொல்லப்பட்டு விட்ட) என் துக்கம் பற்றியோ - படம் பார்த்த பரவசத்தை பகிர்வதில் எனக்கு எப்போதும் இருக்கும் ஆர்வத்தை பற்றி அல்ல...அதையும் தாண்டிய ஒரு மனித நேயம் என்று வைத்து கொள்ளுங்களேன்....
"இதனை இதனால் " என்று மிகவும் தீர்மானமாக ஒலிக்கும் ஒரு திருக்குறள் உங்களுக்கு தெரியும் தானே. ? இந்த அற்புதமான குறள் வள்ளுவர் பெருந்தகை கால தேவனுக்கு இட்ட ஒரு கட்டளையாகவே (குரல் ?) எனக்கு ஒலிக்கிறது.
ஆம்... நாம் தேர்வு செய்யும் விஷயங்கள் மட்டும் அல்ல... நம் மீது வந்து படரும் விஷயங்கள் கூட ....அவை நடக்கும் நேரம், காலம், சூழ்நிலை எல்லாம் ... ஆம்... எல்லாமே..... ஏதோ ஒரு அவ்யக்தமான சக்தி (unmanifested) தன்னை சிந்தும் தன்மையாக எனக்கு படுகிறது. (பட்டறிவு ? ஞானம் ? ஏதோ ஒன்று...புரிந்தால் சரி...வார்த்தைகளில் என்ன இருக்கிறது சொல்லுங்கள் ?)
ஏதோ ஒரு கணத்தில், அந்த அவ்யக்தமான சங்கதியிலிருந்து மிகச்சிறிய துணுக்கு பேரருளோடு நம் மீது தெளிக்கப்படும் பொழுது நாம் நெகிழ்கிறோம்.... நன்றி கூறுகிறோம்...மீண்டும் கிடைக்க ஏங்குகிறோம்.
ஒருவருக்கு மீண்டும் மீண்டு-மீண்டும் நமக்கு இந்த நெகிழ்வு ஏற்படுவது , பலருக்கு அவ்வப்போது ஏற்படுவது, சிலருக்கு அவர் வாழ்நாளில் ஓரிரு முறை மட்டுமே ஏற்படுவது (அவர்களில் சிலருக்கு அதுவே வாழ்வை நிறைவு செய்து கொள்ள போதுமானதாக இருப்பது கூட), தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களை விடுங்கள்... சொற்பமான இவர்களை தாண்டி - கோடி கோடியாய்... பெருந்திரளாய் வெகுஜனங்கள் !!!! இவர்களுக்கு மகிழ்வுக்கும் நெகிழ்வுக்கும் வித்தியாசம் கூட புரியாமல் மொத்த வாழ்க்கையும் கழிவது....ஆம் எல்லாமே... அவ்யக்தம் தான்....!!
அன்புடன்.....
சுரேந்திரன்
No comments:
Post a Comment