அன்புடையீர்
சுரேந்திரன்
நேற்று குருவாரம் - மயிலை சாயி சமாஜம் வரை சென்று அப்படியே நான் ரொம்ப நாளாக குறிவைத்து இருந்த சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் "இராயர் கபே " என்ற அந்த புராதானமான உணவகத்திற்கு சென்று வந்தேன்.
ஒரு உணவு விடுதிக்கு "குறி" வைத்து செல்வாருண்டா ? என்ற கேள்வி கொஞ்சம் personal ஆக மாறுவதால், எதற்கு நான் "குறி" வைத்து செல்ல வேண்டும் என்பதை சுருக்கமாக சொல்கிறேனே .... சாப்பிட்டது என்னவோ சிற்றுண்டி தான்.... :-) அதனால் விளக்கமும் சிறிசாக இருப்பது தான் சரி !
20 வருடங்களுக்கு முன் இந்த hotel பற்றி ஏதோ வார இதழில் படித்த ஞாபகம். இந்த காலத்தில் தன் பாரம்பர்யத்தையம், தரத்தையும் மூச்சு போல் பாவிக்கும் வியாபாரிகள் (ஆம்... hotel என்பது service என்று சொல்லப்பட்டாலும் அடிப்படையில் இது வியாபாரம் தானே ?) இருப்பது கொஞ்சம் மதிக்கப்படவேண்டிய விஷயமாக எனக்கு பட்டது. முக்கியமாக இந்த ஹோட்டல் துறையில் - தரத்தை அதிக விலை வைக்காமல் தொடர்ச்சியாக ஒரு உறுதியுடன் தர விழைவது என்னை பொறுத்த வரையில் கொஞ்சம் நெகிழ வைக்கும் விஷயம்.
கிட்டத்த 2 வருடம் முன்னர், அப்புறம் சமீப காலத்தில் ஒரு முறை என்று இரண்டு தடவை - ரொம்ப சரியாக சாயங்காலம் 7 மணி அளவில் போய் - அந்த "சின்னஞ்சிறு" பெயர் பலகை கூட இல்லாத (இவர்களுக்கு தேவையா என்ன ?) அந்த ஹோட்டலை அடைந்து - அவர்கள் மூடி விட்டதால் , திரும்பி வர வேண்டியது ஆகி விட்டது.
விதி வலியது......அதை என் மதியால் இம்முறை காலை நேரத்தில் சென்று வென்ற கதை இந்த பதிவு....
புதன் கிழமை என் office வேலையில் கொஞ்சம் அதிகம் சிக்கிப்போய், அதிகாலை 4 மணி அளவில் படுக்க போக (night shift பாருங்கள் ! ) , படுத்த பிறகு தூக்கம் கொஞ்சம் கூட வராமல் ..சட்டென்று இந்த முடிவு எடுத்தேன்.
சுமார் 5 30 க்கு எழுந்து, என் கண் எரிச்சலையும் அயர்வையும் ஒரு நல்ல ஸ்நானத்தின் துணை கொண்டு துறந்து... மயிலை சாயி சமாஜம் பாபா முன்னர் சரியாக 7 மணிக்கு நின்றிருந்தேன் - விழாயக்கிழமை ஆதாதால் - queue வில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள். அதனால் என்ன ? பரவாயில்லை. என் திட்டம் 8 மணிக்கு இராயர் ஹோட்டல் செல்வது....என் மனோரதம் ஈடேற்றப்படுவது...என்று என் சங்கல்பம்.
கோயிலில் தரப்பட்ட சூடான அற்புதமான வெண்பொங்கலை நன்றியுடன் தின்று முடித்து (என்ன யோசிக்கிறீர்கள்...? இது பிரசாதம். cinema வெளிப்படும் முன் trailer போன்று வயிற்றுக்கு ஒரு சின்ன ஆசுவாசம்) அங்கிருந்து 5 நிமிட தூரத்தில் இராயர் கபே. திறந்த ஹோட்டல் அமைப்பை (அல்லது அந்த சிறிய வீட்டை) இப்போது தான் பார்க்கிறேன்.
கோயிலில் தரப்பட்ட சூடான அற்புதமான வெண்பொங்கலை நன்றியுடன் தின்று முடித்து (என்ன யோசிக்கிறீர்கள்...? இது பிரசாதம். cinema வெளிப்படும் முன் trailer போன்று வயிற்றுக்கு ஒரு சின்ன ஆசுவாசம்) அங்கிருந்து 5 நிமிட தூரத்தில் இராயர் கபே. திறந்த ஹோட்டல் அமைப்பை (அல்லது அந்த சிறிய வீட்டை) இப்போது தான் பார்க்கிறேன்.
என்னையும் சேர்த்து வாசலில் கிட்டத்தட்ட 10 பேர் . ஒரு வட இந்தியர் குடும்பத்தோடு வந்தது பெரிய விசேஷஷமில்லை. ஒரு ஜப்பான் பெண் தனியாக இந்த ஹோட்டல் - க்கு அந்த அதி காலை வந்திருந்தாள் . regular வாடிக்கையாளர்கள் சிலர் அந்த பெண்ணை கிட்டத்தட்ட தன் வீட்டுக்கு வந்த விருந்தாளி போல பாவித்து விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். என்னை போல் புது முகங்களையும் புன்னகையால் பெரும்பாலானவர்கள் வருடியது - hotel உள்ளே போவதற்கு முன்னரே ரொம்ப நெருக்கமாக உணர்ந்தேன் . 20 நிமிட காத்திருப்புக்கு பின் - மேனேஜர் போல் ஒருவர் - எங்களை உள்ளே hall க்கு (அது ஒரு சின்ன ரூம் தான் ) எங்களை ... வரவேற்று உட்கார வைக்க பரபர வென்று இலை போடப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்பட்டு ... நாங்கள் வேட்டையாட தயாரானோம்.
எங்கள் இலையில் விழ வேண்டிய இட்டிலிகள் இன்னும் வெந்து கொண்டு இருக்க (அதுவும் எங்கள் கண் பார்வையில்...ஒரு இராட்சச பித்தளை அண்டாவில் பழைய முறைப்படி) அந்த மேனேஜர் மீண்டும் எங்களிடம் மென்மையான குரலில் " இன்னும் 10 நிமிஷம் " என்று அறிவித்தார். என் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் (regular customer) கூட அறிமுக உரையாடலில் நான் இருக்க - சில நிமிடங்களிலேயே...ஆவி பொங்கும் இட்லிக்கள் வந்து விட்டது.
அவரவர் தேவைக்கு ஏற்ப 3 / 4 / 5 என்று பரிமாறி கொண்டே வந்த சிறுவன் எனக்கும் - நான் கேட்ட 3 இட்லிக்களை வைத்து விட்டு......சற்று அவசரமாக நகர்ந்தான் போல...... இருக்கிறது. என் தண்ணீர் டம்ளர் அவன் முழங்கையில் பட்டுவிட்டது போல் இருக்கிறது - நீர் என் இலையில் மொத்தமாக என் இலையில் கொட்ட- நான் உண்டு கழிக்க வேண்டிய என் 3 இட்லிகள் மேல் . ஆறு போல் தேங்கி நின்றது. வெகு சில நொடிகளில் நான் இடுப்பில் கட்டி இருந்த வேட்டியும் நனைந்து இருக்கும் அபாயத்திலிருந்து - பாய்ந்து விலகி தப்பித்தேன் .
அவரவர் தேவைக்கு ஏற்ப 3 / 4 / 5 என்று பரிமாறி கொண்டே வந்த சிறுவன் எனக்கும் - நான் கேட்ட 3 இட்லிக்களை வைத்து விட்டு......சற்று அவசரமாக நகர்ந்தான் போல...... இருக்கிறது. என் தண்ணீர் டம்ளர் அவன் முழங்கையில் பட்டுவிட்டது போல் இருக்கிறது - நீர் என் இலையில் மொத்தமாக என் இலையில் கொட்ட- நான் உண்டு கழிக்க வேண்டிய என் 3 இட்லிகள் மேல் . ஆறு போல் தேங்கி நின்றது. வெகு சில நொடிகளில் நான் இடுப்பில் கட்டி இருந்த வேட்டியும் நனைந்து இருக்கும் அபாயத்திலிருந்து - பாய்ந்து விலகி தப்பித்தேன் .
பந்தி கவனித்த அந்த மேனேஜர் பதறி போய் "சாரி : என்று என்னிடம் சொல்லி - வேறு இலை ஒன்றை எனக்கு வைக்க, மீண்டும் பரிமாற, உத்தரவிட்டார். பிழை புரிந்த பையனும் முகம் வெளிறி என்னிடம் மன்னிப்பு கேட்க, பாபா வின் அருள் இன்னமும் என்மேல் சுரந்து ஓடிக்கொண்டு இருக்க நான் - "பரவாயில்ல தம்பி'" என்று ஆசுவாசம் செய்வதையும் அந்த மேனேஜர் மனிதர் கவனித்தார் .
அடுத்த இலை என் முன் இடப்பட, நான் அதில் தண்ணீர் தெளிப்பதற்குள் 3 இட்டிலிகள் மீண்டும் போடப்பட்டன. நான் திகைத்து பார்க்க, அந்த மேனேஜர் மனிதர் மீண்டும் பதட்டமாகி இந்த முறை நரசிம்மர் போல கர்ஜனை புரிந்தார். "என்ன அவசரம் உனக்கு...." எடுறா அந்த இலை யை - sir தண்ணீர் தெளிக்கறதுக்குள்ள ஏண்டா போட்ட ? ". இது வேறு பையன் பாவம் !
இவனும் வெலவெலத்து போய் என் இலை , புதிய இட்டிலிகளையும் பாய்ந்து எடுத்து உள்ளே போக - என்னை தவிர்த்த 15 பேர் சாப்பிட ஆரம்பிக்க, நான் நிராயுத பாணியாக அர்ஜுனன் போல செயலற்று "சும்மா" இருக்க நேரிட்டது. எனக்கான என் இலை இட்டிலிக்கள் 2 நிமிடங்களில் வந்து சேர்ந்தது. கெட்டி சட்டினி துணை சேர்க்க 4 இட்டிலிகளை பேரின்பமாய் உண்டு வெளியே வந்தேன்.
காபிக்கு வெளியே வந்து காத்து நிற்க வேண்டும் இந்த புண்ணிய ஸ்தலத்தில் (உள்ளே அடுத்த பந்தி ஆரம்பிப்பதை வசதிப்படுத்த...)
அந்த மேனேஜர் மனிதர் ரொம்ப இயற்கையாக வருவது போல் என் அருகே வந்து..."எல்லாம் நல்லா இருந்துதா சார் ? நீங்க கன்னடிகளா ?" என்று என் (கோபி சந்தன) திருச்சின்னத்தை பார்த்து கேட்க...நான் "தமிழ் தான் சார்..ரொம்ப பிரமாதமாய் இருந்துது சார்...நான் இனிமே உங்க ரெகுலர் customer " என்று சொல்லி ... "ஆனா ஒரு விஷயம் " என்று சொல்லி நிறுத்தினேன்.
கேள்வியோடு என்னை அவர் பார்க்க, அவருடன் சேர்ந்து ஒரு சில ரெகுலர் வாடிக்கையாளர்களும் இந்த புதியவனை புதிராகப்பார்க்க....நான் தெளிவாக புன்னகையோடு மேலும் சொன்னேன்....
"நான் நெக்ஸ்ட் தடவை வரப்ப எனக்கு நைவேத்தியம் மட்டும் போறும் சார்... அபிஷேகம், அலங்காரம் எல்லாம் அவசியம் இல்லை " என்று புன்னகையோடு முடிக்க - அவர் முகம் சிரிப்பால் நிறைந்தது. என் தோளை வாஞ்சையாய் ஒரு கணம் தொட்டுவிட்டு அடுத்த பந்தியை விசாரிக்க என்னிடமிருந்து விலகினார்.
புதிய அறிமுகங்கள் - நீண்ட நாள் தொடர்பாக மாற / மாற்ற இது போன்ற தற்செயல் நிகழ்ச்சிகள் நல்ல சகுனங்கள் தானே ?
அந்த 6 இட்லிகள் தான் பாவம்......தங்கள் ஜென்ம பலம் ஈடேறாமல் குப்பைக்கு நேரடியாக போய் விட்டது. விதியின் வலிமை தான் என்னே.......!!
சுரேந்திரன்
No comments:
Post a Comment