அன்புடையீர்....
கொஞ்சம் சிரமப்பட்டு நேரம் உருவாக்கிக்கொண்டு இந்த வாரம் - துண்டு துண்டாக ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன்.
கிட்டத்தட்ட நமது பண்டைய கலாச்சாரமான வர்ணாஸ்ரம தர்மத்தை நினைவூட்டும் ஒரு கதை. (ஆத்திக நண்பர்கள் உடனே ஆவலாக "அடடா வெள்ளைக்காரனுக்கு தான் நம்ம அருமை தெரிஞ்சுருக்கு " என்று புல்லரித்து போய் விட வேண்டாம் ). நினைவு படுத்தும் கதை என்று தான் சொன்னேன். நமது வழி (அதாவது பழைய வழி) முற்றிலும் வேறு.
தகுந்த வயது வந்ததும், ஒரு குறிப்பிட்ட சமூஹத்தில் ஒரு தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் எந்த விதமான தன்மை கொண்டவர்கள் என்று அரசாங்கமே பரிந்துரைக்கிறது. (கிட்டத்தட்ட, நமது உட்பிரிவுகள் தான்.....)
ஆனால்.....அந்த யுவ யுவதிகள் அந்த வகுப்பில் தான் சேர வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அது ஒரு பரிந்துரை மட்டுமே.தன்னிச்சையாக அடுத்த நாட்களில் நடக்கும் ஒரு விழா போன்ற நிகழ்ச்சியில் அவர்கள் தங்கள் முடிவை கரகோஷத்தின் நடுவே தெரிவித்து தன் வகுப்பினர் இருக்கும் இருக்கை வரிசையில் சென்று அமர்வார்கள். பின்னர் அவர்கள் தங்கள் வழியில் பயணிக்க வேண்டியது. ஏதாவது காரணங்களால் அவர்கள் தள்ளி வைக்கப் பட்டால், பிறகு அவர்கள் திரிசங்கு லோகத்தில் திரிவது போல், கொப்பு தவற விட்ட குரங்கு போல், வாழ்ந்து தொலைக்க வேண்டியதுதான்.
நமது கதாநாயகிக்கு தெளிவான ஒரு கருத்து அரசாங்க தேர்வில் கிட்டவில்லை.சில அரிய சந்தர்ப்பங்களில் இது போல நேரிடுமாம். அவளுக்கு அநேகமாக எல்லா விதமான குணாதிசயங்களும் இருந்ததால் இந்த குழப்பம். அவள் தன்னிச்சையாக "daungtless " அதாவது க்ஷத்ரிய வகுப்பில் சேர்ந்து விடுகிறாள். அவள் சவால்களும். அந்த பெண் மனத்தின் ஈரமும் வேகமும் விவேகமுமே....திரைக்கதை.
இன்னம் ஒரு முறை முழு படத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. எனக்கு இந்த படம் மேலும் புரிந்து இரசிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
ஆனாலும், முதல் தடவையிலேயே இது ஒரு சிறந்த படம் என்று தெளிவாக தெரிகிறது.
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய்.....இறைவா !! எங்கள் இறைவா !!"
Anna.. Cinemavai anubhaviyungO.... aaraaichi pannadheengo.
ReplyDelete-Gowri
(you need to remove the "Word" check feature when someone posts a comment to your blog.... it is becoming very painful to post comments)
----