Wednesday, October 8, 2014

****** வாதங்கள்.... விவாதங்கள் ***

முன் குறிப்பு ;- தமிழக அரசியல் களத்தில் இப்போது ஒரு முக்கியமான காலகட்டமாக ஆக்கிவிட்ட ஒரு அரசியல் தீர்ப்பு பற்றியும் அதன் வாத விவாதங்கள் பற்றியும் அல்ல  - இந்த பதிவு. எனக்கு  இன்னமும் நிறைய செய்ய செயல்கள் இருக்கிறது....
எந்த வகையிலும் எந்த வம்புகளிலும்  மாட்டிக்கொண்டு சொச்ச வாழ்க்கையை  பாழாக்கிக் கொள்ள எனக்கு  அவசியமோ துணிவோ இல்லை.....

அன்புடையீர் 

எல்லோரும் ஒருமித்து ஒரு விஷயத்தைப் பற்றி , அதன் பரிமாணங்கள் பற்றி பேசுவதை சம்பாஷணை (discussion) என்று சொல்லலாமா  ?
 மிகப்பலருக்கு இது தான் பிடிக்கும். 
முக்கியமாக தனக்கென்று ஒரு கருத்தே இல்லாதவர்களுக்கு ஒரு கூட்டத்தோடு இருக்கும் சுகம் அளிக்கும் வண்ணம் - அதே நேரம், தலையை ஆட்டுவதின் மூலம்  ஒரு "பங்களிப்பு" அளித்ததாக திருப்தி தரும் வகையில் அமைந்து இருப்பதால்....; 
நான் சொல்வது உங்களுக்கு ஒப்பாக இருக்கிறதா ? அப்படியென்றால் இது ஒரு discussion தான்.....!! சரி தானே.....? (இப்போது நிச்சயமாக புரிந்து இருக்கும்)

இப்போது அடுத்த வார்த்தைக்கு போவோம். 
ஒரு விஷயத்தின் எதிர்மறை கருத்துக்களை ஒரு விவாதமாக - கோபமோ கொந்தளிப்போ சிறிதும் இல்லாமல் - மனிதர்கள் பரிமாறிக்கொள்வது இயல்பே. 
பட்டிமன்றம் (debate ) போன்ற கட்டமைப்பு வாய்த்த விஷயமாக இருந்தாலும் சரி, பக்குவப்பட்ட மனங்கள் இணைந்து செய்யும் arguement என்ற விவாதங்கள் - பற்றியே , பலருக்கு பல கருத்துகள் உண்டு. 
ஆம்...சிலர் இதில் ஈடுபடுவதில் தவறில்லை என்று வாதிடலாம்....
ஆனால் பலர் வேண்டாமே என்று தயங்கலாம். 
(இதுவே ஒரு arguement அல்லது debate ஆகக்கூடிய ஒரு தலைப்பே.....!!

போன பத்தியில் - சிலர் தயக்கம் பற்றி பார்த்தோம். அவர்கள் பெரும்பாலும் சொல்வது ... இது போன்ற வாதங்கள் / விவாதங்கள்..... வீண் சண்டையில் (quarell / fight )கொண்டு போய் முடியலாம் என்பதால் தான்.  
எனவே.... விவாதம் தீவிரமான சண்டையில் முடிந்தாலும் பரவாயில்லை என்று கருதுபவர்களும் உண்டு..... 
சண்டை பரவாயில்லை, ஆனால் கைகலப்பு முற்றிப்போய் கொலைகளில் முடியாமல் இருந்தால் சரி என்று ஆசுவாசப்படுத்திக்கொள்பவர்களும் உண்டு!

ஆனால் ஒன்று..... எது நியாயம் என்று ஸ்தாபிக்க - கலியுகத்துக்கு முற்பட்ட த்வாபராயுகத்தில் ஒரு யுத்தமே நடந்தது (மகாபாரதம்). 
பரம்பொருளின்  பிரதிநிதியாக வாழ்ந்த, குறைந்த பட்சம் - கருதப்பட்ட ஒரு மனிதர் (ஸ்ரீ கிருஷ்ணர்) அதை நியாயப் படுத்தினார். 
(யதா யதா ஹி தர்மஸ்ய........). 

சரி......விஷயத்துக்கு வருவோம்....

எங்கள் வீடு ஹாலில் சுமார் இரு வாரங்கள்  நாள் முன்னர் -  5 /6 பேர் கூடிய ஒரு திருநாளில் ஒரு தர்க்கம் நடந்தது. 
ஜோசியம் பற்றி ஆரம்பித்த அந்த உரையாடல் ஒரு மெல்லிய விவாதமாக உருப்பெற்று பின்னர் ஒரு தீவிரமான விவாதமாகவே மாறி விட்டது. 

ஜோசியர்கள் கெட்டது சொல்லிவிட்டால் என்ன செய்வது ...அதனால் ஜோசியமே வேண்டாம் என்பது ஒரு கட்சி. 
ஜோசியரை நம்புவதை விட அருள் வாக்கு சொல்பவர்கள்...அதாவது கடவுளின் அருளால் வாக்கு வன்மை பெற்று முக்கியமாக நம் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரிடம் செல்வது சிறப்பு என்று ஒரு கட்சி..... 
கடவுளிடம் நேரடியாக முறையிட்டால் அற்புதங்கள் விளையும்.. என்று மனமார்ந்து நம்பும் மூன்றாம் கட்சி. 
பரம்பொருள் ஒரு இருக்கிறது....எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்ற ப்ரஞ்ஞையோடு - நம் "மனத்தில்" பட்டதை செய்வதே சரி என்று நாலாம் கட்சி.....!! 
போதுமா ? 
என் கட்சி என்ன தெரியுமா ? என்னைப் போலவே சற்று குழப்பமானது......

என் கட்சி என்னவென்றால்.... விதி சர்வ வல்லமை படைத்தது. கடவுள் அகண்டம் மொத்தத்தையும் தானே பார்த்து கொள்வதில் உள்ள practical constraints இருப்பதால், ஜோசியத்தையும், god men மற்றும் பிரார்த்தனைகளையும்  படைத்தார். தேவையென்றால், தானே முன்னின்று சில காரியங்களை (கவனிக்க - இதற்கு முன் சொன்ன மூன்று விஷயங்களையும் தாண்டி )  தானே களத்தில் இறங்குவார்..... ("pulling up தி sleeves"). ஆனால் அது ரொம்ப அபூர்வம்..... சாதாரண மனிதர்கள் (அதாவது கடவுளிடம் முழு மனத்தோடு ஒன்றி தன பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும் என்ற துணிவு இல்லாதவர்கள்) ஜோசியர்களிடமோ God Men களிடமுமோ போய் நிற்பதில் எனக்கு தவறாக எதுவும் படவில்லை. ரொம்ப முக்கியம் - நமக்கு நாம் போகும் அந்த நபர் மேல் முழு நம்பிக்கை இருக்கவேண்டும்.... அவர் மூலம், கடவுள் , ஏன் அந்த விதி நம்மிடம் கட்டாயம் பேசும்.  

விவாதத்தின் முடிவில் நடந்தது என்ன... அவரவர்.....தங்கள் மனத்தில் இருக்கும் வாத நிலையை மேலும் மெருகேற்றிக்  கொண்டு, நம் கருத்தே சரி என்ற திருப்தியோடு  கலைந்து சென்றோம்.... !!!!


                                                       Suchoo & Madhoo  in Moonar @ 2007 (approx)


தத் ஸது..........

கிருஷ்ணார்ப்பணம்

விதேயன்  // suchoo 

No comments:

Post a Comment