Sunday, October 5, 2014

**** அம்மா அம்மா ******

முன் குறிப்பு : இந்த பதிவு தமிழகத்தில் "அம்மா" பற்றியது அல்ல. சமீபத்தில் வெளியான ஒரு தனுஷின் திரைப்பாடல் பற்றியது.

படியுங்கள்....

உங்களுக்கும் ஏதாவது சேதி வைத்து இருப்பேன் - கடைசியிலாவது.........!!

அன்புடையீர் 

"வேலையில்லா பட்டதாரி" என்ற கொஞ்சம் பழதாகி விட்ட அந்த தனுஷ் நடித்த entertainer படம் பார்த்து இருக்கிறீர்களா ? எனக்கு இது போன்ற "பார்க்க வேண்டும்" என்று நான் ஆசைப்படும் விஷயங்கள் கிடைக்கப்பெறுவது கொஞ்சம் நாள் கழித்து தான். 
என்னவோ என் தலை எழுத்து அப்படி.....என் கதையை விடுங்கள்....!!

இந்த படத்தின் முக்கியமாக இந்த பாடலின் கதைக்கு வருவோம். அதற்கு முன் பின் புலம்...... 
விகடனில் ஓரளவு நல்ல மார்க் வாங்கிய படம் என்று குறித்துக் கொண்டேன். (அந்த st john versus  ராமகிருஷ்ண மிஷன் பள்ளிகளின் comparison பற்றிய ஒரு வசனத்தையும் அது எழுப்பிய அதிர்வலையையும் கவனித்து இருந்தேன். இராமகிருஷ்ண மடத்தின் துறவி மிகவும் கண்டித்து இருந்ததாகவும் படித்த ஞாபகம். என்னவோ முதலில் கெட்ட  விஷயங்கள் தான் என் நினைவுக்கு வருகிறது. 
இதுவும் என் தலை எழுத்து தான்......என்ன செய்ய ?

இப்படி கொஞ்சம் (ஏன் நிறைய) negativity என்னுள் ஊறிக் கிடப்பதால் தானோ என்னவோ தனுஷ் அம்மா பாத்திரம் (சரண்யா ) இறக்கும் அந்த காட்சியில் உறைந்து போனேன். 
என் மகள் எனக்கு தகப்பன் சாமியாக மாறிவிட்ட கதையைப் பற்றி ஏற்கனவே இந்த அகண்டத்தில் பெருமையாக குறிப்பிட்டு இருக்கிறேன். அவள் சன்னமான குரலில் அந்த பாடலின் பல்லவியை பாடிக் கேட்ட பொழுதே என்னவோ என் மனத்தை பிசைந்தது. இந்த படத்தை பார்த்தே தீருவது என்று நேற்று அந்த படத்தை பார்த்தும் விட்டேன். 
படம் பற்றி ஒரு சம பாவம் தான் எனக்கு. OK ரகம் . 
தனுஷின் கண்ணில் இருக்கும் அந்த சீற்றம் (மாமனாரைப் போலவே !!) எனக்கு பிடிக்கும். கொஞ்சம் அபத்தமான வசனங்களையும் அடுத்த scene - க்கு  அச்சாரம் போடுவது போல் முதல் scene வருவதும் (முதிர்ச்சியின்மை......) சகித்து கொண்டு விட்டேன். பாடலுக்கு வந்து விடுவோம். 

ஓலம் என்பதற்கு lamenting என்ற ஆங்கில பதம் சரியாக வரும் என்று நினைக்கிறேன். பாடல் மென்மையான தனுஷ் குரலில் அழகான மெட்டமைப்பில் வந்தாலும் நான் அந்த ஐந்து நிமிடங்களும்  எனக்குள் ஒரு ஓலத்தை உணர வைத்தது. பாடலில் காட்சிகள் - முக்கியமாக தனுஷ் ஸ்தம்பித்து இருக்கும் பாடலின் முதல் காட்சி, அவர் கற்பனையில் - சிறிய வயது தனுஷ் பெரிய குளிர் கண்ணாடியோடு பெருமையாக வீறு நடை போட்டு வர, பெருமை பொங்கும் சின்ன வயது மேக் up - ல் சரண்யா -  நிஜமாகவே ரொம்ப அழகாக- அவரை திரும்பி குனிந்து நடந்து வரும் காட்சி.....
எதைச் சொல்ல எதை விட.....!!

அடுத்த வாரத்தில் மீண்டும் சிக்கி நமது மனத்தின் பிடித்தங்கள் எல்லாம் தொலைத்து நைந்து மீண்டும் அடுத்த வாரக் கடைசி பற்றி ஏங்கும் முன்....இதோ இந்த பதிவு - படம் பார்த்த அடுத்த நாளே....
இது என் இரசனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மட்டும் அல்ல..... நண்பர்களே !!

கலை வடிவத்தின் எல்லை என்ன  ? கொஞ்சம் யோசித்து பாருங்கள்......!

இல்லாத ஒரு சாத்தியத்தை நமக்கு தரிசிக்க வைக்கும் ஒரு முயற்சி தானே ? இந்த பாடலை அமைதியான சூழ்நிலையில் (படம் கூட தேவை இல்லை ) நல்ல சவுண்ட் சிஸ்டம் மற்றும் தெளிவான படத்தில் பார்க்கும் மனிதர்கள் - உயிரோடு இருக்கும் அவர்களது அம்மாவையும் "அந்த தவிர்க்க முடியாத" வருங்கால தருணத்தையும் உணருவார்கள்.....!! 
ஏற்கனவே அதைப் பார்த்து முடித்தவர்கள் மறு தரிசனம் செய்வார்கள்.

போதும்....இந்த பதிவை மேலும் எதுவும் எழுதி மாசு படுத்தி விட எனக்கு மனசில்லை.....

அம்மா..... அம்மாஆ......!!!!!

கொஞ்சம் நிஜத்தை தரிசித்தவனுமான 

சுச்சு / சுரேந்திரன் 








No comments:

Post a Comment