Wednesday, December 31, 2014

த்ரிஷ்யம் - PART 3

அன்புடையீர் 

கடந்த ஐந்து நாட்கள் நான் ஊரில் இல்லை. அதாவது ஊருக்கு போயிருந்தேன்....ம் ... ம் .... அதாவது.....பார்த்தீர்களா ? நம் வசதிக்காக நாம் உருவாக்கிய பாஷை நமக்கே வில்லங்கமாய் எப்படி ஆகி விடுகிறது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்......!! 
(எனக்கு இந்த silly பிரயோக தவற்றை பற்றி எதுவும் விளக்க முற்பட வேண்டாம். இது சும்மா தான்.....ஒரு கடலை !! இல்லை .... ஒரு starter என்று வைத்து கொள்ளுங்களேன்.....)

கடவுளின் செல்ல நாடான கேரளத்தில் ("God 's own country" ) வயநாடு district பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.  அங்கே ஒரு 4 நாட்கள்....அதாவது 4 பகல்கள்....போக வர 1 முழு நாள் - அதாவது 24 மணி நேரம்......
கணக்கு சரியாகி விட்டதா....?

இன்னொரு நண்ப-குடும்பமும், அவர்கள் வீட்டு புது SUV (Maruti Ertiga ) எங்களை வா வா என்று அழைக்க.... அதுவும் அந்த குடும்ப நண்பர் வீட்டு தலைவர், car ஓட்டுவதில் மாறாத இச்சை கொண்டவர் என்பதால் எனக்கு ஒரு பரிமாணத்தில் டிரைவர் ஆக (சரி கிருஷ்ண பரமாத்மா என்று வைத்து கொள்ளுங்கள்.....!! யாருக்கும் உண்மை நேரடியாக பிடிப்பதில்லை !!) உவந்து கரம் நீட்ட....கரும்பு தின்ன கூலி தருவது போல..........கிளம்பி விட்டோம்.


ரம்மியமான பகல் பொழுதுகள் - இள வெயிலும் தண்தென்றலுமாக;   ஊர் சுற்றி பார்த்து விட்டு room வந்த பிறகு சீட்டாடத்தில் நள்ளிரவு வரை நீளும் பகல்கள்; அற்புதமான உணவு ( புட்டு கடலை கறி சிற்றுண்டியும், நேந்திரம் பழம்-பொரியும் தான் கடவுளின் செல்ல குழந்தையாக கேரளம் இருக்க காரணம் என்ற சந்தேகம் எனக்கு சிறிய வயதிலிருந்தே உண்டு......!!);  புது வண்டியின் சொகுசான பயணம்; எல்லாவற்றையும் விட முக்கியமாக - நுரையீரல் முழுதும் நிரம்பி தளும்பும் உயிர் காற்று (oxygen) !!
மானுட வாழ்வு உய்யுற இது போதாதா சொல்லுங்கள் ?

இப்போது தான் ஆரம்பித்த  இந்த வருடம் வெகு வேகமாக ஓடி விட்டது போல தோன்றுகிறது. இது போன்ற மங்களாமான முடிவிருந்தால், ஒவ்வொரு வருடமும் வரப்ரசாதம் தான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. 

நான் எழுதிய பழைய கவிதை ஒன்றை கீழே  தருகிறேன்.
Its quiet relevant - you will see it yourself  !! 

முதன் முதலில் நான் Mylapore to Chennai  Beach வரை MRTS train - ல் பயணம் செய்த போது (2007 December என்று நினைவு) மனதிற்குள் train பயணம் பொழுதே எழுதிவிட்ட ஒரு கவிதை......

இது போல சுற்றுலா உற்சாகங்கள் முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும் ?   



சரி, இந்த மிழற்றலுக்கு (musings ) எதற்கடா "த்ரிஷ்யம்" என்று பெயர் சூட்டினாய் பாதகா என்று கர்ஜிக்க தோன்றுகிறதா ? 

Part 2 மற்றும் அதற்கு முந்திய பதிவுகளை market செய்ய முயற்சியா என்று இகழ்ச்சியாக புன்னகைக்கும் பெருந்தகைகளுக்கு ஒன்றை தெளிவாக சொல்லி விடுகிறேன்.....

"கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்று வள்ளலார் வருந்திய மன நிலையில் நான் நிச்சயம் நான் இல்லை.....!! அவர் ஞானியாக இருந்தாலும் - நான் பெரும் பாமரனாக இருந்த போதிலும் இதை வெகு நிச்சயம் சொல்லுவேன்.....

நான் எழுதுவது என் சுகம் ...என் சந்துஷ்டிக்காக. 

வயலுக்கு பாயும் நீர், போகும் வழியில் - இஞ்சிக்கும் எலுமிச்சைக்கும் தாகம் தவிர்த்து ஆசுவாசம் ஏற்படுத்துவது ஒரு பக்க விளைவு  தானே.....?
பிறர் என் AGANDAM படிப்பது என்னை பொறுத்த வரை அது போலத்தான்...!!

சரி....பெயர் காரணத்துக்கு (த்ரிஷ்யம்) வருவோம்.... வேறு ஒன்றுமில்லை. நண்பர் குடும்பத்தோடு, ஹோட்டல் அறையில் PEN DRIVE துணையோடு - மூன்றாம் முறை அந்த படத்தை பார்த்து விட்டேன். அவ்வளவு தான்  விஷயம்....!! இன்னமும் பார்ப்பேன்....ஆனால் , அகண்டம் - வரை என் படக்கணக்கு வராது என்று அறுதியிட்டு சொல்கிறேன். 

எழுத எனக்கு இன்னமும் பல விஷயங்களும் த்ரிஷ்யங்களும் இருக்கிறது. சரி தானே....!!

ப்ரியங்களுடன்

சுச்சு என்று அறியப்படும் சுரேந்திரன்










No comments:

Post a Comment