Tuesday, December 9, 2014

***** "இருவர் (1997)**** - ஒரு மறு பார்வை

அன்புடையீர்




இன்று காலை என்னை மிகவும் பாதித்து இருந்த மோகன் லால் நடிப்பில் (திருஷ்யம்) ரொம்பவே ஆடித்தான் போயிருக்கிறேன் போலும் !!

பழையதாகி விட்ட, ஆனால் என் மனத்தில் மோகன் லாலின் visual effects படிந்து இருக்கும் "இருவர்" படத்தின்  சில காட்சிகள்  என்னை மீண்டும் அந்த படத்தை பார்க்க தூண்டின.
பிரகாஷ் ராஜ் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து அரசியல் ஆரம்ப காலத்தில் சொற்ப ரசிகர்கள் சேர்ந்திருக்கும் ஒரு கும்பலுக்கு தயக்கத்துடன் கையை ஆட்டும் காட்சி , பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் - கையை இயல்பாக ஆட்டியவாறே காரிலிருந்து வெளியே வரும் சில காட்சிகள்....., ஒரு திருமணத்தில் சந்திக்கும் பொழுது ரொம்ப இயல்பாக பிரகாஷ் ராஜ் கைகளை வாஞ்சையாக பற்றும் அந்த climax க்கு முதல் காட்சி......இன்னமும் எவ்வளவோ.....!!

ஆனாலும் இந்த 17 வருட காலத்தில் என் இரசனைகளும் சற்று உருமாறியிருப்பதாலும், வேறு பல "நல்ல" படங்களை பார்த்து விட்டதாலும்..... கொஞ்சம் எழுத வேண்டித்தான் இருக்கிறது.

முதற்கண், பிரமிக்கத்தக்க தலைவர்களாக இந்த  "இருவரை"  என் மனம் ஏற்க மறுக்கிறது. செம்மறி ஆடுகள் மிகப்பல இருப்பதால்  "மே மே" என்று நானும் சமரசம் செய்து கொள்வதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. அந்த காலத்தில் சினிமாவில் ஒரு பெரும் உயரத்தில்  இருந்தவர்,தமிழர்களுக்கு உலகத் தரத்தில் நுட்பங்களை பரிவுடன் அளித்த அந்த இயக்குனர், இந்த கதையோட்டத்தில் பிரமித்து போயிருந்திருக்கிறார் என்பது எனக்கு இப்போது வியப்பாக இருக்கிறது. கொள்கைகள் நீர்த்து போய் அரசியல் ரீதியாகவும் சரி, சொந்த வாழ்க்கையிலும் ("ஒருவனுக்கு ஒருத்தி") நெறி தவறி போன அந்த "இருவர்".......கதைகளின் நாயகர்களாக்கி, ஒரு சாதாரணத்தை உயர்த்திக் காட்ட விழைந்ததில் ஒருவேளை எதாவது உட்காரணங்கள் இருக்கக் கூடும்....

எனக்கு ஏன் இந்த வீண் ஆராய்ச்சி.....? ஒரு தனி மனிதரின் சுதந்திரம் பற்றி பேச நான் மேலும் விரும்பவில்லை. 

ஒரு வகையில் நானும் செய்வது இதைத்தானே  ? 

சாதாரணத்துவத்தை கொடி பிடித்து தூக்கி மன நிறைவு காணும் என் மனப்போக்குக்கு     - கடைசி காட்சியில் நண்பனின் இறப்பிற்காக கவிதையாகவே புலம்பும் அந்த தமிழ்செல்வன் பாத்திரத்தில் என் நெஞ்சம் நெகிழ்வது என்னவோ நிஜம்.

நிஜத்தோடு வாழ்வோம் - நம்மால் முடிந்த அளவாவது......!

சுரேந்திரன் 



No comments:

Post a Comment