Sunday, December 14, 2014

த்ரிஷ்யம் - என் பார்வை

அன்புடைய நெஞ்சங்களுக்கு 

கடந்து போன  செவ்வாய் கிழமை, அதுதான்.... டிசம்பர் 9ஆம் தேதி.......ஞாபகம் வரவில்லையா உங்களுக்கு ? நீங்கள் கூட காலையில் எழுந்து காபியில் சர்க்கரை அதிகம் இருக்கிறது என்று குறைப்பட்டுக்கொண்டு  இன்னும் கொஞ்சம் decoction ஊற்றிக் கொண்டீர்களே...... மறந்து போய் விட்டதா ? சரி, சாயங்காலம் "வாணி ராணி " கூட ஒரு காட்சியைப் பற்றி சிலாகித்து வீட்டில் பேசிக்கொண்டு இருந்தீர்களே ?? இப்போது ஞாபகம் வந்து விட்டதா.... ? சபாஷ்......!! 

 குழம்பி  போய் விட்டீர்களா? "சும்மா" ஒரு த்ரிஷ்யம் (visual)  படைக்க எண்ணினேன்.....

அன்று (டிசம்பர் 9) நான் இந்த படத்தை பற்றி ஆங்கிலத்தில் ஒரு பதிவு செய்திருந்தேன். மீண்டும் இப்போது ஒரு முறை sub title உடன் மீண்டும் ஒரு முறை பார்த்த பிறகு.  ஒரு நல்ல திரைப்படத்திற்கு  என்னால் முடிந்த சேவை இந்த இரண்டாவது  பதிவு. 

அந்த ஆதி முதற்கடவுள் அண்டத்தையும் நாம் காணும் அனைத்து ஜீவ, அஜீவங்களை படைத்து விட்டு காலத்தை சாட்சியாக்கி -  நம்மையெல்லாம் அந்த மாயையில் சிக்குண்டு மீண்டும் மீண்டும் மாய்ந்து போவதை இரசிக்க எண்ணினானோ என்னவோ தெரியவில்லை. 

இந்த திரைப்படம் ஒரு சாமான்யன் -  தன்  அழகான குடும்பத்தின் அமைதியையும் சந்தோஷத்தையும் காக்க எண்ணி - ஒரே ஒரு நாளை "படைக்க" வேண்டிய கட்டாயம் நேர்வது பற்றி ..... .

.


ஒரு அற்புதமான முக்கியமாக சிக்கல் எதுவும் இல்லாத எளிமையான கதை, அதை படமாக்க ஒரு அற்புதமான திரைக்கதை, பாத்திரங்களின் இரசிக்கத்தக்க உரையாடல்கள், மென்மையான இசை,    பிரமிக்க வைக்கும் திரைக் கோர்வை (எடிட்டிங் ? எனக்கு திரைத்தொகுப்பு என்று சொல்ல மனம் வரவில்லை) மற்றும் நாயகன் முதல் - கடைக்கோடி நடிகர் வரை (பேருந்து நடத்துனர்கள்., ஏன் ? ஒரே காட்சியில் வருபவர்கள் கூட ) - தேர்ந்த நடிப்பு .... 

இது தான் த்ரிஷ்யம்.... !!

படத்தின் பெயர் காரணம் மிக தெளிவாக  அந்த DIG பெண்மணி   - அதுவும் நமக்கு நன்றாக தெரிந்த ஆங்கிலத்தில் (he created "that"  day )  என்று  விளக்கப்பட கீழே subtitle "he re -created" என்று flash ஆவது தலையில் அடித்துக் கொள்ள தோன்றுகிறது. ஆனால் என்ன செய்ய, கடைசி காட்சியில் அந்த பெண் அதிகாரிக்கும் அவர் கணவருக்கும் முன் நின்று மோகன் லால் மிக அழகாக ஏதோ சொல்லி, ஒரு தருணத்தில் கை கூப்பியவாறு கண் மூடியவாறு சொல்ல - நமக்கு இந்த sub title அத்தியாவசியம் ஆகி விடுகிறது. இந்த பேரண்டத்தில் எதை ஒதுக்க ? 
(இவ்வளவு நடந்தும் போலீஸ் அதிகாரிகளிடம் மோகன் லால் மிக பவ்யமாக "நீங்கள் தான் எங்களுக்கு காவலன்" என்று ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக சொல்லி படம் நிறையும் பொழுது எனக்கும் வந்த ஞானம் இது :-)

 நிறைய படிமங்கள் (layers ) உள்ளடக்கிய படம். 
mobile phone - ல் photo துணியில்லாமல் தான் எடுப்பார்கள் என்று பதைபதைக்கும் தாய், மோகன் லாலை காட்டும் முதல் காட்சியில் அவர் ஒரு car chasing ஆங்கில படத்தின் காட்சி சரியாக இயக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட, அவரிடம் வேலை பார்க்கும் பையன் ரொம்ப வினயத்துடன் "நீங்கள் ஏன் ஒரு படம் இயக்கக்கூடாது ?" என்று சொல்வதும், பின்னர் - வேறொரு காட்சியில் "போலீஸ் அதிகாரிகள் மீண்டும் வருவார்கள், தன்னை அடிக்கவும் வாய்ப்பு உண்டு என்று குடும்பத்தை தயார் செய்வதும் - எல்லாம் பட்ட பிறகு தன மனைவியிடம் தங்கள் கடைசி மகள் உண்மையை போலீஸ்-க்கு அவளும் அடி வாங்குவதற்கு முன்னரே சொல்லி இருக்கலாம் என்று மருகுவதும்....எல்லாவற்றுக்கும் உச்சமாக "அவசியம் இல்லாமல் எல்லாருக்கும் எல்லாம் தெரிய வேண்டியதில்லை" என்று உண்மையை தனக்குள் புதைத்து வைக்கும் அந்த தகப்பன் மனசு ......அற்புதம்.

நான் முக்கியமாக இந்த படத்தில் இரசித்தது sychronization !! முதல் காட்சியில் காட்டப்படும் புது போலீஸ் ஸ்டேஷன் கடைசி frame - ல்  காட்டப்படுவதும், climax  காட்சியில் media ஆதரவுக்காக கதையில் ஒரு அரசியல் வாதி மச்சினனை (அதுவும் ஆளும் கட்சி)  கதையில் கட்டமைப்பதும், theatre கட்டும் கனவு இருக்கும் கதாநாயகன், குடும்பத்தோடு படம் பார்க்க போன திரையரங்கில் projector ரூம் - நட்பு கொள்வதும்.... அப்பப்பா !!

நெகிழ வைக்கவும் (அந்த நேர்மையான போலீஸ் constable விசாரணையின் போது உண்மையை சொல்லுமாறு மருகுவதும், கதாயகனின் மாமனார் மிகவும் ஆதுரமாக பேசி தன் 1 1/2 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை மாப்பிளைக்கு எழுதித் தர இசைய வைப்பதும்)  நம்மை உற்சாகப்படுத்தவும்  (அந்த "பெண்குட்டி" (மன்னிக்கவும்) விசாரணையின் போது பிரியாணி தான் நாங்கள் எல்லாரும் சாப்பிட்டோம் என்று வீம்பாக சொல்வதும், பெரிய பெண் பள்ளிகூடத்திற்கு வந்த போலீஸ் ஐ சமாளிப்பதும்) ...... எண்ணற்ற காட்சிகள்.

சமீபத்தில் - 2 / 3 வருடங்களுக்குள் நான் இந்த அளவு இரசித்த இரண்டு ஹிந்தி படங்களுக்கும் (Kahaani , A Wednesday ) இந்த படத்திற்கும் ஒரு முக்கியமான இணைப்பு இருக்கிறது. சட்டத்துக்கு முன் செல்லுபடியாகாத தீவிர குற்றங்கள். கதையின் நாயகர்களின் negativity - க்குள் பொதிந்து இருக்கும் ஒரு நேர்மை மற்றும் முக்கியமாக "புத்திசாலித்தனம்" - எந்த மூன்று படங்களுக்கும் பொது என்று தோன்றுகிறது ..... 

நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் ? 
இன்னமும் நல்ல படங்கள் (I mean) இது போன்ற படங்கள் உண்டென்றா ? அவசியம் பகிருங்கள்......!! 

எனக்கு வைட்டமின் "சத் சங்கம் " தேவைப் படுகிறது....நிறைய்ய .....ரொம்ப நிறைய்ய .....

 பிறிதொரு நாள் சந்திப்போம்.....

சுரேந்திரன் 

No comments:

Post a Comment