அன்புடையீர்
நான் சமீபத்திய பதிவு ஒன்றில் தினசரி உடற்பயிற்சிகள் ஆரம்பித்து இருப்பது பற்றி பிரலாபித்து இருந்தேன். முக்கியமாக, வீட்டில் செய்யும் யோகா பயிற்சிகளை விடவும் பூங்காவில் சென்று நடபத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள சொல்லண்ணா ஆர்வம் பற்றியும் அது பற்றி மேலும் எழுதுவதாக சொல்லி இருந்தேன்.
முதலில் அது பற்றிய என் எண்ணத்தில் ஆங்கிலத்தில் தான் எழுத்து வடிவம் பெறுவதாக இருந்தது. (பெயர் "Talk the Walk"........!!! நன்றாக இருக்கிறதா ?).
இன்று திடீரென்று ஒரு எண்ணம்.......
தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி - சித்தன் போக்கு சிவன் போக்கு - என்பார்களே (நானும் ஒரு சித்தனின் - மன்னிக்க - பித்தனின் மன நிலை கொண்டவன் தானே ?) அது போல - மன நிலைக்கேற்ப மாறி மாறி எழுதலாம் என்று "தற்போதைய" (கவனிக்க.....) எண்ணம்.
மொழியை விட முக்கியம் எனக்கு என்னவென்றால் - இந்த எண்ணங்கள் ஒரு தொடராக விரியப்போவது.....
அங்கு நான் ரசிக்கும் விஷயங்களும், சின்ன சின்ன சம்பவங்களும், பிற மனிதர்களையும் (என்னையும் கூட) கவனிப்பதில் எனக்கு இருக்கும் ஆர்வமும் என்னால் முடிந்த அளவு எழுத்தில் செதுக்குவதில் எனக்கு ஒரு சுய நல நோக்கம் இருக்கிறது......
(முக்கிய விஷயம் - நான் அங்கே யாரிடமும் பேசுவது இல்லை.......யோகப்பயிற்சிகளில் ஏற்படும் அந்த மன ஒருமைப்பாடு தரும் இந்த புதிய வழக்கத்தில் - அது தான் நடக்கும் பழக்கம் - மறந்தும் கூட யாரிடமும் பேச தோன்றுவது கூட இல்லை.....)
கைகால் தளர்ந்து போய் என் ரதம் சுண்டி போய் "அந்த" கடைசி நாட்களில் இந்த பதிவுகள் எனக்கு மன நிறைவு தரப்போவது உறுதி.....பழைய நினைவுகளில் (முக்கியமாக நாம் இரசித்த கணங்களை மீண்டும் நினைத்து பார்ப்பதில் நம் எல்லாருக்கும் எப்போதும் மகிழ்ச்சிதானே ??)
இதை பொறுமையாக படிக்கும் உங்களுக்கும் ஏதாவது சிறு பலன் ஏற்பட்டால் மேலும் மகிழ்ச்சி.....!!
எத்தனை பதிவுகள் ? இரு மொழிகளில் சரி பாதியா ? எவ்வளவு நாட்கள் தொடருவேன் ? போன்ற எந்த கேள்விகளுக்கும் என்னிடம் இந்த கணம் பதில் எதுவும் இல்லை......!! போகப் போக பார்ப்போம்.....சரிதானே ?
ஒரு சின்ன விஷயத்தை சொல்லிவிட்டு முடித்து விடுகிறேன்......(இன்று மங்கள ஆரம்பம் மட்டுமே........).
இன்று பூங்காவின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் கரும்பலகையில் இருந்த வாசகங்கள் பிரமிக்க வைத்தன......இது வரை நான் படிக்காத / கேள்விப் படாத அந்த சக்தி மிக்க வரிகளை நீங்களும் பாருங்கள்........
"விதைத்துக்கொண்டே இரு.......
முளைத்தால் மரம்....அன்றேல் உரம்"
இதை சிந்தித்து எழுதிய அந்த மகராசனும், அதை கர்ம சிரத்தையாக கரும் பலகையில் வார்த்த அந்த சாதாரண மனிதனுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி.....!!
ஒரு வகையில் நான் அகண்டத்தில் எழுதுவத்தில் மேலும் ஒரு பரந்த நோக்கம் இருக்கிறது....."இன்றேல் விழல்" என்று தாரளமாக சேர்த்துக் கொள்ளலாம்.
என் அகண்டம் பிரும்மாண்டமானது......
கொஞ்சம் தனிமையாக இருந்தாலும் பாதகமில்லை. இரசிக்க, பிரமிக்க, புளகாங்கிதம் அடைய எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கிடைப்பதில் மகிழ்ச்சி....("தனிமை கண்டதுண்டு....அதில் சாரம் இருக்குதம்மா......")
என் அகண்டம் பிரும்மாண்டமானது......
கொஞ்சம் தனிமையாக இருந்தாலும் பாதகமில்லை. இரசிக்க, பிரமிக்க, புளகாங்கிதம் அடைய எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கிடைப்பதில் மகிழ்ச்சி....("தனிமை கண்டதுண்டு....அதில் சாரம் இருக்குதம்மா......")
அன்புடன் சுரேன்
No comments:
Post a Comment