Thursday, January 12, 2012

சொல்ல மறந்த கதை - 2 :: "Dalda"

தற்செயலாக நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? probability theory பேசி அற்புதமான இரசிக்க வேண்டிய பல விஷயங்களை தவற விடுபவர்களா நீங்கள் ? வேதனைதான்.....!!
கவலைப்படாதீர்கள்....உங்களுக்கும் என் அகண்டத்தில் இடம் நிச்சயம் உண்டு....ஆனால் பூலோகத்தில் மட்டும்தான் !!
பல்வேறு கோளங்கள் தமக்குத் தானே வகுத்துக் கொண்ட நெறியோடு இயைந்து இசைந்து மிதக்கும் இந்த அற்புதமான பிரபஞ்சத்தின், அகண்டத்தின் விஸ்தீரணத்தை இரசிக்காமல் பூட்டியிருக்கும் ஒரு அறையை ஒத்த இந்த பூமியன்னை மட்டுமே சாசுவதம் என்றே வாழ்ந்து முடித்து போவது உங்களுக்கு இசைவு என்பது.....எனக்கு என்னவோ வேதனை தான்....!!
பொறுமையாக மேலே படியுங்கள் - ஒரு ஐந்து நிமிடம் இந்த பாமரனுக்காக தானமாக அளிப்பீர்கள் தானே ?
என் வாழ்க்கையின் (அதாவது இந்த நிமிடம் வரை ) மொத்த சாரமே தற்செயலான நடந்த நிகழ்ச்சிகளும் அதனால் நான் பெற்ற நெகிழ்ச்சிகளுந்தான்...என்றால் மிகையாகாது...!!
Luck என்பார் சிலர்....fluke என்று அடையாளப்படுத்துவோர் பலர்... coincidence என்று உணர்ச்சியற்று ஒரு புன்னகையால் மட்டுமே அங்கீகரிப்பவர்கள் பெரும்பாலானவர்கள்....
நான் அவற்றுக்கு ஒரு அழகான பெயர் வைத்து இருக்கிறேன்....Baba Magic ....!!
இந்த அகண்டத்தின் அகலத்தை அளக்கும் வகையில் என்னால் பல கதைகளை பகிர்ந்து கொள்ள முடியும்....ஆனால் நீங்கள் புத்தி சாலி என்பதால் இன்று நடந்த ஒரு சிறு சம்பவம் மட்டும் சொல்கிறேன்...ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் பார்க்க போதுந்தானே ??

நேற்று இரவு வீடு திரும்ப வெகு நேரமாகிவிட்டது - அன்பு மகளுக்கு dance rehearsal நடந்த music academy கே ஆபீஸ்-லிருந்து போய் விட்டேன்...!! எங்கள் குடும்ப ஹோட்டல் ஆன saravana பவன்-ல் சிற்றுண்டி முடித்து காலை ஆகாரத்துக்கு ஒரு bread loaf வாங்கிக்கொண்டு வீடு திரும்ப 11 மணி ஆகிவிட்டது.

எனக்கு மனத்தில் ஒரு சிறிய எண்ணக்கீற்று - பிரட் டோஸ்ட்- க்கு எனக்கு சிறிய வயதிலிருந்து டால்டா மிக விருப்பம்....!! என் சக தர்மினிக்கு அந்த பண்டம் மேல் ஒரு அர்த்தமில்லாத அசூயை.....அதனால் நாங்கள் அதை வாங்குவதே கிடையாது....!! எனக்கு இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் வீம்பு செய்து சண்டை பிடிக்க ஆவல் இல்லை.... (மனஸ்தாபத்திற்கு அகண்டத்தில் எத்தனையோ விஷயம் இருக்கிறது அல்லவா ? ....)

நேற்று ஒரு சிறிய எண்ணம் தான் - நானே என்னை சமாதானப் படுத்திக்கொண்டு விட்டேன்....(சிரிக்கிறீர்களா ? டோஸ்ட் செய்ய நெய்-யைக்காட்டிலும் டால்டா இன்னும் முறுகலாக வரும்....இதெல்லாம் தானே உணர்ந்து தெளிய வேண்டிய விஷயம்...!!)

சரி....வருவோம் கதைக்கு....!! இன்று காலை எங்கள் வாசல் படியில் கிடந்த நியூஸ் பேப்பர் மற்றும் ஆனந்த விகடன் எல்லாம் குனிந்து எடுத்த நான் விகடன் தாத்தா அன்பளிப்பாக தந்த sachet பக்கெட்-ஐ பொறுக்கிய எனக்கு இன்ப அதிர்ச்சி.... gold winner DALDA packet !! மற்றுமொரு baba magic ... !!!!!
என் நாக்கை மென் மேலும் வளப்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் ......
கதை கவிதை நாடகம் எல்லாம் சுவாரஸ்யம் என்று எவர் சொன்னார் ?

உமது வாழ்வின் - இது போன்ற சின்னச் சின்ன அற்புதங்களை உற்று நோக்கி உற்சாகம் பெறுங்கள்....!!

சொல்ல மறந்த இது போன்ற கதைகள் தான் ஐயா வாழ்வின் சாரம்.....!!
கிருஷ்ணார்ப்பணம்....
சுரேன்

No comments:

Post a Comment