Sunday, February 23, 2014

******மொழி*****

காற்றின் மொழி  ஒலியாய் இசையாய் 
பூவின் மொழி  நிறமாய் மணமாய்
கடலின் மொழி அலையாய் நுரையாய் 
காதல் மொழி விழியாய் இதழாய்.......

அன்புடையீர்

இதென்ன "கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது" போல், அகண்டத்தில் எவரோ எழுதிய திரைப்பாடல் வரிகளை எமது அகண்டத்தில் செதுக்கி வைத்தல்.... என்று ஐயம் வருகிறதா ? நான் பத்தி பத்தியாக எழுதப் போவதையும் சற்று பொறுமையாக படித்து விட்டு மீண்டும் இந்த பாடல் வரிகளுக்கு வாருங்கள்....!
இந்த வரிகளின் மற்றொரு வரி வடிவமே இந்த பதிவு என்று உணருவீர்கள்.........!!!

இந்த வார விகடன் படித்தீர்களா ? இரண்டு வெவ்வேறு இடங்களில் படித்த கட்டுரை மற்றும் கேள்வி பதில்களின் முரண்பாடு இந்த பதிவின் என் செய்திக்கு அச்சாரமாக (அதான் advance) இருக்கக் கூடும்.

முதலில் - எழுத்தாளர் அ . முத்துலிங்கத்தின் பதில் பின்வரும் கேள்விக்கு "சொல்லில் வருவது பாதி ..... நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி.....! இந்த வரி உணர்த்துவது என்ன ?" 
அவரின் அற்புதமான, கருத்து  செறிந்த பதிலை அப்படியே தருகிறேன். 
" .......... சீன அறிஞர் Confusius கூட பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே "எல்லா வார்த்தைகள் சேர்ந்தாலும் சரியான உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாது" என்று சொல்லியிருக்கிறார். .........." ஒன்றை விவரிப்பதற்கு ஒரு மொழியில் மட்டும் உள்ள வார்த்தைகள் போதாது. "சாந்தி முஹூர்த்தம்" என்ற பதத்திற்கு ஆங்கில வார்த்தை இல்லை.   "இடது கால் செருப்பு" க்கு மட்டும் ஆப்பிரிக்க மொழியில் ஒரு வார்த்தை உண்டு தமிழில் கிடையாது. ஆகவே பல மொழிகள் சேர்ந்தால் தான் அது சாத்தியமாகும்".

இந்த சிந்தனையாளர்  சொல்லும் இந்த கருத்துக்கு நானும் உடன் படுகிறேன். ஒரு "ஆனால்" ஐத் துணையாக சேர்த்துக் கொண்டுதான் ........!

அவர் பதிலின் கடைசி வாக்கியம் "சிந்தனைகளை வார்த்தைகள் தொடரும் ; முந்த முடியாது " என்பது தான்..... . எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்......

அதே ஆனந்த விகடனில் மற்றுமொரு கட்டுரை....இயக்குனர் பாலா சமீபத்தில் மறைந்த மேதகு இயக்குனர் பாலு மகேந்திரா பற்றி எழுதியது. மேலே கண்ட பத்தியை சவால் விடும் வண்ணம் அந்த கட்டுரையை படிப்பவர்கள் - பாலாவின் உணர்வுகளை தரிசிப்பார்கள். 

இது பல நாளாக நான் சிந்தித்து கொண்டு இருக்கும் ஒரு subject - இந்த இரண்டு வரைவுகளின் முரண்பாட்டில் பட்டென்று விளங்கிப்போனது. 

ஆம்...... எழுத்தாளர் அ முத்துலிங்கம் சொல்வது போல் "சிந்தனை"களுக்கு வார்த்தைகள் போதாது. மொழிகளும் உதவாது. எழுதுவதும் பேசுவதும், நமது சிந்தனைகளை அடுத்தவர்களுக்கு பரிமாறும் ஒரு முயற்சியே !! 

ஆனால் உணர்வுகளின் மிகுதியால் நாம் எழுதுவதும் பேசுவதும் கண்டிப்பாக எந்த வார்த்தைகளும் இன்றி அடுத்தவரைத் தீண்டும் (சில சமயம் தாக்கவும்   தாக்கும்). எழுதுவது இன்னும் சவுகரியம்.....பேசும்பொழுது உணர்வுகள் ( feelings) உணர்ச்சிகளாக (emotions ) பரிணாமம்  பெற்று வார்த்தைகள் தழுதழுத்து மொழி மழமழத்துப் போய் விட வாய்ப்பு உண்டு. 

கொஞ்சம் பக்குவப்பட்ட மனிதர் கூட தான் உணர்ச்சி வசப்பட்டு எழுத்தில் வடித்ததை மீண்டும் ஒரு முறை பார்த்தால் அவரே செதுக்கி விடுவார்....

ஆனால் ஒன்று....நான் இந்த பதிவை இப்போது சரிபார்க்க போவதில்லை.....!!

காற்றின் மொழி.............ஒளியாய். இசையாய்....

அன்புடன்

சுரேந்திரன்

ps :- "சொல்ல மறந்த கதை"யாக இந்த பதிவை நீர்த்து போக வைக்க நான்  விரும்பவில்லை.
"சொல்லில் செதுக்கிய" என்னையே நான் தரிசிக்கிறேன்....
நீங்கள் ??




2 comments:

  1. 1) just like idadhu kaal seruppu in tamil, "I miss you" can't be translated in tamil. (seri dhane??)

    2) And, secondly, i don't agree with "written text expresses feeling better than speaking them out". many times misunderstandings do occur because of the message being conveyed wrongly, or being perceived wrongly by the person reading it. pesina actual emotion and feeling innum theliva puriyumo nu ennoda karuthhu..

    DOT.

    ReplyDelete
  2. very good !! but I thought this article will be an answer to what we discussed the other day. I totally agree with you but I really don't mind if 'what' becomes 'wat' as far as the message is conveyed.I also agree 'important' cant become 'impotent'..there is a difference in what you have written and what I said.

    ReplyDelete