அன்புடையீர்
இந்த வாரம் இது போதும்......
அன்புடன்
சுரேந்திரன்
நவராத்திரி சமயங்களில் நமது இல்லங்களில் "வெத்தலை பாக்கு" கொடுத்து வாங்கி நம் பெண்டிர் வீடு வீடாக அலைந்து அல்லல்படுவதைப் பார்த்து இருக்கிறீர்கள்தானே ?
ஒரு பெரிய சத்திரத்தில் கூடி அவர்கள் அனைவரும் இந்த பண்டமாற்றை முடித்துக்கொள்ளக் கூடாதா என்று நான் ஒவ்வொரு வருடமும் யோசித்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் சொல்லியும் இருக்கிறேன்.
(கலாச்சார புரட்சியை ஏற்படுத்த நான் என்ன மகானா ? சாமான்யன் !)
ஆனால் ஒரு பேருண்மையை மனப்பூர்வமாய் ஒத்துக்கொள்கிறேன். இந்த பண்டிகையின் போது எந்த லஜ்ஜையும் இல்லாமல் எவர் வீட்டிற்கும் எல்லா மகளிரும் போகும் வாய்ப்பு உருவாகிறது சமுதாயத்தில் ஒரு சௌஜன்யம் ஏற்படுவது நல்ல விஷயம்தானே ? ஆனாலும் ஒன்று கவனித்து இருக்கிறீர்களா ? அழைப்பு இருந்தால் மட்டுமே "க்ரஹப்ப்ரவேசம்" நடக்கும்.
நல்லது....நம் கதைக்கு வருவோம். 2/3 நாள் முன் என் மனைவிக்கு அவள் பள்ளியில் - அவள் வகுப்புக் குழந்தை ஒன்று கொடுத்த அன்புப் பரிசு பற்றி புளகாங்கிதப் பட்டு எழுதி இருந்தேன். மனதைத் தொட்ட அந்த சம்பவம் இயற்கையாக எனக்கு ஒரு ஆவலைத் தோற்றுவித்தது.
என் மனைவியிடம் அந்த குழந்தையின் வீட்டுக்கு வாரக்கடைசியில் போய் வரலாம் என்று விண்ணப்பித்தேன்.....(அடுத்த தெரு தான், ஐயா !! தெரிந்த குடும்பம்தான் ). கிட்டத்தட்ட இரண்டு மூன்று முறை நினைவுப் படுத்தினேன் - அந்த குழந்தையின் பெற்றோர் பள்ளிக்கு வரும்போது அதைப் பற்றி அறிவிக்கச்சொல்லி.
நேற்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய என் இல்லாள் களைப்பு சற்று நீங்கியதும் இது பற்றி விசாரித்தேன். மிகவும் தயக்கத்தோடு "பேசினேன். குழந்தையை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்!!" என்று சொல்லியிருக்கிறாள். எப்படி இருக்கிறது கதை........?
யார் வீட்டுக்கும் அழையா விருந்தாளியாகப் போவதில் புண்ணியவதிக்கு தயக்கமாம். நான் வாயடைத்து போய் விட்டேன்......
நவராத்தி காலம் போது மட்டுமா பண்டிகை ?....
என் போன்ற வீடுகளில் தினந்தினம் நவராத்திரி தான்....தீபாவளிதான்....
இந்த வாரம் இது போதும்......
அன்புடன்
சுரேந்திரன்
No comments:
Post a Comment