ஆங்கில எழுத்தாளர் Jeffrey Archer எழுதிய ஒரு சிறுகதையின் (Just Good Friends) தமிழாக்கம்
என்னை இறுக தழுவிக்கொள்ளும் மனநிலையோடு அவர் எழுந்திருக்கும் முன்னரே எனக்கு விழிப்பு கண்டு விட்டது. என்னால் அவருக்கு எந்த பயனும் கிடையாது என்ற உண்மை எனக்கு புரிந்தாலும், அதைப் பற்றி நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
கண்களை கசக்கிக்கொண்டு நான் அரை வெளிச்சத்தில் இருந்த அறையை பார்த்தேன். வெகு விரைவில் கண்கள் பழகிவிட சுற்றுமுற்றும் நோட்டம் விட்டேன். தலையை உயர்த்தி என் அருகில் மாமிச மலை போல் தோற்றம் அளித்த அவரின் வெண்மையான உடலை வெறித்து பார்த்தேன். என் அளவு ஓடி ஆடி பரபரப்பாக இருந்தால் அவருக்கு இடுப்புப் பிரதேசத்தில் இவ்வளவு சதை சேர்ந்து இருக்காது என்று இரக்கமே இல்லாமல் ஒரு எண்ணம் என் மனதில் ஓடியது.
சுந்தர் படுக்கையில் புரண்டு என்னை நோக்கியவாறு திரும்ப படுத்தாலும் அலாரம் கடிகாரம் குரல் கொடுக்கும் வரை எழுந்திருக்க மாட்டார் - அதுதான் தினசரி வழக்கம் ! திரும்பவும் தூங்கி விடலாமா அல்லது சமையல் அறைக்கு சென்று எனக்கு கொறிக்க ஏதாவது செய்து கொள்ளலாமா என்று யோசித்தேன். கடைசியில் இரண்டும் செய்யாமல் பேசாமல்- சுந்தர் தூக்கம் கலைந்து விடாமல் - படுத்தவாறே, எதாவது யோசனை செய்து கொண்டு இருக்கலாம் என்று முடிவு செய்தேன். அவர் எழுந்து இருக்கும் போது தூங்குவது போல் நடித்தால் எனக்கும் சேர்த்து அவரே சாப்பிட எதாவது தயாரித்து விடுவார் என்று ஒரு நைப்பாசை !! அவர் அலுவலகம் சென்றதும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை அசை போட ஆரம்பித்தேன். ஆபீஸ் - லிருந்து திரும்பும்போது இன்முகத்தோடு வரவேற்க வேண்டும் என்ற ஒரு நியாயமான எதிர்பார்ப்பு மட்டுந்தான் அவருக்கு!பகலில் நான் என்னவெல்லாம் செய்து கொண்டு இருந்தேன் என்று துருவி கேட்கும் வழக்கமே அவருக்கு இல்லை.
ஒரு ஆழமான பெருமூச்சு என் பக்கத்திலிருந்து வந்தது.சுந்தரின் குறட்டைச்சத்தம் என்னை எப்போதுமே தொந்தரவு படுத்தியதே இல்லை. அவர் மேல் நான் கொண்ட காதலை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. என் முதல் மற்றும் எனக்கே ஆன ஆண்மகன் அவர்தான். அவர் முகத்தில் அடர்ந்திருந்த உரோமம் கண்ணில் பட, அவர் தோற்றம் எப்போதுமே என்னை பாதித்தது இல்லை - அந்த முதல் சந்திப்பில் கூட என்ற எண்ணம் தோன்றியது.
நான் முதலில் சுந்தரை சந்தித்தது - "ரோஜா" பாரில் தான் - அதுதான் நடேசன் தெருவின் முடிவில் இருக்கிறதே - அதுதான்.
அது எங்கள் குடியிருப்பு பகுதியின் வெகு அருகில்தான். எப்பொழுதும் சீராக எட்டு மணிக்கு பாருக்கு வரும் சுந்தர் ஒரு ஓரமாக கேரம் போர்டு இருக்கும் இடத்தருகே அமர்வார். ஆட்டத்தின் குதூகலத்தை மிகவும் அமைதியாக இரசித்தவாறு குடிப்பார். ஒரு நாள் கூட அவர் விளையாட முயன்றது கிடையாது. பானங்கள் விநியோகப் படும் இடத்தின் அருகில் இருக்கும் எனக்கு எப்போதுமே இந்த சந்தேகம் ஏற்படும். - ஒரு வேளை விளையாட்டில் அவருக்கு ஆர்வம் இல்லையா அல்லது அவரின் பழக்கப்பட்ட இருக்கையை எவருக்கும் விட்டுத் தரும் எண்ணம் இல்லையா என்று....!!
அது எங்கள் குடியிருப்பு பகுதியின் வெகு அருகில்தான். எப்பொழுதும் சீராக எட்டு மணிக்கு பாருக்கு வரும் சுந்தர் ஒரு ஓரமாக கேரம் போர்டு இருக்கும் இடத்தருகே அமர்வார். ஆட்டத்தின் குதூகலத்தை மிகவும் அமைதியாக இரசித்தவாறு குடிப்பார். ஒரு நாள் கூட அவர் விளையாட முயன்றது கிடையாது. பானங்கள் விநியோகப் படும் இடத்தின் அருகில் இருக்கும் எனக்கு எப்போதுமே இந்த சந்தேகம் ஏற்படும். - ஒரு வேளை விளையாட்டில் அவருக்கு ஆர்வம் இல்லையா அல்லது அவரின் பழக்கப்பட்ட இருக்கையை எவருக்கும் விட்டுத் தரும் எண்ணம் இல்லையா என்று....!!
திடீரென்று ஒரு நாள் ஒரு திருப்பம் வந்தது - வசந்தா என்ற ஒரு (எங்கள் குடியிருப்பின் அருகில் இருக்கும் ஒரு பெண்தான்) அழகு தேவதை அவர் அருகில் ஒரு இருக்கையில் இயல்பாக சென்று அமர்ந்தாள். இதுவரை அவளை நான் இந்த பாரில் பார்த்ததே இல்லை. அவளைப்பற்றிய என் காதில் பட்ட அபிப்ராயங்கள் சொல்வதற்கு அவ்வளவு தகுதியானவை அல்ல. ஆனால் சுந்தரைப்பற்றி நன்கு அறிந்த நான் அவள் போன்ற பெண்ணிடம் சிக்கி விட வாய்ப்பு இல்லை என்று எனக்கு நிச்சயமாக தோன்றியது. சுருக்கமாக சொன்னால் வசந்தா எப்படிப்பட்ட நோக்கம் கொண்டவள் என்றால் - "ரோஜா" பாரை தாண்டி பல விலை உயர்ந்த கேளிக்கை இடங்களுக்கு போய் வர தூண்டில் போடுபவள்........புரிந்து விட்டதா ?
இந்த காதல் தொடர்பு (அப்படித்தான் சொல்லித் தொலைக்க வேண்டும் ) பத்து / இருபது நாள் வரையே தாக்கு பிடித்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் அவர்களுக்குள் பலத்த வாக்குவாதம் காதில் விழுந்தது. அனைவரும் அவர்கள் இருக்கும் திசை நோக்கி அதிர்ச்சியாகப் பார்க்க - ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டிருந்த எனக்கு புளகாங்கிதம் தான் ! தடால் என்று இருக்கையை ஒரு கையால் தள்ளி விட்டு விட்டு எவ்வளவு வேகமாக வந்து சேர்ந்தாளோ, அதே அளவு விரைவாக வசந்த சுந்தரை விட்டு அகன்றாள். சுந்தரின் களைப்பான விழிகள் அவள் சென்ற திசையை நோக்கி வெறித்ததே தவிர அவளைத் தடுக்கவோ சமாதானம் பேசவோ முயலவில்லை. "விட்டது சனி" என்று அவருக்கு ஆசுவாசம் ஏற்பட்டு இருக்கக் கூடும்.
அவள் அகன்றது என் பிரவேசத்திற்கு உறுதுணையாக இருந்தது. பார்-ல் எனது வழக்கமான இருக்கையிலிருந்து துள்ளி எழுந்தேன்.என் பரபரப்பு எவருக்கும் தெரியாத வண்ணம் மிகவும் ஒயிலாக நடந்து சுந்தரின் அருகில் காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லை; உபசாரத்துக்காக எனக்கு குடிக்க பானம் எதுவும் சொல்லவில்லை.; ஆனால் என்னை அவர் வெறித்துப் பார்த்த அந்த ஒரு கணம் என்னை வேண்டாத விருந்தாளியாக எண்ணியதாக எனக்கு தோன்றவில்லை. என் இடத்தை அபகரிக்க வேறு யாரும் போட்டி போட முயல்வார்களோ என்று நான் சுற்று முற்றும் பார்த்தேன். கேரம் போர்ட் - களின் அருகில் நின்று இருந்தவர்கள் யாரும் என்னை பொருட்டாகவே கருதாமல் அவர்கள் விளையாட்டில் மூழ்கி விட்டார்கள். பானங்கள் விநியோகிக்கும் இடம் அருகே என் manager இருக்கும் திசை நோக்கி பார்த்தேன். அவர் ஆர்டர் எடுத்துக்கொள்ளும் மும்முரத்தில் இருந்தார். வசந்தா - அந்த சிறிது நேரத்துக்குள் - தன தூண்டிலில் சிக்கிய ஒரு புதிய மீன் - ஒரு அழகான இளமையான வாலிபனுடன் - ஒரு பாட்டில் கையில் பிடித்தவாறு கொஞ்சிப் பேசிக்கொண்டு இருந்தாள். அந்த புதிய வாலிபனின் பணக்காரத்தனமான உடைகளிலிருந்து பார்த்தால் - அவள் சுந்தர் பக்கம் சில மாதங்களாவது வரமாட்டாள் என்று தான் பட்டது.
நான் மீண்டும் சுந்தர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். பேசியது இல்லை என்றாலும் அவர் பெயரை நான் அறிந்து இருந்தேன்.- என் பெயரும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. என் இமைகளை சற்று அதிகமாக. மிகவும் செயற்கையாக , படபடத்தவாறே அவரின் கண்களைப் பார்த்தேன். நானே எதிர்பார்க்காத வண்ணம் ஒரு புன்முறுவல் அவர் முகத்தில் அரும்பியது. இருக்கையின் முன்னே சாய்ந்து என் கன்னப்பகுதியில் மென்மையாக தன கையால் வருடினார். அவர் கை மிகவும் மிருதுவாக இருந்ததை கவனித்தேன். எங்கள் இருவருக்குமே பேசிக்கொள்ள தோன்றவில்லை. வெகு நேரம் அவர் தன பானத்தை பருகியவாறு வெறித்த பார்வையுடன் இருக்க, நான் மவுனமாக அவரை நோக்கியவாறு இருக்க, எங்கள் அருகில் இருந்த கேரம் காயின் களின் சத்தம் கேட்ட வாறு இருக்க - நேரம் கழிந்தது. கடை மூடப்போகும் அறிவிப்பு வந்ததும், கேரம் போர்டு-களின் சத்தம் ஓய சுந்தரும் தன கையில் இருந்த பானத்தை குடித்து முடித்து கிளம்பத் தயாரானார்.
நாங்கள் இருவரும் சேர்ந்து - barக்கு வெளியே நடப்பதை எவரும் தடுக்கவில்லை - ஏன் அவரே தயக்கப்படவில்லை. அவர் இருப்பிடத்தை நான் நன்றாக அறிவேன். காலையில் அவர் தன சிறிய குடியிருப்பிலிருந்து கிளம்பி பேருந்து நிலையத்தில் தன வழக்கமான் வெறித்த கண்களோடு நிற்பதை பல முறை பார்த்து இருக்கிறேன். ஒரு முறை - பேருந்து நிலையத்தின் அருகே இருந்த முட்டுச் சுவர் பக்கம் நின்றவாறு அவரை நன்கு உற்று பார்த்தும் இருக்கிறேன். சராசரியாக தோற்றம் அளிக்கும் முகம்தான். ஆனால், பெருங்கருணையும் சாந்தமும் வெளிப்படுத்தும் கண்கள் அவர் முகத்திற்கு தனி அழகை கொடுத்தன. எந்த ஒரு ஆன் மகனிடமும் இவ்வகையான ஒரு களையை நான் கண்டதில்லை.
என் ஒரே பிரச்னை என்னவென்றால் சுந்தர் நான் அவருடன் இருப்பதையே உணர்ந்ததாக தெரியவில்லை; எப்போதும் வெறித்த பார்வையுடனும் தீவிர யோசனையுடனும் இருந்து வந்தார்.வசந்தாவின் ஞாபகத்திலிருந்து மீளவில்லை போல்தான் தெரிந்தது. எனக்கு அவள் மேல் கையாலாகாத பொறாமை ஏற்பட்டது - அவளிடம் நான் ஏங்கும் அனைத்தும் இருந்தது - அன்தல் பகட்டான மேல் அங்கியைத் தவிர. ஆம். என் அம்மா எனக்கு கொடுத்த ஒரே சீதனம் அதே போன்ற ஒரு அங்கி தான். ஒரு வகையில் பார்த்தால் எனக்கு வசந்தா மேல் கோபமும் இருக்க நியாயம் இல்லை - அவள் கடந்த காலம் என்னுடையது அளவுக்கு கேவலமானதாக இருக்க வாய்ப்பு இல்லை.
இதெல்லாம் நடந்து ஒரு வருடம் கழிந்திருக்கும். சுந்தருக்கு என் நன்றியைக் காட்டுவதற்கு நான் "ரோஜா" bar பக்கம் போகவே இல்லை. அவரும் வசந்தாவை மறந்து விட்டதாகத் தான் தெரிகிறது. என் எதிரே ஒரு முறை கூட அவளைப் பற்றி அவர் பேசியது கிடையாது. ஒரு வகையில் இவர் விசித்திரமான ஒரு மனிதர்தான். என்னை பற்றியும் முக்கியமாக என் கடந்த காலத்தைப் பற்றிக்கூட கேட்டதில்லை. கேட்டுத் தெரிந்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றே எனக்கு படுகிறது.
இப்போது எல்லாம் பழங்கதையாகப் போய் விட்டாலும் என் கடந்த காலத்தைப் பற்றிய உண்மைகளை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே நான் விரும்பினேன். என் குடும்பத்தில் இருந்த நால்வரில் நானே கடைக்குட்டி - ஆகவே எப்பொழுதும் எந்த விஷத்திலும் நானே கடையாகப் பொய் விட்டது என் துரதிர்ஷ்டம். என் தகப்பன் யார் என்று எனக்குத் தெரியாது. ஒரு முறை வீட்டுக்கு திரும்பிய போது என் தாய் வேறு ஒருவருடன் ஓடிப் பொய் விட்டால் என்று தெரிய வந்தது. என்னுடைய தமக்கைகளில் ஒருத்தியான கவிதா - எங்கள் அம்மா திரும்பி வருவது பற்றி என்னத்தை ஒழித்து விடச் சொன்னாள். அவள் கணித்தது போலவே அதற்கு பிறகு என் அம்மாவை நான் பார்க்கவே இல்லை. நம் தாய் ஒரு ஓடுகாலி என்ற உண்மையை ஒப்புக்கொள்வது எவ்வளவு அவமானம் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்!
அநாதை ஆகிவிட்ட நான் தனியாக திரிய ஆரம்பித்து விட்டேன். அரசாங்கம் கண்காணிக்கும் எந்த அவமானகரமான செயலையும் நான் செய்ய முயலவில்லை. முத்துவுடன் தொடர்பு எப்படி ஏற்பட்டது என்று இன்று சரியாக நினைவுக்கு ;வரவில்லை. கருப்பனாக இருந்தாலும் நல்ல அழகன் - எந்த பெண்ணையும் சபலப்படுத்தும் வகையில் ஒரு வசீகரச் சிரிப்பு.மூன்று வருடங்களாக கப்பலில் வேலை செய்து வருவதாக என்னிடம் சொன்னான்.அவன் என்னிடம் நெருக்கமாக இருக்கும் வேளைகளில் அவன் சொல்லும் எதையும் நம்புவதற்கு தயாராக இருந்தேன். வெகுளியாக. அவனிடம் நான் - எனக்கு தேவைப்படுவதெல்லாம் இருக்க ஒரு அமைதியான இருப்பிடம் , வேளாவேளைக்கு உணவு மற்றும் எனக்கே எனக்கு என்று ஒரு குடும்பம் - என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். என் விருப்பங்களில் கடைசியை அவன் நிறைவேற்றி விட்டு எங்கோ மறைந்து விட்டான். ஆம்.....என்னை கர்ப்பம் ஆக்கிவிட்டு அவன் சென்று விட - எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன; இரண்டுமே பெண் குழந்தைகள். நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பற்றி நான் முத்துவுக்கு தெரிவிப்பதற்கு முன்னரே அவன் கப்பலில் அடுத்த பயணத்திற்கு புறப்பட்டு விட்டான்.அவன் போல் அழகனை இருத்தி வைத்து கொள்ள நான் எதுவும் செய்ய இயலாது. எத்தனையோ பெண்கள் அவனிடம் மயங்கும் வகையில் இருந்த அவன் தோற்றத்து நான் அவனுக்கு சில காலத்திற்கு துணையாக இருந்ததே அதிகம்.
என் செல்ல மகள்களை நான் அன்புடன் பராமரித்து வந்தேன் - துரதிர்ஷமாக அரசாங்க அதிகாரிகள் கண்ணில் பட்டு விட, நான் இருவரையுமே இழந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டது. இப்போது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை. நல்ல வீடுகளில் அவர்கள் அடைந்து இருந்தால் எனக்கு திருப்திதான். முத்துவின் களையை இரண்டு பெண்களுமே கொண்டு இருந்தார்கள் - அதுவே அவர்கள் இருவரையும் கடைசி வரை காப்பாற்றி விடும் என்று நினைத்துக் கொண்டேன்.இது பற்றியெல்லாம் சுந்தருக்கு நான் சொல்லும் வகையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எந்த கேள்விகளும் அற்ற அவன் மவுனம் எனக்கு இது பற்றியெல்லாம் அவனிடம் பேசுவதற்கு எந்த சந்தர்ப்பத்தையும் இந்த ஒரு வருட காலத்தில் அளிக்கவில்லை.
முத்து என்னை விட்டு அகன்றதும் நான் ரோஜா barல் சேர்ந்தேன். நான் சேர்ந்தது பகுதி நேர வேலைதான் என்பதால் bar முதலாளி எனக்கு உண்பதற்கோ பருகுவதற்கோ எதுவும் தரவில்லை. சுந்தர் வாரத்திற்கு ஒரு முறையோ சில சமயம் இரு முறையோ வருவார். முதலில் நான் உங்களிடம் சொல்லியிருந்த வசந்தாவின் பரிச்சயம் ஏற்ப்பட்ட பிறகு தினமும் வர ஆரம்பித்தார்.
அவர் தான் குடிப்பதற்கு வெறும் beer மட்டும் என்று சொல்லும் போதே எனக்கு ஏற்ற துணை இவர்தான் என்று தோன்றி விட்டது. அவரிடம் நட்பு பாராட்ட அங்கு வேலை செய்யும் பெண்கள் எவ்வளவு முயன்றாலும், அதெல்லாம் சுந்தரை அசைத்து விடவில்லை. பிறகு வசந்தாவிடம் அவர் பழக ஆரம்பித்தது எனக்கு அதிர்ச்சிதான் - அவர் போன்ற ஒருவருக்கு அவள் ஏற்ற ஜோடி கிடையாது என்று மனப்பூர்வமாக நம்பினேன். கடைசியில் குடும்பப் பாங்கான என் தோற்றம் என்னை அவரிடம் கொண்டுச் சேர்த்தது. அந்த bar-லியே நான் ஒருத்தி தான் ஒரு ஸ்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டேன் என்று நினைக்கிறேன்.
அவருடன் சேர்ந்து அவர் இருப்பிடம் சென்ற என்னை தன படுக்கையில் அவர் முதல் நாளே மிகவும் இயல்பாக அனுமதித்தார்.அவர் தன உடைகளை களைவதற்காக குளியலறைக்கு சென்று விட, மெத்தையில் எந்த பக்கத்தில் நாம் படுக்கையில் சாயலாம் என்று நானாகவே அனுமானம் செய்தது கொண்டு ஒரு பக்கத்தில் அமர்ந்தேன். அன்றிலிந்து இன்று வரை அவர் என்னை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெளியில் அனுப்ப முயலவில்லை. இது ஒரு அற்புதமான் உறவு - அவர் என்னிடம் கடிந்து கொண்டதோ கேட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டியதோ கிடையாது ; ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் நான் தடுமாறி கீழே விழ நேர்ந்த போது, என் அவசரம் கண்டு கனிவான குரலில் திட்டியதாக நினைவு.
"ப்ர்ர்ர்ர்ர்ர் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'" - அந்த அலாரம் சனியன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. சுந்தர் எழுந்திருக்கலாம் என்று முடிவு செய்யும் வரை இந்த எரிச்சல் தரும் சத்தத்தைக் கேட்டுத்தான் தொலைக்க வேண்டும். ஒரு முறை இந்த சத்தத்தை நிறுத்த நான் அவரைத் தாண்டி அந்த கடிகாரத்தில் கை வைக்க முயல, அது கீழே விழுந் தொலைக்க - சுந்தர் எரிச்சல் பட நேர்ந்து விட்டது. இந்த அலாரம் சத்தமே பரவாயில்லை என்று எனக்கு தோன்றும் அளவு அந்த சம்பவம் போய் விட்டது. இனி இந்த அலாரம் பற்றி எந்த முயற்சியும் எடுப்பத்தில்லை என்று முடிவே செய்தது விட்டேன். ஒரு வழியாக போர்வைக்குவியலில் இருந்து ஒரு கை வெளியே வந்து கடிகாரத்தை சமாதானப்படுத்தியது. எப்போதும் பூனைத் தூக்கம் மட்டுமே பழக்கமான எனக்கு அவரின் சின்னச் சின்ன செய்கைகள் கூட விழிப்பு கண்டு விடும். சுந்தர் என்னிடம் கேட்டிருந்தால் இந்த அலாரம் சனியனை விட நளினமான முறைகளில் நான் அவரை எழுப்பிவிடுவேன். மனிதர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை விட என் தன்மையான வழிகளில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு.
அரைத்தூக்கத்தில் சுந்தர் என்னை நோக்கி புரண்டு என்னை இருக்க அணைத்துக்கொண்டு பின் விடுவித்தார் - அவரின் வழக்கமான புன்னகையோடு. அதற்கு பிறகு ஒரு கொட்டாவி, சோம்பல் முறிப்பு எல்லாம் வரிசையாக நடந்தது. "சீக்கிரம் கிளம்ப வேண்டும்; இல்லையென்றால் வேலைக்கு late ஆகிவிடும்" என்ற வழக்கமான வசனம் ! இது போன்ற அவரின் வழக்கமான செய்கைகள் எந்த ஒரு பெண்ணக்கும் அலுப்பு ஏற்படுத்தி விடும எனக்கு மட்டும் அப்படி தோன்றியது இல்லை. நாம் தேடி வந்த பொக்கிஷம் இவர்தான் ; நமது தேவை இந்த மாதிரியான ஒரு ஸ்திர வாழ்வுதான் என்று எனக்கு நன்றாக புரிந்து இருந்தது.
சுந்தர் படுக்கை விட்டு எழுந்து தன் காலணிகளை வழக்கம் போல மாற்றி போட்டுகொண்டு பிறகு தடுமாறியவாறு சரி செய்து கொண்டு குளியலறை நோக்கிச் சென்றார். மிகச்சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து - உள்ளே சென்றதை விட சற்றே மலர்ச்சியாக வெளியே வந்தார்.அவருடைய இந்த அலுப்பூட்டும் வழக்கங்களுக்கு நான் பழகிப் போயிருந்தேன் ; அவரும் சுத்தம் பற்றிய என் தீர்க்கமான ஒழுங்கு முறைகளுக்கும் ஸ்திரத்தன்மை பற்றி என் கருத்துகளுக்கும் பழகிப்பொயிருந்தார்.
"சோம்பேறி..... எழுந்திரு!" என்று ஒரு குரல் கொடுத்தார் - தன மென்மையான குரலில்தான். நான் ஒரு முறை புரண்டு அவர் படுத்திருந்த இடத்தில் பள்ளத்தில் உடல் அடையுமாறு செய்து கொண்டு கண்களை மீண்டும் மூடிக் கொண்டேன்.
"ம்ம்ம்ம்ம் நான் வேலைக்கு போகும் முன்னர் உனக்கும் காலைச் சிற்றுண்டி தந்து விட்டு போக வேண்டும் போல் இருக்கிறது" என்று சொல்லியவாறே அவர் மாடியிலிருந்து கீழே செல்ல நான் மவுனமாக இருந்தேன். இன்னும் சில கணங்களுக்குள் அவர் வாசல் கதவைத் திறந்து செய்தித் தாளையும் தபால்களையும் எடுத்துவிட்டு பால் பாக்கெட் -யும் எடுத்து உள்ளே வருவார். அதன் பிறகு, வழக்கமே மாறாமல் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சியவாறு எனக்கு பிடித்த காலைச் சிற்றுண்டியையும் தயாரித்து விடுவார். அதனையும் ஒரு கப் - ல் எனக்கு சூடான பாலையும் தனக்கு இரண்டு கோப்பை காபி-யையும் எடுத்து சாப்பிடும் மேஜை மேல் அடுக்கி விடுவார்.
எந்த கணம் எந்த செயல் நடக்கும் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். பால் kettle கொதிக்கும் ஓசை, பாலை அவர் ஊற்றும் சத்தம் பிறகு மேஜை மேல் அவை வைக்கப்பட்டு நாற்காலி இழுக்கப்படும் சத்தம். அந்த கடைசி சத்தம் கேட்டதும் நான் உற்சாகமாக அவரோடு சேர்ந்து உண்ணுவதற்கு தயார் ஆவேன்.
என் கால்களை கீழ்நோக்கி நீட்டியவாறு உடலை வளைக்க,. அடர்ந்து வளர்ந்திருந்த என் கால் நகங்கள் கண்களில் பட்டது. சுந்தர் office சென்றத்தும் நிதானமாக ஒரு குளியல் போடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தேன். இதையும் இன்று கவனிக்க வேண்டும்.சாப்பிடும் மேஜை அருகில் நாற்காலியின் சத்தம் கேட்க நான் உற்சாகமாக எழுந்தேன். சில கணங்களில் நானும் சாப்பாடு மேஜை அருகே அடைந்து விட்டேன். தன கோப்பையில் இருந்த corn flake சாப்பிட ஆரம்பித்து விட்டாலும் என்னைப் பார்த்ததும் அவர் நிறுத்தி விட்டார்."குட்டி......வா ! வா ! என் கூட சாப்பிட நீ வந்தது ரொம்ப சந்தோஷம்" என்று செல்லமாக மனப்பூர்வமாக சொன்னார்.
நான் அவர் அருகாமையில் சென்று எதிர்பார்ப்போடு அவரிப் பார்த்தேன். என் கோப்பையை என் அருகில் தள்ளிவிட்டார். மிகுந்த ஆவலோடு என் கோப்பையிலிருந்த பாலை "சளப் சளப்" என்று சப்தம் எழ குடிக்க ஆரம்பிதேன் - என் வால் சீராக ஆடிக்கொண்டு இருந்தது.
நன்றியை வெளிப்படுத்த நான் வேறென்ன செய்ய முடியும்...சொல்லுங்கள் ?
என் ஒரே பிரச்னை என்னவென்றால் சுந்தர் நான் அவருடன் இருப்பதையே உணர்ந்ததாக தெரியவில்லை; எப்போதும் வெறித்த பார்வையுடனும் தீவிர யோசனையுடனும் இருந்து வந்தார்.வசந்தாவின் ஞாபகத்திலிருந்து மீளவில்லை போல்தான் தெரிந்தது. எனக்கு அவள் மேல் கையாலாகாத பொறாமை ஏற்பட்டது - அவளிடம் நான் ஏங்கும் அனைத்தும் இருந்தது - அன்தல் பகட்டான மேல் அங்கியைத் தவிர. ஆம். என் அம்மா எனக்கு கொடுத்த ஒரே சீதனம் அதே போன்ற ஒரு அங்கி தான். ஒரு வகையில் பார்த்தால் எனக்கு வசந்தா மேல் கோபமும் இருக்க நியாயம் இல்லை - அவள் கடந்த காலம் என்னுடையது அளவுக்கு கேவலமானதாக இருக்க வாய்ப்பு இல்லை.
இதெல்லாம் நடந்து ஒரு வருடம் கழிந்திருக்கும். சுந்தருக்கு என் நன்றியைக் காட்டுவதற்கு நான் "ரோஜா" bar பக்கம் போகவே இல்லை. அவரும் வசந்தாவை மறந்து விட்டதாகத் தான் தெரிகிறது. என் எதிரே ஒரு முறை கூட அவளைப் பற்றி அவர் பேசியது கிடையாது. ஒரு வகையில் இவர் விசித்திரமான ஒரு மனிதர்தான். என்னை பற்றியும் முக்கியமாக என் கடந்த காலத்தைப் பற்றிக்கூட கேட்டதில்லை. கேட்டுத் தெரிந்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றே எனக்கு படுகிறது.
இப்போது எல்லாம் பழங்கதையாகப் போய் விட்டாலும் என் கடந்த காலத்தைப் பற்றிய உண்மைகளை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே நான் விரும்பினேன். என் குடும்பத்தில் இருந்த நால்வரில் நானே கடைக்குட்டி - ஆகவே எப்பொழுதும் எந்த விஷத்திலும் நானே கடையாகப் பொய் விட்டது என் துரதிர்ஷ்டம். என் தகப்பன் யார் என்று எனக்குத் தெரியாது. ஒரு முறை வீட்டுக்கு திரும்பிய போது என் தாய் வேறு ஒருவருடன் ஓடிப் பொய் விட்டால் என்று தெரிய வந்தது. என்னுடைய தமக்கைகளில் ஒருத்தியான கவிதா - எங்கள் அம்மா திரும்பி வருவது பற்றி என்னத்தை ஒழித்து விடச் சொன்னாள். அவள் கணித்தது போலவே அதற்கு பிறகு என் அம்மாவை நான் பார்க்கவே இல்லை. நம் தாய் ஒரு ஓடுகாலி என்ற உண்மையை ஒப்புக்கொள்வது எவ்வளவு அவமானம் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்!
அநாதை ஆகிவிட்ட நான் தனியாக திரிய ஆரம்பித்து விட்டேன். அரசாங்கம் கண்காணிக்கும் எந்த அவமானகரமான செயலையும் நான் செய்ய முயலவில்லை. முத்துவுடன் தொடர்பு எப்படி ஏற்பட்டது என்று இன்று சரியாக நினைவுக்கு ;வரவில்லை. கருப்பனாக இருந்தாலும் நல்ல அழகன் - எந்த பெண்ணையும் சபலப்படுத்தும் வகையில் ஒரு வசீகரச் சிரிப்பு.மூன்று வருடங்களாக கப்பலில் வேலை செய்து வருவதாக என்னிடம் சொன்னான்.அவன் என்னிடம் நெருக்கமாக இருக்கும் வேளைகளில் அவன் சொல்லும் எதையும் நம்புவதற்கு தயாராக இருந்தேன். வெகுளியாக. அவனிடம் நான் - எனக்கு தேவைப்படுவதெல்லாம் இருக்க ஒரு அமைதியான இருப்பிடம் , வேளாவேளைக்கு உணவு மற்றும் எனக்கே எனக்கு என்று ஒரு குடும்பம் - என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். என் விருப்பங்களில் கடைசியை அவன் நிறைவேற்றி விட்டு எங்கோ மறைந்து விட்டான். ஆம்.....என்னை கர்ப்பம் ஆக்கிவிட்டு அவன் சென்று விட - எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன; இரண்டுமே பெண் குழந்தைகள். நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பற்றி நான் முத்துவுக்கு தெரிவிப்பதற்கு முன்னரே அவன் கப்பலில் அடுத்த பயணத்திற்கு புறப்பட்டு விட்டான்.அவன் போல் அழகனை இருத்தி வைத்து கொள்ள நான் எதுவும் செய்ய இயலாது. எத்தனையோ பெண்கள் அவனிடம் மயங்கும் வகையில் இருந்த அவன் தோற்றத்து நான் அவனுக்கு சில காலத்திற்கு துணையாக இருந்ததே அதிகம்.
என் செல்ல மகள்களை நான் அன்புடன் பராமரித்து வந்தேன் - துரதிர்ஷமாக அரசாங்க அதிகாரிகள் கண்ணில் பட்டு விட, நான் இருவரையுமே இழந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டது. இப்போது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை. நல்ல வீடுகளில் அவர்கள் அடைந்து இருந்தால் எனக்கு திருப்திதான். முத்துவின் களையை இரண்டு பெண்களுமே கொண்டு இருந்தார்கள் - அதுவே அவர்கள் இருவரையும் கடைசி வரை காப்பாற்றி விடும் என்று நினைத்துக் கொண்டேன்.இது பற்றியெல்லாம் சுந்தருக்கு நான் சொல்லும் வகையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எந்த கேள்விகளும் அற்ற அவன் மவுனம் எனக்கு இது பற்றியெல்லாம் அவனிடம் பேசுவதற்கு எந்த சந்தர்ப்பத்தையும் இந்த ஒரு வருட காலத்தில் அளிக்கவில்லை.
முத்து என்னை விட்டு அகன்றதும் நான் ரோஜா barல் சேர்ந்தேன். நான் சேர்ந்தது பகுதி நேர வேலைதான் என்பதால் bar முதலாளி எனக்கு உண்பதற்கோ பருகுவதற்கோ எதுவும் தரவில்லை. சுந்தர் வாரத்திற்கு ஒரு முறையோ சில சமயம் இரு முறையோ வருவார். முதலில் நான் உங்களிடம் சொல்லியிருந்த வசந்தாவின் பரிச்சயம் ஏற்ப்பட்ட பிறகு தினமும் வர ஆரம்பித்தார்.
அவர் தான் குடிப்பதற்கு வெறும் beer மட்டும் என்று சொல்லும் போதே எனக்கு ஏற்ற துணை இவர்தான் என்று தோன்றி விட்டது. அவரிடம் நட்பு பாராட்ட அங்கு வேலை செய்யும் பெண்கள் எவ்வளவு முயன்றாலும், அதெல்லாம் சுந்தரை அசைத்து விடவில்லை. பிறகு வசந்தாவிடம் அவர் பழக ஆரம்பித்தது எனக்கு அதிர்ச்சிதான் - அவர் போன்ற ஒருவருக்கு அவள் ஏற்ற ஜோடி கிடையாது என்று மனப்பூர்வமாக நம்பினேன். கடைசியில் குடும்பப் பாங்கான என் தோற்றம் என்னை அவரிடம் கொண்டுச் சேர்த்தது. அந்த bar-லியே நான் ஒருத்தி தான் ஒரு ஸ்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டேன் என்று நினைக்கிறேன்.
அவருடன் சேர்ந்து அவர் இருப்பிடம் சென்ற என்னை தன படுக்கையில் அவர் முதல் நாளே மிகவும் இயல்பாக அனுமதித்தார்.அவர் தன உடைகளை களைவதற்காக குளியலறைக்கு சென்று விட, மெத்தையில் எந்த பக்கத்தில் நாம் படுக்கையில் சாயலாம் என்று நானாகவே அனுமானம் செய்தது கொண்டு ஒரு பக்கத்தில் அமர்ந்தேன். அன்றிலிந்து இன்று வரை அவர் என்னை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெளியில் அனுப்ப முயலவில்லை. இது ஒரு அற்புதமான் உறவு - அவர் என்னிடம் கடிந்து கொண்டதோ கேட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டியதோ கிடையாது ; ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் நான் தடுமாறி கீழே விழ நேர்ந்த போது, என் அவசரம் கண்டு கனிவான குரலில் திட்டியதாக நினைவு.
"ப்ர்ர்ர்ர்ர்ர் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'" - அந்த அலாரம் சனியன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. சுந்தர் எழுந்திருக்கலாம் என்று முடிவு செய்யும் வரை இந்த எரிச்சல் தரும் சத்தத்தைக் கேட்டுத்தான் தொலைக்க வேண்டும். ஒரு முறை இந்த சத்தத்தை நிறுத்த நான் அவரைத் தாண்டி அந்த கடிகாரத்தில் கை வைக்க முயல, அது கீழே விழுந் தொலைக்க - சுந்தர் எரிச்சல் பட நேர்ந்து விட்டது. இந்த அலாரம் சத்தமே பரவாயில்லை என்று எனக்கு தோன்றும் அளவு அந்த சம்பவம் போய் விட்டது. இனி இந்த அலாரம் பற்றி எந்த முயற்சியும் எடுப்பத்தில்லை என்று முடிவே செய்தது விட்டேன். ஒரு வழியாக போர்வைக்குவியலில் இருந்து ஒரு கை வெளியே வந்து கடிகாரத்தை சமாதானப்படுத்தியது. எப்போதும் பூனைத் தூக்கம் மட்டுமே பழக்கமான எனக்கு அவரின் சின்னச் சின்ன செய்கைகள் கூட விழிப்பு கண்டு விடும். சுந்தர் என்னிடம் கேட்டிருந்தால் இந்த அலாரம் சனியனை விட நளினமான முறைகளில் நான் அவரை எழுப்பிவிடுவேன். மனிதர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை விட என் தன்மையான வழிகளில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு.
அரைத்தூக்கத்தில் சுந்தர் என்னை நோக்கி புரண்டு என்னை இருக்க அணைத்துக்கொண்டு பின் விடுவித்தார் - அவரின் வழக்கமான புன்னகையோடு. அதற்கு பிறகு ஒரு கொட்டாவி, சோம்பல் முறிப்பு எல்லாம் வரிசையாக நடந்தது. "சீக்கிரம் கிளம்ப வேண்டும்; இல்லையென்றால் வேலைக்கு late ஆகிவிடும்" என்ற வழக்கமான வசனம் ! இது போன்ற அவரின் வழக்கமான செய்கைகள் எந்த ஒரு பெண்ணக்கும் அலுப்பு ஏற்படுத்தி விடும எனக்கு மட்டும் அப்படி தோன்றியது இல்லை. நாம் தேடி வந்த பொக்கிஷம் இவர்தான் ; நமது தேவை இந்த மாதிரியான ஒரு ஸ்திர வாழ்வுதான் என்று எனக்கு நன்றாக புரிந்து இருந்தது.
சுந்தர் படுக்கை விட்டு எழுந்து தன் காலணிகளை வழக்கம் போல மாற்றி போட்டுகொண்டு பிறகு தடுமாறியவாறு சரி செய்து கொண்டு குளியலறை நோக்கிச் சென்றார். மிகச்சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து - உள்ளே சென்றதை விட சற்றே மலர்ச்சியாக வெளியே வந்தார்.அவருடைய இந்த அலுப்பூட்டும் வழக்கங்களுக்கு நான் பழகிப் போயிருந்தேன் ; அவரும் சுத்தம் பற்றிய என் தீர்க்கமான ஒழுங்கு முறைகளுக்கும் ஸ்திரத்தன்மை பற்றி என் கருத்துகளுக்கும் பழகிப்பொயிருந்தார்.
"சோம்பேறி..... எழுந்திரு!" என்று ஒரு குரல் கொடுத்தார் - தன மென்மையான குரலில்தான். நான் ஒரு முறை புரண்டு அவர் படுத்திருந்த இடத்தில் பள்ளத்தில் உடல் அடையுமாறு செய்து கொண்டு கண்களை மீண்டும் மூடிக் கொண்டேன்.
"ம்ம்ம்ம்ம் நான் வேலைக்கு போகும் முன்னர் உனக்கும் காலைச் சிற்றுண்டி தந்து விட்டு போக வேண்டும் போல் இருக்கிறது" என்று சொல்லியவாறே அவர் மாடியிலிருந்து கீழே செல்ல நான் மவுனமாக இருந்தேன். இன்னும் சில கணங்களுக்குள் அவர் வாசல் கதவைத் திறந்து செய்தித் தாளையும் தபால்களையும் எடுத்துவிட்டு பால் பாக்கெட் -யும் எடுத்து உள்ளே வருவார். அதன் பிறகு, வழக்கமே மாறாமல் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சியவாறு எனக்கு பிடித்த காலைச் சிற்றுண்டியையும் தயாரித்து விடுவார். அதனையும் ஒரு கப் - ல் எனக்கு சூடான பாலையும் தனக்கு இரண்டு கோப்பை காபி-யையும் எடுத்து சாப்பிடும் மேஜை மேல் அடுக்கி விடுவார்.
எந்த கணம் எந்த செயல் நடக்கும் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். பால் kettle கொதிக்கும் ஓசை, பாலை அவர் ஊற்றும் சத்தம் பிறகு மேஜை மேல் அவை வைக்கப்பட்டு நாற்காலி இழுக்கப்படும் சத்தம். அந்த கடைசி சத்தம் கேட்டதும் நான் உற்சாகமாக அவரோடு சேர்ந்து உண்ணுவதற்கு தயார் ஆவேன்.
என் கால்களை கீழ்நோக்கி நீட்டியவாறு உடலை வளைக்க,. அடர்ந்து வளர்ந்திருந்த என் கால் நகங்கள் கண்களில் பட்டது. சுந்தர் office சென்றத்தும் நிதானமாக ஒரு குளியல் போடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தேன். இதையும் இன்று கவனிக்க வேண்டும்.சாப்பிடும் மேஜை அருகில் நாற்காலியின் சத்தம் கேட்க நான் உற்சாகமாக எழுந்தேன். சில கணங்களில் நானும் சாப்பாடு மேஜை அருகே அடைந்து விட்டேன். தன கோப்பையில் இருந்த corn flake சாப்பிட ஆரம்பித்து விட்டாலும் என்னைப் பார்த்ததும் அவர் நிறுத்தி விட்டார்."குட்டி......வா ! வா ! என் கூட சாப்பிட நீ வந்தது ரொம்ப சந்தோஷம்" என்று செல்லமாக மனப்பூர்வமாக சொன்னார்.
நான் அவர் அருகாமையில் சென்று எதிர்பார்ப்போடு அவரிப் பார்த்தேன். என் கோப்பையை என் அருகில் தள்ளிவிட்டார். மிகுந்த ஆவலோடு என் கோப்பையிலிருந்த பாலை "சளப் சளப்" என்று சப்தம் எழ குடிக்க ஆரம்பிதேன் - என் வால் சீராக ஆடிக்கொண்டு இருந்தது.
நன்றியை வெளிப்படுத்த நான் வேறென்ன செய்ய முடியும்...சொல்லுங்கள் ?
Enjoyed it the same way as I did many years before when I read the original English version. Good one. -Gowri.
ReplyDeleteLavanya Murali
ReplyDeleteFeb 15 (7 days ago)
to me
Yes, i did like it :)
Keep posting...
Lavanya Murali
Comment ku pota comment a post pannirukkiye.... v.good... ;)
ReplyDeleteOn Sun, Feb 23, 2014 at 5:34 PM, Ambi Srinivas wrote:
ReplyDeleteA good story. Liked it. Keep going.