நமது முதலமைச்சர் குடும்பத்தின் மற்றொரு கொடை - ஆம், அவரது சீர்மிகு பேரப்பிள்ளையின் மற்றொரு தயாரிப்பான "கோ" திரைப்படம் பார்க்கும் பாக்கியம் வாய்த்தது. (எவரிடமாவது இது இக்குடும்பத்தின் எத்தனையாவது கொடை என்ற கணக்கு உள்ளதா ? எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.....தாத்தாவை மாதிரியே !!! )
விறுவிறுப்பான திரைக்கதை..... நிறைய இடத்தில் புத்திசாலித்தனம் பளிச்சிடும் இயக்கம்... அற்புதமான கேமரா .... இரசிக்கும்படியான இசை .... சந்தேகம் இல்லாமல் மற்றுமொரு வெற்றிப் படம் தான் !!
விறுவிறுப்பான திரைக்கதை..... நிறைய இடத்தில் புத்திசாலித்தனம் பளிச்சிடும் இயக்கம்... அற்புதமான கேமரா .... இரசிக்கும்படியான இசை .... சந்தேகம் இல்லாமல் மற்றுமொரு வெற்றிப் படம் தான் !!
கடைசி சண்டைக்காட்சியில் கதாநாயகன் இறந்து இருந்தால் கண்டிப்பாக படத்தின் "message" பற்றி ஒரு நெருடல் இருந்திருக்கும் - அதிர்ஷ்டவசமாக அவனை பிழைக்க வைத்து ஒரு சாமான்யனாக வலம் வரும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பது ஆறுதலான விஷயம்.
இருந்தாலும் விமர்சனம் என்று வந்து விட்டால் நம் ஆழ் மனதில் - குறைகளை அறைகூவி விடும் ஒரு வழிமுறை தானே ?? இதோ........
(1 ) கதாநாயகன் துடிதுடிப்பான புத்திசாலித்தனமான வாலிபனாக சித்தரித்து இருப்பது மகிழ்ச்சிதான்.....!! இருந்தாலும் படம் நெடுகிலும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கேமராவை எடுத்து click - செய்வது கொஞ்சம் போரடிக்கிறது.... அந்த காலத்து MGR படங்களில், அண்ணல் முதல் சீன்-இல் மட்டும் Doctor ஆகவோ வக்கீல் ஆகவோ வந்து விட்டு பின் வரும் காட்சிகளில் நமக்கு தெரிந்த "அதே" கதாபாத்திரமாக வலம் வருவது ஒரு உச்சம் என்றால் இந்த படத்து கதாநாயகன் ஒவ்வொரு frame-லும் கேமராவை எடுப்பது மற்றொரு உச்சம்.
இருந்தாலும் விமர்சனம் என்று வந்து விட்டால் நம் ஆழ் மனதில் - குறைகளை அறைகூவி விடும் ஒரு வழிமுறை தானே ?? இதோ........
(1 ) கதாநாயகன் துடிதுடிப்பான புத்திசாலித்தனமான வாலிபனாக சித்தரித்து இருப்பது மகிழ்ச்சிதான்.....!! இருந்தாலும் படம் நெடுகிலும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கேமராவை எடுத்து click - செய்வது கொஞ்சம் போரடிக்கிறது.... அந்த காலத்து MGR படங்களில், அண்ணல் முதல் சீன்-இல் மட்டும் Doctor ஆகவோ வக்கீல் ஆகவோ வந்து விட்டு பின் வரும் காட்சிகளில் நமக்கு தெரிந்த "அதே" கதாபாத்திரமாக வலம் வருவது ஒரு உச்சம் என்றால் இந்த படத்து கதாநாயகன் ஒவ்வொரு frame-லும் கேமராவை எடுப்பது மற்றொரு உச்சம்.
பெருங்குறையாக சொல்லவில்லை - ஆனாலும் நிச்சயமாக மனத்தில் ஒரு நெருடல்....ஆயாசம்.....!!
(2 ) கதாநாயகி தமிழக திரைவானில் பட்டொளி வீசி பிரகாசித்த முன்னாள் கதாநாயகி-யின் தவப்புதல்வியாம் !! தாயார் முடிக்க மறந்த சேவையை தொடர்ந்து முடிக்க, தன்னால் முடிந்த பங்கை தமிழ்த் திரைத்துறைக்கு ஆற்ற வந்த மற்றும் ஒரு மெழுகு பொம்மை.....!!
ஏற்கனவே வில் மாதிரி வளைந்து இருக்கும் புருவத்தை வேண்டும் என்றே தூக்கி வைத்து இருப்பது போல் தோன்றுவது என் மனப்பிரமையோ என்னவோ ? எதற்காக தலை முடியை படம் நெடுகிலும் கோதிக்கொண்டே இருக்கிறார் இன்று புரியவில்லை.....!! (ஒரு வேளை boy cut மாதிரி சிகை அலங்காரம் இருந்திருந்தால் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்க ஒரு வாய்ப்பு உள்ளதோ தெரியவில்லை ) . "எனக்கு எதற்கு உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட புடவையும் சுடிதாரும்?" என்ற கேள்வி கண்களில் தெரிய மருண்ட மான் போல் "திரு திரு" என்று விழிக்கிறார்....!!
நடிக்கத் தெரியாது என்ற குறையே தெரியாமல் இயக்குனர் புத்திசாலித்தனத்தால் பிரகாசமான - மிகவும் அதிர்ஷ்டமான முதல் வாய்ப்பு....!! நன்றாக பயன் படுத்திக்கொண்டு இருக்கிறார்....!! வாழ்க வளமுடன்......!!
நடிக்கத் தெரியாது என்ற குறையே தெரியாமல் இயக்குனர் புத்திசாலித்தனத்தால் பிரகாசமான - மிகவும் அதிர்ஷ்டமான முதல் வாய்ப்பு....!! நன்றாக பயன் படுத்திக்கொண்டு இருக்கிறார்....!! வாழ்க வளமுடன்......!!
(3 ) திரைக்கதை மிகுந்த புத்திசாலித்தனத்துடன் அமைக்கப்பட்டு இருந்தாலும் இடைவேளைக்கு அப்புறம் ஏகப்பட்ட திருப்பங்கள் திகட்ட வைத்தன. சுக்கானை இழந்த படகாக சிந்தனை அலைகழிக்கப்பட்ட ஆயாசம் எனக்கு தோன்றியது. கதாநாயகனுக்கும் முதலமைச்சர் பதவியில் அமரும் அவனது நண்பன் இடையே இருக்கும் நெருக்கத்திற்கு மேற்தளத்தில் அந்த நண்பனின் இன்னொரு வில்லன் பரிமாணம், இந்த இரு தளங்களுக்குள் இடையில் naxalite - தொடர்பு என்ற அடுக்கு - சற்றே சிந்திக்க வைத்து பிறகு இரசிக்க வைத்தது.
(4 ) வன்முறையும் தீவிர வாதமும் கை வராவிட்டால் அரசியலில் வெற்றி பெறவே முடியாது என்ற சித்தாந்தம் மீண்டும் மீண்டும் தமிழ்த் திரையுலகத்தில் வலியுறுத்தப்படுகிறது. முதலமைச்சர் பதவியில் அமரும் கதாநாயகனின் நண்பனின் அந்த கொடிய முகம் அவனது கட்சியைச் சார்ந்த யாருக்குமே தெரியாது என்பது சற்று நம்ப முடியாத அம்சம் தான்.... !!
படம் நெடுக வன்முறையை கொப்பளிக்க விட்டு விட்டு முடிவில் (மட்டும்) ஒரு positive message நமக்கு ஆறுதாலாக தருவது - ஒரு வகையில் சாமர்த்தியம் என்றே கருதத் தோன்றுகிறது......!!
படம் முழுவதிலும் இதை தயாரித்தவரின் பின் புலம் பற்றிய எண்ணங்களைத் தவிர்க்க முடியவில்லை.....!! சாத்தான் வேதம் ஓதுவது என்ற அந்த பழமொழியையும் நினைவு கூறாமல் இருக்க இயலவில்லை....!! இது என் குறை பாடாகவும் இருக்கக் கூடும்.... ஹ்ம்ம்....!!
(5 ) மீண்டும் அந்த பழகிப்போன கம்பீரக் குரலோடு பிரகாஷ்ராஜ்.....!! முதலமைச்சர் பதவியில் இருப்பவருக்கு இந்த அளவு உணர்ச்சி வெளிப்பாடு அவசியமா என்ற கேள்வி என் மனத்தில் எழுந்தது. இலவசங்கள் பற்றியும், நல்ல முறையில் அமைந்த தேர்தல் வாக்குறுதிப் பட்டியல் பற்றியும் நிஜத்தின் சுவடியை காட்டும் வகையில் காட்சி அமைத்து இயக்குனர் ஆச்சர்யப்படுத்துகிறார்.
மொத்தத்தில் நல்ல படம்..... You can very well go to "kho "
சுரேந்திரன்
No comments:
Post a Comment