Sunday, May 1, 2011

அதே தான் !! கவிதை கவிதை......!! படி ......!!

ப்ரிய நெஞ்சங்களே


பொது நலம் பற்றியும் சமூகம் பற்றியும் அக்கறை இருப்பது போல் நாம் எவ்வளவு தான் வேடமிட்டாலும் நம் ஆழ் மனத்தில் நாம் எல்லோருமே சுய வாதிகள் தான். கவனிக்கவும் - நான் "சுயநல வாதி" என்ற சொல்லை உபயோகிக்கவில்லை.


பிரபஞ்சத்தில் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி நாம் உருவாகும் எண்ணமும், முன்வைக்கும் வாதமும் நம் கற்பனையான தெளிவும் "நமதே" அன்றி "அந்த பொருள்-உடையது அல்ல என்பதே என் துணிபு.... (ஆம்... "என்" !!)


பல மொழி வித்தகனாக இருக்கப்பட்டவன் தூக்கத்தின் நடுவே திடீர் என்று குளிர்ந்த நீர் ஊற்றி எழுப்பப் பட்டதும் "எண்ட அம்மே" என்று அலறியவாறு எழுந்து ஒரு புதிர் அவிழ காரணமாய் இருந்த (தெனாலி கதை தெரியுந்தானே ?) அதே "நான்" என்ற உணர்ச்சி பற்றி தான் இந்த பதிவு.


இதை மேலும் விளங்கிக் கொள்ள, உற்சாகக் கிள்ளை-யாய் துள்ளும் என் மனம் பற்றி மேலும் அறிய பொறுமையாக மேலே படிக்கவும்.


சுவாரஸ்யமாய் "ஆனந்த விகடன்" புரட்டிக் கொண்டு இருந்த நான் அண்ணா ஹசாரே பற்றி ஒரு கட்டுரை - யின் ஆரம்ப வரிகளைப் படித்ததும் உற்சாகத்தில் மிதந்தேன். கட்டுரை-யின் கருவை பலப்படுத்த சீன ஞானி லாவோ tsu - வின் அற்புத வரிகள் - அப்படியே கீழே தருகிறேன் ....


இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள்

எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன

இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள்

சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன

ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்

மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது

ஒன்பது மாடி கோபுரம்

சிறு மண் குவியலிலிருந்து எழும்புகிறது

ஆயிரம் மைல் பயணம்

காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது

எனவே பெரிய விஷயங்களை

ஞானி ஒருபோதும் செய்ய முயல்வதில்லை

அதனால்தான் பெரிய விஷயங்களை

அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது !!


சரி, எதனால் உனக்கு இதில் இவ்வளவு உற்சாகம் என்று கேட்கிறீர்களா ? ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கவிதை இதோ -






என் மகிழ்ச்சியின் மூலம் புரிந்ததா ?


நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த தத்துவ ஞானி சொன்ன கருத்தை நானும் உணர்ந்திருக்கிறேன் என்பது அல்ல விஷயம்.


நான் மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு விஷயத்தைத்தான் அவரும் சொல்லியிருக்கிறார் - அதுவும் பிரபஞ்ச உண்மை ஒன்றின் பாதி யைத்தான்....!! மிச்சத்தை சொல்ல நான் வரப்போகும் காரணத்தால் தான் என்னவோ ?

வாழ்க வளமுடன்.... என்றென்றும்......

சுரேந்திரன்



No comments:

Post a Comment