Friday, March 31, 2017

***** அபிஷேகம் ? அலங்காரம் ? நைவேத்தியம் !! *****

அன்புடையீர் 

நேற்று குருவாரம் - மயிலை சாயி சமாஜம் வரை சென்று அப்படியே நான் ரொம்ப நாளாக குறிவைத்து இருந்த சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் "இராயர் கபே " என்ற அந்த புராதானமான உணவகத்திற்கு சென்று வந்தேன்.

ஒரு உணவு விடுதிக்கு "குறி" வைத்து செல்வாருண்டா ? என்ற கேள்வி கொஞ்சம் personal ஆக மாறுவதால், எதற்கு நான்  "குறி" வைத்து செல்ல வேண்டும் என்பதை சுருக்கமாக சொல்கிறேனே .... சாப்பிட்டது என்னவோ சிற்றுண்டி தான்.... :-) அதனால் விளக்கமும் சிறிசாக இருப்பது தான் சரி !

20  வருடங்களுக்கு முன் இந்த hotel பற்றி ஏதோ வார இதழில் படித்த ஞாபகம். இந்த காலத்தில் தன் பாரம்பர்யத்தையம், தரத்தையும் மூச்சு போல் பாவிக்கும் வியாபாரிகள் (ஆம்... hotel என்பது service என்று சொல்லப்பட்டாலும் அடிப்படையில் இது வியாபாரம் தானே ?) இருப்பது கொஞ்சம் மதிக்கப்படவேண்டிய விஷயமாக எனக்கு பட்டது. முக்கியமாக இந்த ஹோட்டல் துறையில் - தரத்தை அதிக விலை வைக்காமல் தொடர்ச்சியாக ஒரு உறுதியுடன் தர விழைவது என்னை பொறுத்த வரையில் கொஞ்சம் நெகிழ வைக்கும் விஷயம். 

கிட்டத்த 2 வருடம் முன்னர், அப்புறம் சமீப காலத்தில் ஒரு முறை என்று இரண்டு தடவை - ரொம்ப சரியாக  சாயங்காலம் 7 மணி அளவில் போய் - அந்த "சின்னஞ்சிறு" பெயர் பலகை கூட இல்லாத (இவர்களுக்கு தேவையா என்ன ?) அந்த ஹோட்டலை அடைந்து -  அவர்கள் மூடி விட்டதால் ,  திரும்பி வர வேண்டியது ஆகி விட்டது.
விதி வலியது......அதை என் மதியால் இம்முறை காலை நேரத்தில் சென்று வென்ற கதை இந்த பதிவு....

புதன் கிழமை என் office வேலையில் கொஞ்சம் அதிகம் சிக்கிப்போய், அதிகாலை 4 மணி அளவில் படுக்க போக (night shift பாருங்கள் ! ) , படுத்த பிறகு தூக்கம் கொஞ்சம் கூட வராமல் ..சட்டென்று இந்த முடிவு எடுத்தேன்.
சுமார் 5 30 க்கு எழுந்து, என் கண் எரிச்சலையும் அயர்வையும்  ஒரு நல்ல ஸ்நானத்தின் துணை கொண்டு துறந்து... மயிலை சாயி சமாஜம் பாபா முன்னர் சரியாக 7 மணிக்கு நின்றிருந்தேன்  - விழாயக்கிழமை ஆதாதால் -  queue வில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள். அதனால் என்ன  ? பரவாயில்லை. என் திட்டம் 8 மணிக்கு இராயர் ஹோட்டல் செல்வது....என் மனோரதம் ஈடேற்றப்படுவது...என்று என் சங்கல்பம்.
கோயிலில் தரப்பட்ட சூடான அற்புதமான வெண்பொங்கலை நன்றியுடன் தின்று முடித்து (என்ன யோசிக்கிறீர்கள்...? இது பிரசாதம். cinema வெளிப்படும் முன் trailer போன்று வயிற்றுக்கு ஒரு சின்ன ஆசுவாசம்) அங்கிருந்து 5 நிமிட தூரத்தில் இராயர் கபே. திறந்த ஹோட்டல் அமைப்பை (அல்லது அந்த சிறிய வீட்டை)  இப்போது தான் பார்க்கிறேன்.

என்னையும் சேர்த்து வாசலில் கிட்டத்தட்ட 10 பேர் . ஒரு வட இந்தியர் குடும்பத்தோடு வந்தது பெரிய விசேஷஷமில்லை. ஒரு ஜப்பான் பெண் தனியாக இந்த ஹோட்டல் - க்கு அந்த அதி காலை வந்திருந்தாள் . regular வாடிக்கையாளர்கள் சிலர் அந்த பெண்ணை கிட்டத்தட்ட தன்  வீட்டுக்கு வந்த விருந்தாளி போல பாவித்து விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். என்னை போல் புது முகங்களையும் புன்னகையால் பெரும்பாலானவர்கள் வருடியது - hotel உள்ளே போவதற்கு முன்னரே  ரொம்ப நெருக்கமாக  உணர்ந்தேன் . 20 நிமிட காத்திருப்புக்கு பின் - மேனேஜர் போல் ஒருவர் - எங்களை உள்ளே hall க்கு   (அது ஒரு சின்ன  ரூம் தான் ) எங்களை ... வரவேற்று உட்கார வைக்க பரபர வென்று இலை போடப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்பட்டு ... நாங்கள் வேட்டையாட தயாரானோம். 

எங்கள் இலையில் விழ வேண்டிய இட்டிலிகள் இன்னும் வெந்து கொண்டு இருக்க (அதுவும் எங்கள் கண் பார்வையில்...ஒரு இராட்சச பித்தளை அண்டாவில் பழைய முறைப்படி) அந்த மேனேஜர் மீண்டும் எங்களிடம் மென்மையான குரலில் " இன்னும் 10 நிமிஷம் " என்று அறிவித்தார். என் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் (regular customer) கூட அறிமுக உரையாடலில் நான் இருக்க - சில நிமிடங்களிலேயே...ஆவி பொங்கும் இட்லிக்கள் வந்து விட்டது.
அவரவர் தேவைக்கு ஏற்ப 3 / 4 / 5 என்று பரிமாறி கொண்டே  வந்த சிறுவன் எனக்கும் - நான் கேட்ட 3 இட்லிக்களை வைத்து விட்டு......சற்று அவசரமாக நகர்ந்தான் போல...... இருக்கிறது. என் தண்ணீர் டம்ளர் அவன் முழங்கையில் பட்டுவிட்டது போல் இருக்கிறது - நீர் என் இலையில் மொத்தமாக என் இலையில் கொட்ட-  நான் உண்டு கழிக்க வேண்டிய என் 3 இட்லிகள் மேல் . ஆறு போல் தேங்கி நின்றது. வெகு சில நொடிகளில் நான் இடுப்பில் கட்டி இருந்த வேட்டியும் நனைந்து இருக்கும் அபாயத்திலிருந்து - பாய்ந்து விலகி தப்பித்தேன் .

பந்தி கவனித்த அந்த மேனேஜர் பதறி போய் "சாரி : என்று என்னிடம்  சொல்லி -  வேறு இலை ஒன்றை எனக்கு வைக்க, மீண்டும் பரிமாற,  உத்தரவிட்டார். பிழை புரிந்த பையனும் முகம் வெளிறி என்னிடம் மன்னிப்பு கேட்க, பாபா வின் அருள் இன்னமும் என்மேல் சுரந்து ஓடிக்கொண்டு இருக்க நான் - "பரவாயில்ல தம்பி'" என்று ஆசுவாசம் செய்வதையும் அந்த மேனேஜர் மனிதர் கவனித்தார் . 

அடுத்த இலை என் முன் இடப்பட, நான் அதில் தண்ணீர் தெளிப்பதற்குள் 3 இட்டிலிகள் மீண்டும் போடப்பட்டன. நான் திகைத்து பார்க்க,  அந்த மேனேஜர் மனிதர் மீண்டும் பதட்டமாகி இந்த முறை நரசிம்மர் போல கர்ஜனை புரிந்தார். "என்ன அவசரம் உனக்கு...." எடுறா அந்த இலை யை - sir தண்ணீர் தெளிக்கறதுக்குள்ள ஏண்டா போட்ட ? ". இது வேறு பையன் பாவம் !

இவனும் வெலவெலத்து போய் என் இலை , புதிய இட்டிலிகளையும் பாய்ந்து எடுத்து உள்ளே போக - என்னை தவிர்த்த 15 பேர் சாப்பிட ஆரம்பிக்க, நான் நிராயுத பாணியாக அர்ஜுனன் போல செயலற்று "சும்மா" இருக்க நேரிட்டது. எனக்கான என் இலை இட்டிலிக்கள் 2 நிமிடங்களில் வந்து சேர்ந்தது. கெட்டி சட்டினி துணை சேர்க்க 4 இட்டிலிகளை பேரின்பமாய் உண்டு வெளியே வந்தேன். 
காபிக்கு வெளியே வந்து காத்து நிற்க வேண்டும் இந்த புண்ணிய ஸ்தலத்தில் (உள்ளே  அடுத்த பந்தி ஆரம்பிப்பதை வசதிப்படுத்த...)

அந்த மேனேஜர் மனிதர் ரொம்ப இயற்கையாக வருவது போல் என் அருகே வந்து..."எல்லாம் நல்லா இருந்துதா சார்  ? நீங்க கன்னடிகளா ?" என்று என் (கோபி சந்தன) திருச்சின்னத்தை பார்த்து கேட்க...நான் "தமிழ் தான் சார்..ரொம்ப பிரமாதமாய் இருந்துது சார்...நான் இனிமே உங்க ரெகுலர் customer " என்று சொல்லி ... "ஆனா ஒரு விஷயம் " என்று சொல்லி நிறுத்தினேன்.

கேள்வியோடு என்னை அவர் பார்க்க, அவருடன் சேர்ந்து ஒரு சில ரெகுலர் வாடிக்கையாளர்களும் இந்த புதியவனை புதிராகப்பார்க்க....நான் தெளிவாக புன்னகையோடு மேலும் சொன்னேன்....

"நான் நெக்ஸ்ட் தடவை வரப்ப எனக்கு நைவேத்தியம் மட்டும் போறும் சார்... அபிஷேகம், அலங்காரம் எல்லாம் அவசியம் இல்லை " என்று  புன்னகையோடு முடிக்க - அவர் முகம் சிரிப்பால் நிறைந்தது. என் தோளை வாஞ்சையாய் ஒரு கணம் தொட்டுவிட்டு அடுத்த பந்தியை விசாரிக்க என்னிடமிருந்து விலகினார்.

 புதிய அறிமுகங்கள் - நீண்ட நாள் தொடர்பாக மாற / மாற்ற  இது போன்ற தற்செயல் நிகழ்ச்சிகள்  நல்ல சகுனங்கள் தானே ? 
அந்த 6 இட்லிகள் தான் பாவம்......தங்கள் ஜென்ம பலம் ஈடேறாமல் குப்பைக்கு நேரடியாக போய் விட்டது.  விதியின் வலிமை தான் என்னே.......!!

சுரேந்திரன் 










Thursday, March 30, 2017

Special Days

Hi All

I am sure that every one has observed that there are very few special days in his / her life. By special days I am magnanimous enough to mean both good and bad - to essentially denote those few days that are not normal. 
(Now you are hell bent to argue with me about my adjective "special' in the title AND  why not substitute with "abnormal" or "one off" - I will go to the extend of changing it to "extra ordinary" ! howz' that !!....Lets not digress please)

Coming back to the point, I prefer that you get the title of this post straight and clear - both good and bad - before we move any further. After all we are here - in this world -  only to transcend  dualism isn't it .. ? 

Now, once again getting back to the first line of the post, we can easily observe that such special days actually represent the extreme sides of a normal curve ("bell curve"). I am making too many assumptions here -  One lives in this world for a normal duration and encounters life and its entire cycle sufficiently to understand what I mean exactly. 
The "bad" days of our life are quite minimal in the left side of the curve which perhaps - more or less - matches with the "good" / "great" days in the right side - leaving a huge mass of "normal" and "average" days in between these two extremes. 


Watch out, though the total number of such special days are sort of balanced in the long run, the problem is in the unpredictability / lack of a clear patttern...huh...? Stay there with me...

Now, Are we not aware that there are some special "good" / "bad" days due to our own volition ?
I am going to request you TO COMPLETELY IGNORE the count of these two sub categories - which might lead to more subjectivity. After all I have enough gun powder to write a separate post on how our volitions are essentially destined & we have very little discretion about this grand design that we call life.

We are only going to look at those special days - I mean both "good" and "bad" the destined ones...and look at ourselves and how our mind responds to them.

I get a feeling that most of us - unfortunately -  have the intrinsic quality to absorb the "bad" days - particularly in our culture - since we are too much hooked to destiny factor. After a short spell, the average minds stares at reality, absorbs and get adjusted to the tragedies of our lives....Life Goes On....!!

On the contrary - the so called "good" days are our real danger since we might go of board letting ourselves too loose.

It appears to me that life is like getting forced into a "joy" (?) ride in a Giant Wheel with a bit of secrecy element on the location of the Centre and the wheel blessed with varying radius.

If only we sincerely start learning to handle a " good " day with enormous care and special attention and willing to learn from our own "gaps"  (Yep our "gaps" / "misses" that we consciously / unconsciously do even on such "good days" - then) perhaps, our bad days might not turning worse - whenever they are destined.
We get to a progressive mindset  and not blame too much on destiny and start taking "bad days" upon ourselves. Won't it be a significant shift in our attitudes ?

Sorry for lot of words....my bad !! - Remaining helplessly as  a verbose for more than two decades but just want to add one more sentence before I close.

I had a "good" day yesterday.....Krishnaarpanam...As always

Surendran














Thursday, March 16, 2017

Part 2 : மணிரத்னம்......மணிமகுடம்......மனிதம் !!??


எச்சரிக்கை :  இந்த தலைப்பில் எழுதப்பட இருந்த என்  சிந்தனை கொஞ்சம் தடம் புரண்டு விட்டது. (மேலும் மெருகு ஏறி விட்டது என்று நீங்கள் கருதினால் நான் புளங்காகிதமே கொள்வேன்...என்பது வேறு விஷயம் )

முன் குறிப்பு : Part 1 எழுதி அதற்குள் - கிட்டத்தட்ட ஒரு மண்டலம் முடிந்து விட்டது.....காலம் வெகு வேகமாக சுழலுவது - நமது ஆரோக்கியமான வாழ்க்கையின் அறிகுறி தானே....? 
ஒரு மாமாங்கம் முடிவதற்குள் Part 2 எழுதுவதற்கு சாத்தியப்படத்திற்கு   எனக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.... (பார்த்திபன் கனவு படத்தில் விவேக் சொல்லுவது போல "எனக்கு வேற யாரு இருக்கா ?? ")

அன்புடையீர்.....

முதலிலேயே உண்மையை - முழு பூசணிக்காய் போல - போட்டு உடைத்து விடுகிறேன் . சுமார் 1 வாரம் முன்னாள் நான் கண்டு களித்த ஒரு திரைப்படம்...மணிரத்னம் இயக்கிய "குரு".
படமாக்கப்பட்டு சரியாக 10 வருடங்கள் கழித்து நான் முதல் முறை இப்போது தான் பார்க்க நேர்ந்தது. ஹிந்தி படமாக இருந்தாலும் என் குறைந்தபட்ச பாஷை அறிவு subtitle - உடன் சம்பாஷித்து மிகவும் நிறைவான அனுபவமாகத் தான் இருந்தது. இந்த பதிவில் மணியின் பல மணியான படங்களை ஒன்றாக கோர்த்து.... முத்தாய்ப்பாக -  "இரத்தினமாக" குரு படத்தை வைத்தது அழகு பார்க்கத் தான் நான்  சங்கல்பம் செய்து கொண்டேன். 
ஆனால்  பாருங்கள் - "காற்று வாங்க போனேன்....கவிதை வாங்கி வந்தேன் " என்ற பழமொழியின் கதையாக இந்த பதிவு தடம் மாறிப் போய்விட்டது.
("பிள்ளையார் பிடிக்க...குரங்காய்.... பழமொழியை நீங்கள் இந்த தருணத்தில் நினைத்து பார்க்க வேண்டியதில்லை..)

குரு படத்தின் நாயகன் அபிஷேக்-கின்  "சுமார்-திறமை" பற்றி ஓரளவு கேள்விப்பட்டு இருந்தாலும், (நான் அவர் நடித்து இராவண் தவிர வேறெந்த படமும் பார்க்க நேர்ந்ததில்லை) இந்த படத்தில் மிகவும் நிறைவாகவே நடித்து இருந்தார் என்று எனக்குப் பட்டது. எனக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாத "திருபாய் அம்பானி"யின் சாயலை, அந்த மனிதரின் விசேஷ குணங்களை ....வெகு அழகாக அபிஷேக் கையாண்டார்... (பெரியவர்களை இயல்பாக தொழும் செயல் - அநேகமாக படம் முழுவதும்).
நான் பல காட்சிகளில் ஒன்றிப்போய் இரசித்துத்தான்  பார்த்தேன். படம் பார்க்கும்பொழுதே மணிரத்தினத்தின் மற்றோரு படமான "இருவர்" எனக்கு நிழலாடியது...."நாயகன்" கூட....

சரி இந்த பதிவின் மூல பகுதியை ஆரம்பித்து வைப்போம் .... 
குறிப்பிட்ட இந்த மூன்று படங்களின் ஒற்றுமை என்ன என்பது உங்களுக்கு சட்டென்று விளங்கியிருக்கும். நிஜத்தில் வாழ்ந்த / வாழ்ந்து கொண்டிருக்கிற பெரிய மனிதர்களை பற்றி, அவர்களின் வாழ்வின் சில முக்கியமான தருணங்கள் மற்றும் சராசரி தருணங்கள் பற்றி..., அவற்றை அவர்கள் கையாண்ட விதம் பற்றி....சார்பு இல்லாமல், ஒரு பொதுவான பார்வையாக திரைக்கதைகள்.
சரி தானே... ? 
(இந்த மூன்று படங்களில் ஒன்று கூட மூல நாயகர்களின் கதை என்று இயக்குனரால் நேரடியாக அறிவிக்க படவில்லை . biography genre என்பது commercial திரைப்படங்களில் ஒத்துப்போகாத ஒன்று...; அதை விட்டுத் தள்ளுவோம் ).

நிற்க...இப்போது இதே  இயக்குனரின் மற்ற சில படங்களை பார்ப்போம்... 
ஒரு சாதாரணன் அசாதாரண சூழலில் தள்ளப்பட்டு அலைக்கழிக்கப்படும் சில படங்கள்... முக்கியமாக, ரோஜா, பம்பாய், உயிரே. அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டாள்..கடைசி இரண்டு படங்களில் கதாநாயகியாக ஒரு சிறுமியின் வித்தியாசமான நடிப்பு, சுற்றியிருப்பவர்களின் மனப்போராட்டம்... 
இந்த படங்கள் எல்லாமே ஒரு மாதிரியாக - இப்படி ஆனால் ? - hypothetical situation - முன்னிறுத்தப்படும் கதைகள். 

எழுபதுகளில் மகேந்திரன் என்ற மாபெரும் இயக்குனர் நமக்களித்த நவீன படங்களை விட  எண்பதுகளின் பிற்பகுதியில் வந்த மணிரத்னம் அதிகமாக தமிழ் மனங்களை தன்னுடைய திறமையால், நவீன சிந்தனைகளால் நம்மை பாதித்தார் என்பது நிஜம். ஆனால் சொல்லப்பட்ட எடுத்துக்காட்டுகள் போல, பெரும்பாலும் .... பெரிய மனிதர்களின் சாதாரண தருணங்கள் ...அல்லது சாமானியர்களின் முக்கியமான தருணங்கள் - நான் தொகுத்தது சரிதானே....?

வித்தியாசமான களங்களில் திரைப்படங்கள், அற்புதமான ஒளியமைப்பு மற்றும் உன்னதமான இசை இவற்றிற்காக நாம் மணிரத்தினத்தை பல விஷயங்களில் சகித்துக்கொண்டோம் - செயற்கை சொட்டும் பல காட்சிகள் மற்றும் மாந்தர்கள் - உதாரணமாக. ரோஜா படத்தில் இருப்பது போல மனிதர்களை கொண்ட ஒரு கிராமம் எங்கேயாவது கண்டு இருக்கிறீர்களா ? அல்லது மௌன ராகத்தில் கார்த்திக் -ன் அதீத நடிப்பு ("சந்திரமௌலி ....!! mr சந்திரமௌலி" நகைச்சுவை ?)  இப்போது பார்த்தால் நம்மால் சகிக்க முடிகிறதா ? அஞ்சலி படத்தில் படம் முழுக்க இருக்கும் ஒரு வித மேட்டுக்குடியின் செயற்கைத்தனம், அந்த அதீத விபரீத குழந்தைகள்.....
முத்தாய்ப்பாக கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் பலரால் பெரிதும் விமரிசிக்கப்பட்ட மணியின் "ரத்தினச்சுருக்க வசனங்கள்"!!
ஒரு திரைப்படம் "classical " அந்தஸ்தை பெறுவதற்கு முக்கிய அளவுகோல் அந்த படம் எல்லா காலத்திலும் இரசிக்கப்படக்கூடியதாக காலத்தை வென்றதாக இருக்கவேண்டும் ?அல்லவா
இயக்குனர் சிகரமான கே.பாலசந்தர் ரோஜா படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சி (மதுபாலா தமிழில் கெஞ்சுவது புரிபட்டு அந்த மத்திய மந்திரி அவருக்கு ஆறுதல் சொல்லும் கட்டம்) தன்னால் அவ்வளவு அழகாக எடுத்திருக்க முடியாது என்று புளகாங்கிதப்பட்டாராம். நிதி நெருக்கடியில் இருந்த அவர் இந்த படம் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தயாரிப்பில் தான் மீண்டார் என்பது எல்லாருக்கும் தெரிந்த கதை ! 
வேறு என்ன சொல்வார் பாவம்...

மணிரத்னம் - தமிழ் நவீன சினிமாவின் மணி மகுடமாக அங்கீரிக்க பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் இந்த பதிவு... என் அங்கலாய்ப்பு அவசியமா என்று தோன்றுகிறதா ? 

நான் சமீபத்தில் கண்டு களித்த "குரு " பற்றி சிலாக்கியமாக எழுத தோன்றிய என் எண்ணம், சட்டென்று  இந்த மேதகு இயக்குனர் மனிதனை - வெறும் சாதாரணானாக இருக்கையிலே தெய்வமாகும் சாத்தியக்கூறு பற்றி  ஏதாவது ஒரு படத்திலாவது நமக்கு புலப்படுத்தி இருக்கிறாரா? என்று யோசித்து பார்க்க...சட்டென்று ஒரு உதாரணம் போலும்.... மின்னல் போன்று ஒரு classic ஆங்கிலப்படம் ஞாபகத்திற்கு  வந்தது... 12 Angry Men .... கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன் வந்த கருப்பு வெள்ளைப் படம்....!!
நான் பார்த்தும் கிட்டத்தட்ட 3 - 4 வருடங்கள் ஆகிவிட்டது. நம்பினால் நம்புங்கள்...இந்த பதிவிற்காக -  மணிரத்தினம் படங்களின் வகைமை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள - அந்த படத்தை தேடி எடுத்து நேற்று மீண்டும் பார்த்தேன். சுமார் 100 நிமிடம் ஓடும் அந்த படம் முடியும் போது - என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது.
 "இல்லை ...இல்லவே இல்லை"
கண்களின் நீர் வழிய - பார்வை வெறிக்க இந்த பதிவை  - அந்த அற்புதமான ஆங்கிலப்படத்திற்காக  - மனதுக்குள் எழுத ஆரம்பித்து விட்டேன்..

நமது திரைப்படங்கள் செயற்கையாக வெறும் பொழுது போக்காகவே பெரும்பாலும் இருக்க காரணம்...மனிதத்தை (humane ness ?) சரிவர கையாளாததால் தான் என்று .படுகிறது.
முதலில் சொன்னது போல், மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள் கூட நம்பி தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் - அசாதாரண மனிதர்களையோ, அசாதாரண சம்பவங்களையே மையமாக  கொண்டவை. எனவே நம் திரைப்படங்கள் மாயைகளாகத்தானே  இருக்கும்.... ? அதற்காக சில வருடங்கள் முன் பிரபலமான கலைப் படங்கள்  (art film ) சரியாக பாதையா  என்று .கேட்டால்...அதுவும் எனக்கு முழுக்க சம்மதம்  இல்லை. அதுவும் எங்கேயோ இடிக்கிறது.
மனிதத்தின் இயற்கையான தன்மையாக உறைந்திருக்கும் தெய்வத்தை நமக்கு தரிசனம் தரச்செய்து -  நம்மை சிறிது அளவாவது கொஞ்ச நேரமாவது உயர்த்தி - குறைந்தபட்சம் படம் முடியும் வரையாவது நம்மை நெக்குருகி -   ஆனால் நம் உணர்வுகள் எதுவும் அந்த திரை மனிதர்களை  எவ்வகையிலும் பாதிக்காமல் அவர்களை இயல்பாகவே இருத்திவைப்பது.... இது ஒரு சாதனை திரைப்படத்தின் அடிப்படை குணாம்சமோ  .... என்று தோன்றுகிறது.

12 Angry Men - முழுக்கதையும் எழுதப்போவது இல்லை.
வெகு எளிமையான படம் - தெளிவானதும் கூட.  
தூக்கு கயிற்றின் பிடியிலிருந்து ஒரு சாதாரணனை தன் வைராக்கியமாக சுயத்தால் (strong personality ?)மற்றோரு  சாதாரண மனிதர் விடுவிக்கிறார். 
இரண்டு மணிக்கு குறைவாக ஓடும் அந்தப்படத்தின் கடைசி நிமிடம் பற்றி மட்டும் ஒரு சில வார்த்தைகள் !
நான் தேடியதை எனக்கு பொட்டில் அடித்தால்போல் புரிய வைத்த அந்த சாதாரண காட்சி படமாக்கப்பட்ட விதம்....அடடா !!

செயற்கரிய ஒரு செயல்புரிந்து விட்டு அந்த ஒல்லியான நெடிய மனிதர் - வானத்தை பார்வையிட்டு, மழையின் பாதிப்பை விழியால் அளந்தவாறு - தன் வழி நோக்கி அமைதியாக நடக்கையில்  <<நம் ஒவ்வொருவர் போலவே!!>>  நாமும் அமைதியில் உறைந்து போகிறோம். 
Human Possibility demonstrated without any pomp - isn't it ?

 இது போன்ற- வாழ்க்கை மீதும் நம்மீதும் நம்பிக்கை தர வல்ல படங்களை மாதத்திற்கு ஒன்று பார்க்க நேர்ந்தால், இரசிக்க முடிந்தால் அதை நம் நல்லூழாகவே கொள்ள முடியும்.

ஆம்.... தீதும் நன்றும் பிறர் தர வாரா !!

கிருஷ்ணார்ப்பணம் !!!

அன்புடன் சுரேந்திரன்