அன்புடையீர்
பொங்கல் சமயத்தில் - சுஜாதாவின் சிறுகதை தொகுதியில் முதல் இரண்டு புத்தகங்கள் - மொத்தம் சரியாக 110 கதைகள் - பரிசாக கிடைத்தது.
மன்னிக்கவும், இரவல் தான்...
இரவலும் ஒரு வகையில் உவந்து அளிக்கும் பரிசு தானே ? அதுவும் சொந்த அக்காவிடமிருந்து...
நான் சீர் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பண்டிகை சமயத்தில் ??
இரவலும் ஒரு வகையில் உவந்து அளிக்கும் பரிசு தானே ? அதுவும் சொந்த அக்காவிடமிருந்து...
நான் சீர் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பண்டிகை சமயத்தில் ??
ஒரு வாரம் தவம் போல் - இந்த 110 கதைகளையும் முழு மூச்சாக படித்து தீர்த்தேன்... (சிறு கதைகளில் இது ஒரு வசதி....) மேலும், சுஜாதா போன்ற ஒரு அனாயாசமான கதை-சொல்லியிடம் நீங்கள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு கூட உங்களை ஒப்படைக்க முடியும்.
அநேகமாக பாதி கதைகள் நான் வெவ்வேறு கால கட்டத்தில் படித்தவை தான். மீண்டும் நீண்ட நாள் கழித்து படிப்பது ஒரு சுகம்.
மேலும் நான் பிறந்த அந்த காலகட்டத்து கதைகளை (70-80) ஒரு வித புல்லரிப்புடன் படித்து மகிழ்ந்தேன். அப்போது சுஜாதாவின் பரிணாம வளர்ச்சி முடிவடையாத காலமாக இருக்க கூடும்.
இருந்தும் அவர் பின்னால் எழுதிய அற்புதமான சில படைப்புகளின் சாத்தியம் வெகு நிச்சயம் திடீரென்று அடையப்பட்டது இல்லை என்று தெளிவாக புரிந்தது.
அநேகமாக பாதி கதைகள் நான் வெவ்வேறு கால கட்டத்தில் படித்தவை தான். மீண்டும் நீண்ட நாள் கழித்து படிப்பது ஒரு சுகம்.
மேலும் நான் பிறந்த அந்த காலகட்டத்து கதைகளை (70-80) ஒரு வித புல்லரிப்புடன் படித்து மகிழ்ந்தேன். அப்போது சுஜாதாவின் பரிணாம வளர்ச்சி முடிவடையாத காலமாக இருக்க கூடும்.
இருந்தும் அவர் பின்னால் எழுதிய அற்புதமான சில படைப்புகளின் சாத்தியம் வெகு நிச்சயம் திடீரென்று அடையப்பட்டது இல்லை என்று தெளிவாக புரிந்தது.
எனக்கு தோன்றிய சில எண்ணங்களை பகிரலாம் என்று சித்தம். நம்புங்கள்.... நான் எழுத நினைத்ததில் கால் பகுதியை தான் எழுத இருக்கிறேன். அதுவே நீளமாக இருப்பதாக நீங்கள் கருதினால் ... என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.... (வேண்டாம்... மேலும் நீளமாகி விடும்)
1. அந்த அசாத்திய எழுத்து நடையை பரிசோதனையாக பல்வேறு பழைய கதைகளில் பயன் படுத்தியிருக்கார். அவரே ஒரு தொகுதியின் முன்னுரையில் சொல்லி இருப்பது போல் அவருக்கு காலக்கெடு மட்டுமே ஒரு நிர்ப்பந்தம் ஆகிவிட்ட சூழ்நிலையில் (எப்படியும் அவர் எழுத்துக்களை பதிப்பிக்க முன்னணி பத்திரிகைகள் காத்திருந்த காலம்) - கொஞ்சம் துணிச்சலாக - ஒரு புதிய எழுத்தாளன் நினைத்து கூட பார்க்க முடியாத சில பரிசோதனைகள்....
ஒரு கதையில் - ஏதோ ஒரு தினசரியில் (newspaper) வெவ்வேறு இடங்களில் வெளிவந்த மூன்று சாலை விபத்துகளை - விஸ்தரித்து மூன்று குறுங்கதைகளாக்கி கடைசியில் அவற்றைப் தினசரியில் பின்னி .......!! சிறப்பான சிறுகதை இல்லாவிட்டாலும் ஒரு சிறுகதையின் சாத்தியத்தை தொட்டுக்காட்டும் ஒரு முயற்சி.... Nothing More ... Nothing Less
2. பல கதைகளில் - பொதுவாகவே பெரிதும் விமரிசிக்கப்பட்ட அவர் ஸ்டீரியோ type அப்பாவி, நேர்மை குணச் சித்திரங்கள்..... ; மொத்தமாக படித்தப்போது முகத்தில் அறைந்தது. But I also sensed another glaring contradiction - கொஞ்சம் sex கலந்த இளமையான அவர் நடை நிச்சயம் "ஜன ரஞ்சகதுக்காக " என்று தெளிவாக தெரிகிறது. These two just don't gel with each other.
இது அந்த தனிப்பட்ட கதைகளைப் பற்றிய என் விமர்சனம் இல்லை.
அந்த மாமனிதன் சராசரி சஞ்சலத்திற்கு (புகழோ பணமோ, ஒரு "இடத்தை" அடைய பிரயத்தனமோ ஏதோ ஒன்று .....) ஆட்பட்டு இருந்தது - ஒரு வகையில் எனக்கு ஆசுவாசத்தை தருகிறது.
இது அந்த தனிப்பட்ட கதைகளைப் பற்றிய என் விமர்சனம் இல்லை.
அந்த மாமனிதன் சராசரி சஞ்சலத்திற்கு (புகழோ பணமோ, ஒரு "இடத்தை" அடைய பிரயத்தனமோ ஏதோ ஒன்று .....) ஆட்பட்டு இருந்தது - ஒரு வகையில் எனக்கு ஆசுவாசத்தை தருகிறது.
நம் சமூகமே கடவுள்களிடம் நம்மை ஒப்படைக்க தயாராக இருக்கும் ஒன்று.....ஒரு சக மனிதர் தான் இவர் என்பது என் ஆசுவாசம்.
அவரிடம் என்னை ஒரு வாரம் எந்த தயக்கமும் இன்றி என்னை ஒப்படைக்க எனக்கு முடிந்தது என்று மேலும் ஒரு சுய திருப்தி.....!!
(புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள் !!)
அவரிடம் என்னை ஒரு வாரம் எந்த தயக்கமும் இன்றி என்னை ஒப்படைக்க எனக்கு முடிந்தது என்று மேலும் ஒரு சுய திருப்தி.....!!
(புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள் !!)
ஒரு குறிப்பிட்ட கதையில் (1982 ல் எழுதப்பட்டது ) கதாநாயகி தன் ஐரோப்பிய விஜயத்தின் பொழுது தன அண்ணனின் நண்பனிடம் (முதல் அறிமுகமே அப்போது தான்) இந்தியாவுக்கு டிக்கெட் வாங்கித் தர மன்றாடுகையில் ரொம்ப இயல்பாக - டிக்கெட் ஏற்பாடு செய்தால் , முத்தம் தருவதாக "இயல்பாக" சொல்கிறாளாம்.....; ஒரு வைஷ்ணவ அந்தணரான தன்னை முடிந்த போதெல்லாம் அடையாளம் காட்டும் ஒரு புத்திசாலி எழுத்தாளர் இந்த வித எழுத்து ஒரு விதத்தில் படிப்பவர்களுக்கு கிக் ஏற்படுத்த தான் என்பது என் சம்சயம். அதுவும் சத்தியமாக அந்த கால கட்டத்தில் அவ்வளவு radical ஆக நமது சமூகம் கண்டிப்பாக இல்லை. (உண்மை வேறு விதமாக இருப்பது - அதாவது - சுஜாதா விருப்பபட்டு தான் எழுதினார் என்றால்..... கொஞ்சம் விரசமாகிப் போய் விடும்....ஆகையால் என்னோடு வாதிட வேண்டாம்.)
3. வெகு நிச்சயமாக நம் மெல்லிய உணர்வுகளை தூண்டுகிறார். ஒரு அற்புதமான சிறுகதையில் (நான் முதலில் இப்போது தான் படிக்கிறேன் - "நெருப்பு") வருங்காலத்தை - positivity யோடு அணுக வேண்டும் என்பதை பிரமிக்க வைக்கும் ஒரு சாதாரண மதிய வர்க்க கதாநயகி கதாபாத்திரம் மூலம் உணர்த்துகிறார் (நல்ல வேளை - அந்த கதாநாயகி சுஜாதாவின் பொதுவாக வர்ணிக்கும் அழகாக ஒயிலாக இல்லை. இது இதற்கு முன் எழுதிய பத்திக்கு மேலும் ஒரு சாட்சி....அவசியம் ஏற்பட்டால் அவர் compromise பண்ணிக்கொள்ளாமல் தீவிரமாக எழுதக்கூடியவர் என்பதற்கு).
இந்த 100 + கதைகளில் - கருத்து வேறுபாடில்லாமல் - நம் எல்லாருக்கும் நெகிழ்ச்சியை உண்டு பண்ணக்கூடிய விதத்தில் ஒரு 25 கதைகளை என்னால் தேர்ந்து தர முடியும்.
4. சுஜாதாவின் கதைகளில் அற்புதமே நடை தான். பாதியில் ஆரம்பித்து பாதியில் முடித்து - "முடிவு" (அப்படி ஒன்று இருக்கிறது என்று நீங்கள் நம்பினால் ) நம் கையில் விட்டு விடும் வகையில் எண்ணற்ற கதைகள்.
ஒரு வகையில் நம் முழு வாழ்க்கையே ஒரு சிறுகதை தான் என்று தெளிவாக புரிந்து போனவர்கள் சுஜாதாவை இரசிக்கவே செய்வார்கள்....
பொழுது விடியும் முன் மிகவும் சந்தோஷமாக எழுந்திருக்கும் ஒரு மனைவி (அவளுக்கு அன்று பிறந்த நாள் வேறு )...திகட்ட திகட்ட ஆனந்தத்துடன் நாளைக் கடத்தி, வெளியூருக்கு விமானத்தில் வேலை விஷயமாக செல்லும் தன கணவனை வழியனுப்பிய பின் , நெகிழ்ச்சியாக, பழைய போட்டோ (கல்யாண album - குறிப்பாக ) எடுத்து பார்த்து - இளமையான உறவினர்களை படத்தில் பார்த்து வியக்கும் பொழுது ..... மேலும் ஒரு வரியோடு கதை முடிந்து விடுகிறது.... ("அப்போது டெலிபோன் ஒலித்தது ").
5. MORAL VALUES பரப்ப சிறுகதை ஒரு பெரும் சாதனமாக இருக்க முடியும் என்பதற்கு பற்பல சாட்சியங்கள். மிக எளிதான நடையில், நமக்கு சிறு வயதில் "நெய் போட்டு பருப்பு சாதம் " உவந்து அளித்த நம் தாய் போல் - நமக்கு பிடித்தவாறு கதை சொல்லும் ஒரு தாயுமானவராக....
.......Hats Off !!!
(உதாரணங்களை அடுக்க விரும்பவில்லை. தேடுங்கள்...கிடைக்கும் )
6. Last but not least , கதை கேட்டு அவ்வப்போது நச்சரிக்கும் என் பாச மகளுக்கு ஒரு 10 கதைகளை தேர்வு செய்து வைத்து இருக்கிறேன். அவள் நன்றாக புரிந்து கொண்டு நெகிழ்ந்து போகும் வகையில் .எழுதப்பட்ட கதைகள்.
அதைத்தவிர typical சுஜாதாவின் ("ஜனரஞ்சக" நடையால்- என்று குறித்துக் கொள்க) ....சில தர்ம சங்கடங்கள் நிரம்பிய மேலும் ஒரு 10 சிறந்த கதைகளும் அகப்பட்டன.
அதைத்தவிர typical சுஜாதாவின் ("ஜனரஞ்சக" நடையால்- என்று குறித்துக் கொள்க) ....சில தர்ம சங்கடங்கள் நிரம்பிய மேலும் ஒரு 10 சிறந்த கதைகளும் அகப்பட்டன.
நானோ கதைகளை சொல்லத்தான் போகிறேன்...(என் மகளுக்கு படிக்க அவ்வளவு பொறுமை இல்லாததால் இந்த வழக்கம்.) அதனால் இந்த இரண்டாவது 10 கதைகளையும், ஒரு மாதிரி abridge செய்து சொல்லிவிடுவேன்....
எனக்கும் (சுஜாதா அளவு இல்லாவிட்டாலும் ) கற்பனா சக்தி உண்டு தானே ?)
இதோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன். உங்கள் பொறுமைக்கு நன்றி.....!!
இந்த இரண்டு புத்தகங்களையும் எனக்கு இரவலாக கொடுத்த என் பெருமைக்குரிய சகோதரிக்கு எதாவது செய்யத்தான் வேண்டும். மூன்றாவது தொகுதி வாங்க இந்த முறை book exhibition போக முடியவில்லை என்று வருத்தப்பட்டாள் .... பாவம். !!
அதை வாங்கி கொடுத்து அவளுக்கு ஒரு இன்ப "அதிர்ச்சி" அளித்து விட வேண்டியது......
கொடுத்த கையோடு அதே புதிய புத்தகத்தை இரவலாக பெற்றுக்கொண்டு வந்து விட வேண்டியது....
என்ன சொல்கிறீர்கள் ?
ப்ரியமுடன்
சுச்சு / சுரேந்திரன்
Sujathavidam "katradhum petradhum" eraalam! Avatrai unnodu pagirdhadhum, paravasamadaindhadhum ippodhum vasandha kaala ninaivalaigal!! Seer kondum seelum sagodhara... thoozhikku oru nar parisai ithoguppai tharakoodadha? Seri Po, parisu illaiyendralum paravayillai... naanum iraval peruvadhundu!! indha kadan anbai murikkaadhu!!
ReplyDeleteHi TV, I read it with lot of difficulty :-). Thanks for sharing your feelings immediately. Should also tell you that my Sister was taken aback with my unexpected gift. Wish there is some situation during 2015 itself that I am able to give you a memorable gift.....!!
ReplyDelete