அன்புடையீர்
எங்கள் வீட்டில் சமீபத்தில் re painting வேலை நடந்து முடிந்தது. அறிமுகப்படலத்திலும் அந்த painter முதல் சந்திப்பிலும் நான் இல்லை.
(எங்கள் வீட்டில் சர்வம் சக்தி மயம் தான். பிழை என்ன ?).
night shift -ல் இருப்பதால் என் காலை எழுச்சி பத்து மணி அளவில் தான். ஒரு சுபயோக சுபதினத்தில் கண் விழிக்கும் பொழுது சில பல மனிதர்களின் குரல்கள் - ஆம், அந்த painter தன் குழாமோடு வந்து விட்டார். என் சக தர்மினி என்னை மிக்க மகிழ்ச்சியுடன் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் (நம்புங்கள்!)
கேசவன் என்ற அந்த painter ம் புன்சிரிப்போடு சில உபசார வார்த்தைகள் பேசிக்கொண்டு இருந்தார். கருத்த மேனி - வயதான ஆனாலும் சுறுசுறுப்பான ஒரு தோற்றம். (பிற்பாடு அவர் எங்கள் குடும்ப நண்பராகவே மாறிவிட்டார். அது பின்னர்......).
நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது என் மனைவி "இதை பாருங்கள்....இவர் (painter ) காலை எழுந்ததும் வேலைக்கு போய் விடுவாராம். நாள் முழுவதும் டீ மட்டும் தான் குடிப்பாராம். சுமார் நாலு மணிக்குத்தான் சாப்பிடுவாராம்" என்று ஒரு விரிவான அறிமுகம் தந்தாள். அவரும் ஆமோதித்து என்னிடம் "சாப்பிட்டா வேலை செய்ய முடியாது எனக்கு" என்று சொல்ல, நான் மிகவும் கருத்தாக, "உங்க வயசையும் பாக்கணும் sir ! காலை tiffin சாப்பிடலைன்னா அவ்வளவு பிரச்னை வருதாம்" என்று சொல்ல அவர் முகத்தில் இன்ப அதிர்ச்சி.
நான் வயசைப் பற்றி பேச அவருக்கு தன் பிறந்த நாள் ஞாபகம் வந்து விட்டது. மிகவும் வெட்கத்தோடு "சார் ! இன்னிக்கு எனக்கு birthday " என்று சொன்னார். வாஞ்சையுடன் அவரை அணைத்துக்கொண்டு நான் வாழ்த்து சொன்னேன்.
எந்த தேசமானால் என்ன.....எந்த இனமானால் என்ன.....எந்த ஜாதி, மதமானால் என்ன ..... அனைவருக்கும் பொதுவான இயற்கையின் ஒரு அற்புதம் பிறந்த நாள் தான்......(வருட பிறப்பு என்று சொல்கிறீர்களா ? அதுவும் ஒரு பிறந்த நாள் தானே ?).
என்ன, தனித் தனியாக இது வந்து, கடந்து போவதால், மனித வர்க்கம் சேர்ந்து கொண்டாடுவது இல்லை. அவ்வளவு தான்......!!
சமீபத்தில் இரு நண்பர்களுக்குள் நடந்த ஒரு தத்துவார்த்தமான உரையாடலை அறிய நேர்ந்தது. "பிறந்த நாளை கொண்டாட காரணமே தேவை இல்லை. அதுவே ஒரு வைபவம் தான்........!!". நான் என்ன சாதித்து விட்டேன் என்று விரக்தியில் வாடும் அற்ப மானிடர்களுக்கு இந்த பதிவு சொல்லும் செய்தி போய் சேருவது கொஞ்சம் கஷ்டம்தான்....
நல்லது. நம் கதைக்கு வருவோம். போன வாரத்தில் ஒரு அதிகாலை நேரத்தில் (அதாவது சுமார் ஏழு மணி) பாபா கோயில் ஒன்றிற்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. பாபாவுக்கு அலங்காரம் நடந்து கொண்டு இருக்க ஒரு இளம் தம்பதியினர் ஒரு சிறிய பெண் குழந்தையுடன் என்னைப்போலவே காத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தனர். அந்த அம்மா (சிறிய பெண்தான்) கிசுகிசுப்பாக அந்த குழந்தையை தூண்டியவாறு இருக்க அந்து குழந்தை தயங்கி தயங்கி ஒரு புன்சிரிப்போடு அந்த கோயிலில் இருந்த பிற பெண்களுக்கு ஒரு plastic டப்பாவை நீட்டிவிட்டு, தன் பெற்றோரிடம் மீண்டு கொண்டு இருந்தால். எனக்கு சட்டென்று புரிந்து விட்டது. அந்த குழந்தையே இமைக்காமல் பார்க்க, அந்த அம்மா மீண்டும் கிசுகிசுக்க, அந்த குழந்தை மறுக்க........நல்ல வேடிக்கை. ஆண்களிடம் வர அவ்வளவு வெட்கம்.....!! அந்த அப்பா மிகவும் வலியுறுத்தி அந்த குழந்தையை என்னிடம் அனுப்பி வைத்தார். அந்த பிஞ்சு கொடுத்த சாக்லேட் -ஐ எங்கள் வீட்டு பாபா சிலையின் முன் வைத்திருக்கிறேன்.
சுவைக்காமலேயே இனிக்கும் சாக்லேட் பார்த்து இருக்கிறீர்களா......? அவசியம் என் வீட்டுக்கு வாருங்கள் .....
அன்புடன்
சுரேன்
Reading the title.of the post, i thought u have written something abt ur birthday.. :)
ReplyDeleteAnd yea, birthdays are always spl
No matter how old r u... I love my birthdays d most... a very special day for me. :) though the enthusiasm that i had a few yrs ago has come down now, i still wait for my bday every yr so eagerly :)
Lavan, .....and how can we forget Dec 8th 2000, Kalyani's wailing clearly heard by us from outside, Kamala paati in her (usual) tense and emotional mood, ravi anna and sridhar anna visiting the hospital just after the "news" of your birth, paati literally hugging sridhar anna and crying......!! Gosh........!! The birthdays we celebrate after we grow up is nothing compared to Day 0 of our births.
ReplyDeletemama.... one correction. It's Dec 8th 1988 (not 2000) :-P
ReplyDeleteSharp eyes. Obviously the birth year of Madhoo got super imposed upon the day and month of Lavanaa....!! Lavan, I am trying to write a short piece of poem called "Nilaa" but it simply does not come beyond the key words. What happened to me...????
ReplyDelete