Sunday, February 23, 2014

******மொழி*****

காற்றின் மொழி  ஒலியாய் இசையாய் 
பூவின் மொழி  நிறமாய் மணமாய்
கடலின் மொழி அலையாய் நுரையாய் 
காதல் மொழி விழியாய் இதழாய்.......

அன்புடையீர்

இதென்ன "கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது" போல், அகண்டத்தில் எவரோ எழுதிய திரைப்பாடல் வரிகளை எமது அகண்டத்தில் செதுக்கி வைத்தல்.... என்று ஐயம் வருகிறதா ? நான் பத்தி பத்தியாக எழுதப் போவதையும் சற்று பொறுமையாக படித்து விட்டு மீண்டும் இந்த பாடல் வரிகளுக்கு வாருங்கள்....!
இந்த வரிகளின் மற்றொரு வரி வடிவமே இந்த பதிவு என்று உணருவீர்கள்.........!!!

இந்த வார விகடன் படித்தீர்களா ? இரண்டு வெவ்வேறு இடங்களில் படித்த கட்டுரை மற்றும் கேள்வி பதில்களின் முரண்பாடு இந்த பதிவின் என் செய்திக்கு அச்சாரமாக (அதான் advance) இருக்கக் கூடும்.

முதலில் - எழுத்தாளர் அ . முத்துலிங்கத்தின் பதில் பின்வரும் கேள்விக்கு "சொல்லில் வருவது பாதி ..... நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி.....! இந்த வரி உணர்த்துவது என்ன ?" 
அவரின் அற்புதமான, கருத்து  செறிந்த பதிலை அப்படியே தருகிறேன். 
" .......... சீன அறிஞர் Confusius கூட பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே "எல்லா வார்த்தைகள் சேர்ந்தாலும் சரியான உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாது" என்று சொல்லியிருக்கிறார். .........." ஒன்றை விவரிப்பதற்கு ஒரு மொழியில் மட்டும் உள்ள வார்த்தைகள் போதாது. "சாந்தி முஹூர்த்தம்" என்ற பதத்திற்கு ஆங்கில வார்த்தை இல்லை.   "இடது கால் செருப்பு" க்கு மட்டும் ஆப்பிரிக்க மொழியில் ஒரு வார்த்தை உண்டு தமிழில் கிடையாது. ஆகவே பல மொழிகள் சேர்ந்தால் தான் அது சாத்தியமாகும்".

இந்த சிந்தனையாளர்  சொல்லும் இந்த கருத்துக்கு நானும் உடன் படுகிறேன். ஒரு "ஆனால்" ஐத் துணையாக சேர்த்துக் கொண்டுதான் ........!

அவர் பதிலின் கடைசி வாக்கியம் "சிந்தனைகளை வார்த்தைகள் தொடரும் ; முந்த முடியாது " என்பது தான்..... . எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்......

அதே ஆனந்த விகடனில் மற்றுமொரு கட்டுரை....இயக்குனர் பாலா சமீபத்தில் மறைந்த மேதகு இயக்குனர் பாலு மகேந்திரா பற்றி எழுதியது. மேலே கண்ட பத்தியை சவால் விடும் வண்ணம் அந்த கட்டுரையை படிப்பவர்கள் - பாலாவின் உணர்வுகளை தரிசிப்பார்கள். 

இது பல நாளாக நான் சிந்தித்து கொண்டு இருக்கும் ஒரு subject - இந்த இரண்டு வரைவுகளின் முரண்பாட்டில் பட்டென்று விளங்கிப்போனது. 

ஆம்...... எழுத்தாளர் அ முத்துலிங்கம் சொல்வது போல் "சிந்தனை"களுக்கு வார்த்தைகள் போதாது. மொழிகளும் உதவாது. எழுதுவதும் பேசுவதும், நமது சிந்தனைகளை அடுத்தவர்களுக்கு பரிமாறும் ஒரு முயற்சியே !! 

ஆனால் உணர்வுகளின் மிகுதியால் நாம் எழுதுவதும் பேசுவதும் கண்டிப்பாக எந்த வார்த்தைகளும் இன்றி அடுத்தவரைத் தீண்டும் (சில சமயம் தாக்கவும்   தாக்கும்). எழுதுவது இன்னும் சவுகரியம்.....பேசும்பொழுது உணர்வுகள் ( feelings) உணர்ச்சிகளாக (emotions ) பரிணாமம்  பெற்று வார்த்தைகள் தழுதழுத்து மொழி மழமழத்துப் போய் விட வாய்ப்பு உண்டு. 

கொஞ்சம் பக்குவப்பட்ட மனிதர் கூட தான் உணர்ச்சி வசப்பட்டு எழுத்தில் வடித்ததை மீண்டும் ஒரு முறை பார்த்தால் அவரே செதுக்கி விடுவார்....

ஆனால் ஒன்று....நான் இந்த பதிவை இப்போது சரிபார்க்க போவதில்லை.....!!

காற்றின் மொழி.............ஒளியாய். இசையாய்....

அன்புடன்

சுரேந்திரன்

ps :- "சொல்ல மறந்த கதை"யாக இந்த பதிவை நீர்த்து போக வைக்க நான்  விரும்பவில்லை.
"சொல்லில் செதுக்கிய" என்னையே நான் தரிசிக்கிறேன்....
நீங்கள் ??




Saturday, February 22, 2014

Memoirs of Glory - An old poem



   ps:- I wrote this poem exactly 7 years back; I had pasted it in the notice board of our team since no one appreciated (rather understood) of my earlier one.....!! By the by "Vaarththaith Thavam" is my patented word - think I had bragged a lot about the coinage in the same blog some time earlier.


****** Balu Mahendra ******

Prelude : When I heard the news few days back, I had a spontaneous craving to dish out this post but due to self imposed rule to touch the blog only during week ends, I held back myself. In a way, its good..... this posting is written with a enriched mind - which always happens to all of us if we wait and act instead of reacting to situations.

Dear All

Perhaps you were amused at the long prelude above and wondering if it is appropriate and suitable to the topic of the post.....?

I am one of the die hard fan of Balu Mahendra, a Doyen of Modern Tamil Cinemas and even in my adoloscent age, i have felt innumerable times that his films (particularly dialogues) have an element of "poetic touch". Well, I could have not verbalized this those days when I saw "Moondraam Pirai", "Marubadiyum" , "Veedu" and couple of other good films of those days..

But more than a film watcher (that too not a seasoned critic) like me writing obituary, it always helps people to understand the value of this great Director when it is written by some one who had close connection with him. Yes, I mean the article in Ananda Vikatan (current issue) stands a testimony for two things - the genius of Balu Mahendra and secondly the affection outpoured by Bala - the famous director of current days.

This article appears to be extempore and he has literally cried his heart out....!! You should read it and then feel it. Honestly by continuing further to describe it too much, I will be committing a sacrilege both to Balu Senior and Bala, his junior.....

Long live Balu Mahendra's Glory; Long live Baala's virtues and cinemas....!!!

Love // Suren


Mundane Matters - 8 :: Translations

Dear All

I was delighted to receive an appreciation (comment posted already ) for the translation work which I did a fortnight back; I mean the previous post.

Well, the happiness is due to two reasons - one is the basic human craving for recognition on which I am not going to expound further. Every one must have felt it at various points of time in their lives, isn't it ?

Lemme only delve upon the second reason which is of course what this musing is all about.....

First thing first, this was my first translation work. Before this, around 8 years back - while working for a social project at Isha I had the privilege of translating a wonderful poem of Robert Frost (?) which later I realized is the part of school curriculum these days - yes, my daughter showed the same poem in her text book couple of years back. (this little poem is about the significance of a tree)

On the array of creative works in the domain of communication, I always feel writing poem is the closest one to human hearts and minds as it offers maximum limit of abstraction possible. It almost bridges the gap between language and minds (i mean minds with same wave length which is true as per law of Physics).
With this experience of translation of Jeffry Archer's short story, I get a feeling that translation is the farthest or the one offering minimum job satisfaction.

Wait.....I am not done with the above statement. There are so much of responsibilities in the shoulders of the translators. 
Firstly,  the original feeling has to be brought inside the work; 
Secondly, he must not do a word to word translation and kill the soul of the original work; 
Third in my list will be the time it takes - Gosh !! I am happy that I chose one of the shortest stories in this collected works as this 5 paged story has taken me close to 6 hours to translate. 
(you could have observe the spelling mistakes that is sprayed all over - its just because I was racing with time and never had the patience to proof read the whole story once again ! ). 
Yes, the fourth quality required is patience.

But then, the list ends with the subtlest point I wish to share with you. 
To decide upon a career as a translator is like "upasanaa" as described in our scriptures. 
The literal meaning of this word is "taking a side seat - allowing some one bigger than ourselves in our chair". YES, the translator - whether he is conscious about it or not - becomes a subtler human being ready to take a side seat and shed off his ego. 
He might have his own ideas how to take forward the written work but then, he has to restrict himself to the scope offered by the original work. 
The only choice he has is of course if some material is worthy enough to be translated or not ? Period......

So, some activity which really appears to be "mundane" , actually matters a lot only if you have the patience to read thru' (including this post, huh?)

Love // Suren


Sunday, February 9, 2014

******நட்பு மட்டுந்தான் (சிறுகதை)*********

ஆங்கில எழுத்தாளர் Jeffrey Archer எழுதிய ஒரு சிறுகதையின் (Just Good Friends)  தமிழாக்கம்

என்னை இறுக தழுவிக்கொள்ளும் மனநிலையோடு அவர் எழுந்திருக்கும் முன்னரே எனக்கு விழிப்பு கண்டு விட்டது. என்னால் அவருக்கு எந்த பயனும் கிடையாது என்ற உண்மை எனக்கு புரிந்தாலும், அதைப் பற்றி நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

கண்களை கசக்கிக்கொண்டு நான் அரை வெளிச்சத்தில் இருந்த அறையை பார்த்தேன். வெகு விரைவில் கண்கள் பழகிவிட சுற்றுமுற்றும் நோட்டம் விட்டேன். தலையை உயர்த்தி என் அருகில் மாமிச மலை போல் தோற்றம் அளித்த அவரின் வெண்மையான உடலை வெறித்து பார்த்தேன். என் அளவு ஓடி ஆடி பரபரப்பாக இருந்தால் அவருக்கு இடுப்புப் பிரதேசத்தில் இவ்வளவு சதை சேர்ந்து இருக்காது என்று இரக்கமே இல்லாமல் ஒரு எண்ணம் என் மனதில் ஓடியது.

சுந்தர் படுக்கையில் புரண்டு என்னை நோக்கியவாறு திரும்ப படுத்தாலும் அலாரம் கடிகாரம் குரல் கொடுக்கும் வரை எழுந்திருக்க மாட்டார் - அதுதான் தினசரி வழக்கம் ! திரும்பவும் தூங்கி விடலாமா அல்லது சமையல் அறைக்கு சென்று எனக்கு கொறிக்க ஏதாவது செய்து கொள்ளலாமா என்று யோசித்தேன். கடைசியில் இரண்டும் செய்யாமல் பேசாமல்- சுந்தர் தூக்கம் கலைந்து  விடாமல் - படுத்தவாறே, எதாவது யோசனை செய்து கொண்டு இருக்கலாம் என்று முடிவு செய்தேன். அவர் எழுந்து இருக்கும் போது  தூங்குவது போல் நடித்தால் எனக்கும் சேர்த்து அவரே சாப்பிட எதாவது தயாரித்து விடுவார் என்று ஒரு நைப்பாசை !! அவர் அலுவலகம் சென்றதும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை அசை போட ஆரம்பித்தேன். ஆபீஸ் - லிருந்து திரும்பும்போது இன்முகத்தோடு வரவேற்க வேண்டும் என்ற ஒரு நியாயமான  எதிர்பார்ப்பு மட்டுந்தான் அவருக்கு!பகலில் நான் என்னவெல்லாம் செய்து கொண்டு இருந்தேன்  என்று துருவி கேட்கும் வழக்கமே அவருக்கு இல்லை.

ஒரு ஆழமான பெருமூச்சு என் பக்கத்திலிருந்து வந்தது.சுந்தரின் குறட்டைச்சத்தம் என்னை எப்போதுமே தொந்தரவு படுத்தியதே இல்லை. அவர் மேல் நான் கொண்ட காதலை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. என் முதல் மற்றும் எனக்கே ஆன ஆண்மகன் அவர்தான். அவர் முகத்தில் அடர்ந்திருந்த உரோமம் கண்ணில் பட, அவர் தோற்றம் எப்போதுமே என்னை பாதித்தது இல்லை - அந்த முதல் சந்திப்பில் கூட என்ற எண்ணம் தோன்றியது.

நான் முதலில் சுந்தரை சந்தித்தது - "ரோஜா" பாரில் தான் - அதுதான் நடேசன் தெருவின் முடிவில் இருக்கிறதே - அதுதான்.
அது எங்கள் குடியிருப்பு பகுதியின் வெகு அருகில்தான். எப்பொழுதும் சீராக எட்டு மணிக்கு பாருக்கு வரும் சுந்தர் ஒரு ஓரமாக கேரம் போர்டு இருக்கும் இடத்தருகே அமர்வார். ஆட்டத்தின் குதூகலத்தை மிகவும் அமைதியாக இரசித்தவாறு குடிப்பார். ஒரு நாள் கூட அவர் விளையாட முயன்றது கிடையாது. பானங்கள் விநியோகப் படும் இடத்தின் அருகில் இருக்கும் எனக்கு எப்போதுமே இந்த சந்தேகம் ஏற்படும். - ஒரு வேளை விளையாட்டில் அவருக்கு ஆர்வம் இல்லையா அல்லது அவரின் பழக்கப்பட்ட இருக்கையை எவருக்கும் விட்டுத் தரும் எண்ணம் இல்லையா என்று....!!

திடீரென்று ஒரு நாள் ஒரு திருப்பம் வந்தது - வசந்தா என்ற ஒரு (எங்கள் குடியிருப்பின் அருகில் இருக்கும் ஒரு பெண்தான்) அழகு தேவதை அவர் அருகில் ஒரு இருக்கையில் இயல்பாக சென்று அமர்ந்தாள். இதுவரை அவளை நான் இந்த பாரில் பார்த்ததே இல்லை. அவளைப்பற்றிய என் காதில் பட்ட அபிப்ராயங்கள் சொல்வதற்கு அவ்வளவு தகுதியானவை அல்ல. ஆனால் சுந்தரைப்பற்றி நன்கு அறிந்த நான் அவள் போன்ற பெண்ணிடம் சிக்கி விட வாய்ப்பு இல்லை என்று எனக்கு நிச்சயமாக தோன்றியது. சுருக்கமாக சொன்னால் வசந்தா எப்படிப்பட்ட நோக்கம் கொண்டவள்  என்றால் - "ரோஜா" பாரை தாண்டி பல விலை உயர்ந்த  கேளிக்கை இடங்களுக்கு போய் வர தூண்டில் போடுபவள்........புரிந்து விட்டதா ?

இந்த காதல் தொடர்பு (அப்படித்தான் சொல்லித் தொலைக்க வேண்டும் ) பத்து / இருபது நாள் வரையே  தாக்கு பிடித்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் அவர்களுக்குள் பலத்த வாக்குவாதம் காதில் விழுந்தது. அனைவரும் அவர்கள் இருக்கும் திசை நோக்கி அதிர்ச்சியாகப் பார்க்க - ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டிருந்த எனக்கு புளகாங்கிதம் தான் ! தடால் என்று இருக்கையை ஒரு கையால் தள்ளி  விட்டு விட்டு எவ்வளவு வேகமாக வந்து சேர்ந்தாளோ, அதே அளவு விரைவாக வசந்த சுந்தரை விட்டு அகன்றாள். சுந்தரின் களைப்பான விழிகள் அவள் சென்ற திசையை நோக்கி வெறித்ததே தவிர அவளைத் தடுக்கவோ சமாதானம் பேசவோ முயலவில்லை. "விட்டது சனி" என்று அவருக்கு ஆசுவாசம் ஏற்பட்டு இருக்கக் கூடும். 

அவள் அகன்றது என் பிரவேசத்திற்கு உறுதுணையாக இருந்தது. பார்-ல் எனது வழக்கமான இருக்கையிலிருந்து துள்ளி எழுந்தேன்.என் பரபரப்பு எவருக்கும் தெரியாத வண்ணம் மிகவும் ஒயிலாக  நடந்து சுந்தரின் அருகில் காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லை;  உபசாரத்துக்காக எனக்கு குடிக்க பானம் எதுவும்  சொல்லவில்லை.; ஆனால் என்னை அவர் வெறித்துப் பார்த்த அந்த ஒரு கணம் என்னை வேண்டாத விருந்தாளியாக எண்ணியதாக எனக்கு தோன்றவில்லை. என் இடத்தை அபகரிக்க வேறு யாரும் போட்டி போட முயல்வார்களோ என்று நான் சுற்று முற்றும் பார்த்தேன். கேரம் போர்ட் - களின்  அருகில் நின்று இருந்தவர்கள் யாரும் என்னை பொருட்டாகவே கருதாமல் அவர்கள் விளையாட்டில் மூழ்கி விட்டார்கள். பானங்கள் விநியோகிக்கும் இடம் அருகே என் manager இருக்கும் திசை நோக்கி பார்த்தேன். அவர் ஆர்டர் எடுத்துக்கொள்ளும் மும்முரத்தில் இருந்தார். வசந்தா - அந்த சிறிது நேரத்துக்குள் - தன தூண்டிலில் சிக்கிய ஒரு புதிய மீன் - ஒரு அழகான இளமையான வாலிபனுடன் - ஒரு பாட்டில் கையில் பிடித்தவாறு கொஞ்சிப் பேசிக்கொண்டு இருந்தாள். அந்த புதிய வாலிபனின் பணக்காரத்தனமான உடைகளிலிருந்து பார்த்தால்  - அவள் சுந்தர் பக்கம் சில மாதங்களாவது வரமாட்டாள் என்று தான் பட்டது. 

நான் மீண்டும் சுந்தர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். பேசியது இல்லை என்றாலும் அவர் பெயரை நான் அறிந்து இருந்தேன்.- என் பெயரும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. என் இமைகளை சற்று அதிகமாக. மிகவும் செயற்கையாக , படபடத்தவாறே  அவரின் கண்களைப் பார்த்தேன். நானே எதிர்பார்க்காத வண்ணம் ஒரு புன்முறுவல் அவர் முகத்தில் அரும்பியது. இருக்கையின் முன்னே   சாய்ந்து என் கன்னப்பகுதியில் மென்மையாக தன கையால் வருடினார். அவர் கை மிகவும் மிருதுவாக இருந்ததை கவனித்தேன். எங்கள் இருவருக்குமே பேசிக்கொள்ள தோன்றவில்லை. வெகு நேரம் அவர் தன பானத்தை பருகியவாறு வெறித்த பார்வையுடன் இருக்க, நான் மவுனமாக அவரை நோக்கியவாறு இருக்க, எங்கள் அருகில் இருந்த கேரம் காயின் களின் சத்தம் கேட்ட வாறு இருக்க - நேரம் கழிந்தது. கடை மூடப்போகும் அறிவிப்பு வந்ததும், கேரம் போர்டு-களின் சத்தம் ஓய சுந்தரும் தன கையில் இருந்த பானத்தை குடித்து முடித்து கிளம்பத் தயாரானார்.

நாங்கள் இருவரும் சேர்ந்து - barக்கு  வெளியே நடப்பதை எவரும் தடுக்கவில்லை - ஏன் அவரே தயக்கப்படவில்லை.  அவர் இருப்பிடத்தை நான் நன்றாக அறிவேன். காலையில் அவர் தன சிறிய குடியிருப்பிலிருந்து கிளம்பி பேருந்து நிலையத்தில் தன வழக்கமான் வெறித்த கண்களோடு நிற்பதை பல முறை பார்த்து இருக்கிறேன். ஒரு முறை - பேருந்து நிலையத்தின் அருகே இருந்த முட்டுச் சுவர் பக்கம் நின்றவாறு அவரை நன்கு உற்று பார்த்தும் இருக்கிறேன். சராசரியாக தோற்றம் அளிக்கும் முகம்தான். ஆனால், பெருங்கருணையும் சாந்தமும் வெளிப்படுத்தும் கண்கள் அவர் முகத்திற்கு தனி அழகை கொடுத்தன. எந்த ஒரு ஆன் மகனிடமும் இவ்வகையான ஒரு களையை நான் கண்டதில்லை.

என் ஒரே பிரச்னை என்னவென்றால் சுந்தர் நான் அவருடன் இருப்பதையே உணர்ந்ததாக தெரியவில்லை;  எப்போதும் வெறித்த பார்வையுடனும் தீவிர யோசனையுடனும் இருந்து  வந்தார்.வசந்தாவின் ஞாபகத்திலிருந்து மீளவில்லை போல்தான் தெரிந்தது. எனக்கு அவள் மேல் கையாலாகாத பொறாமை ஏற்பட்டது - அவளிடம் நான் ஏங்கும் அனைத்தும் இருந்தது - அன்தல் பகட்டான மேல் அங்கியைத் தவிர. ஆம். என் அம்மா எனக்கு கொடுத்த ஒரே சீதனம் அதே போன்ற ஒரு அங்கி தான். ஒரு வகையில் பார்த்தால் எனக்கு வசந்தா மேல்  கோபமும் இருக்க நியாயம் இல்லை - அவள் கடந்த காலம் என்னுடையது அளவுக்கு கேவலமானதாக  இருக்க வாய்ப்பு இல்லை.

இதெல்லாம் நடந்து ஒரு வருடம் கழிந்திருக்கும். சுந்தருக்கு என் நன்றியைக் காட்டுவதற்கு நான் "ரோஜா" bar பக்கம் போகவே இல்லை. அவரும் வசந்தாவை மறந்து விட்டதாகத் தான் தெரிகிறது. என் எதிரே ஒரு முறை கூட அவளைப் பற்றி அவர் பேசியது கிடையாது. ஒரு வகையில் இவர் விசித்திரமான ஒரு மனிதர்தான். என்னை பற்றியும் முக்கியமாக என் கடந்த காலத்தைப் பற்றிக்கூட கேட்டதில்லை. கேட்டுத் தெரிந்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றே எனக்கு  படுகிறது.

இப்போது எல்லாம் பழங்கதையாகப் போய் விட்டாலும் என் கடந்த காலத்தைப்  பற்றிய உண்மைகளை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே நான் விரும்பினேன். என் குடும்பத்தில் இருந்த நால்வரில் நானே கடைக்குட்டி - ஆகவே எப்பொழுதும் எந்த விஷத்திலும் நானே கடையாகப் பொய் விட்டது என் துரதிர்ஷ்டம். என் தகப்பன் யார் என்று எனக்குத் தெரியாது. ஒரு முறை வீட்டுக்கு திரும்பிய போது என் தாய் வேறு ஒருவருடன் ஓடிப் பொய் விட்டால் என்று தெரிய வந்தது. என்னுடைய தமக்கைகளில் ஒருத்தியான கவிதா - எங்கள் அம்மா திரும்பி வருவது பற்றி என்னத்தை ஒழித்து விடச்  சொன்னாள். அவள் கணித்தது போலவே அதற்கு பிறகு என் அம்மாவை நான் பார்க்கவே  இல்லை. நம் தாய் ஒரு ஓடுகாலி என்ற உண்மையை ஒப்புக்கொள்வது எவ்வளவு அவமானம் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்!

அநாதை ஆகிவிட்ட நான் தனியாக திரிய ஆரம்பித்து விட்டேன். அரசாங்கம் கண்காணிக்கும் எந்த அவமானகரமான செயலையும் நான் செய்ய  முயலவில்லை. முத்துவுடன்  தொடர்பு எப்படி ஏற்பட்டது என்று இன்று சரியாக நினைவுக்கு ;வரவில்லை. கருப்பனாக இருந்தாலும் நல்ல அழகன் - எந்த பெண்ணையும் சபலப்படுத்தும் வகையில் ஒரு வசீகரச்  சிரிப்பு.மூன்று வருடங்களாக கப்பலில் வேலை செய்து வருவதாக என்னிடம் சொன்னான்.அவன் என்னிடம் நெருக்கமாக இருக்கும் வேளைகளில் அவன் சொல்லும் எதையும் நம்புவதற்கு தயாராக இருந்தேன். வெகுளியாக. அவனிடம் நான் - எனக்கு தேவைப்படுவதெல்லாம் இருக்க ஒரு அமைதியான  இருப்பிடம் , வேளாவேளைக்கு உணவு மற்றும் எனக்கே எனக்கு என்று ஒரு குடும்பம் - என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். என் விருப்பங்களில் கடைசியை அவன் நிறைவேற்றி விட்டு எங்கோ மறைந்து விட்டான். ஆம்.....என்னை கர்ப்பம் ஆக்கிவிட்டு அவன் சென்று விட - எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன; இரண்டுமே பெண் குழந்தைகள். நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பற்றி நான் முத்துவுக்கு தெரிவிப்பதற்கு முன்னரே அவன் கப்பலில் அடுத்த பயணத்திற்கு புறப்பட்டு விட்டான்.அவன் போல் அழகனை இருத்தி வைத்து கொள்ள நான் எதுவும் செய்ய இயலாது. எத்தனையோ பெண்கள் அவனிடம் மயங்கும் வகையில் இருந்த அவன் தோற்றத்து நான் அவனுக்கு சில காலத்திற்கு துணையாக இருந்ததே அதிகம்.

என் செல்ல மகள்களை நான் அன்புடன் பராமரித்து வந்தேன் - துரதிர்ஷமாக அரசாங்க அதிகாரிகள் கண்ணில் பட்டு விட, நான் இருவரையுமே இழந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டது. இப்போது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை. நல்ல வீடுகளில் அவர்கள் அடைந்து இருந்தால் எனக்கு திருப்திதான். முத்துவின் களையை இரண்டு பெண்களுமே கொண்டு இருந்தார்கள் - அதுவே அவர்கள் இருவரையும் கடைசி வரை காப்பாற்றி விடும் என்று நினைத்துக்  கொண்டேன்.இது பற்றியெல்லாம் சுந்தருக்கு நான் சொல்லும் வகையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எந்த கேள்விகளும் அற்ற அவன்  மவுனம் எனக்கு இது பற்றியெல்லாம் அவனிடம் பேசுவதற்கு எந்த சந்தர்ப்பத்தையும் இந்த ஒரு வருட காலத்தில்  அளிக்கவில்லை.

முத்து என்னை விட்டு அகன்றதும் நான் ரோஜா barல்  சேர்ந்தேன். நான் சேர்ந்தது பகுதி நேர வேலைதான் என்பதால் bar முதலாளி எனக்கு உண்பதற்கோ பருகுவதற்கோ எதுவும் தரவில்லை. சுந்தர் வாரத்திற்கு ஒரு முறையோ சில சமயம் இரு முறையோ வருவார். முதலில் நான் உங்களிடம் சொல்லியிருந்த வசந்தாவின் பரிச்சயம் ஏற்ப்பட்ட பிறகு தினமும் வர ஆரம்பித்தார்.

அவர் தான் குடிப்பதற்கு வெறும் beer மட்டும் என்று சொல்லும் போதே எனக்கு ஏற்ற துணை இவர்தான் என்று தோன்றி விட்டது. அவரிடம் நட்பு பாராட்ட அங்கு வேலை செய்யும் பெண்கள் எவ்வளவு முயன்றாலும், அதெல்லாம் சுந்தரை அசைத்து  விடவில்லை. பிறகு வசந்தாவிடம் அவர் பழக ஆரம்பித்தது எனக்கு அதிர்ச்சிதான் - அவர் போன்ற ஒருவருக்கு அவள் ஏற்ற ஜோடி கிடையாது என்று மனப்பூர்வமாக நம்பினேன். கடைசியில் குடும்பப் பாங்கான என் தோற்றம் என்னை அவரிடம் கொண்டுச் சேர்த்தது. அந்த bar-லியே நான் ஒருத்தி தான் ஒரு ஸ்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டேன் என்று நினைக்கிறேன்.

அவருடன் சேர்ந்து அவர் இருப்பிடம் சென்ற என்னை தன படுக்கையில் அவர் முதல் நாளே மிகவும் இயல்பாக  அனுமதித்தார்.அவர் தன உடைகளை களைவதற்காக குளியலறைக்கு சென்று விட, மெத்தையில் எந்த பக்கத்தில் நாம் படுக்கையில் சாயலாம் என்று நானாகவே அனுமானம் செய்தது கொண்டு ஒரு பக்கத்தில் அமர்ந்தேன். அன்றிலிந்து இன்று வரை அவர் என்னை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெளியில் அனுப்ப முயலவில்லை. இது ஒரு அற்புதமான் உறவு - அவர் என்னிடம் கடிந்து கொண்டதோ கேட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டியதோ  கிடையாது ; ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் நான் தடுமாறி கீழே விழ நேர்ந்த போது, என் அவசரம் கண்டு கனிவான குரலில் திட்டியதாக நினைவு.

"ப்ர்ர்ர்ர்ர்ர் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'" - அந்த அலாரம் சனியன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. சுந்தர் எழுந்திருக்கலாம் என்று முடிவு செய்யும் வரை இந்த எரிச்சல் தரும் சத்தத்தைக் கேட்டுத்தான் தொலைக்க வேண்டும். ஒரு முறை இந்த சத்தத்தை நிறுத்த நான் அவரைத் தாண்டி அந்த கடிகாரத்தில் கை வைக்க முயல, அது கீழே விழுந் தொலைக்க - சுந்தர் எரிச்சல் பட நேர்ந்து விட்டது. இந்த அலாரம் சத்தமே பரவாயில்லை என்று எனக்கு தோன்றும் அளவு அந்த சம்பவம் போய் விட்டது. இனி இந்த அலாரம் பற்றி எந்த முயற்சியும் எடுப்பத்தில்லை என்று முடிவே செய்தது விட்டேன். ஒரு வழியாக போர்வைக்குவியலில் இருந்து ஒரு கை வெளியே வந்து கடிகாரத்தை சமாதானப்படுத்தியது. எப்போதும் பூனைத் தூக்கம் மட்டுமே பழக்கமான எனக்கு அவரின் சின்னச் சின்ன செய்கைகள் கூட விழிப்பு கண்டு விடும். சுந்தர் என்னிடம் கேட்டிருந்தால் இந்த அலாரம் சனியனை விட நளினமான முறைகளில் நான் அவரை எழுப்பிவிடுவேன். மனிதர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை விட என் தன்மையான வழிகளில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு.

அரைத்தூக்கத்தில் சுந்தர் என்னை நோக்கி புரண்டு என்னை இருக்க அணைத்துக்கொண்டு பின் விடுவித்தார் - அவரின் வழக்கமான புன்னகையோடு. அதற்கு பிறகு ஒரு கொட்டாவி, சோம்பல் முறிப்பு எல்லாம் வரிசையாக நடந்தது. "சீக்கிரம் கிளம்ப வேண்டும்; இல்லையென்றால் வேலைக்கு late ஆகிவிடும்" என்ற வழக்கமான வசனம் ! இது போன்ற அவரின் வழக்கமான செய்கைகள் எந்த ஒரு பெண்ணக்கும் அலுப்பு ஏற்படுத்தி விடும எனக்கு மட்டும் அப்படி தோன்றியது இல்லை. நாம் தேடி வந்த பொக்கிஷம் இவர்தான் ; நமது தேவை இந்த மாதிரியான ஒரு ஸ்திர வாழ்வுதான் என்று எனக்கு நன்றாக புரிந்து இருந்தது.

சுந்தர் படுக்கை விட்டு எழுந்து தன் காலணிகளை வழக்கம் போல மாற்றி போட்டுகொண்டு பிறகு தடுமாறியவாறு சரி செய்து கொண்டு குளியலறை நோக்கிச் சென்றார். மிகச்சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து - உள்ளே சென்றதை விட சற்றே மலர்ச்சியாக வெளியே  வந்தார்.அவருடைய இந்த அலுப்பூட்டும் வழக்கங்களுக்கு நான் பழகிப் போயிருந்தேன் ; அவரும் சுத்தம் பற்றிய என் தீர்க்கமான ஒழுங்கு முறைகளுக்கும் ஸ்திரத்தன்மை பற்றி என் கருத்துகளுக்கும் பழகிப்பொயிருந்தார்.

"சோம்பேறி..... எழுந்திரு!" என்று ஒரு குரல் கொடுத்தார் - தன மென்மையான குரலில்தான். நான் ஒரு முறை புரண்டு அவர் படுத்திருந்த இடத்தில் பள்ளத்தில் உடல் அடையுமாறு செய்து கொண்டு கண்களை மீண்டும் மூடிக் கொண்டேன்.

"ம்ம்ம்ம்ம் நான் வேலைக்கு போகும் முன்னர் உனக்கும் காலைச் சிற்றுண்டி தந்து விட்டு போக வேண்டும் போல் இருக்கிறது" என்று சொல்லியவாறே அவர் மாடியிலிருந்து கீழே செல்ல நான் மவுனமாக இருந்தேன். இன்னும் சில கணங்களுக்குள் அவர் வாசல் கதவைத் திறந்து செய்தித் தாளையும் தபால்களையும் எடுத்துவிட்டு பால் பாக்கெட் -யும் எடுத்து உள்ளே வருவார். அதன் பிறகு, வழக்கமே மாறாமல் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சியவாறு எனக்கு பிடித்த காலைச் சிற்றுண்டியையும் தயாரித்து விடுவார். அதனையும் ஒரு கப் - ல் எனக்கு சூடான பாலையும் தனக்கு இரண்டு கோப்பை காபி-யையும் எடுத்து சாப்பிடும் மேஜை மேல் அடுக்கி விடுவார்.

எந்த கணம் எந்த செயல் நடக்கும் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். பால் kettle கொதிக்கும் ஓசை, பாலை அவர் ஊற்றும் சத்தம் பிறகு மேஜை மேல் அவை வைக்கப்பட்டு நாற்காலி இழுக்கப்படும் சத்தம். அந்த கடைசி சத்தம் கேட்டதும் நான் உற்சாகமாக அவரோடு சேர்ந்து உண்ணுவதற்கு தயார் ஆவேன்.

என் கால்களை கீழ்நோக்கி நீட்டியவாறு உடலை வளைக்க,. அடர்ந்து வளர்ந்திருந்த என் கால் நகங்கள் கண்களில் பட்டது. சுந்தர் office சென்றத்தும் நிதானமாக ஒரு குளியல் போடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தேன். இதையும் இன்று கவனிக்க வேண்டும்.சாப்பிடும் மேஜை அருகில் நாற்காலியின் சத்தம் கேட்க நான் உற்சாகமாக எழுந்தேன். சில கணங்களில் நானும் சாப்பாடு மேஜை அருகே அடைந்து விட்டேன். தன கோப்பையில் இருந்த corn flake சாப்பிட ஆரம்பித்து விட்டாலும் என்னைப் பார்த்ததும் அவர் நிறுத்தி  விட்டார்."குட்டி......வா ! வா ! என் கூட சாப்பிட நீ வந்தது ரொம்ப சந்தோஷம்" என்று செல்லமாக மனப்பூர்வமாக சொன்னார்.

நான் அவர் அருகாமையில் சென்று எதிர்பார்ப்போடு அவரிப் பார்த்தேன். என் கோப்பையை என் அருகில் தள்ளிவிட்டார். மிகுந்த ஆவலோடு என் கோப்பையிலிருந்த பாலை "சளப் சளப்" என்று சப்தம் எழ குடிக்க ஆரம்பிதேன் - என் வால்  சீராக ஆடிக்கொண்டு இருந்தது.

நன்றியை வெளிப்படுத்த நான் வேறென்ன செய்ய முடியும்...சொல்லுங்கள் ?







    






Sunday, February 2, 2014

சொல்ல மறந்த கதை - 9 :: க்ருஹப்ப்ரவேசம்

அன்புடையீர்

 நவராத்திரி சமயங்களில் நமது இல்லங்களில் "வெத்தலை பாக்கு" கொடுத்து வாங்கி நம் பெண்டிர் வீடு வீடாக அலைந்து அல்லல்படுவதைப் பார்த்து இருக்கிறீர்கள்தானே ? 

ஒரு பெரிய சத்திரத்தில் கூடி அவர்கள் அனைவரும் இந்த பண்டமாற்றை முடித்துக்கொள்ளக் கூடாதா என்று நான் ஒவ்வொரு வருடமும்  யோசித்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் சொல்லியும் இருக்கிறேன். 
(கலாச்சார புரட்சியை ஏற்படுத்த நான் என்ன மகானா ? சாமான்யன் !)

ஆனால் ஒரு பேருண்மையை மனப்பூர்வமாய் ஒத்துக்கொள்கிறேன். இந்த பண்டிகையின் போது  எந்த லஜ்ஜையும் இல்லாமல் எவர் வீட்டிற்கும் எல்லா மகளிரும் போகும் வாய்ப்பு உருவாகிறது சமுதாயத்தில் ஒரு சௌஜன்யம் ஏற்படுவது நல்ல விஷயம்தானே ? ஆனாலும் ஒன்று கவனித்து இருக்கிறீர்களா ? அழைப்பு இருந்தால் மட்டுமே "க்ரஹப்ப்ரவேசம்" நடக்கும்.

நல்லது....நம் கதைக்கு வருவோம். 2/3 நாள் முன் என் மனைவிக்கு அவள் பள்ளியில் - அவள் வகுப்புக் குழந்தை ஒன்று கொடுத்த அன்புப் பரிசு பற்றி புளகாங்கிதப் பட்டு எழுதி இருந்தேன். மனதைத் தொட்ட அந்த சம்பவம் இயற்கையாக எனக்கு ஒரு ஆவலைத் தோற்றுவித்தது. 

என் மனைவியிடம் அந்த குழந்தையின் வீட்டுக்கு வாரக்கடைசியில் போய் வரலாம் என்று விண்ணப்பித்தேன்.....(அடுத்த தெரு தான், ஐயா !! தெரிந்த குடும்பம்தான் ). கிட்டத்தட்ட இரண்டு மூன்று முறை நினைவுப் படுத்தினேன் - அந்த குழந்தையின் பெற்றோர் பள்ளிக்கு வரும்போது அதைப் பற்றி அறிவிக்கச்சொல்லி. 

நேற்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய என் இல்லாள் களைப்பு சற்று நீங்கியதும் இது பற்றி விசாரித்தேன். மிகவும் தயக்கத்தோடு "பேசினேன். குழந்தையை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்!!" என்று சொல்லியிருக்கிறாள். எப்படி இருக்கிறது கதை........?

யார் வீட்டுக்கும் அழையா விருந்தாளியாகப் போவதில் புண்ணியவதிக்கு தயக்கமாம்.  நான் வாயடைத்து போய் விட்டேன்......

நவராத்தி காலம் போது மட்டுமா பண்டிகை ?....
என் போன்ற வீடுகளில் தினந்தினம் நவராத்திரி தான்....தீபாவளிதான்....

இந்த வாரம் இது போதும்......

அன்புடன்
சுரேந்திரன்




Mundane Matters -7 :: Airtel Super Singer - Grand Finale

Dear All

Majority of people almost guarantee a bleak future ahead - for entire humanity (perhaps they just extrapolate future based on current realities). 
Lot of people consider that values of yester generations has receded substantially. 
Leave aside these people, most of the people have lost the ability for a hearty laugh, sweet smile or having moist eyes on sighting something that elevates them.

I am not a typical optimist who swears that every thing is picture perfect and proudly (illogically?) proclaim that ALL IS WELL. 
Have you not observed this ? 
In particular so called "God Fearing" people (I think Gods get dreadful when they look at this kind of people) have an aptitude to convert every thing to positive things and go to the extend of arguing that things will change (which means they - in a way - belong to first category because they accept things are bad as such....huh ?). 
For them every thing that happens is God's "Leela".

YES, I too vociferous claim that every thing is God's Leela. 
But its absolute insanity to maintain two category of extreme stances - 
First, there is nothing bad, all are perfect to the core; 
Second, admitting that there are bad elements but things will change.

I am not the one who will get duped that in the future (at least the near future) things will " change" !
It is just perfect to have Almighty's leela by understanding that it is bound to have imperfections. 
In other words, having imperfections is a part and parcel of the grand eternal game !
There is really no logic to have even a glimpse of thought that things will change - on the contrary, things will REMAIN as it is and as it was.

Now this bragging is not about any philosophy but the verbalization of my abstract thoughts as I was watching Vijay TV's Singing competition show last night - the final contest. Particularly moved with "vidai kodu engal naadae" song (I was weeping more than Mr.Manicka Vinayagam who had originally rendered the song), I was equally touched by S.Janaki's simple but profound act of spontaneity in appreciating a deserving contestant.

Now comes the closure of this post ? 
How -at all - I can bring this post as "mundane" matters ? 
TV is considered to be an IDIOT box or a mundane object by few people, right ? If only, they chose and watch specific programs, Television can become a great possibility of becoming a philosopher. 

This is an extempore post and I had not planned any thing yesterday about writing this today and this single post will stand as a proof for this fact....

Love / Suren