Wednesday, January 20, 2016

எங்கெங்கு காணினும் சக்தியடா - 8

சரியாக ஏழு வருடங்களுக்கு முன்னர் 2009 ல் எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி. மன்னிக்கவும் - பன்மையில் சொல்லப்பட வேண்டிய விஷயம் (நிகழ்ச்சிகள் ).

அலுவல் காரியமாக 1 வருடம் கோயம்பத்தூர் - இல்  இருக்க வேண்டியிருந்த அந்த முழு வருடமும் ஒரு தனி வீட்டில் தன்னந்தனி குடித்தனமாக அந்த அழகு கொஞ்சும் ஊரில் இருந்ததது நான் செய்த பாக்கியம். 

என் அதிர்ஷ்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில்  ஒரு நடுப்பகலில் சென்னையிலிருந்து -  என் மனைவியின் ஒரு தொலைபேசி அழைப்பு. 
வழக்கமாக -அவசியம் அன்றி -அதுவும் அலுவலகத்தில் நான் இருக்கும்போது போனில் கதைப்பதில்லை என்று தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் மணியடிக்கிறது. 

சற்று எரிச்சலாக போன் எடுத்த எனக்கு எடுத்த எடுப்பிலேயே சாந்தப்படுத்தவகையில் ஆதுரமாக "ஒரு good news " என்று ஆரம்பிக்கிறாள். மிகச்சிறிய விஷயந்தானம். அதைக் கேட்டால் கண்டிப்பாக நான் தான் மேலே மேலே ஆர்வாமாகி சந்தோஷமாகி விடுவேனாம்....!! 
இது போன்ற புதிர்களில் அவ்வளவு நாட்டமில்லாத நான் விஷயத்தை சொல்லுமாறு பொறுமையின்றி படபடக்கிறேன் 
(நல்ல செய்தியே ஆனாலும் குற்றம் குற்றமே....!! என்ன சொல்கிறீர்கள் ?)

சென்னையில் எங்கள் flat இருக்கும் மனையின் பின் பக்கத்தில் ஒரு பழமையான தனி வீடு இருந்தது. சமீபத்தில் அந்த தனி வீடு இடிக்கப்பட்டதை நாங்கள் எங்கள் flat மொட்டை மாடியிலிருந்தே கவனித்து இருந்தோம். புது flat வரப்போகிறது என்பதே எங்கள் விவாதிக்கப்படாத முடிவாக இருந்தது. விஷயம் என்னவென்றால் அங்கே ஒரு பாபா கோயில் வரப்போகிறதாம் !!

குதூகலத்துடன் அவள் சொல்ல நான் உண்மையிலேயே கோவை மேகங்களில் மிதந்தது போலத்தான் உணர்ந்தேன். ஓரிரு வருடங்களுக்கு பிறகு சென்னை வரத்தான் போகிறோம் ... வீடு பின் பக்கம் என் மனம் கவர்ந்த ஒரு ஆன்மிக செம்மலின் வீடு.... சபாஷ்.....!! 

அடுத்த வாரம் சென்னை வந்த போது ரொம்ப ஆதுரத்தோடு அந்த இடிபாடுகளின் நிலைமையையும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கட்டடம் எழும்புவத்தையும்  ரொம்ப ஆர்வமாக மொத்த குடும்பமும் கவனித்து வந்தோம். நான் தன்னந்தனியாக... ஆட்கள் வேலை முடிந்து சென்றதும் அந்த நிலத்தில் போய் ஓரிரு முறை உணர்ச்சிப்பெருக்காக உலாத்தியதும் நினைவில் இருக்கிறது.

பிறகென்ன....கோயில் கட்டடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த அந்த கட்டத்தில் - ஒரு வழக்கமான சென்னை விஜயத்தின்போது - ஒரு குடும்ப விசேஷத்திற்காக நாங்கள் போக வேண்டியிருந்தது. , குடும்பத்தோடு scooty யில் (என் seat முன் நிற்கும் எங்கள் 9 வயது மகள்) நாங்கள் விரைய ...... போகும் வழியில் , தி நகர்  முக்கிய வீதி ஒன்றில் என் மகளின் கால்களில் கொஞ்சமும் படாமல் மிகச்சரியாக என் பாதங்களுக்கு நடுவில் கவ்வினாற்போல் ஏதோ ஒரு பொருள். 
மிகவும் நிதானமாக வண்டியை ஓரத்தில் நிறுத்தி குனிந்து நோக்கினால் ஒரு tennis பந்து - வழக்கமான அசட்டு மஞ்சள் நிறத்தில்......; அருகாமையில் இருந்த மைதானத்தில் ஏதோ ஒரு புலிக்குட்டி தன கிரிக்கெட் சாமர்த்தியத்தை காட்ட விளாசியிருக்க வேண்டும். 

நான் சற்று ஆச்சர்யமாய் அந்த பந்தை திருப்பித் திருப்பி பார்க்கையில் என் மகள்..."அப்பா ...அப்பா ...baba மேஜிக் " என்று ஆர்ப்பரிக்கிறாள். சில கணங்களுக்கு பின்னர் தான் எனக்கும் என் மனைவிக்கும் விளங்குகிறது. சுமார் பத்து நாட்களுக்கு முன்னால் எங்கள் அண்ணன் வீடு குழந்தைகளோடு நாங்கள் எங்கள் flat மொட்டை மாடியில் இதே போல் ஒரு டென்னிஸ் பந்து வைத்து விளையாடிக் கொண்டு இருந்தோம். ஏதோ ஒரு வேகத்தில் என் அண்ணனின் சீமந்த புத்திரன் சற்று சீற்றத்துடன் அடிக்கப்போக அந்த பந்து எங்கள் வீடு பின்னால் இருந்த அந்த பாபா கோயில் கட்டுமானத்தின் இடையே சிக்கி விட்டது. கொஞ்சம் தேட முயற்சி செய்தோம் - பின்னர் அவனை வாய்க்கு வந்தமாதிரி ஏசி விட்டு விளையாட்டை முடித்து விட்டோம்.

அதே தோற்றம் கொண்ட பந்து என்பது முதல் அது எங்களை வந்து அடைந்த விதம் மட்டுமல்லாமல், உள்ளங்கையில் நெல்லிக்கனி போல பாபா கோயில் சம்மந்தப்பட்டு இருப்பதால் ... கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டோம்.

இது போன்ற தன்னிச்சையாக நடக்கும் தொடர்பான செயல்களில் ஆடிப்போவது அவரவர் உரிமை மட்டுமே என்று நீங்கள் கருதலாம். 
சக்தியை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தாகம் உடையவர்களுக்கு இந்த தொடர்பு படுத்துதல், உற்சாகம் ஆதல்., விமர்சனங்களிலும் கேள்விகளிலும் தன்னை தொலைத்து விடாமல் இருத்தல் ஆகியவை - கடமையாக கருத வேண்டி இருக்கிறது.

கடமையா ? ஏன் அப்படி ? என்ற கேள்விகளுக்கான என் பதிலை பிறிதொரு நாள் பகருவேன். 

வளரும் ....



















No comments:

Post a Comment