உங்கள் வாழ்க்கையில் தற்செயலான செயல்கள் - சற்றும் எதிர்பாராவிதமாகவும் இருக்கலாம்; தேவைப்பட்டது தேவைப்பட்ட நேரத்தில் ஏதோ ஒரு வகையில் ஒரு அதிசயம் போல நடந்தாகவும் இருக்கலாம். - நடந்து இருக்கிறது தானே ??
இவ்விதமான "யதேச்சை" நிகழ்ச்சிகள் உங்களுக்குள் எவ்விதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது ?
"அட!!" என்று ஒரு கணம் அதிசயித்து பின்னர் வெகு விரைவில் வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கி விடவே பெரும்பாலானவர்களுக்கு நேர்ந்து விடுகிறது.
சிலர், இந்த வகையான நிகழ்வுகளை உற்றார் உறவினரிடம் ஓரிரு நாள் சொல்லி மகிழலாம். வெகு பலர் இந்த நிகழ்ச்சிகளின் உன்னதத்தை உணர்ந்து தெளியாமல் "coincidence " என்று வரட்டுத்தனமாக குறிப்பிட்டு இயந்தரகதியில் தங்கள் வாழ்க்கையை அது போகும் திசையிலேயே செலுத்த தலைப்படலாம்.
உங்கள் வாழ்க்கையை திரும்பி பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பெரிய நிகழ்ச்சிகளாவது , ஓரிரண்டாவது ஞாபகம் இருந்துத் தான் தீரும். நீங்கள் என்ன இயக்குனர் A R முருக தாஸ் படைத்த கஜினியா என்ன ? (அந்த படத்திலும் கதாநாயகனுக்கு அவருக்கு மனம் / ஞாபகம் பிறழ்ந்த அந்த கணம் தெள்ளந்தெளிவாக ஞாபகம் இருந்துத்தான் தொலைக்கிறது).
கொஞ்சம் சூட்சமமான விஷயங்களில் ஆர்வம் காட்டும் நுட்பமான மனிதராக நீங்கள் இருந்தால் - கண்டிப்பாக - சமீப காலத்தில் நடந்த சின்னச் சின்ன நிகழ்வுகள் கூட ஞாபகம் வந்து விடும். சரிதானே ?...
சபாஷ்....இருங்கள் இருங்கள்...அடுக்க ஆரம்பிக்க வேண்டாம்.
இன்னும் அபூர்வமான சிலர் உண்டு.
தினம் தினம் சக்தியை தரிசிக்கும் அந்த பத்து சதவிகித அருள் பெற்றவர்களுக்கு ஒவ்வொரு நாளும்.... நூற்றுக்கணக்கான நிகழ்வுகள்...சின்னஞ்சிறிய செயல்களிலிருந்து சற்றே முக்கியமான முடிவுகள் / சம்பாஷனைகள் வரை...!
அவர்களை இந்த கேள்வியைக் கேட்டால் - அவர்கள் அநேகமாக இறந்து விட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகள் வரை கூட போக மாட்டார்கள்.
ஏனென்றால்.... நான் முதலிலேயே சொன்ன மாதிரி - அவர்கள் நிகழ்காலத்தில் உயிர்ப்போடு இருப்பவர்கள். இந்த நிமிடம் நடக்கும் சின்னச்சின்ன "எதேச்சைகள் " - அனைத்தும் கூர்ந்து கவனித்து, அவற்றின் அர்த்தத்தை உள் வாங்கி வாழ்க்கைச் சக்கரத்தை சரியான திசையில் செலுத்த தெரிந்தவர்கள்.
கடந்த கால ஞாபகங்கள் பத்திரமாக எங்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பிறரிடம் சொல்லி மகிழவோ, எதையும் நிரூபிக்கவோ , ஆறுதல் பெறவோ நிச்சயம் இல்லை.
நாம் கடந்த "எங்கெங்கு காணினும் சக்தியடா - 5" கட்டுரையில் Baba Magic என்று புலகாங்கிதமாக சொன்னது இந்த மனநிலையையையும் அதைப்பெற்ற மனிதர்களையும் தான்.
ரொம்ப பிடிகொடுக்காமல் இந்த தொடர் மேலெழுந்த வாரியாக செல்வதாக படுகிறதா ?
ஒரு எடுத்துக்காட்டு உதவுமா ?
இந்த தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் - எதேச்சைகளுக்கு நான் Baba Magic என்று நாமகரணம் செய்வித்த மூல நிகழ்ச்சியை இதோ பகர்ந்தேன்.
மேலும் வளரும்.
No comments:
Post a Comment