Tuesday, January 26, 2016

எங்கெங்கு காணினும் சக்தியடா - 9

எனக்கும் எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே ஏற்பட்ட ஒரு சிறு நிகழ்ச்சி பற்றி ஒரு பெரும்பத்தி எழுதிவிட்டு இந்த தொடரை புலங்காகிதப்படுத்தி விட்டதாக  நான் கருதுவதாயில்லை. 
ஆட்டம் இப்போது தானே ஆரம்பித்து இருக்கிறது ?

சொல்ல வந்ததது "தன்னிச்சையாக" நடக்கும் செயல்களின் ஒருமைப்பாடு பற்றி , அதை அங்கீகரித்து இரசிக்கும் நமது ஏற்றுக்கொள்ளும் தன்மை பற்றி.  

பாபாவின் சக்தியை பற்றியோ நான் அவரின் பேரருளுக்கு பாத்திரமாகி விட்டது பற்றியோ அல்ல விஷயம். முதலிலேயே தெளிவாக சொன்ன மாதிரி - நீங்கள் நாத்திகராகவே இருந்தாலும் , இது போன்ற தொடர்பற்ற இரண்டு சம்பவங்களின் கோர்வை பற்றி, அவற்றில்  பொருந்தி இருக்கும் ஒரு அழகியலை இரசிக்க உங்களுக்கு தடை என்ன இருக்கிறது ?
அட, இது போன்ற அற்ப சந்தோஷத்திற்கு கூட உங்களுக்கு வழங்கி கொள்ளாமல் சக்தியை தரிசிக்க எங்கே புறப்பட்டு விட்டீர்கள் ? 

மற்றொரு புறம், ஆன்மிகத்தில் ஊறி திளைத்து இருப்பவர்கள்.
உதாரணமாக பாபாவின் ஆத்மார்த்தமான பக்தர்கள் என்னை கோவிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  
அங்கிங்கினாதபடி எங்கும் கொட்டி கிடக்கும் அந்த பெருஞ்சக்தியின்  ஒரு ஸ்தூல, சூட்சமான வடிவம் தான் தாங்கள் போற்றி வணங்கும் ஒரு தெய்வ சக்தி அல்லது தெய்வ மகன் அல்லது சித்த புருஷன் என்ற பிரக்ஞை கொண்ட எந்த ஆன்மிக பக்தனும் இந்த நிகழ்ச்சியில் நான் பிரஸ்தாபித்த பாபா மேஜிக் - கை எவ்வகையிலும் நான் குறைத்து மதிப்பிடுவதாக கருதி விட மாட்டான்.
எனக்கு இந்த ஆன்மிக பாதை மட்டுமே போதுமானது என்று அவர்கள் பரிபூர்ணமாக நிச்சலனமாக தைல தாரையாக  வாழ்வதில் எனக்கும் எந்த ஆட்சேபணையும் கிடையாது. 

நானோ - எங்கெங்கும் காணத் தலைப்படும் சக்தியின் வெகு சில தரிசனங்களில் தூண்டப்பட்டு, கவரப்பட்டு  - என் வார்த்தைகளை இங்கே பெரும் உவகையோடு இறைத்துக்கொண்டு இருப்பவன்.  
என் வழி தனி வழியோ, தன்னந்தனி வழியோ - விதித்தபடி இருக்கட்டும்.

இது ஒரு ஆன்மிக பாதையே ... படித்துத் தான் பார்ப்போமே என்று ஆவலாகும் ஆன்மிக பக்தர்களுக்கு ஒரு எச்சரிக்கை. 
முழுக்க முழுக்க பக்தி ரசத்தில் ஊறிப் போகாத பிரகுதியாக  நான் இன்னமும் இருப்பதால்  இந்த கட்டுரைத் தொடரின் மூல விஷயம் பற்றி இந்த எச்சரிக்கை செய்யத்தான் வேண்டி இருக்கிறது.

1. எதிர்பாராமல் நடந்து நமக்கு இன்பம் ஏற்படுத்தும் விஷயங்களை மற்றும் நினைவில் வைத்து புலங்காகிதப்படுவது மட்டுமே  சக்தி தரிசனத்தில் சேராது . ரொம்பவே ஆவலாக காத்திருந்தோ அல்லது நாம் நிச்சயமாகவே கொண்டு விட்ட சில விஷயங்களில் நம் மூக்கு உடைபடுவதும் சக்தியின் செயலே.....என்ற பிரக்ஞை அத்தியாவசியம். (மேலும் விஸ்தரிக்க வேண்டி இருக்கிறது. அடுத்த வரைவில் செய்வோம்)

2. கவனம்.... "எல்லாமே நல்லதுக்காக தான் நடக்குது" என்ற ஒரு வித பாமர பிரக்ஞை - பெரும்பாலான பக்தர்கள் மனப்பூர்வமாக நம்புவது - கொடுக்கும் ஆசுவாசத்திற்கு உங்கள் உள்ளம் ஏங்குகிறதா. ? உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விஷயங்கள் அனைத்தையும்  (இந்த கட்டுரையாக கூட இருக்கலாம்) . "எல்லாமே நல்லதுக்காக தான் நடக்குது" என்று விகல்பமிலாமல் எடுத்துக்கொள்வது சற்று மேலான மன நிலை.
நல்லதும் கேட்டதும் சேர்ந்தது தானே வாழ்க்கை ? தங்களுக்கு பிடிக்காத காயை ஒதுக்கி சாம்பாரை மாட்டும் லாவும் கரண்டியா என்ன - உங்கள் பக்தி ? அழகு தான். 

3. ரொம்ப முக்கியமான குறிப்பு..... சக்தியின் தரிசனம் - சின்னதும் பெரியதுமாக.... வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் ... நல்லதும் கெட்டதுமாக - சில சமயங்களில் - வேளை  கேட்ட வேளைகளில் கூட - அருளப்படும் ஒரு தன்மை. 
கடந்த காலத்து (சிற்சில ) நிகழ்ச்சியில் விம்மி கொண்டும் , வருங்காலத்தை ரொம்ப கற்பனை செய்து கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பது - சக்தி தரிசனத்திற்கு நேர்மாறான மன நிலை.
முன் இரண்டு குறிப்பை காட்டிலும் - காட்டம் குறைவாக தோன்றினாலும் - மிகவும் நுட்பமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டியது இந்த அம்சத்தை தான்.

வளரும்.....












Wednesday, January 20, 2016

எங்கெங்கு காணினும் சக்தியடா - 8

சரியாக ஏழு வருடங்களுக்கு முன்னர் 2009 ல் எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி. மன்னிக்கவும் - பன்மையில் சொல்லப்பட வேண்டிய விஷயம் (நிகழ்ச்சிகள் ).

அலுவல் காரியமாக 1 வருடம் கோயம்பத்தூர் - இல்  இருக்க வேண்டியிருந்த அந்த முழு வருடமும் ஒரு தனி வீட்டில் தன்னந்தனி குடித்தனமாக அந்த அழகு கொஞ்சும் ஊரில் இருந்ததது நான் செய்த பாக்கியம். 

என் அதிர்ஷ்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில்  ஒரு நடுப்பகலில் சென்னையிலிருந்து -  என் மனைவியின் ஒரு தொலைபேசி அழைப்பு. 
வழக்கமாக -அவசியம் அன்றி -அதுவும் அலுவலகத்தில் நான் இருக்கும்போது போனில் கதைப்பதில்லை என்று தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் மணியடிக்கிறது. 

சற்று எரிச்சலாக போன் எடுத்த எனக்கு எடுத்த எடுப்பிலேயே சாந்தப்படுத்தவகையில் ஆதுரமாக "ஒரு good news " என்று ஆரம்பிக்கிறாள். மிகச்சிறிய விஷயந்தானம். அதைக் கேட்டால் கண்டிப்பாக நான் தான் மேலே மேலே ஆர்வாமாகி சந்தோஷமாகி விடுவேனாம்....!! 
இது போன்ற புதிர்களில் அவ்வளவு நாட்டமில்லாத நான் விஷயத்தை சொல்லுமாறு பொறுமையின்றி படபடக்கிறேன் 
(நல்ல செய்தியே ஆனாலும் குற்றம் குற்றமே....!! என்ன சொல்கிறீர்கள் ?)

சென்னையில் எங்கள் flat இருக்கும் மனையின் பின் பக்கத்தில் ஒரு பழமையான தனி வீடு இருந்தது. சமீபத்தில் அந்த தனி வீடு இடிக்கப்பட்டதை நாங்கள் எங்கள் flat மொட்டை மாடியிலிருந்தே கவனித்து இருந்தோம். புது flat வரப்போகிறது என்பதே எங்கள் விவாதிக்கப்படாத முடிவாக இருந்தது. விஷயம் என்னவென்றால் அங்கே ஒரு பாபா கோயில் வரப்போகிறதாம் !!

குதூகலத்துடன் அவள் சொல்ல நான் உண்மையிலேயே கோவை மேகங்களில் மிதந்தது போலத்தான் உணர்ந்தேன். ஓரிரு வருடங்களுக்கு பிறகு சென்னை வரத்தான் போகிறோம் ... வீடு பின் பக்கம் என் மனம் கவர்ந்த ஒரு ஆன்மிக செம்மலின் வீடு.... சபாஷ்.....!! 

அடுத்த வாரம் சென்னை வந்த போது ரொம்ப ஆதுரத்தோடு அந்த இடிபாடுகளின் நிலைமையையும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கட்டடம் எழும்புவத்தையும்  ரொம்ப ஆர்வமாக மொத்த குடும்பமும் கவனித்து வந்தோம். நான் தன்னந்தனியாக... ஆட்கள் வேலை முடிந்து சென்றதும் அந்த நிலத்தில் போய் ஓரிரு முறை உணர்ச்சிப்பெருக்காக உலாத்தியதும் நினைவில் இருக்கிறது.

பிறகென்ன....கோயில் கட்டடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த அந்த கட்டத்தில் - ஒரு வழக்கமான சென்னை விஜயத்தின்போது - ஒரு குடும்ப விசேஷத்திற்காக நாங்கள் போக வேண்டியிருந்தது. , குடும்பத்தோடு scooty யில் (என் seat முன் நிற்கும் எங்கள் 9 வயது மகள்) நாங்கள் விரைய ...... போகும் வழியில் , தி நகர்  முக்கிய வீதி ஒன்றில் என் மகளின் கால்களில் கொஞ்சமும் படாமல் மிகச்சரியாக என் பாதங்களுக்கு நடுவில் கவ்வினாற்போல் ஏதோ ஒரு பொருள். 
மிகவும் நிதானமாக வண்டியை ஓரத்தில் நிறுத்தி குனிந்து நோக்கினால் ஒரு tennis பந்து - வழக்கமான அசட்டு மஞ்சள் நிறத்தில்......; அருகாமையில் இருந்த மைதானத்தில் ஏதோ ஒரு புலிக்குட்டி தன கிரிக்கெட் சாமர்த்தியத்தை காட்ட விளாசியிருக்க வேண்டும். 

நான் சற்று ஆச்சர்யமாய் அந்த பந்தை திருப்பித் திருப்பி பார்க்கையில் என் மகள்..."அப்பா ...அப்பா ...baba மேஜிக் " என்று ஆர்ப்பரிக்கிறாள். சில கணங்களுக்கு பின்னர் தான் எனக்கும் என் மனைவிக்கும் விளங்குகிறது. சுமார் பத்து நாட்களுக்கு முன்னால் எங்கள் அண்ணன் வீடு குழந்தைகளோடு நாங்கள் எங்கள் flat மொட்டை மாடியில் இதே போல் ஒரு டென்னிஸ் பந்து வைத்து விளையாடிக் கொண்டு இருந்தோம். ஏதோ ஒரு வேகத்தில் என் அண்ணனின் சீமந்த புத்திரன் சற்று சீற்றத்துடன் அடிக்கப்போக அந்த பந்து எங்கள் வீடு பின்னால் இருந்த அந்த பாபா கோயில் கட்டுமானத்தின் இடையே சிக்கி விட்டது. கொஞ்சம் தேட முயற்சி செய்தோம் - பின்னர் அவனை வாய்க்கு வந்தமாதிரி ஏசி விட்டு விளையாட்டை முடித்து விட்டோம்.

அதே தோற்றம் கொண்ட பந்து என்பது முதல் அது எங்களை வந்து அடைந்த விதம் மட்டுமல்லாமல், உள்ளங்கையில் நெல்லிக்கனி போல பாபா கோயில் சம்மந்தப்பட்டு இருப்பதால் ... கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டோம்.

இது போன்ற தன்னிச்சையாக நடக்கும் தொடர்பான செயல்களில் ஆடிப்போவது அவரவர் உரிமை மட்டுமே என்று நீங்கள் கருதலாம். 
சக்தியை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தாகம் உடையவர்களுக்கு இந்த தொடர்பு படுத்துதல், உற்சாகம் ஆதல்., விமர்சனங்களிலும் கேள்விகளிலும் தன்னை தொலைத்து விடாமல் இருத்தல் ஆகியவை - கடமையாக கருத வேண்டி இருக்கிறது.

கடமையா ? ஏன் அப்படி ? என்ற கேள்விகளுக்கான என் பதிலை பிறிதொரு நாள் பகருவேன். 

வளரும் ....



















Wednesday, January 6, 2016

எங்கெங்கு காணினும் சக்தியடா - 7

உங்கள் வாழ்க்கையில் தற்செயலான செயல்கள் - சற்றும் எதிர்பாராவிதமாகவும் இருக்கலாம்; தேவைப்பட்டது தேவைப்பட்ட நேரத்தில் ஏதோ ஒரு வகையில் ஒரு அதிசயம் போல நடந்தாகவும் இருக்கலாம். - நடந்து இருக்கிறது  தானே ??

இவ்விதமான "யதேச்சை" நிகழ்ச்சிகள் உங்களுக்குள் எவ்விதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது ? 

"அட!!" என்று ஒரு கணம் அதிசயித்து பின்னர் வெகு விரைவில் வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கி விடவே பெரும்பாலானவர்களுக்கு நேர்ந்து விடுகிறது. 
சிலர், இந்த வகையான நிகழ்வுகளை உற்றார் உறவினரிடம் ஓரிரு நாள் சொல்லி மகிழலாம். வெகு பலர் இந்த நிகழ்ச்சிகளின் உன்னதத்தை உணர்ந்து தெளியாமல் "coincidence " என்று வரட்டுத்தனமாக குறிப்பிட்டு இயந்தரகதியில் தங்கள் வாழ்க்கையை அது போகும் திசையிலேயே   செலுத்த தலைப்படலாம்.

உங்கள் வாழ்க்கையை திரும்பி பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பெரிய நிகழ்ச்சிகளாவது , ஓரிரண்டாவது ஞாபகம் இருந்துத் தான் தீரும். நீங்கள் என்ன இயக்குனர் A R முருக தாஸ் படைத்த கஜினியா என்ன ? (அந்த படத்திலும்  கதாநாயகனுக்கு அவருக்கு மனம் / ஞாபகம் பிறழ்ந்த அந்த கணம் தெள்ளந்தெளிவாக ஞாபகம்  இருந்துத்தான்  தொலைக்கிறது).

கொஞ்சம் சூட்சமமான விஷயங்களில் ஆர்வம் காட்டும் நுட்பமான மனிதராக நீங்கள்  இருந்தால் - கண்டிப்பாக -  சமீப காலத்தில் நடந்த சின்னச் சின்ன நிகழ்வுகள் கூட  ஞாபகம் வந்து விடும். சரிதானே ?...
சபாஷ்....இருங்கள் இருங்கள்...அடுக்க ஆரம்பிக்க வேண்டாம். 
இன்னும் அபூர்வமான சிலர் உண்டு.

தினம் தினம் சக்தியை தரிசிக்கும் அந்த பத்து சதவிகித அருள் பெற்றவர்களுக்கு ஒவ்வொரு நாளும்.... நூற்றுக்கணக்கான நிகழ்வுகள்...சின்னஞ்சிறிய செயல்களிலிருந்து சற்றே முக்கியமான முடிவுகள் / சம்பாஷனைகள் வரை...! 
அவர்களை இந்த கேள்வியைக் கேட்டால் - அவர்கள் அநேகமாக இறந்து விட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகள் வரை கூட போக மாட்டார்கள்.

ஏனென்றால்.... நான் முதலிலேயே சொன்ன மாதிரி - அவர்கள் நிகழ்காலத்தில் உயிர்ப்போடு இருப்பவர்கள். இந்த  நிமிடம் நடக்கும் சின்னச்சின்ன "எதேச்சைகள் " - அனைத்தும் கூர்ந்து கவனித்து, அவற்றின் அர்த்தத்தை உள் வாங்கி வாழ்க்கைச் சக்கரத்தை சரியான திசையில் செலுத்த தெரிந்தவர்கள்.

கடந்த கால ஞாபகங்கள் பத்திரமாக எங்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பிறரிடம் சொல்லி மகிழவோ, எதையும் நிரூபிக்கவோ , ஆறுதல் பெறவோ நிச்சயம் இல்லை.

நாம் கடந்த "எங்கெங்கு காணினும் சக்தியடா - 5" கட்டுரையில் Baba Magic என்று புலகாங்கிதமாக சொன்னது இந்த மனநிலையையையும் அதைப்பெற்ற மனிதர்களையும் தான்.

ரொம்ப பிடிகொடுக்காமல் இந்த தொடர் மேலெழுந்த வாரியாக செல்வதாக படுகிறதா ? 
ஒரு எடுத்துக்காட்டு உதவுமா ?

இந்த தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் - எதேச்சைகளுக்கு நான் Baba Magic என்று நாமகரணம் செய்வித்த மூல நிகழ்ச்சியை இதோ பகர்ந்தேன்.

மேலும் வளரும்.

Saturday, January 2, 2016

Long Live......Glory of Ramayan !!

Prelude : I am not sure if you know this. Typically, in our culture - when Great Men embark upon huge literary endeavors, two typical aspects are inevitable - "Mangala Slokam" at the very beginning and "Phala Sruthi" as the last part. 
Watch out ... there is a connection to the title with these two. Lemme revert to it towards the end.....
But then...don't skip the matter in the middle and run towards the end please....:-)

Dear All

"Mangala Slokam" is basically to seek Divine Grace;  In Tamil it can be equated to "Kadavul Vaazhthu".
Of course, there are exceptions like the Poet (Rishi Vaalmiki) praises Lord in the first slokam of Ramayanam instead of praying / seeking blessings considering the level of his spiritual attainment. Yes. the beauty of our culture is not in the mainstream but also in the exceptions.

"Phala Sruthi" is the one which states very clearly the benefits out of learning the scripture. 
Again here, "Learning" is stated emphatically to consist four aspects - Reading, Analysis, Contemplation & Teaching others. Again an interesting "scope" of what a word could mean. Many times Phala Sruthi is misunderstood because the word "learning" is misunderstood....!!! hmmm.....

This New Year I started off with listening to  a series of lectures by Swamy Krishna Premi  on Ramayan which I have been holding for more than 4 months with me - with a sense of guilt though....
Not just guilt for holding some thing without making use of it, there were elements of  reluctance (as I always felt this story is too straight line one - much worse than Rajni's typical films) and a sense of awe (Yes, I did not want to start any new initiative without a firm commitment of my own focus until closure).

Believe me  - the first 2 hours of the series of lectures (Total time running for approx 30 hours)  demolished my reluctance completely and YES I am here making a fist on my resolve to complete it at least within next 45 days !! 
In a way, I am happy at last I am listening it from a Living Saint (Swamy Krishna Premi) who heightens the impact of the story with his spell bound narrative style (Never had heard him more than couple of minutes continuously in previous occasions - though I always liked his voice and quite impressed with the grace that he offers freely just by his looks)

The way he starts off giving the two interpretations of the Mangala Slokam, and straight touches the Phala Sruthi briefly before moving the actual story of Ramayan ..... HATS off  to the Creator of this Epic (Sage Valmiki). It reminds me of the Flash Back technique & "After some period of time" Card put up in few cinemas !!
More importantly Valmiki -  gives a wonderful Modern-ism effect (or is it Post M ??) when he travels to connect us with the dialogue that he personally had with Lord Rama - the Hero of his story and gives a context for the Pala Sruthi. (yes, while staunch Hindus get emotional when they hear few nuances of this epic, this might give a feel to the Non believers that this particular point is planned to give more genuineness to the epic NEVERTHELESS, I am aghast as his level of creativity & foresight)

Well then, as I proceed on to the third session of lecture tomorrow or on sunday - I am confident to pick up not just the nuances of this epic - which I never had a chance to learn until now, but also improve my sanskrit verbiage a bit ...better :-)

For that matter, I have heard the crux of this epic from my Guru in his own lucid way 10 years back. 
Perhaps I can share this one with you - er er er.... as it is short and sweet !!

"Lord Shiva was seated at Mount Kailash with Demons and Demented Beings surrounding him. 
There was a huge THUD noise at Earth. Parvathy - sitting close to him - asked Shiva what the sound was. 
He glared for a few seconds and replied her "Ravana is born...!!". 
Few Moments passed and there was another huge noise at Earth. Parvathy got alarmed this time around.
She prayed the Lord once again. 
Solemnly, Lord Siva declared "Ravana" is dead !!"

Howzzzzzzaaaaaaat ????

When you develop a liking for this story, Be damn assured that any other story (I mean even a "Cock and Bull" story) will entice you. It only rests on our choice of story teller who is more evolved than us. Nothing more and nothing less. 
I trust Swamy Krishna Premi....and the other Teachers to whom I surrender myself and my precious time. 


Do you really think I am so serious about all the stupid goals I keep tirelessly taking every now and then ? (including the current one about listening thru' the lectures of Ramayan)
Its not the achievement that makes us blissful - but the journey makes a huge difference. 

Not very different from the superiority of Screenplay than the End of the story

Isn't it  always better to see an average story film with an excellent screen play instead of the the tragic reverse ?? hmm....
Here I close....
Love // Suchoo


Post Script - If  you can't connect the title of this post with my prelude until now, take a minute more.....!! Else....read below.

I just titled it to serve both the needs. 

YES, Like Poet Valmiki, I decided to "praise" an epic which makes it Mangala Title. Further, some one who reads the title and this post may really try to access Ramayan story and add more glory to it - that's the potential benefit / "["Phalam"]of my post

Time Management...You see...!!