Saturday, May 30, 2015

*** The Height of Practical Life ***

Hi

I am reading a treatise of Adi Sankara (known as "Viveka Choodamani") for the past few months. 

Of course - not just reading -  but following a Audio CD while reading the commentaries of the verses. As most of the vedanta scriptures, he goes on talking about Athma Anaathma (self , Non self) Vivekam (or intellectual understanding).....; The speciality of the books is of course the Great Master's lucid writing & the way he handles the scholars' language (Sanksrit).

As I continue to enjoy the book, I also clearly realize that this dimension is not relevant for most of our practical life (which is of course stated very clearly in the book itself - making it more interesting). I was wondering what could be the height of "practical" Vivekam...and I think I stumbled upon it yesterday !!

There were some issues / challenges on a particular project that I was handling which was tormenting me for the past 2 - 3 weeks. Believe me, as on Tuesday that went past, I was totally blank and had no clue on how the revival is going to happen...!! In sheer desperation, I took few initiatives this week, and yesterday, all the issues got settled one by one as if some one swayed their magic wand on them....

I had bragged quite often about "Free Will Versus Destiny" in this blog and the latter had been a pet topic for me on which I have penned a poem too few years back......; The beauty is that I keep coming rounds and rounds on this subject while I have veered past many topics of my musings.

Can I claim if my initiatives were the reason for the solutions that I got yesterday ? In that case why did my earlier initiatives did not fructify ? OR is it that they were foundation laid earlier to get these lasting solutions......and last but not least - was it just destiny that was playing its pranks while I keep testing myself -as though I am a doer ??

Never ending questions.....indeed....!!

As I visited Baba Temple today morning getting up unusually quite early - I was looking into His eyes muttering only this...."If only I learnt this mystery before I drop dead, I will consider my life worth lived". 
Yes, I feel - this moment - with all conviction that there is nothing more to get from this human life.

Who doesn't want to taste the height of practical life having got into it by ..... sheer Fate..... or is it Free Will ???......

Lets go thru' all over once again...; Its worth it....

Pranams

Suchoo





Saturday, May 2, 2015

****பிறந்த நாள் - ஒரு சிறுகதை *****

முன்குறிப்பு : - எனக்கு இன்று விடியற்காலை 3.30 மணிக்கு முழிப்பு வந்து - கிட்டத்தட்ட 1 மணி நேரம் செலவழித்து இந்த "கதை"யை தட்டச்சு செய்துவிட்டு மீண்டும் சமர்த்தாக போய் படுத்துக்கொண்டு பத்து மணிக்குத் தான் எழுந்திருந்தேன்.....!! சுமாராக இருந்தால் தெரியப்படுத்தவும்....ஏனென்றால் எனக்கு இது சிறுகதை தானா என்ற சந்தேகம் இன்னமும் தீரவில்லை.  


அவனுக்கு அன்று பிறந்த நாள். விடியற்காலை முழிப்பு வந்து விட்டது. என்னென்னவோ குருட்டு யோசனைகள்..... மனைவியும் மகனும் தூங்குகிறார்கள் என்ற ஆதுரத்துடன் ஆடாமல் அசங்காமல் படுத்து கிடந்தான். அவன் சிறுவனாக இருந்த பொழுது "பிறந்த நாள்" என்று பெரிய மவுசு எதுவும் இருந்ததில்லை. தன் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் சாக்லேட், மற்றும் அம்மாவின் இரகசியமான அன்பளிப்பு (கசங்கிப்போன ஒரு ரூபாய் தாள்- தான் பெரும்பாலும்..... "எதையாவது தின்ன வாங்கிக்க..." என்று அப்பாவுக்கு தெரியாமல் ஒரு கிசுகிசுப்பு) தரும் சுகம்..... இது தான் பிறந்த நாள். பெரும்பாலும் முதல் நாள் அவன் அப்பாவோ அம்மாவோ நினைவு படுத்தினால் மட்டுமே அவனுக்கு தன்  பிறந்த நாள் என்று ஞாபகம் வரும். 

அவன் படித்த பள்ளியில் ஒரு தவற விடாத சம்பிரதாயம் - "கடவுள் வாழ்த்து" வகையறா முடித்த பிறகு - பிறந்த நாள் பிள்ளைகளை மேடையில் ஏற்றி - தமிழ் ஐயா "நாக நாதம்பிள்ளை" தன கணீர் குரலில் அறிவிக்க . மற்ற பிள்ளைகளின் ஆரவார குரலில் ஒரு வாழ்த்து.  அவன் மிகவும் தர்மசங்கடப்படுவது இந்த பாட்டின் போதுதான். மேடையில் கொஞ்சம் மந்தகாசப் புன்னகையோடு "எப்போது முடியும் ?" என்ற காத்திருற்றலைத் தான்.
பிற மாணவர்களின் பிறந்த நாட்களின் பொழுது - கூட்டத்தின் ஒருவனாக கோரஸ் குரலில் உச்ச குரலில் கிட்டத்தட்ட இயந்தர கதியில் தானும் கத்துவது ரொம்ப இயல்பாக இருந்தாலும் - வருடத்தில் ஒரு நாள் தான் மேடையில்  இருக்கையில், கொஞ்சம் அசந்தர்ப்பமாய் உணர்வான். 

பள்ளி நாட்களுக்கு பிறகு இந்த குறைந்த பட்ச கொண்டாட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போய்விட, பின்னர் பல பிறந்த நாட்கள் - மே  மாதம் முடிந்ததும் திடுக்கிடலோடு நினைவில் மோதி, தனக்கு எத்தனை வயது என்று வேக வேகமாக கணக்கிட்டு கொள்வான்.

இப்போதெல்லாம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் - முக்கியமாக நகரங்களில்  - வேறு பரிமாணம் பெற்று விட்டது. அவன் மகன் ஒரு மாதமாக தன்னுடைய வரப்போகும் பிறந்த நாள் பற்றி ஜபிப்பதும், அவன் உற்ற நண்பர்கள் புடைசூழ கேக் வெட்டுவது ஒரு விதத்தில் சாங்கியமாகவே கருதி விட்டான். என்ன செய்வது - பட்டணத்தில் சகவாச தோஷத்தில் இதெல்லாம் இல்லா விட்டால் வருடம் முழுதும் அவன் தன்  நண்பர்கள் வீட்டுக்கு பிறந்த நாள் விழாவுக்கு போய் கலந்து கொள்வது முடியாமல் போய் விடுமே ?
\
தன மகன் மறந்து போய் கூட "உங்களுக்கு  பிறந்த நாள் எப்பப்பா ?" என்று தன்னிடம் ஒருமுறை கூட கேட்காததை அவன் இயல்பாகவே ஏற்றுக் கொண்டு விட்டான். ஒரு வேளை - தனது பிறந்த நாள் கொண்டாட பொருட்செலவு செய்யவே தன் தந்தை அனாதியாக அவதரித்து -செலவு பற்றி சிறிதும் கருதாமல் வருடா வருடம் தன் வாரிசு வளர்வத்தை எண்ணி பூரிப்பது தான் அவர்  கடமை என்று எண்ணி விட்டானோ தெரியவில்லை.

சற்று வியர்வை கசகசப்பாக இருக்க, திரும்பி ஒரு பக்கவாட்டில் படுத்தான். ஏற்படுத்திய சிற்சில சலனங்களில்  அவன் மனைவிக்கு விழிப்பு கண்டு விட்டது. "முழிச்சீட்ட்ங்களா...என்ன பண்றீங்க ?" என்று ஒரு சன்னமான கேள்வி...
"ஒண்ணுமில்லை - நீ தூங்கு ....." என்று இவனும் மகன் தூக்கம் கெடாமல் அவன் தலையை வருடியவாறு மெதுவாக பதில் சொன்னான். 
"இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்" என்று ஒரு பட்டியக்காரன் போல - உணர்ச்சியற்ற குரலில் சொன்னான் - பொய்யான ஒரு பெருமிதத்தை வரவழித்துக் கொண்டு. அவன் மனைவி - அந்த செய்தியை கிரகித்ததும் ஒரு உடனடி குதூகலத்துடன் "அட" அனிச்சையாய் சொன்னாள். பிறகு ஒரு சிறிய மவுனம்...."வாழ்த்து" எல்லாம் சொல்லி அவளுக்கும் வழக்கம் இல்லை - இவனுக்கும் கேட்டு பழக்கம் இல்லை. அவள் பிறந்த நாட்களும் அப்படித்தானே போகிறது என்று அவனுக்கு திடீரென்று தோன்றியது. 

சட்டென்று ஒரு தருவித்துக்கொண்ட உற்சாகத்துடன் "இன்னிக்கு ஞாயித்து கிழமைதானே...மச்சான் வீட்டுக்கு போய் வருவோமா ? கடைசியா திருவிழாவுக்கு போனது தானே.....?" என்று கேட்டு இருட்டில் அவள் கண்களை தேடி சந்தித்தான்.....அவளுக்கும் அவன் குதூகலம் தொற்றிக்கொண்டது....."நல்ல ஐடியா தான்.... போய்  வருவோம்...." . அவள் அண்ணன் நகர்புறத்தைத் தாண்டி ஒரு 25 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கிறார். தாய் தந்தை காலத்திற்கு பிறகு அவர் ஒருவர் தான் அவள் வழியில் அவர்களுக்கு ஒரே உறவு. 

காலை பத்து மணி வாக்கில் புறப்பட்டார்கள். மோட்டார் பைக் குதித்து குதித்து திமிறி மெதுவாக ஓட, கடைசி 2 கிலோமீட்டர் ரொம்ப மோசம். தன முன்னால்  உட்கார்ந்திருந்த மகனை எச்சரித்து விட்டு அவன் மிகவும் கவனமாக ஒட்டி - ஈவு இர க்கம் இல்லாமல் ஊர் முழுவத்தையும் நோண்டி போட்டிருந்த நகராட்சியை சபித்தவாறு மச்சான் வீட்டை உச்சி வெயிலில் சென்று அடைந்தார்கள். 

வாசலில் யார் என்று சற்று குழப்பமாக வீட்டுக்குள் இருந்து பார்த்த அவர் - மலர்ச்சியாக வெளியே வந்து...."வாங்க மாப்ள...இதென்ன அதிசயமா இல்ல இருக்கு; வாம்மா ராசாத்தி !!...." என்று சொல்லியவாறு மகனை கொத்திக்கொண்டார். அவன் கூச்சத்துடன் உடல் நெளிய  வேறு வழியே இல்லாமல் மகன் அவர் மேல் சாய்ந்தான். 

பைக்-ஐ வீட்டினுள் ஒரு வெப்ப மரத்தடியில் சாய்த்தவாறு நிறுத்தி அவன் தன் ஹெல்மெட்டை கழற்றி வியர்வவை  வழியும் சட்டைக்குள் ஊதியவாறு வர, வாசல் சத்தம் கேட்டு மதனியும் வாய் நிறைய சிரிப்போடு அவர்களை நோக்கி  வந்தார்கள். "இதேது ? அதிசயம்...." என்று வார்த்தைகள் தன வசம் இல்லாமல் வர - இவன் மனைவி "உங்க மாப்பிள்ளைக்கு இன்னிக்கு பிறந்த நாளு .... திடீர்னு வெளிய போகலாம்-னு நம்ம வீட்டுக்கு கெளம்பிட்டோம்-ல " என்று பூரிப்புடன் சொல்ல, "சரிதான்.....ரெம்ப சந்தோஷம்....கோழி அடிச்சிட வேண்டியது தான்...இன்னிக்கு பெஷல் விருந்து" என்று சந்தோஷக்குரலில் - பொடிப்பயலை தலை மேல் உட்கார்த்தி  வைத்தவாறு மச்சான்  சொல்லியவாறு வாசல் நோக்கி ஏதோ காரியமாக விரைந்தார். 
அவன் மனையும் மதனியும் கல கலவென்று விட்டுப்போன கதைகளை அலசிக்கொண்டு இருக்க, அவன் இருந்த களைப்பைப்  பார்த்து, மச்சான் அவனை இளைப்பாரச்சொல்லிவிட்டு, பையனை தன்னுடன் தோட்டத்துக்கு கூட்டிச் சென்று விட்டார். ஒரு மணி நேரம் கண் அசந்த அவன் விழிப்பு கண்டு பின் தானும் அவருடன் சேர்ந்து கொண்டு சாயங்காலம் வரை தோட்டத்தில் கழித்தான்.
பொழுது சாய விட்டுக்குள் திரும்ப, அவன் மதனி "சீக்கிரமா சாப்பாட்டு கடையை முடிப்போம்; அவங்க அவ்வளவு தூரம் போயாகனும் " என்று துரிதப் படுத்த ..... சுமார் ஏழு மணி அளவில் சாப்பிடத்தொடங்கி விட்டார்கள். "ஊரு ரோடுதான் மகா மோசமாய் இருக்கு - வீட்டுக்கு போய் எலும்பையெல்லாம் எண்ணிப்பார்க்கணும் போல...." என்று அவன் இயல்பாக சொல்ல, ஒரு கவளத்தை வாயருகே கொண்டு போய்க் கொண்டு இருந்த அவன் மச்சான் "ஜங்ஷன் வந்தா வந்தீங்க ?" என்று ஒரு ஆச்சர்யக்குறியுடன் கேட்டார்.
அவன் கொஞ்சம் தயக்கமாக "ஆமாம் - வேறெப்படி வர்றது ?" என்று பதில் சொல்ல - அவர்...."சரியா போச்சு. - வடக்கே 4 கிலோ மீட்டர் போனா மில்லு வந்துடுமே.....இடது பக்கம் திரும்பினா state highways  வந்துடும். தூரமும் கொஞ்சம் குறையும்.....வேகமா பறந்துடலாம், இருங்க ஒன்னு செய்வோம்....நானும் என் வண்டியை எடுத்துக்கிட்டு மில்லு வரைக்கும் வாரேன். இருட்டு வேற சாஸ்தியா இருக்கும் - வழி தவறிட்டீங்கன்னா பிரச்னை" என்று விரைசாக சாப்பிட்டு தன் வண்டியின் நிலைமை ஆராய போய்விட்டார்.
அவர்கள் மகன்களும், மகளும் வெவ்வேறு இடங்களில் இருக்க, அவருக்கு தங்கள் செக்கு மாடு வாழ்க்கையில் பயணத்துக்கு அவசியம் இல்லாததால் அவர் மொபெட் கொஞ்சம் சிதிலமாகத் தான் இருந்தது. இது போன்ற திடீர் உபயோகத்திற்கு - சிற்சில முன் தயாரிப்புகள் தேவைப்படும் ஒரு பழைய வண்டி.
ஒரு வழியாக அவர்கள் கிளம்ப எட்டு மணியைத்தாண்டி விட்டது. மதனி வாய் முழுவதும் சிரிப்போடு விடை கொடுக்க, மச்சான் "மாப்பிள்ளை..பின்னாடியே வாங்க... தெரு வெளக்கு எல்லாம் ரிப்பேரா கிடக்குது" என்று சொல்லியவாறு தன் வாகனத்தை ஒரு முக்கலோடு துவக்கினார். அவர் முன்னால் பையன் உற்சாகத்துடன் தொற்றிக்கொள்ள,...இவன் தன் மனைவியுடன், வந்த திசைக்கு சரியாக எதிர்புறம் பயணிக்கலானான் .
இந்த ரோடு கொஞ்சம் தேவலையாகதான் இருந்தது. ஆனால் கும்மிருட்டில் - சுற்றிலும் சுவர்க்கோழி ரீங்காரத்தில் - அத்துவானமாக ரோடு இருக்க,  மிகவும் கவனமாக ஓட்ட வேண்டி இருந்தது. ஒரு அரை கிலோ மீட்டர் தாண்டியதும் மச்சான் கொஞ்சம் இரைச்சலாக "மாப்ளை....கொஞ்சம் ரோடு இனிமே மோசமா இருக்கும். கவனமா  வாங்க" என்று குரல் கொடுக்க....இவனும் தலையாட்டினான். ஒரு கட்டத்தில், அந்த ரோடு குறுகி, மிகவும் குறுகி கிட்டத்தட்ட ஒத்தையடிப்பாதையாய்   மாறிப்போக, திகிலடைந்தான். "இதென்னடா இது....வந்த வழியிலே போயிருக்கலாமோ ?" என்ற எண்ணம் தோன்ற, தன மச்சான் திடீரென்று "அம்மா" என்று அலறியவாறு ஒரு குழியில் வண்டியைச் சாய்த்தது ஒரு மெல்லிய வெளிச்சத்தில் இவனுக்கு தெரிந்தது.

சுதாரிக்க இயலாமல் - இவனும் அவர் வண்டிக்கு மிக அருகில் வண்டியை மோசமான ஒரு கோணத்தில் சாய்க்க.....வண்டி என்ஜின் உறுமியவாறு ரோடு ஓரமாக ஒரு பெருங்குழியில் முன் சக்கரம் சாய்ந்து, இவனை வண்டியை விட்டு உதிர்ந்து விழுந்தான். "மச்சான்....மச்சான்.....எங்க இருக்கீங்க.? லதா.....ராஜேசு....." என்று பதட்டத்துடன் இருட்டில் பரிதவிக்க - ஒரு பதில் குரலும்  வராமல் போக.....பீதியுடன் "லதா......எங்கம்மா இருக்க.....? ராஜேசு......கண்ணா...." என்று தானாகவே வந்த குரல் தழதழப்போடு துடிக்க......சட்டென்று விடிவிளக்கு எரிந்தது.....

"ஏன்னா.....என்னன்னா ஆச்சு உங்களுக்கு.....? தூங்கற நேரத்துல கண்ட நாவல் எல்லாம் படிக்காதிங்கோன்னு  சொன்ன கேக்கறது இல்ல...." என்று அலுத்தவாறு அவன் நெஞ்சை  அவன் மனைவி லதா தடவ அவன் சுவிட்ச் போட்டது போல் எழுந்து கொண்டு "ஒன்னும் இல்லை" என்றவாறு எழுந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் தூங்கிப் போனான்.

  

**** "Unstoppable - 2010 :: ஒரு திரைக்காவியம் *****

அன்புடையீர்....

வெளிநாட்டு படங்களுள் அமெரிக்க படங்களுக்கு ஒரு பிரசித்தியான இடம் எப்போதும் உண்டு.......!! பிரும்மாண்டமாக மிகப்பெருமளவு பொருட்செலவு செய்து அவர்கள் படைத்திடும் திரைப்படங்களை மற்ற நாடுகளின் திரைப்படங்களுடன் (முக்கியாக சில ஏழை நாடுகளின் எளிமையான படைப்புகளுடன்) சீர்தூக்கி... ஆராய்ந்து.......அலசும் காரியம் செய்வது என்னால் ஆகாது. 
ஏன் என்றால் முதற்கண் நான் இது வரை பார்த்த வெளிநாட்டு  படங்கள் ஒரு 25 இருந்தால் அதுவே அதிகம். (அவற்றுள் ஓரிரு ஈரானிய திரைப்படங்களும் உண்டு என்று அவையடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன்). 
மற்றொரு காரணம்... பேரிளம் இளைஞன் ஆகிவிட்ட நான் என் வாழ்நாளில் எதையும் இனிமேல் சாதிக்க முடியாவிட்டாலும். அர்த்தமில்லாத செயல்களில் ஈடு படுவதில்லை என்று ஒரு சங்கல்பம் செய்து இருக்கிறேன்.
கடைசி காரணம்....இரகசியமாக உங்களுடன் இருக்கட்டும் - ஓரிரு பத்திரிகைகளில் - சில அறிவு ஜீவிகளின் உலக சினிமா  விமர்சனங்களை ரொம்ப வினயத்தோடு  படித்துப் பார்த்தும்..... பீதி அடைந்து...மற்றும் சில தடவை முயற்சி செய்தும் ஒன்றும் புரியாமல் போன அனுபவம் எனக்கு இருக்கிறது. 
என் சினிமா ஞானம் மிகவும் எளிதானது. ரொம்ப விஸ்தீரணமாக நான் பார்க்கும் படங்களை ஆராயும் பக்குவமும்  அறிவும்  எனக்கு கிடையாது என்பதை நான் அறிவேன்.

சரி....நான் கடந்த மாதம் கண்டு களித்த ஒரு ஆங்கில (அமெரிக்க)  படத்தைப் பற்றி இந்த பதிவு.





இந்த படத்தின் பிரதம நாயகனான Denzel Wahsington நடித்த "Crimson Tide" (1995) என்ற மற்றொரு அற்புதமான படத்தை நான் கண்டு களித்து இருக்கிறேன். இந்த படத்தில் முற்றிலும் வேறான மற்றொரு பரிமாணம். மனிதர் பின்னி எடுத்து இருக்கிறார்.

ஒரு மனிதன் ஒரே ஒரு நாள் முதல்வரானால் என்ன ஆகும்  ? ஒரு வயதான தாத்தா  தார்மீக கோபத்தால்  உந்தப்பட்டு, தன் துக்கத்தால் தீவிரமடைந்து இலஞ்சத்தை ஒழிக்கும் ஒரு பெரிய காரியத்தை தன் கையில் எடுத்தால்  என்ன ஆகும் ? என்று நம் பாசத்திற்குரிய ஷங்கர் பல படங்களை தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு வழங்கியுள்ளார் - அதுவும் பிரும்மாண்டமான பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு நன்கு வியாபாரமான படங்கள்.....
இந்த படமும் அந்த வகையைச் சார்ந்தது தான்....கிட்டத்தட்ட அரை மைல் நீளமுள்ள ஒரு சரக்கு இரயில் ஏதேச்சையாக ஒரு சின்னஞ்சிறிய அசம்பாவிதத்தினால் ஓட்டுனர் இல்லாமல் சீறிப் பாய்ந்தால் என்னவெல்லாம்  ஆகக் கூடும்  ? ...என்பது கதையின் ஒற்றை வரி (one line) - 90 நிமிட நேரத்திற்கு நம்மை இருக்கையில் கட்டிபோடும் ஒரு திரைப்படம். 
முடவன் ஒருவன் தன தோளில் உட்கார்த்தி  குருடன் ஒருவன், முடவன் வழி சொல்லச்சொல்ல தங்கள் சேருமிடம் சேர்ந்த ஒரு கர்ண பரம்பரை கதை உங்களுக்கு தெரியுந்தானே ? 
அப்படி, 28 வருட அனுபவம் வாய்ந்த ஒரு வயதான  ஓட்டுனரும்  (இரண்டு அழகான குமரிகள் 18 மற்றும் 19 வயதுகளில்....குறித்து கொள்க...), அவரிடம் அன்று ஜோடி சேர்ந்த - இரயில் பற்றி அனுபவம் இல்லாத - ஒரு இளைஞனும் (conductor)  அசகாய சூரத்தனங்கள் செய்து, மதம் பிடித்து சீறிப்பாயும் அந்த சரக்கு இரயிலை  நிறுத்த பிரம்மபிரயத்னப் படுகிறார்கள். 
தன வழியே வேறொரு திசை நோக்கி போய்க்கொண்டு இருந்த அந்த இருவர் விதிவசத்தால் இந்த இரயிலைக் கட்டுப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். எப்படி என்றால், தங்கள் இரயில் வண்டியின் பின்னால் இருந்த பெட்டிகளை கழற்றி விட்டு விட்டு, பின் பக்கமாகவே வெகு விரைவாகச் சென்று, அந்த ஆளில்லா இரயில் வண்டியில் பிணைத்துக்கொண்டு மெது மெதுவாக அந்த வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தி .... நிறுத்திவிடலாம் என்ற ஒரு திட்டம்.
அவர்கள் முயற்சிகள் ஒவ்வொன்றாக தோல்வியுற.....அவர்களில் சுய ஊக்கத்தால் தானும் உந்தப்பட்டு அவர்களுக்கு தகவல் தொடர்பு விஷங்களில் தொலைபேசி மூலம் துணை நிற்கும் அந்த இரயில் நிறுவன அதிகாரியாக ஒரு பெண்மணி - ஒரு முக்கியமான பாத்திரமாக மிளிர்கிறார்.
கடைசியில், அவர்கள் (நமது தமிழ் படங்களில் வருவது போல) தாங்களே  சாதிக்கிறார்கள் இல்லை என்பது தான் நமக்கு பாடம்... (அல்லது ஞானம்....!!). அவர்களின் பல்வேறு முயற்சிகள் தோல்வியைத் தழுவி விட, திடீரென்று உதயமாகும் அந்த இரயில் நிறுவனத்தின் ஒரு அனுபவம் மிகுந்த மனிதர் துணைக்கு தன் பெரிய காரில் இரயில் அருகே பரபரப்பான சூழ்நிலையில் ஒட்டி வந்து அந்த இளைஞனை தன் வண்டியில்  குதிக்கச்செய்து அவனை ஒட்டுனரில்லாத அந்த இரயில் என்ஜின் அருகே கொண்டு பொய் சேர்த்து....அவன் தாவி ஏறி.....வண்டியை நிறுத்த....அந்த உதவி செய்த அதிகாரி - அங்கே குழுமி இருக்கும் ஊடகங்களின் முன் தானே அந்த தீரமுடைய செயலை சாதித்ததாக தம்பட்டம் அடித்து கொள்கிறார். 
படம் முழுதும் நம்மை பிரமிக்க வைத்த குருடனும், முடவனும் அதை  தங்களுக்குள் சிரித்துக் கொண்டு இயல்பாக ஏற்றுக் கொள்வது கொஞ்சம் நமக்கெல்லாம்...புதுசு....!! 
கதாநாயகனை வாழ்த்தி திரைப்பாடல் ஆசிரியர்கள் a/c அறைகளிலும் மொட்டை மாடியிலும் நின்று பாடல்களை எழுதும் கட்டாயத்தில் இருக்கும் நமது சினிமா உலகத்தில் இது போன்ற யதார்த்தமான கதாநாயகர்கள் "பிழைக்கத் தெரியாதவர்கள் தாம்". (ஆனால் ஒரு விஷயம் - நமது வயது முதிர்ந்த ஓட்டுனர்- நாயகருக்கு முழு பலன்களுடன் பென்ஷன் கிடைத்து விடுகிறது; அந்த இளைஞனுக்கு தன இல்வாழ்க்கை குழப்பங்கள் தீர்ந்து இரண்டாம் குழந்தையும் பிறந்துவிடுகிறது.....என்பத்தை படத்தின் பிற்சேர்க்கையில் அறிகிறோம். அதாவது. அவர்களின் தேவைகள் மட்டுமே தீர்க்கப்படுகிறது..மாலை மரியாதை எல்லாம் அந்த இரயில் நிறுவனத்திற்கே.....)

அந்த இரயில் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்மணி (கதையின் முக்கிய கதாபாத்திரம் தான் இவளும் ...) கடைசியில் "ஸ்தலத்திற்கு" வந்து சேர்ந்ததும்,...."உங்களில் யாருக்கு நான் முதலில் முத்தமிட வேண்டும்"? என்று பூரிப்பில் கேட்க,. நமது வயதான ஓட்டுனர் சிங்கம்...."எனக்குத்தான்" என்று அவள் முத்தத்தை ஏற்றுக் கொள்வதும், அந்த பெண்மணி அவரை அணுகி முத்தமிட்ட பின் "கொஞ்சமே கொஞ்சம்" வெட்கப்பட்டு சிரிக்கவும், அவரின் teen age மகள் இருவரும் அவரை சற்றே தள்ளியிருந்தவாறு அவரை நையாண்டி செய்வதும்....அந்த பெண்மணி மிகவும் இயல்பாக "உங்கள் பெண்களா?" என்று யூகித்து அறிவதோடு ...படம் முடிந்து விடுகிறது. 
படத்தை மிகவும் ஒன்றிப் பார்த்த எனக்கோ பெரும் சிரிப்பு ......! 
"இரண்டு ஆண்டுகளுக்கு பின்" என்று ஒரு slide போட்டு - அவர்கள் இருவருக்கும் ஒரு திருமணம் செய்வித்து....அவர்கள் ஒரு குழந்தை பெற்று...அதை அந்த இரண்டு மூத்த பெண்களும் கொஞ்சுவதாகவும் , background- ல் ஒரு லல்லல்லா பாட்டு பாடியவாறும் முடிக்காததில் எனக்கு ஒரு ஆசுவாசம்....!! 
என்னதான் இருந்தாலும் இந்த வெள்ளைக்கார இயக்குனர்களுக்கு கற்பனை சக்தி கொஞ்சம் நம்மை விட குறைவு தான்....வேடிக்கைக்காகச் சொன்னேன்.

ஆனால் ஒன்று.....!! இந்தப் படத்தை hollywood இன் பத்தோடு பதினொன்றாக. மற்றுமொரு action படம் என்று நீங்கள் முடிவுக்கு வருவீர்களே ஆனால் பெரும் தப்பிதம் செய்தவர்கள் ஆகிவிடுவீர்கள். நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும், மனிதர்களின் மன ஓட்டத்தையும். மனித நேயத்தையும்....நாம் அள்ள அள்ள -  நிற்காமல் - நமக்கு அள்ளித்தந்து கொண்டே இருப்பது "unstoppable ". 
காலம் தப்பினாலும் பரவாயில்லை....இதுவரை பார்க்க வாய்க்காவிடின் பார்த்து விடுங்கள். 

அன்புடன்

சுரேந்திரன்