Wednesday, April 8, 2015

மாமத யானைகள்

முன் குறிப்புகள் (வழக்கம் போல் !!)

(1) யானைகள் கூட்டங்கூட்டமாக வாழும் தன்மை கொண்டதாயினும் தன் அந்திம காலத்தில் கூட்டத்திலிருந்து பிரிந்து அமைதியாக தனித்து வாழுமாம். மற்ற யானைகளும் அந்த முடிவை மதிக்குமாம். ( எங்கேயோ படித்து நினைவில் பதிந்து போன ஒரு தகவல். படியுங்கள்..இந்த முன் குறிப்பும் அதன் தொடர்பும் புரிந்து போகும் ...)

(2) இந்த பதிவு சுமார் இரண்டு மணி நேரத்துக்கு முன் சந்தித்து விட்டு வந்த என் ராமு மாமா எனக்குள் ஏற்படுத்திய எழுச்சி பற்றி.....!! அவரைப் பற்றிய என் பிரமிப்பை ஏற்கனவே ஒரு பதிவில் - ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறேன். அதையும் சேர்த்து படிப்பது - இந்த பதிவை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்... (தேடுக - Sep 2011)

அன்புடையீர் 

எங்கள் அன்பிற்கு உரிய ராமு மாமாவை நானும் அனுவும் போய் பார்த்து விட்டு வந்தோம். எண்பது வயது கிழவர்....ஒரு வித வசீகரத்துடன் தான் இன்னமும் இருக்கிறார்....!!
அவருக்கு தொண்டையில் ஒரு அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதம் முடிந்து விட்டது. தற்போது ஓய்வில் இருந்து புண் ஆற வைத்து மீண்டும் பரிசோதனை நடத்தி சிகிச்சையை முடிப்பார்களாம். விசேஷம் என்னவென்றால் அவர் இந்த விஷயத்தை - தன வீட்டுக்கு மிக அருகில் (சுமார் 500 மீட்டர் தூரத்தில் வசிக்கும்) 85 வயதுக்கு மேல் இருக்கும் தன் சொந்த சகோதரிக்கே- அதாவது என் பெரியம்மா) விஷயத்தை தெரியப்படுத்தியது 2 / 3 நாள் முன்னர் தான்.
 எனக்கு நேற்று இரவு இந்த விஷயம் தெரிந்து இன்றே போய் பார்க்க முடிந்தது. (சொன்னால் வெட்க கேடு.....என் வீடு அவர் வீட்டிலிருந்து 1 கிமீ ).
கொஞ்சம் ரகசிய குரலில் மெதுவாக பேசினாலும் எங்கள் வருகை தந்த மகிழ்ச்சியில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேசினார். ஒரு கட்டத்தில் அவர் இருமல் தொடர்வது கண்டு நாங்கள் அவரை கிட்டத்தட்ட படுக்கையில் சாய்த்து விட்டு தான் வர முடிந்தது.
அவர் உடல் நிலை பற்றியோ பார்த்து விட்டு வந்த என் அல்ப திருப்தி பற்றியோ இல்லை இந்த பதிவு....!!
அவர் மனத்தளவில் அடைந்து விட்ட ஒரு ஆன்மீக  நிலை என்னை பிரமிக்க வைத்தது."65 வயது வரை நான் வாழ்வாங்கு வாழ்ந்து விட்டேன்....அதுவே எவ்வளவோ பேருக்கு வாய்ப்பது இல்லை. அதனால் என் நிலைமை பற்றி யாருக்கும் தெரியப் படுத்தவில்லை" என்று  ஒரு 80 வயது கிழவர் தெளிவாக - குரலில் எந்த வருத்தமும் ஆதங்கமும் இல்லாமல்  பேசுவது  கொஞ்சம் அபூர்வம்...!! (கிட்ட தட்ட 40 நாட்கள் தினமும் radiation treatment க்கு மவுண்ட் ரோடு இருக்கும் அப்போலோ -வுக்கு தினமும் போயிருக்கிறார் - தன் குழந்தைகளின் உதவியுடன்.) 
கடந்த ஒரு மாதமாகத்தான் voice rest  ..... வீட்டிலேயே....!!
அவர் இன்று பேசிய பல விஷயங்கள் சத்குருவின் ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு நிகராக இருந்தது. வாழ்க்கை  எப்படிப்பட்ட ஒரு கருவி என்பது பற்றி எனக்கு மீண்டும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு....
.எண்பது வயதுக்கு மேல் நம் ஆயுள் இருந்து விட்டால் எப்படி பட்ட மன நிலை கொண்ட மனிதனாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு அற்புதமான illustration. பல முறை என் கண்களில் அவர் பேசப் பேச நீர் வழிந்து. துடைத்துகொள்ள கூட ஒரு கட்டத்தில் அலுத்து போய்விட,அப்படியே விட்டு விட்டேன்....
என் மாமா போன்ற வயது முதிர்ந்த எத்தனை பேர் இந்த உலகத்தில் இந்த க்ஷணம் வாழ்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆவல் எனக்கு சுத்தமாக இல்லை. ஆனால் ஒன்று பற்றி நிச்சயம் புரிகிறது....இது போன்ற யானைகளுக்கு மரணம் என்பதே இல்லை..
.ஒரு .யானையால் அசம்பாவிதமாக கொல்லப்பட்ட என் ஆசான் பாரதி மட்டும் சிரஞ்சீவி இல்லை....!!சாதுவான பிராணியாக பொதுவில் கருதப்படும் இம்மாமத கூட்டத்திற்கு என் நமஸ்காரங்கள் ....!!
இன்னமும் இந்த வாழ்க்கை -வீர்யமான என்  அடுத்த நாற்பது ஆண்டுகளில்-  என்னவெல்லாம் எனக்கு அன்பளிப்பாக தரப்போகிறதோ...... !!!
கை விரல்களுக்கிடையில் வழிந்து ஒழுகும் தேன் போல, நான் தவற விடாமல் இருந்தால் - நானும் ஒரு புத்தன் ஆவேன் என்று தான் தோன்றுகிறது.
சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்..... என் கடன் இந்த பதிவுடன் முடிந்தது. தத்சது ..

சுச்சு

5 comments:

  1. suchu,
    i read this on sunday and have been reading your older posts eversince... and, i also read your Sep'11 post on ramu mama.. yes, the similarities between you and mama are many.. and, you do write very well... keep it up.. also please include my name for your 12/jun booklet distribution...
    kalyani

    ReplyDelete
  2. Thanks Kalyani. By the way, on your last line.....Sure..!! Incidentally I saw your comment only today as I am beginning to get my......NAVARATNA (12th June) booklet in the making - I mean just going to start TODAY. Wish me good luck on sustained efforts from my side...!! Rest, I ALWAYS KNEW tha I can take care - particularly when I am on song.....!!

    ReplyDelete
  3. And the booklet never happened???

    ReplyDelete
  4. hmmm... who ever asked this question....I am telling myself to attempt it at least in coming years :-).
    In line with what I wrote on Jan 2018 about New year goals, It is always a great pleasure to miss out on pledges due to our other positive engagement..No harm...No harm at all.....!!

    ReplyDelete
  5. I have not even post my condolences to Kamala Chithi. Hence we have to accept this and should not make more grievances to others. Really Ramu Mama is great. When I was young, I visited his office and wondered about his caliber. A leader with a command and have a soft approach with his near and dears. My heartful namaskarams to him. As for as me, he is living with us even though he left his body, his love on us ever rings my ears.

    ReplyDelete