முகநூலில் (அதுதான் facebook ) எங்கள் வீட்டு பையன் யாரோ ஒருவருக்கு பிடித்த பத்து புத்தகங்களை வெளியிட்டு எங்களையும் வெளியிடுமாறு ஊக்கப்படுத்தி இருந்தான்.
ரொம்பவும் உற்சாகமாக , மிக இயல்பாக - மனத்திற்கு பட்ட பத்து புத்தகங்களை எழுதி விட்ட பின்னர் தான் எனக்கு சட்டென்று இது பற்றி சிந்தனை முளைக்க ஆரம்பித்தது.
இது இலக்கியவாதிகளின் "தரப்பட்டியல்" அல்ல. காரணங்களோடு (சில சமயங்கள் வாதமாகவும் கூட) யோசிக்க வேண்டிய விஷயம் இல்லை.
என் பட்டியலில் சில சமீபத்தில் படித்து இரசித்தது; ஆனால் ஒரு விஷயம் பாருங்கள் - நான் என் பட்டியலில் "kane & abel " என்ற நாவலை எழுதிய காரணம் அது நான் முதலில் படித்த english novel மட்டும் அல்ல - அதன் பிரம்மாண்டமும் , கட்டமைப்பும் கூட அல்ல - எனக்குள் இருந்த "ஆங்கில மொழி"த்தடையை உடைத்தது தான் காரணமோ ? தெரியவில்லை.
சற்று யோசித்த பிறகு புரிந்து போனது - காரணமே இல்லாமல் கூட சில புத்தகங்கள் பிடித்துப் போகலாம். சினிமாவோ விளையாட்டோ பொழுதுபோக்கோ, - ஏன் மனிதர்கள் கூட பிடித்து போய்விட காரணம் ஏதும் தேவையே இல்லை. ஒரு வகையில் பார்த்தால் இந்த பிரம்மாண்டமான அகண்டத்தில் பிடிக்காதவை இருந்தால் தான் நாம் காரணம் பற்றி யோசிக்க வேண்டும்.
நம் போன்ற சாதரணமான மனிதர்களால் எல்லாவற்றையும் வெறுப்பில்லாமல் பார்க்க இயலாமல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியது தான். பல சமயம், "comfort zone" என்பது நம் வெறுப்புக்கும் விலகலுக்கும் காரணம் ஆகி விடுகிறது. பழக்கமற்ற ஒரு புதிய விஷயத்தை - இலக்கிய புத்தகமோ ஆங்கில சினிமாவோ அல்லது நமக்கு அந்நியமான மனிதரோ - ஒரு பரிசோதிக்கும் மனநிலையில் அணுகுவதே ஒரு பெரிய யோகமாக எனக்கு படுகிறது.
சமீப காலமாக "Dr House M D " என்ற ஒரு ஆங்கில TV serial - அதி ஆர்வமாக நேரம் ஏற்படுத்திக் கொண்டு பார்த்து வருகிறேன். சுமார் 45 நிமிட episode ஒவ்வொன்றும்.... இத்தனைக்கும் எனக்கு ஆங்கிலப்படங்கள் இன்று வரை முழுவதும் புரிவது இல்லை. இப்போது sub title - இந்த serial க்கு தேவையே படவில்லை என்றால் பாருங்களேன்......!!
சுய அனுபவத்தில் ஏதேனும் சொன்னால் அது நம் வரையில் மட்டும் சத்தியமாக இருக்காது என்பது தான் என் நம்பிக்கை.
அன்புடன்
சுரேந்திரன்
No comments:
Post a Comment