அன்புடையீர்
அன்புடன்.......சுரேன்.
படத்தின் தன்மை கருதி நான் தனியாகவே "பரதேசி" படம் பார்த்தேன்.
கூட வரும் அளவு ஊக்கம் இல்லாமல் அன்பு மகளுக்கு "கதை" தெரிய வேண்டுமாம்.....!! முக்கியமாக சாப்பிடும் பொழுது கதை கேட்டு நச்சரிக்கும் வழக்கம் உள்ளவளுக்கு "தனியாக" படம் பார்த்து வந்த தகப்பன் அருகில் இருக்க கேட்பானேன்......? முடிந்த அளவு அந்த கதையை அவளுக்கு புரியும் வகையில் சொன்னேன்.....(அவ்வப்போது தழதழத்து போய்தான்......அதெல்லாம் என் இல்லத்திற்கு ரொம்பவே சாதாரணமான நிகழ்ச்சிகள்....)
அது மட்டுமல்ல விஷயம்......!!
நேற்று இரவு தொலைக்காட்சியில் சில வினாடிகள் "பரதேசி" பற்றி விளம்பரம் வந்த பொழுது - திக்பிரமை பிடித்தாற்போல் அதை - வயிறு பிசைய ....பதை பதைபதைத்து போய்.... கண் கலங்கி நான் வெறித்த கோலம் எனக்கே சற்று விநோதமாக பட்டது......!!
இந்த "பரதேசி" படமும் கதையும் ரொம்ப நாளைக்கு நான் மறக்கப் போவதில்லை. பின் எதற்கு இந்த எழுத்தோவியம் என்ற அலுப்பு ஏற்படுகிறதோ ?
பொறுங்கள்.....புரியும்.......
படம் பார்த்து வரும் வழியில் என் purse நடு ரோட்டில் கீழே விழுந்து தொலைத்து விட்டது......!!
Traffic சிக்னல்-ல் நிற்கும் பொழுது, நெரிசலான அந்த சதுக்கத்தில் அதை கவனித்து விட்ட ஒரு புண்ணியவான், கிட்ட தட்ட அரை கிலோ மீட்டர் என்னை தொடர்ந்து துரத்தி (அவர் ஒட்டியது Qualis) என்னைத் தாண்டி பல்வேறு சைகைகள் மூலம் பதை பதைப்புடன் எனக்கு இந்த விஷயத்தை சொல்லிவிட்டு "உடனே போங்கள்" என்று துரிதப்படுத்திவிட்டு மிகவும் நிறைவாக தன வழி சென்றார்.
அவருக்கு ஒரு ரகசியம் தெரியாது.....!! கற்பனையூரில் எப்போதும் சஞ்சரிக்கும் நான் இது வரை என் purse - ல் 300 ரூபாய்க்கு மேல் வைத்து கொண்டதே இல்லை.....!! Driving License , க்ரெடிட் / டெபிட் card போன்ற அதி முக்கிய விஷயங்கள் எப்போதும் என் கையில் இருக்காது.....( அவ்வளவு தன்னம்பிக்கை).
(Driving license - laminate செய்யப்பட நகல் மட்டும் இருக்கும்...காலத்தின் கட்டாயம் பாருங்கள்).
அதனால் நான் அவ்வளவாக கவலைப்படவில்லை. அவசியம் நான் திரும்பி போகும் வரை அந்த டிராபிக் சிக்னல் - ல் இருக்க இது த்ரேதாயுகமும் இல்லை....நான் இருந்த இடம் ஒரு வழிச் சாலை வேறு....
(அது தான் ஐயா - one way traffic ).
இருந்தாலும் வண்டியை ஓரத்தில் நிறுத்தி விட்டு சில கணங்கள் யோசித்தேன்......!!
எனக்கு விபரம் சொன்ன அந்த Qualis வண்டிக்காரரின் பதைபதைப்பு மற்றும் சொல்லி முடித்த பிறகு அவர் முகத்தின் நிறைவு மனத்தில் வந்து என் மனசாட்சியை பந்தாடியது.......
இழந்த பணம் பெரிதல்ல.....!! அவரின் குணத்தை நான் மதிக்க வேண்டாமா சொல்லுங்கள்.....?
அந்த நெரிசலான பாதையில், சுற்றி வளைத்துக் கொண்டு அந்த டிராபிக் சிக்னல் வரை நான் திரும்பி அடைய கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் ஆனது.
அங்கே 2 / 3 traffic constables (சுத்தம்......!! வாய்ப்பே இல்லை என்று என் மன சாட்சி உரக்க ஓலமிட்டது....) அணுகி ரொம்ப பவ்யமாக அவர்களிடம் விபரம் சொல்லி அவர்களிடம் யாராவது ஒரு brown கலர் purse கொடுத்தார்களா....என்று வினயமாக கேட்டேன்....(கிட்ட தட்ட ஒரு கர்ம யோகி மன நிலையில் நான் இருந்தேன் என்று சொன்னால் மிகை ஆகாது).
அவர்கள் மிகவும் ஆதுரத்துடன் உதட்டைப் பிதுக்க, நான் நன்றி நவின்று வீடு வந்து சேர்ந்தேன்........!!
ஒரு வகையில் "பரதேசி" படம் பார்த்து விட்டு (அதுவும் மிக்க நிறைவாக அனுபவித்து.....) வந்த எனக்கு பரதேசி கோலத்தில் கையில் பத்து காசு இல்லாமல் வீட்டுக்கு வந்தது விகல்பமாக இல்லை. சாலப் பொருத்தம் ......
அதை விட முக்கியம்....நான் செலவழித்த அந்த இருபது நிமிடங்கள்......
யாரோ முகம் தெரியாத அந்த நண்பரின் பதைபதைப்புக்கு என்னால் முடிந்த அளவு பிரதி உபகாரமாக - பொறுப்பாக ஏதோ ஒன்று செய்த நிறைவு.......
என்ன சொல்கிறீர்கள்.....?
முகவாயை தோள் பட்டையில் இடித்துக்கொள்ள தோன்றுகிறதா ? அது உங்கள் விதி........நான் என்ன செய்ய.....
என் கணினியின் keyboard தேய்ந்து போகும் வரை....
என் விரல்கள் செயலற்று போகும் வரை......
இந்த அகண்டத்தை பிரளயம் வந்து தாக்கும் வரை......