இருவர்
சமீபத்தில், அதிலும் குறிப்பாக வெறும் ஆறு நாட்களுக்குள் மறைந்து போன என் குடும்பத்தின் இரு பெரியவர்களைப் பற்றி எனது எழுத்தோவியம் இது.
பொறுமையாக படியுங்கள் !!
மிகவும் வயது முதிர்ந்தவர்கள் பாருங்கள்....நிதானமாக....அமைதி
யாக....!!
தயாரா ?
எதற்கு இவ்வளவு பீடிகை.....?
ஒரு வகையில் இந்த இரு மறைவுமே போற்றத்தக்கவை தான்....கல்யாண சாவு என்பார்களே அந்த வகை...!! ரொம்ப உணர்ச்சி வசப்படும் வகையில் இல்லாமல் ஒரு வகை நிதானத்தோடு கைகூப்பும் வகையில் - இரண்டு பெரியவர்கள் - தந்தை வழியில் ஒருவர், தாய் வழியில் மற்றவர் ....(பெரியப்பா,மற்றும் மாமா).
ஒரு பார்வையாளனாக இந்த இரண்டு மனிதர்களையும் சிந்திக்கும்போது ஆச்சர்யமான மிகப்பல ஒற்றுமைகள்...வெகு சில வேற்றுமைகளும் கூட.....!!
இவர்களைப்பற்றி விமர்சனம் செய்யும் தகுதியோ வயதோ எனக்கு நிச்சயம் கிடையாது. இவர்களால் என் அகண்டத்திற்கு சிறிது பெருமையும் ஆசிர்வாதங்களும் கிடைத்தால் சாலத் திருப்தி....!!
என் தாயின் குடும்பம் மிகப்பெரிது.. பிள்ளைகளும் மூத்தவரான எங்கள் அன்புக்குரிய பாபு மாமாவின் கடைசி தங்கை என் அம்மா.
எண்பத்து ஏழு வயதை கடந்து - கடைசி வரை ஆரோக்கியமாய் இருந்து - குடும்பத்திற்கே ஆலமரமாக இருந்தவர் நிச்சலனமாய் படுத்திருக்க, பல்லெல்லாம் கொட்டிப்போய் தலையெல்லாம் நரைத்த அவரது கடைசி தங்கை (என் அம்மா ) குழந்தை போல் கேவி கேவி அழுத காட்சி ரொம்ப நாள் நினைவில் நிற்கும். இது அறுபத்து சொச்சம் ஆண்டுகளின் எண்ணற்ற ஞாபகங்களின் - கணக்கற்ற கணங்களின் தீவிரமான ஒரு வெளிப்பாடு அல்லவா ?
தந்தையின் குடும்பமும் - இக்கால நடைமுறைக்கு பெரிது தான்.
வயதில் மூத்தவரான எங்கள் பட்டாபி பெரியப்பா எங்கள் சிறிய கிராமத்திலயே வாழ்ந்து முடித்துவிட்டதனால் - எனக்கு அவரிடம் பழக அவ்வளவாக வாய்ப்பு இல்லை. ஊருக்குச் செல்லும்போதேல்லாம் "என்ன சேதி ?" என்ற முகம் மலர்ந்த அவரது இரத்தின சுருக்க வரவேற்பு மட்டும் நினைவில் தங்கியிருக்கிறது.
என் அப்பா அவரைப்பற்றி உற்சாகமாக ஏதாவது பேசும்போதெல்லாம், இராமயணத்தில் பரதனுக்கு ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் மேல் இருந்த அபிமானம் எனக்கு நினைவு வரும். (ஆமாம்... பெரியப்பாவின் முழு பெயர் பட்டாபி ராமன் தான்....!!!).
துரதிர்ஷ்ட வசமாக இன்று எங்கள் கிராமம் நோக்கி பயணம் செய்யும் அந்த van - ல் நான் இல்லை. (ஞாயிறு அன்று தான் போகப்போகிறேன்..). அந்த முக்கியமான் தருணம் (என் தகப்பனாரின் உணர்ச்சிப் பேருக்கு ) பார்க்கும் வாய்ப்பு இல்லை.
பொதுவில் இடிந்து போகிறவர் இல்லை..
இருந்தாலும் இன்று சற்று தழதழத்துப் போவார் - சில நொடிகளாவது - என்பது என் யூகம்.
நிற்க,.... இனி இந்த இரண்டு பெரியவர்களின் ஒற்றுமைகள்....
முதலிலேயே குறிப்பிட்டது போல இருவரும் வீட்டின் முதல் ஆண்பிள்ளைகள்.
அதைவிட முக்கியம் பொறுப்பான முதல் பிள்ளைகள்...
கிட்டத்தட்ட ஒரு முழு பூரணமாய் வாழ்க்கை (மாமாவுக்கு 87 வயது; பெரியப்பாவிற்கு ஐந்து வயது குறையலாம்...). மார்கழி மாதத்தில் மரணம்.
இருவருமே மிகவும் எளிமையான மனிதர்கள்....
பணிக்காலம் முடிந்தும் மூலையில் முடங்காமல் தன் வரையில் சுறுசுறுப்பாக இருந்துக்கொண்டு கடைசிவரை தனக்காக வாழ்ந்தவர்கள்.
பொருளாதார விஷயத்தில் வெகு நிதானமான மனிதர்கள் - பார்த்த வேலையும் கிட்டத்தட்ட ஒன்று போலத்தான் (மேலாளர்கள் அதுதான் Managers !!).
பாபு மாமா செய்த கணக்கற்ற உபன்யாசங்களும் பஜனைகளும் பெரும்பாலும் (pattabhi ) ராமனைப்பற்றி தான் (என் பெரியப்பாவின் முழுப் பெயர்) என்பது ஒரு அழகிய co incidence என்றால் பெரியப்பா வீட்டில் ஒரு மகனுக்கு "பாபு" என்று பெயர் என்ற விஷயம் ரசிக்கத்தக்க மற்றொரு ஒற்றுமை !!
சற்று கூர்ந்து யோசித்துப் பார்த்தால் மேற்கூறிய விஷயங்களைத் தவிர இவர்களுக்குள் மற்ற அனைத்துமே வேற்றுமைகள் தான்....! ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களே ஒற்றுமையாக ஒரே விதமாக இல்லாத நமது வீடுகளில் சம்பந்தமே இல்லாத இரண்டு குடும்பத்தில் பிறந்த இருவருக்குள் இவ்வளவு ஒற்றுமைகளை பட்டியல் இடுவது ஒரு சாதனை தானே ?
எங்கள் பாபு மாமா பலருக்கு ஆலோசகனாக நல்ல உபதேசியாக ஏன் தெய்வப் பாடல்களை பஜனையாக பாடும் வகையில் ஆற்றல் பெற்று பின் ஆன்மிக உபன்யாசராக பரிணாம வளர்ச்சி பெற்று தன் ஓய்வுக்காலத்தை தனக்கு பிடித்தவிதமாக மாற்றிக்கொண்டவர். முக்கியமாக தைலதாரையான அவர் பேச்சு....!!
அதற்க்கு நீர் மாறாக இரத்தின சுருக்கமாய் - அனாவச்யமாய் எதுவும் பேசாமல், சலனமில்லாமல் வெறும் வாஞ்சையாக சிரிக்கும் பெரியப்பா ("என்ன சேதி ??").
தன் சுதந்திரத்தை போற்றி வாழ்ந்த இந்த இரண்டு பெரியவர்கள் அந்த சுதந்திரத்தை பெற்ற விதத்தில் அவர்கள் வாழ்ந்த முறையில், தன்னை பிறருக்கு வெளிப்படுத்திய முறையில் ஆயிரம் வித்தியாசங்கள்.....!!
மேலும் மேலும் சொற் சேர்மானத்தில் கவரப்பட்டு பல்வேறு வார்த்தைகளால் நீண்டு பரவும் வாக்கியங்களாய்... பத்தி பத்தியாய் எழுதுவதில் எனக்கு இசைவு இல்லை....!!
ஒன்று மட்டும் நிச்சயம்....!! சுமார் 55 வருடங்களுக்கு முன்னால் அவர்கள் இருவரும் இளமையாய் மிகவும் பொறுப்பாய் செய்தது குடுத்த என் பெற்றோரின் திருமணத்தின் மூலம் பிறப்பெடுத்த எங்கள் நால்வரில் - கடைசியில் அவதரித்த நான் இந்த இரங்கல் கட்டுரையை எழுத்தில் வார்த்து அகண்டத்தில் பொறித்து அவர்களை வாழ்வாங்கு வாழச்செய்வேன் என்று நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
பலனை எதிர்ப்பார்த்து மனக்கணக்கு போட்டு பழகும் நமது உலகத்தில் இந்த இருவரும் நிச்சயமாக இமயங்கள் தான் - என்னை பொறுத்தவரையிலாவது.....!!
நீங்கள் அடுத்த முறை தெருவில் நடக்கும்போது உங்கள் முன்னால் தென்படும் சாதாரண மனிதரில் எங்கள் பாபு மாமாவை போலவோ பட்டாபி பெரியப்பாவைப்போலவோ பல அற்புதமான மனிதர்கள் இருக்கலாம்.
என் குரு ஒரு சொற்பொழிவில் சொன்ன வாக்கியத்தை அப்படியே தருகிறேன் - "extra ordinary person means some one who is a bit extra ordinary than others "
இவர்களின் அருமையை உணர்ந்து தெரிந்து தெளிவது கூட அகண்டத்தின் அகலத்தை அறியும் ஒரு குறுக்கு வழியே.....!!
முருகன் உலகெல்லாம் சுற்றி சுற்றி களைத்துப் போய் வர, தாய் தந்தையை சுற்றி வந்து மாம்பழத்தை தட்டிச் சென்ற கணபதி வழி உங்களுக்கும் பிடித்தம் தானே ?
அன்புடன்....சுரேன்
இவர்களால் என் அகண்டத்திற்கு சிறிது பெருமையும் ஆசிர்வாதங்களும் கிடைத்தால் சாலத் திருப்தி....!! - sure u will get as i have been noticing u, u r so polite and caring while you talk about elders
ReplyDelete"குடும்பத்திற்கே ஆலமரமாக இருந்தவர் நிச்சலனமாய் படுத்திருக்க, பல்லெல்லாம் கொட்டிப்போய் தலையெல்லாம் நரைத்த அவரது கடைசி தங்கை (என் அம்மா ) குழந்தை போல் கேவி கேவி அழுத காட்சி ரொம்ப நாள் நினைவில் நிற்கும்" - இந்த வரி என் இதயத்தில் ஒரு சிறு வலி கொடுக்கிறது
This is the first time i logged into your blog. This post has touched me so deep, and i relived those moments when i saw these two elders lying down there in their eternal sleep. I feel a lump in my throat when i once again realize that we will never see them again... Any way, just to add to your blog.. you have said they both took their departure in Margazhi. But do you know that they both were also born in Margazhi? And, appa & amma got married 47 years ago, not 55 (correct this. this factual error of yours shows all the four of us eight years older !!! not acceptable ). And, perippa was 85.. exactly two years younger than mama... Nice post. I will read your posts now on...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear Kalyani
ReplyDeleteWelcome to AGANDAM.
Your other points well taken. But then, will it surprise you that "55 Years" was a bait for you :-)
One more challenge for 2012 - to write those kinds of words / sentences that are subject to a state of art - scanning machine !!! Hmmm...Lemmme (continue to) give my best shot...
I'm not surprised. I knew you would have expected that line from me for sure... I dint want to disappoint you, so...
ReplyDelete