Friday, July 18, 2014

சமீபத்தில் கவர்ந்த வரிகள் - 1

அன்புடையீர் 

எம் ஜி ஆர் , சிவாஜி காலத்தில் தமிழ் சினிமா பாடல்கள் அர்த்தம் பொதிந்து மிகவும் அழகுணர்வோடு இருந்ததாம் ! பலர் அங்கலாய்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் அதிசயமாய் இருக்கும். இந்த உலகத்தின் அற்புதமே  எல்லாமும் எப்போதும் இருப்பது தான்.....புரியவில்லை ? 

சதவிகிதங்கள் (percentage ) ஏறலாம் குறையலாம்......நம் பிரக்ஞை - லிருந்து ஒளிந்து மறையலாம்......நம் ரசனைகள் கூட சில சமயங்கள் மாறலாம். ஆனால் எதுவுமே புதிதும் இல்லை  ; பழையதாகவும் இல்லை என்பது தான் உண்மை - இது நான் புதிதாக சொல்லி விடவில்லை. காலங்காலமாக பெரியவர்கள் சொல்லி வருவது தான். 

நானும் இதை பல சமயம் உணர்ந்து இருப்பதால், கொஞ்சம் உரிமையாக சொல்கிறேன். 

சமீபத்தில் "திருமணம் என்னும் நிக்காஹ்" என்று வரவிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடல் ("கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்" )internet - ல் கலக்கிக் கொண்டு இருக்கிறது. நான் இது வரை சுமார் நூறு முறை (மிகையில்லை) பார்த்து இருக்கிறேன் - அந்த பாடலின் ஒவ்வொரு வரிகளுக்காகவும், திரையாக்கம் செய்த விதத்தில் இருக்கும் புத்திசாலித்தனம் மற்றும் அந்த பாடல் முழுவதும் விரவி கிடக்கும் அழகு உணர்ச்சிக்காகவும்...... (அந்த புத்தம் புது கதாநாயகியின் அழகு பாவங்களுக்காகவும் தான்) - என்னை சமீபத்தில் மயக்கிய பாடல்களில் இது ஒன்று.

முதலில் எழுதிய  பத்திக்கு வருவோம். இந்த பாடலின் ஒரு சரணத்தில் முதல் நான்கு வரிகள் கீழே.

                       எது எதற்கோ பொய்கள் 
                                எதிர்  எதிராய் மெய்கள் 
                       எது எதுவாய் ஆகும்          
                                விடை கடந்தே போகும்.....

படத்தின் தலைப்பை ஊன்றி கவனியுங்கள். செய்தீர்களா ? இந்த பாடலை பார்க்காத அபாக்கிவான் - களுக்கு மேலும் ஒரு தகவல் - இந்த பாடல் வரிகளுக்கு கதாநாயகன் நடனம் ஆடும் பொழுது (ஒரு பெரிய flat மொட்டை மாடி மேல்) அவன் கால் கீழே ஒரு பெரிய ரங்கோலி கோலம் - பர்தா போட்ட ஒரு பெண் முகம் ......!! 

இந்த scene - ஐ விட்டு விட்டு பார்த்தாலும், அந்த வரிகள் மட்டுமஏ என்னை மயக்குகிறது........

மீண்டும் சொல்கிறேன்..... காலம் அநாதியானது.....!! நாம் அளவிட்டு ஆராய்ந்தது அறுதியிட்டு தீர்ப்பு சொல்லும்  அளவுக்கு இன்னும் தரம் தாழ்ந்து விடவில்லை.  சரிதானே ?

அன்புடன் 

சுச்சு 



4 comments:

  1. Naa tamil il konjam weak nu unakku theriyum..
    Romba theliva puriyala. But i noticed a spelling mistake. Last but one para la "mattume" spelling... it has become mattum-eh.


    ReplyDelete
    Replies
    1. it was not a typo; but a transliterate error. he he he.....if u ask me to explain, i will post one more long blog to justify and differentiate between the two types of mistakes.thanks

      Delete
  2. வாணகிரியான்July 19, 2014 at 7:51 AM

    அந்த பாடலை பார்க்காதவர்கள் அபாக்கியவான்கள் என்று எழுதி இருக்கிறீர்கள். அது உங்கள் அபிப்ராயம். அதைப்போல சிவாஜி, எம் ஜி ஆர் பாடல்கள் அர்த்தம் உள்ளது என்று எண்ணுவதும் அவர்களின் அபிப்ராயம்.

    ReplyDelete
  3. Vaanagiriyaan....., Please read the post properly, understand and then give your feedbacks. As always, I am always open for any criticism. I consider the earlier comment of "Lavanya" finding out a spelling mistake lot more sensible and worth respecting than your feedback. Warm Regards // Suchoo

    ReplyDelete