அன்புடையீர்
நீங்கள்
தமிழகத்தில் வசிப்பவரா ? முக்கியமாக சென்னையில்......???
ரொம்ப
நல்லதாக போய்விட்டது.......
இங்கே
இந்த ஆட்டோ காரர்கள் செய்து வந்த அராஜகம் பற்றி இரண்டு
மூன்று பத்திகள் எழுதும் அவசியம் இல்லை.
அதெல்லாம்
மறந்து போகும் வகையில் நமது அரசாங்கம் தலையிட்டு கட்டணங்களை சீர்படுத்தும்
(சமீபத்தைய) முயற்சி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இது போல்
பலமுறை அரசாங்கம் முன்பு தலையிட்டும் ஆட்டோ கட்டணப் பிரச்னை தீர்ந்த பாடில்லை. ஒரு
குடையின் கீழ் ஆட்டோக்களின் சங்கங்கள் இங்கே இல்லாதது பெருங்குறை. அதனால் ரொம்ப
மகிழ்ந்து போய்விட வேண்டாம்......!!
நிற்க.....போன
வாரம் (என் கொள்கையை மீறி) நான் ஆட்டோவில் எங்கள் வீடு வாசலில் ஏற நேர்ந்தது.
தூரம் அதிகம் இல்லை - 3 - 4
கிலோ மீட்டர்
தான்.....மழை விடாமல் மேக மூட்டமாக வானம் இருந்ததாலும் எனக்கும் சற்று அவசரமான
வேலை இருந்ததாலும் தாண்டிப் போகும் காலி ஆட்டோக்களை நானும் எங்கள் flat watchman -ம் கூவி கூவி அழைத்துக் கொண்டு
இருந்தோம்.
ஒரு
மகானுபாவன் அருகில் வந்து நிற்க - பேரப்படலம் தொடங்கியது. (அல்லது நடக்கவே இல்லை)
.
அவர் 70 ரூபாய் கேட்க, அது இரண்டு மடங்காக இருந்தாலும் -என்
நிலைமையை கருதி நான் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஆட்டோ உள்ளே ஏறி அமர்ந்தேன்.
சுமுகமான
பயணமாக இருந்து இருக்க வேண்டியது. அந்த ஆட்டோ காரர் நாக்கில் இருந்த சனி என்னை
தீண்டி பதிலுக்கு அவரை என் நாக்கு சனி தீண்டி...........
விவரமாகவே
சொல்கிறேன்..
ஆட்டோவை
கிளப்பும் முன் அந்த ஆட்டோகாரர்,
திரும்பி என்னை
பார்த்து - கொஞ்சம் நக்கலாக ............ "meter " எல்லாம் போட சொல்லாதீங்க!" என்று சற்று அதட்டலாக, உரிமையாக சொன்னார் - (அதுவும் நான் பணம் பற்றி எதுவுமே பேசாத
போது .......)
எனக்கும்
சனி பகவான் அருள் பாலித்தார் .......!!
"government-ல 1 மாசம் டைம் குடுத்து இருக்காங்க இல்லை. ? அதுக்கு அப்புறம் மீட்டர் பத்தி
பேசலாம். இப்போ நீங்க ஆடற வரைக்கும் ஆடுங்க......எல்லாம் கொஞ்ச
நாள் தானே"
இது என்
பதிலடி........!!
அந்த
ஆட்டோ டிரைவர் ஏதோ ஒரு வகையில் என் சிரிப்புடன் கூடிய சத்தியமான வாக்கினால்
பாதிக்கப் பட்டு இருக்க வேண்டும். ("தீயினால் சுட்ட
புண்................." - திருக்குறள் ).
மிகவும்
மரியாதையாக என்னிடம் " sir
நான்
எதிர்பக்கம் போறேன். நீங்க இறங்குங்க" என்று உணர்ச்சியே இல்லாமல் சொன்னார்.
ஓரளவு
திகைத்து போனாலும், நான் மந்தகாசமான புன்னகையோடு ஆட்டோ வை
விட்டு இறங்கியது வேறு விஷயம்.
வாய்
கூசாமல் கட்டணம் கேட்டு வந்த இந்த ஆட்டோ குழுமம் இந்த முறையாவது கட்டுப்படுத்தப் பட்டால் எனக்கு சால
திருப்தி.......உங்களுக்கும்தானே ?
விதேயன்
சுச்சு