அன்புடையீர்
ஒரு வேளை இந்த படம் உங்களை positive ஆக பாதித்து இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு மன சஞ்சலத்தை கொடுத்தால்......அதுவும் ஊழ்வினைதான்.....!!
அன்புடன்......சுரேன்
மீண்டும் ஏறத்தாழ ஒரு மாத இடைவெளி......ஹ்ம்ம்.......!!
எழுதப்போகும் சங்கதியாவது ஒரு புதிய படம் பற்றி என்றால் பரவாயில்லை....அதுவும் சற்றே பழைய ஒரு படம் பற்றித்தான் !
என்ன செய்வது - விதி எப்போதுமே வலியதுதான்......!!
குறிப்பாக நமது மகிழ்ச்சிகளையும் நெகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்வதை விட வலிகளையும் வேதனைகளையும் வெளியே கொட்டுவது இதயத்துக்கு நல்லது - இல்லையா ?
ஒரு வேளை இந்த படம் உங்களை positive ஆக பாதித்து இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு மன சஞ்சலத்தை கொடுத்தால்......அதுவும் ஊழ்வினைதான்.....!!
அகண்டத்தில் எப்போதுமே ஆயிரம் கருத்துக்கள் தான்....அனைத்தும் ஒன்றாகவே மனமொத்த இருப்பது இயற்கையின் காரியம் அல்லவே ?
நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்த (வெகுவாக) கொண்டாடப்பட்ட ஒரு திரைக்காவியம்....
காவியம் போன்ற பெயரும் கூட....."வாரணம் ஆயிரம்".
ஆங்கிலத்தில் "rage " என்று ஒரு வன்மையான வார்த்தை உண்டு. இந்த படத்தை இரண்டு மூன்று முறை தடங்கல்களுடன் சுமார் இருபது நாட்காலத்தில் ஒரு வழியாக பார்த்து முடித்ததும் எனக்கு ஏற்பட்டது இந்த ஆங்கில வார்த்தை குறிப்பிடும் ஒரு கொலைவெறி தான்.....!!
இதை இயக்கிய புண்ணியவான் கௌதம் மேனனால் ஏற்கனவே நான் பாதிக்கப்பட்டு இருந்தாலும், (அதைப்பற்றி பின்னால் குறிப்பிடுகிறேன்) கவித்துமான இந்த தலைப்பு காரணமாகவும் இந்த படம் வாங்கிய நல்ல பெயர் பற்றியும் ஒரு ஆர்வம் இருந்ததால் இந்த படத்தை பார்க்க துணிந்தேன்......!! நல்ல வேளையாக,ஒரே நேரத்தில் முழுதும் பார்க்குமாறு சூழ்நிலை வாய்க்கப்பெறவில்லை......அப்படி நேர்ந்து இருந்தால் அகண்டம் (இந்த பதிவால்) என் வார்த்தைகளால் மேலும் மாசு பட்டு இருக்கும்.
மிகவும் வித்தியாசமான அப்பா ரோலில் சூர்யா....அசப்பில் ரகுவரன் ஜாடையோ என்று சந்தேகப்பட்டு பின்னர் தொலைகாட்சி நடிகர் வேணு அர்விந்த் சாயல் அதிகம் என்று உணர்ந்தேன்......( அவரையே நடிக்க வைத்து இருக்கலாமோ ? ). வாழும் காலத்தில் இருக்கும் மற்றொரு நடிகரை இது போல் imitate செய்வது தெரிந்தே செய்யப்பட்டதா என்று சரியாக புரியவில்லை.
இடது கை பழக்கமும் மிகவும் புரட்சிகரமான கருத்துகளும் கொண்ட ஒரு முன் மாதிரி தகப்பன். கௌதம் மேனனின் தகப்பனாருக்கு அஞ்சலி கடைசியில் போடும் பொழுது......நமக்கு கௌதம் படங்கள் எல்லாம் ஏன் இவ்வளவு புரட்சிகரமாக இருக்கிறது என்று சட்டென்று விளங்கி விடுகிறது. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா என்ன ?
ரூம் போட்டு யோசித்து, (அதிகம்) முடியில்லாத) இயக்குனரின் தலையை கசக்கி அவர் காவியம் படைக்க முயன்றாலும் அவர் சாயம் பல இடங்களில் வெளுத்து விடுகிறது.
முதல் சீன் முடி வெட்டிக்கொண்டு அப்பா சூர்யா தளர்ந்த நடையில் வீட்டுக்கு வர, அவர் மனைவி அவர் தலை ட்ரிம் ஆக இருப்பது பற்றி பூரித்து போய் ஆங்கிலத்தில் வாழ்த்துகிறார். திராவிட வாதத்தை குதறி எடுக்கும் வகையில் அவசியமற்ற இடங்களில் ஆங்கிலத்தில் (அதுவும் அவ்வளவு செயற்கையாகவா ?) அனைவரும் பேசி ரொம்பவே வெறுப்பு அடிக்கிறார்கள். ஒரு வகையில் அகண்டத்துக்கு இந்த சமன்பாடு தேவைதானோ என்று நானே தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டு தலையை உதறிக்கொண்டு சமநிலை அடைந்தேன் என்றால் பாருங்களேன்......!!
தான் தன் கல்லூரி பருவத்தில் தன் மனைவி மேல் கொண்டது காதல் அல்ல, காமம் (lust ) என்று தன மகன் மற்றும் நண்பர்கள் முன்னால் ஒத்துக்கொண்டு வெடித்துச் சிரிக்கிறார் தகப்பன் சூர்யா.....பேஷ் !!!!
மற்றொரு சீன்-ல் தன மனைவியின் தலைகாணியில் ஒடுங்கிக்கொண்டு - தனக்காக தலையணை தரும் மகனிடம் "எப்போதுமே இப்படித்தான்" என்று இயல்பாக (ரொம்பவும் செயற்கையாக) சொல்கிறார்.
தான் பெற்ற மக்களுக்கு ஏதாவது செய்முறை விளக்கம் தந்து விடுவாரோ என்று திகில் அவ்வப்போது நமக்கெல்லாம் ஏற்பட்டு விடுகிறது.
தான் தன் கல்லூரி பருவத்தில் தன் மனைவி மேல் கொண்டது காதல் அல்ல, காமம் (lust ) என்று தன மகன் மற்றும் நண்பர்கள் முன்னால் ஒத்துக்கொண்டு வெடித்துச் சிரிக்கிறார் தகப்பன் சூர்யா.....பேஷ் !!!!
மற்றொரு சீன்-ல் தன மனைவியின் தலைகாணியில் ஒடுங்கிக்கொண்டு - தனக்காக தலையணை தரும் மகனிடம் "எப்போதுமே இப்படித்தான்" என்று இயல்பாக (ரொம்பவும் செயற்கையாக) சொல்கிறார்.
தான் பெற்ற மக்களுக்கு ஏதாவது செய்முறை விளக்கம் தந்து விடுவாரோ என்று திகில் அவ்வப்போது நமக்கெல்லாம் ஏற்பட்டு விடுகிறது.
பள்ளிப் பிராயத்தில் சீனியர் மாணவனிடம் அடி வாங்கி வந்த மகனை கொம்பு சீவி பதிலுக்கு அவனை அடிக்க அனுப்புகிறார்.( ஒரு வேளை மகன் ரத்தம் சொட்ட மீண்டும் அடி வாங்கிக் கொண்டு வந்தால் இடது கையால் ஸ்டைல் ஆக ஆம்புலன்சுக்கு போன் செய்வாரோ ?)
மகனை "அமெரிக்கா இங்க இருக்கு" என்று கையால் முழம் போட்டு அனுப்பும் அப்பா, மகன் தன காதலியை கண்டு பிடித்து விட்டான் என்று உற்சாகப்படும் தந்தை, மகன் வெகு இயல்பாக காதலியின் அறையிலேயே தங்கி இருப்பதாக சொல்லவும், பதட்டத்துடன் தொலைபேசியை மனைவியிடம் "living together " என்று குறிப்புடன் கொடுத்து விடுகிறார்.
தான் வளர்த்த இலட்சணம் பற்றி அவமானப்பட்டாரோ இல்லையோ - நமக்கு குறிப்பு ஏதும் படத்தில் இல்லை.....
போற்றி வளர்த்த பிள்ளை போதை மருந்துக்கு அடிமையாவதைப் பார்க்கும் பொழுது "நல்லா வேணும்" என்று நானே மகிழ்ந்து பின்னர் சில கணங்கள் என் உணர்வுக்காக வருத்தமும் பட்டேன்.....
இவ்வளவு செயற்கையாக சிம்ரன் இது வரை நடித்ததே இல்லை என்று துணிந்து சொல்லலாம்.
காமம் சொட்டும் அந்த (நல்ல வேளை !!) இறந்து தொலைக்கும் கதாநாயகி நமது அற்புதமான இயக்குனரை கவர்ந்து இருப்பார் ..... நிச்சயமாக......!!
(இதே இயக்குனரின் ஒரு கீழ்த்தரமான அடுத்த படத்தில் - நடுநிசி நாய்கள் - நடித்தவரும் இவரே தான்.....புரட்சி உள்ளங்கள் புரட்சிகரமான மற்றவர்களுடன் தானே இணையும்.....?)
காமம் சொட்டும் அந்த (நல்ல வேளை !!) இறந்து தொலைக்கும் கதாநாயகி நமது அற்புதமான இயக்குனரை கவர்ந்து இருப்பார் ..... நிச்சயமாக......!!
(இதே இயக்குனரின் ஒரு கீழ்த்தரமான அடுத்த படத்தில் - நடுநிசி நாய்கள் - நடித்தவரும் இவரே தான்.....புரட்சி உள்ளங்கள் புரட்சிகரமான மற்றவர்களுடன் தானே இணையும்.....?)
சூர்யா அதிகப்படியாக உழைத்த படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.....பாவமாய் இருந்தது.....!!
கவித்துமாய் படங்களுக்கு பெயர் வைக்கும் இந்த இயக்குனர் தனது இந்த காவியத்துக்கு பெயர் காரணம் பற்றி ஒரு ஆர்வம் கடைசி வரை இருந்தது.....
சிம்ரன் வாயால் கடைசி வசனமாக ஆழ்வார் பாசுரம் சொல்லப்பட்டு என் மனம் சாந்தியடைந்தது......(நல்ல வேளை .... முதல் வருஷாப்திகம் வரை படம் காட்டப்படவில்லை......)
வாரணம் ஆயிரம் ?? அபத்தங்கள் பல்லாயிரம்......!!
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு மன நிலையில் "விண்ணைத் தாண்டி வருவாயா" என்ற இந்த மேதகு இயக்குனரின் மற்றொரு காவியத்தை ஆங்கிலத்தில் இந்த அகண்டத்திலேயே விளாசி இருந்தேன்......!! ஒரு மாறுதலுக்காக இம்முறை தமிழை தேர்ந்தெடுக்கலாம் என்று பட்டது......
அவரின் சமீபத்திய படைப்பான "நீதானே என் பொன் வசந்தம்" இன்னமும் பார்க்கவில்லை. மலையாளம் கற்றுக்கொண்டு நன்று தேர்ந்த பின்னர் அதையும் பார்த்து விடுவோம் என்று ஒரு தீர்மானம்......!!
என்ன சொல்கிறீர்கள் ?
mama.. dhayava senju nee dhane en pon vasantham pathudaadha.. vinnai thandi varuvaaya vaye kumbuduva apram!! :D
ReplyDeleteDear Lavan, Happy to note that you time to give your comment. That was a good warning......!! I will only try the latest film when my heart and mind is fully ready to handle my "rage"....No worries.
ReplyDeleteKeep visiting - when you find time....
Love / Suchoo Mama
is there any way by which I can get notifications abt the happenings in this page? cos I have to open agandam and look for the article and look for the comments.. how do I get automated notifications abt any new post from u or any new comments?
ReplyDelete