அன்புடையீர்
அன்புடன் சுரேன்
பழமொழிகள் (அ) முதுமொழிகள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
சற்று நேரமும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டால் குறைந்த பட்சம் ஒரு இருபது பழமொழிகளாவது (குறைந்த பட்சம்) நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்து இருக்கும். சரி தானே .....?
என் அம்மாவின் மூலம் நான் பல்வேறு பழமொழிகளின் அழகையும் அவற்றின் உண்மையையும் பல முறை உணர்ந்து வியந்து இருக்கிறேன். என் தாய் வழிப்பாட்டி கிட்டத்தட்ட ஆயிரம் பழமொழிகளை அனாயசமாக பிரயோகம் செய்யும் அளவு வல்லவராம். அவர் சொல்ல சொல்ல கேட்டு எழுதிக் கொள்ளாமல் விட்டு விட்டேனே என்று அடிக்கடி என் அம்மா வருத்தப்படுவது வழக்கம்....என்ன செய்வது.....?? பெரும்பாலும் இருக்கும் வரை நமக்கு அவற்றின் அருமை முழுவதும் தெரிவது இல்லை......
இவற்றிற்கு போட்டியாக தற்போதைய இளைய சமுதாயம் நகைச்சுவை ததும்பும் சில புது மொழிகளும் சில சமயம் இரசிக்கும் வகையில் தான் இருக்கிறது.
சொல்லும் விதமும் வார்த்தைகளும் மாறினாலும் ஒரு "idea" கட்டு செட்டாக வார்தைக் கோர்ப்பாக சரியான நேரத்தில் பிரயோகிக்கப் படுவது இரசிக்கப்பட வேண்டிய ஒன்று......!!
இந்த பதிவு "முரண்" மொழிகளைப் பற்றி.......!!
ஆம்... பழமொழியோ புது மொழியோ சில சமயம் முரண்பாடான கருத்தாலும் பல சமயம் தவறாக தோன்றும் வார்த்தை பிரயோகத்தாலும் நம்மை சில கணங்கள் சிந்திக்க வைத்து ஒரு கல்வியாக திகழும் தருணங்களுக்கு வேறெந்த வார்த்தை கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை.
சுமார் ஒரு மாதத்துக்கு முன் பூங்காவில் எழுதியிருந்த வாசகம் "பணம் அதிகமாக இருந்தால் உன்னை உனக்கு தெரியாது......பணம் குறைவாக இருந்தால் உன்னை யாருக்குமே தெரியாது".
இதைப் படித்த நான் இருபது வருடம் பின்னோக்கி இழுக்கப்பட்டேன். ஆம்....இதே வாசகத்தை கல்லூரிப் பருவத்தில் எங்கோ படித்து விட்டு ஏதோ தவறு இருக்கிறதே என்று குழம்பி என் நண்பி ஒருத்தியிடம் (என் வாழ்க்கையில் எனக்கு இருந்த ஒரே பெண் நண்பி அவள்தான்.....அற்புதமான தோழமை....இப்போது தொடர்பில் இல்லை...) அது பற்றி நான் பேச, அவள் சட்டென்று அதில் இருந்த தவற்றை சுட்டிக்காட்டினாள்.
ஆம்....முன் பின் முரணான வாசகங்கள்.....எது எல்லாருக்கும் தெரியுமோ அதை முதலில் சொல்லி விட்டு அதற்கு பின்னர் ஒரு வித்தியாசமான அல்லது புதிய கருத்து இருந்தால் அழுத்தமாக இருந்து இருக்கும்.....(மீண்டும் அந்த வாசகத்தைப் படித்து பாருங்கள்.....அது சரி என்றே உங்களுக்கும் தோன்றும்).
சரி தவறு என்பதை விட, நம்மை இது பற்றி சில நிமிடங்கள் சிந்திக்க வைக்கும் இது போன்ற வாசகங்கள் "முரண் மொழிகள்" என்று நான் குறிப்பிடுவது சரி தானே ?
சிறிது நாள் பிறகு அதே பூங்கா பலகையில் மற்றொரு வாசகம்..... "இரவு தூங்க போகும்போது பட்டினியாக இருந்தாலும் பரவாயில்லை. காலை படுக்கையை விட்டு எழுந்து இருக்கும் பொழுது கடனாளியாக இருந்து விடாதே ". படித்த அடுத்த கணம், அதில் இருந்த முரண் என்னை பலமாகத் தாக்கியது....
ஆம்.....!! இரவு பட்டினி கிடந்தது தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு களைப்புடன் சோர்வாக காலை கண் விழிப்பதை விட, கடன் வாங்கி நன்று இரவு உணவு சாப்பிட்டு காலை உற்சாகமாக எழுந்து நன்றாக உழைத்து கடனை அடைப்பது..... எனக்கு சரியான செயலாக தோன்றுகிறது.....!!
என்ன சொல்கிறீர்கள் ? சரி....நான் போய் இப்போது நன்றாக தூங்கப் போகிறேன்.....!! கடன் அதிகம் இல்லாமல் இரவு உணவை முடிக்குமாறு வாழ்வை அளித்த அந்த இறை சக்திக்கு பணிவான வணக்கத்தை தவிர நாம் என்ன அளித்து விட முடியும்......??
அன்புடன் சுரேன்
hahaha!! liked it..
ReplyDeletenambalaala saapdaama mattum irukka mudiyaadhe!! (YES!! namba here includes me also. As, amma keeps saying "Lavana oda iruntha Suchoo oda iruka madiriye irukku.. suchu ku ner varisu nee dhan sapadu vishyathla")
Well, lets pray God to keep us away from, both, hunger and debt! :) :)