அன்புடையீர்
அந்த இரண்டை விட இந்த ஹிந்தி version கொஞ்சம் பெரிய படம்.... 15 - 20 நிமிடங்கள் அதிகம். ஆனால் படத்தின் மூலமான அந்த மையப் புதிரை மிக கவனமாக விளக்கி இருக்கிறார்கள் - ஒரு ATM சீன் கொஞ்சம் நெத்தி அடியாக சேர்க்கப்பட்டு ஒரு வித fulfilment கூடி வந்து இருக்கிறது. ( நானும் என் பங்கிற்கு கவனமாக "புதிரு"க்கு முன்னாள் ஒரு space சேர்த்தேன் ... இல்லையென்றால் உங்களுக்கு ஒரு கெட்ட வார்த்தை போல தோன்றி இருக்கும் )
வெகு நாட்களுக்கு பிறகு அந்த - எனக்கு வெகு பரிச்சயமான - எழுதும் வெறி..... (பகரும் வெறி என்பதும் சரியாகத்தான் இருக்கிறது.... பகிரும் வெறி என்பது கூட மேலும் பொருத்தமே .).
அட அடா.......கச்சேரியின் ஆரம்பத்திலேயே சுருதி நன்றாக சேர்ந்துவிட்டது பாருங்கள்...!! இதெல்லாம் பகவத் சங்கல்பம்.
நிற்க... (உங்களை அல்ல...நீங்கள் வசதியாக உட்கார்ந்து கொண்டே படிக்கலாம்....நான் topic க்கு வருவதற்காக.... ஒரு சம்பிரதாயமாகத்தான் சொன்னேன்).
சமீபத்தில் த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி versionஐ hotstar-ல் பார்த்தேன்.
ஒரே மூச்சாக அல்ல...முதல் பாதி பார்த்து விட்டு ஒரு வித அஜீரணம் போன்ற ஒரு உணர்வுடன் வேறு ஏதோ ஒரு அவசர வேலையில் மூழ்கி விட நேர்ந்தபோது ஒரு வித விடுதலை உணர்ச்சி ஏற்பட்டது வாஸ்தவம்.
கிட்டத்தட்ட 15 நாட்கள் பிறகு - அரைகுறையாக பார்த்த படங்கள் என்ற வரிசையில் இது மட்டும் இருக்க ..... இன்னும் 1 மணி நேரம் தானே.... என்று சமாதானம் படுத்திக்கொண்டு பார்க்க ஆரம்பிக்க... ஈஸ்வரா...... second half நான் பார்த்த மலையாளம் மற்றும் தமிழ் இரண்டையும் தூக்கி சாப்பிடுவதாக இருந்தது.
ஒரே மூச்சாக அல்ல...முதல் பாதி பார்த்து விட்டு ஒரு வித அஜீரணம் போன்ற ஒரு உணர்வுடன் வேறு ஏதோ ஒரு அவசர வேலையில் மூழ்கி விட நேர்ந்தபோது ஒரு வித விடுதலை உணர்ச்சி ஏற்பட்டது வாஸ்தவம்.
கிட்டத்தட்ட 15 நாட்கள் பிறகு - அரைகுறையாக பார்த்த படங்கள் என்ற வரிசையில் இது மட்டும் இருக்க ..... இன்னும் 1 மணி நேரம் தானே.... என்று சமாதானம் படுத்திக்கொண்டு பார்க்க ஆரம்பிக்க... ஈஸ்வரா...... second half நான் பார்த்த மலையாளம் மற்றும் தமிழ் இரண்டையும் தூக்கி சாப்பிடுவதாக இருந்தது.
அந்த இரண்டை விட இந்த ஹிந்தி version கொஞ்சம் பெரிய படம்.... 15 - 20 நிமிடங்கள் அதிகம். ஆனால் படத்தின் மூலமான அந்த மையப் புதிரை மிக கவனமாக விளக்கி இருக்கிறார்கள் - ஒரு ATM சீன் கொஞ்சம் நெத்தி அடியாக சேர்க்கப்பட்டு ஒரு வித fulfilment கூடி வந்து இருக்கிறது. ( நானும் என் பங்கிற்கு கவனமாக "புதிரு"க்கு முன்னாள் ஒரு space சேர்த்தேன் ... இல்லையென்றால் உங்களுக்கு ஒரு கெட்ட வார்த்தை போல தோன்றி இருக்கும் )
அஜய் தேவ்கன் முசுடான முகம் படத்தின் பின் பாதிக்கு வெகுவாக பொருந்துகிறது. ஒரு வகையில் மோகன் லாலை காட்டிலும் அஜய் character பொருந்துகிறது. முதல் பகுதியில் கணவன் மனைவி ஊடல் வசனங்களை புறந்தள்ளி அனேகமான இடங்களில் வசனங்களை குறைத்து இந்த ஹிந்தி version "to the point " ஆக இருக்கிறது என்று எனக்கு பட்டது. (இந்த படத்திற்கு அஜய் மனைவியாக - அழகு மயிலாக - ஷ்ரேயா சரண் வீணாக்கப்பட்டு இருக்கிறார். அவரை கொடையாக தமிழ் version க்கு அளித்து இருந்தால் - சுயம்புலிங்கம் மேலும் களி கொண்டு - கதையை வேறு பாதையில் செலுத்தி இருக்கக்கூடும். )
தபு அறிமுக காட்சியில் கொஞ்சம் செயற்கையாக பட்டாலும்..... பிற்பகுதியில், ஆஷா சரத் அளவுக்கு நடித்து கொடுத்திருக்கிறார். மற்றும் அனைத்து மைய கதாபாத்திரங்களும் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். கதாநாயகியின் பெற்றோருக்கு சொற்ப அளவே வேலை...அனாவசிய வசனங்கள் இல்லாததால்....மற்றும் அவர்கள் வீட்டில் நடக்கும் சம்பாஷணைகள் வெகுவாக கத்திரிக்கப்படுகிறது.
இந்த படம் பார்க்கும் போது ... ஒரே கதையை வெவ்வேறாக மூவர் கையாண்ட விதம் பற்றி என் மனசுக்குள் அலசும்போது , என் மனத்தில் தோன்றிய த்ரிஷ்யங்கள் எண்ணற்றவை.... முடிந்த வரை பகிருவோம்....
(1) ஒரே புத்தகத்தை, ஒரே படத்தை மீண்டும் மீண்டும் படிக்கும் வழக்கம் உடையவரா நீங்கள் ? இங்கே என்கிட்டயே வந்து நில்லுங்கள்..... நாமெல்லாம் ஒரு ஜாதி தான்....!!
பல முறை "ஆழ உழுதலின் நற்பயனை நாமெல்லாம் அனுபவித்தாலும் - ஒரு வகையில் - பல சமயங்களில் - இந்த பழக்கம் நம்மை இயந்திர கதியில் ஆக்கி விடுகிறதோ என்று எனக்கு ஐயம் ஏற்படுகிறது.
ஒரே படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதைக் காட்டிலும் இது போன்ற அனுபவங்கள் நம்மை வேறொரு தளத்திற்கு கொண்டு சேர்க்கிறது .
ஒரே படத்தின் 3 வித make - மூன்று மொழிகளில், மூன்று இயக்குனர்களின் பார்வையில், ஒரு சில கலாச்சார வேறுபாடுகளோடு, வெவ்வேறு நடிகர்கள் - அவர்களின் நடிப்பு திறமை, அவர்கள் உருவாக்கும் மாறுபாடுகளோடு இருப்பதால் நம்மை மேலும் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. நாம் அலட்சியமாக இருக்க வாய்ப்பு மிகவும் குறைந்து போகிறது.
என்ன சொல்கிறீர்கள் ?
(2) ஒரு வகையில் இந்த ஹிந்தி படத்தின் இயக்குனருக்கு அந்த ATM காட்சி எப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு.....? யோசித்து பாருங்கள்......!!
மற்ற இருவரும் அது இல்லாமலேயே விறுவிறுப்பான திரைக்கதைகளை ஏற்கனவே தந்து இருக்க, இந்த மனிதர் ஒரு புது idea வர... அது படத்தை மேலும் மெருகேற்றுகிறது. அதையே சமயம் படத்தை பார்ப்பவர்கள்.- கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருப்பதால் - சறுக்கி விடவும் வாய்ப்பு அதிகம். "வந்தால் மலை...போனால் ம ***-" என்று அலட்சியமாக ஒரு புது பட இயக்குனரின் கண்ணோட்டம் சரி வராது.
(3) "சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர் " என்ற அறைகூவல் எல்லா துறைகளுக்கும் எல்லா சமூகத்திலும் உண்டு. இது போன்ற "remake " ஒரு வித customization என்பதால் இதன் வீச்சு அளப்பரியது.
(4) கொஞ்சம் தத்துவார்த்தமாக யோசிப்போம்.... மனத்தை தொட்டு சொல்லுங்கள்... வாழ்க்கையில் தினந்தோறும் புதுசு புதுசாக ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறதா என்ன....? இது போன்ற படங்கள், நமக்கு - பார்ப்பவர்களுக்கு கூட...நம் அன்றாட வாழ்வின் வெகு சாதாரண செயல்களை நாம் மேலும் மெருகேற்ற மேலும் பொலிவாக்க என்ன செய்யலாம் என்று நினைக்க தூண்டுகிறது. இது இயந்திரகதியில் செல்லும் வாழ்க்கைக்கும் புத்தம் புது அனுபவங்களை வாரித்தரும் சுற்றுலா போன்ற சந்தர்ப்பங்களும் பாலம் போல ஒரு உன்னதமான சமன். (nice compromise )
(5) வெகு முக்கியமான என் பாவ மன்னிப்பு இங்கே...
மலையாளம் version முதலில் பார்த்து புளகித்து போய், தமிழில் கமல் வள வளவென்று நாகர்கோயில் தமிழில் பொழிந்து தள்ளும் தமிழ் படம் பார்த்து நான் வெறுத்து போய் இருந்தேன் . ஒரு interview ல் கமல் இந்த விஷயம் பற்றி - சுயம்பு லிங்கத்தை வெகு ஜாக்கிரதையாக ஒரு ஜாலி அப்பாவி மனிதராக சித்தரித்து இருந்தார்கள் என்ற விளக்கம் அறிந்து, கொஞ்சம் வியந்து போனேன்.
ஆம்.... remake படம் பார்க்க ஒரு வித பக்குவம் தேவை படுகிறது.
தமிழை பொறுத்த வரை என் ஆஸ்தான நடிகர் - இந்த interview பார்த்த பிறகு - மேலும் என் மனத்தில் நிமிர்ந்து நின்றார்.
நான் கொஞ்சமும் அறிந்து இராத காஜோல் - லின் கணவர் அஜய் - ஹிந்தி version ல் - முதல் பகுதியில் ஒரு வித வெறுப்பை தந்து,...இரண்டாம் பகுதியில் என் வாஞ்சையை அள்ளிக்கொண்டு போய் விட்டார்.
முதிர்ச்சி என்பது இது தானோ ?
பதிவை படிக்கும் நீங்கள் புருவம் தூக்கி ஏளனம் செய்வது தெரிகிறது. இன்னமும் நான் ரொம்ப தூரம் போக வேண்டுமா ??
அதுவும் சரி தான்.......!!
எப்போதும் போல ..... அர்ப்பணம் - கிருஷ்ணருக்கு !!
சுரேன்
தபு அறிமுக காட்சியில் கொஞ்சம் செயற்கையாக பட்டாலும்..... பிற்பகுதியில், ஆஷா சரத் அளவுக்கு நடித்து கொடுத்திருக்கிறார். மற்றும் அனைத்து மைய கதாபாத்திரங்களும் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். கதாநாயகியின் பெற்றோருக்கு சொற்ப அளவே வேலை...அனாவசிய வசனங்கள் இல்லாததால்....மற்றும் அவர்கள் வீட்டில் நடக்கும் சம்பாஷணைகள் வெகுவாக கத்திரிக்கப்படுகிறது.
இந்த படம் பார்க்கும் போது ... ஒரே கதையை வெவ்வேறாக மூவர் கையாண்ட விதம் பற்றி என் மனசுக்குள் அலசும்போது , என் மனத்தில் தோன்றிய த்ரிஷ்யங்கள் எண்ணற்றவை.... முடிந்த வரை பகிருவோம்....
(1) ஒரே புத்தகத்தை, ஒரே படத்தை மீண்டும் மீண்டும் படிக்கும் வழக்கம் உடையவரா நீங்கள் ? இங்கே என்கிட்டயே வந்து நில்லுங்கள்..... நாமெல்லாம் ஒரு ஜாதி தான்....!!
பல முறை "ஆழ உழுதலின் நற்பயனை நாமெல்லாம் அனுபவித்தாலும் - ஒரு வகையில் - பல சமயங்களில் - இந்த பழக்கம் நம்மை இயந்திர கதியில் ஆக்கி விடுகிறதோ என்று எனக்கு ஐயம் ஏற்படுகிறது.
ஒரே படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதைக் காட்டிலும் இது போன்ற அனுபவங்கள் நம்மை வேறொரு தளத்திற்கு கொண்டு சேர்க்கிறது .
ஒரே படத்தின் 3 வித make - மூன்று மொழிகளில், மூன்று இயக்குனர்களின் பார்வையில், ஒரு சில கலாச்சார வேறுபாடுகளோடு, வெவ்வேறு நடிகர்கள் - அவர்களின் நடிப்பு திறமை, அவர்கள் உருவாக்கும் மாறுபாடுகளோடு இருப்பதால் நம்மை மேலும் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. நாம் அலட்சியமாக இருக்க வாய்ப்பு மிகவும் குறைந்து போகிறது.
என்ன சொல்கிறீர்கள் ?
(2) ஒரு வகையில் இந்த ஹிந்தி படத்தின் இயக்குனருக்கு அந்த ATM காட்சி எப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு.....? யோசித்து பாருங்கள்......!!
மற்ற இருவரும் அது இல்லாமலேயே விறுவிறுப்பான திரைக்கதைகளை ஏற்கனவே தந்து இருக்க, இந்த மனிதர் ஒரு புது idea வர... அது படத்தை மேலும் மெருகேற்றுகிறது. அதையே சமயம் படத்தை பார்ப்பவர்கள்.- கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருப்பதால் - சறுக்கி விடவும் வாய்ப்பு அதிகம். "வந்தால் மலை...போனால் ம ***-" என்று அலட்சியமாக ஒரு புது பட இயக்குனரின் கண்ணோட்டம் சரி வராது.
(3) "சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர் " என்ற அறைகூவல் எல்லா துறைகளுக்கும் எல்லா சமூகத்திலும் உண்டு. இது போன்ற "remake " ஒரு வித customization என்பதால் இதன் வீச்சு அளப்பரியது.
(4) கொஞ்சம் தத்துவார்த்தமாக யோசிப்போம்.... மனத்தை தொட்டு சொல்லுங்கள்... வாழ்க்கையில் தினந்தோறும் புதுசு புதுசாக ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறதா என்ன....? இது போன்ற படங்கள், நமக்கு - பார்ப்பவர்களுக்கு கூட...நம் அன்றாட வாழ்வின் வெகு சாதாரண செயல்களை நாம் மேலும் மெருகேற்ற மேலும் பொலிவாக்க என்ன செய்யலாம் என்று நினைக்க தூண்டுகிறது. இது இயந்திரகதியில் செல்லும் வாழ்க்கைக்கும் புத்தம் புது அனுபவங்களை வாரித்தரும் சுற்றுலா போன்ற சந்தர்ப்பங்களும் பாலம் போல ஒரு உன்னதமான சமன். (nice compromise )
(5) வெகு முக்கியமான என் பாவ மன்னிப்பு இங்கே...
மலையாளம் version முதலில் பார்த்து புளகித்து போய், தமிழில் கமல் வள வளவென்று நாகர்கோயில் தமிழில் பொழிந்து தள்ளும் தமிழ் படம் பார்த்து நான் வெறுத்து போய் இருந்தேன் . ஒரு interview ல் கமல் இந்த விஷயம் பற்றி - சுயம்பு லிங்கத்தை வெகு ஜாக்கிரதையாக ஒரு ஜாலி அப்பாவி மனிதராக சித்தரித்து இருந்தார்கள் என்ற விளக்கம் அறிந்து, கொஞ்சம் வியந்து போனேன்.
ஆம்.... remake படம் பார்க்க ஒரு வித பக்குவம் தேவை படுகிறது.
தமிழை பொறுத்த வரை என் ஆஸ்தான நடிகர் - இந்த interview பார்த்த பிறகு - மேலும் என் மனத்தில் நிமிர்ந்து நின்றார்.
நான் கொஞ்சமும் அறிந்து இராத காஜோல் - லின் கணவர் அஜய் - ஹிந்தி version ல் - முதல் பகுதியில் ஒரு வித வெறுப்பை தந்து,...இரண்டாம் பகுதியில் என் வாஞ்சையை அள்ளிக்கொண்டு போய் விட்டார்.
முதிர்ச்சி என்பது இது தானோ ?
பதிவை படிக்கும் நீங்கள் புருவம் தூக்கி ஏளனம் செய்வது தெரிகிறது. இன்னமும் நான் ரொம்ப தூரம் போக வேண்டுமா ??
அதுவும் சரி தான்.......!!
எப்போதும் போல ..... அர்ப்பணம் - கிருஷ்ணருக்கு !!
சுரேன்